சென்னை அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.! வெளியான முதல்கட்ட தகவல்.!

சென்னை அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியின் விடுதியில், இன்று மதியம் அளவில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், மாணவி மர்மமான முறையில் இறந்ததாக சொல்லப்படுகிறது. மாணவியின் மரணம் குறித்து திருவேற்காடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு … Read more

Doctor Vikatan: தாம்பத்திய ஆர்வத்தைக் குறைக்குமா கொரோனா தொற்று?

எனக்கு ஆறு மாதங்களுக்கு முன் கொரோனா பாதித்தது. தொற்றிலிருந்து குணமான பிறகும் எனக்கு உடல் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. குறிப்பாக, தூக்கமின்மையும், தாம்பத்திய உறவில் ஈடுபாடின்மையும் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். இவற்றுக்கும் கொரோனா தொற்றுக்கும் தொடர்பிருக்குமா? இந்தப் பிரச்னைகளுக்கு பிரத்யேக சிகிச்சைகள் உண்டா? தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி… உங்களுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அறிகுறிகள் `லாங் கோவிட்’ பாதிப்பாக இருக்கலாம். கோவிட் தொற்று … Read more

பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். 31-ம் தேதி (இன்று) கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், … Read more

ஆந்திராவில் கடலில் அடித்து செல்லப்பட்ட 6 பொறியியல் மாணவர்கள் சடலமாக மீட்பு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகாபல்லியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வந்த 15 நண்பர்கள், நேற்று முன்தினம் தேர்வுகள் முடிவடைந்ததால், சீதபாளையம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது, இவர்களில் 7 பேர் உற்சாக மிகுதியால் கடலில் குளிக்கச் சென்றனர். திடீரென ஒரு ராட்சத அலை இவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. தங்களை காப்பாற்றும்படி அந்த 7 பேரும் கதறினர். இதைக் கேட்ட அப்பகுதி மீனவர்கள் ஓடிச் சென்று, தேஜா (19) … Read more

இந்த சிந்தனை நல்லதல்ல – பிரதமர் மோடி பேச்சு!

‘ஒளிமிகு இந்தியா ஒளிமயமான எதிர்காலம் – மின்சாரம் @2047’ திட்டத்தின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். தேசிய அனல்மின்கழகத்தின் பல்வேறு பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தேசிய சூரியசக்தி தளத்தையும் அவர் தொடங்கிவைத்தார். பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடனும் அப்போது பிரதமர் மோடி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் எரிசக்தி … Read more

டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் வேட்டை கும்பல் அட்டூழியம்.. 100 டால்பின்கள் கொன்று குவிப்பு!

டென்மார்க் பகுதியை சேர்ந்த பரோயே தீவுகளில் 100-க்கும் மேற்பட்ட பாட்டில்நோஸ் (bottlenose) டால்பின்களை வேட்டை கும்பல் காட்டுமிராண்டித்தனமாக கொன்ற சம்பவம் சர்வதேச அளவில் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தொலைதூர தீவுக்கூட்டத்தில் வசிக்கும் வேட்டைக்காரர்கள் கொக்கிகள், கத்திகள் மற்றும் ஈட்டிகளால் டால்பின்களை கொன்றதால், விரிகுடா கடற்பகுதியே சிவப்பு நிறமாக மாறியுள்ளது.  Source link

கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் உயிரிழப்பு.!

கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் உயிரிழந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய குருவாயூரை சேர்ந்த 22 வயதுடைய நபருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளைஞரின் மாதிரிகள் ஆலபுழாவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கேரள அரசு தெரிவித்துள்ளது. Source link

ஜோதி விமர்சனம்: சீரியல் கில்லர் படங்கள் தெரியும்… ஆனால் இது `சீரியல்' த்ரில்லர் படம்!

மோசமான கருத்தை நல்ல மேக்கிங்கில் சொல்லும் படங்கள் சில. நல்ல கருத்தை மோசமான மேக்கிங்கில் சொல்லும் படங்கள் சில. இதில் `ஜோதி’ இரண்டாவது வகை. நிறைமாத கர்ப்பிணியான ஷீலா ராஜ்குமார் வீட்டில் தனித்திருக்கும்போது ஒரு மர்ம நபரால் தாக்கப்படுகிறார். சத்தம் கேட்டு பக்கத்துவீட்டில் வசிக்கும் க்ரிஷா குரூப் வந்து பார்க்கும்போது ஷீலா ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவருக்கு அவசர அவசரமாக சிசேரியன் செய்யப்பட்டு பச்சிளம் குழந்தையைக் குழந்தையைக் கடத்தியிருப்பது தெரிய வருகிறது. உடனே க்ரிஷா தன் கணவரான … Read more

மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்த 27 வயதான இலங்கை தமிழ்ப்பெண்! சோக சம்பவத்தின் பின்னணி

தமிழகத்தில் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் உயிரை மாய்த்து கொண்ட சோக சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் கோட்டூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் பிரதீபன் (33). இவர் கடந்த 2006-ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார் அதே முகாமுக்கு பவித்ரா (27) என்பவரும் வந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர். 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் … Read more

செஸ் ஒலிம்பியாட்  2 ஆம் சுற்று : அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி

மாமல்லபுரம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் 2ஆம் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும், 44ஆம் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று போட்டிகளில் இந்தியா பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது தெரிந்ததே. நேற்று இந்த போட்டியின் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடந்தன.  இதிலும் இந்தியா பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் விவரம் வருமாறு ஆடவர் இந்திய எ அணி … Read more