கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு வழக்கு

சென்னை: கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2020ஆம் ஆண்டு நபார்டு வங்கி நிதியுதவி மூலம் 933 கோடியே 10 லட்ச ரூபாயை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஆறு கட்டங்களாக … Read more

வருமான வரி கணக்கு தாக்கல் இன்றே கடைசி நாள்: தவறினால் ரூ.5,000 அபராதம்

புதுடெல்லி: வருமான வரித்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜூலை 29ம் தேதியான நேற்று முன்தினம் வரை ரூ.4.52 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.43 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். நாளைக்குள் (இன்று) வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில், டிசம்பர் 31ம் தேதி வரையில் கணக்கை தாக்கல் செய்யலாம். ஆனால், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தாமதக் கட்டணம் ரூ.5,000, ஆண்டு வருமானம் ரூ.5 … Read more

சிக்கிய கவர்னர்.. சீறும் தாக்கரே.. எஸ்கேப் ஷிண்டே!

மும்பை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு மராட்டி கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி மன்னிப்பு கோர வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.இந்த விவகாரத்தில் நாசுக்காக ஒதுங்கிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஷிண்டே அளித்த பேட்டியில், “கவர்னர் கோஷ்யாரியின் கருத்தில் உடன்பாடு இல்லை. அவரின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். மராத்திய மக்களின் கடும் உழைப்பால் மும்பை … Read more

போதைப் பொருட்களுக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்: தி.மலையில் போக்குவரத்து பாதிப்பு – மக்கள் அதிருப்தி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக நடத்திய ஆர்ப்பாட்டம் எதிரொலியாக ரயில்வே மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டன. இதன் எதிரொலியாக, காணொலி காட்சி வாயிலாக, ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் … Read more

ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர், எம்எல்ஏக்களுடன் நட்பு ஹாவாலா பணத்தில் சூதாட்டம் நடத்திய தொழிலதிபர் வீட்டில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை: மலைப்பாம்பு உள்ளிட்ட அரிய வன உயிரினங்கள் சிக்கின

திருமலை: ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுடன் நட்பு வைத்து கொண்டு ஹவாலா பணத்தில் சூதாட்டம் நடத்திய தொழிலதிபர் வீட்டில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், மலைப்பாம்பு உள்ளிட்ட அரிய வன உயிரினங்கள் கண்டெடுக்கப்பட்டது. தெலங்கானா மாநிலம், மகபூப் நகரை சேர்ந்தவர் சிக்கோட்டிபிரவீன். இவர் ஆந்திரா,  தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,  தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். தொழிலதிபரான சிக்கோட்டிபிரவீன் வளர்ப்பு பிராணிகள் மீது பெரும் காதல் … Read more

இலங்கையானது ஈராக்பார்லி., கட்டடத்தை உடைத்து போராட்டம்| Dinamalar

பாக்தாத்:ஈராக் பார்லி.,க்குள் இரண்டாவது முறையாக நேற்றும் புகுந்த ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல் -சதர் ஆதரவாளர்கள் கட்டடத்தை உடைத்து சேதப்படுத்தினர். மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி வகித்து வருகிறார்.இதற்கிடையே, ஆட்சி அமைப்பது குறித்து நடந்த பேச்சில், முன்னாள் அமைச்சர் அல் – சூடானியை புதிய பிரதமராக … Read more

SBI Whats App Banking: எஸ்.பி.ஐ அசத்தல் முயற்சி; வாட்ஸ் அப்-பிலேயே இந்த வேலை முடிஞ்சிரும்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) வாட்ஸ்அப் பேங்கிங் (WhatsApp banking) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையை பெறுவதன் மூலம் சேமிப்புக் கணக்கின் இருப்பை அறிந்து கொள்ளுதல் மற்றும் மினி நிதிநிலை அறிக்கை பெறுதல் என பல்வேறு வசதிகளை பெறமுடியும்.இந்தச் சேவையை பெறுவது குறித்து பார்க்கலாம். 1) பதிவு செய்தல்இந்த சேவையை பெற பதிவு செய்தல் அவசியமாகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து WAREG என டைப் … Read more

ராக்கெட்ரி பட நிஜ ஹீரோவை சந்தித்த சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் புகைப்படம்.!

இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் என் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ராக்கெட்ரி நம்பி விளைவு. இந்த திரைப்படத்தை பிரபல நடிகர் மாதவன் நடித்து இயக்கி யுள்ளார். இந்த திரைப்படம் மாதவன் இயக்கிய முதல் திரைப்படமாகும். இயக்குனராக அவதாரம் எடுத்த முதல் திரைப் படத்திலேயே மிகவும் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். பொறுப்புடன் அவர் இந்தப் படத்தில் பணியாற்றி இருப்பதை படம் பார்க்கும் அனைவருமே உணர முடியும். படம் வெளியாகி அனைவரிடமும் நல்ல … Read more

கவுன்சிலர்களின் கள ஆய்வுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும்: சென்னை மேயர் பிரியா உத்தரவு

சென்னை: கவுன்சிலர்களின் கள ஆய்வுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், வார்டு பிரச்சினைகளையும் மேயர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட கவுன்சிலர் ரேணுகா, “ஆய்வுகளின்போது வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து உரிய தகவல்களை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் … Read more

மீண்டும் தனிமைப்படுத்திக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அலுவல் பணிக்கு திரும்பிய மூன்றே நாட்களில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறிகுறிகள் ஏதுமற்ற கொரோனா பாதிப்பு எனவும், வயதானவர்களுக்கு பொதுவாக காணக்கூடிய அறிகுறிகள் எனவும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா சிகிச்சையின் ஒருபகுதியாக Paxlovid மருந்தை … Read more