30000 அடி உயரத்தில்.. தமிழை தொடர்ந்து பஞ்சாபி மொழியில் பைலட் அறிவிப்பு…!

பொதுவாக விமானத்தில் அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும் என்பதும் தாய்மொழியில் அறிவிப்பு வராதா என்று தமிழ் உள்பட தென்னிந்தியர்களும், ஒருசில வட இந்திய மொழிகளை பேசுபவர்களும் ஏக்கத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் சமீப காலமாக ஒருசில விமானங்களில் பிராந்திய மொழியில் அறிவிப்புகள் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பெங்களூரிலிருந்து சண்டிகருக்கு சென்ற விமானத்தின் கேப்டன் பஞ்சாபி மற்றும் ஆங்கிலத்தில் மாறி மாறி அறிவிப்பு செய்து பயணிகளை மகிழ்ச்சி அடைய … Read more

ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் பட இயக்குனர் திடீர் மரணம்

ஜி.வி.பிரகாஷை வைத்து பென்சில் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் பென்சில். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருந்த இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவராக நடித்த இந்த படத்தை இயக்குனர் மணி நாகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணி நாகராஜ் அடுத்ததாக வாசுவின் கர்பிணிகள் என்ற … Read more

மேல்முறையீட்டு வழக்கில் அனல்பறந்த வாதங்கள்.. தீர்ப்பு ஒத்திவைப்பு.!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இறுதிகட்ட விசாரணையில் அனல்பறக்கும் வாதங்கள் அரங்கேறின. உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற இறுதி விசாரணையில், காலையில் இபிஎஸ் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.  ஓபிஎஸ் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில்  கோரப்படாத நிவாரணத்தை தனிநீதிபதி வழங்கியது அசாதாரணமானது என்றும் இபிஎஸ் தரப்பில் … Read more

அமைச்சர் உறுதி அளித்ததால் மவுனப் போராட்டத்தை நிறுத்திக்கொண்ட பாஜக விவசாய அணி

கோவை: மவுனப் போராட்டம் நடத்திய பாஜக விவசாய அணி போராட்டக்காரர்களை தமிழக அமைச்சர் முத்துசாமி இன்று நேரில் சந்தித்து அவினாசி – அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக விவசாய அணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக விவசாய அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூ.1856.88 கோடி செலவில் 96.5% முடிக்கப்பட்ட அவினாசி – அத்திக்கடவு திட்டம் வெறும் 2.2 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்காமல் 17 மாதங்களாக தடைப்பட்டு நிற்பதையும்,ஈரோடு வருகைபுரியும் தமிழக … Read more

மிஸ்டு கால் கொடுத்து என் கட்சியில் இணையலாம்…! – தமிழருவி மணியன் அழைப்பு..!

அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தை சில தினங்களுக்கு முன்பாக பரபரப்பிற்கு உள்ளாக்கியவர் தமிழருவி மணியன். அரசியலில் ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர் வெளியுலகில் பெரிதாய் அவரின் கருத்துகள் வெளிவரவில்லை. இந்த நினையில் அரசியலில் முழுக்கு போட்டதை தவறாக எண்ணுகிறேன் என்று அறிவித்தார் தமிழருவி மணியன். காந்திய மக்கள் இயக்கம் எனும் பெயரில் இயக்கம் நடத்தி வந்த தமிழருவி மணியன் அதை இப்போது “காமராஜர் மக்கள் கட்சி” … Read more

விவசாயத்தில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு கிசான் பிரகதி விருதுகள்

செய்யூர்: இயற்கை விவசாயம் மற்றும் மறு உருவாக்க சாகுபடியில் சாதனைகள் கண்ட தமிழக விவசாயிகள் 9 பேருக்கு கிசான் பிரகதி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்திய வேளாண் துறையில் இயற்கை விவசாயம மற்றும் மறு உருவாக்க சாகுபடி செய்வது என்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை நடைமுறைபடுத்த அவுட்க்ரோ என்ற தொண்டு நிறுவனம் விவசாயிகளுக்கு ஊக்கமும் வழிமுறைகளையும் அளித்து வந்தது. இந்நிலையில், இயற்கை விவசாயம் மற்றும் மறு உருவாக்க சாகுபடி பணியில் புதுமையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய … Read more

அலியா பட் பற்றி கமெண்ட் மன்னிப்பு கேட்டார் ரன்பீர் கபூர்

சென்னை: அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா, மவுனிராய் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘பிரம்மாஸ்திரம் முதல் பாகம்: ஷிவா’. வரும் செப்டம்பர் 9ம் தேதி தியேட்டரில் …

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் 2 வாரத்துக்கு பிறகு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: அமெரிக்காவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, 2 வாரங்களுக்கு பிறகு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது ஒரு நபர், கண்மூடித்தனமாக சரமாரியாக பல இடங்களில் கத்தியால் குத்தினார். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த ருஷ்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ருஷ்டி மீதான … Read more

புதுவித மொழியில் பார்வையாளர்களை மிரட்டும் விசித்திர நாடகம்! அசத்தும் 'மணல் மகுடி' குழு!

உங்கள் வாழ்க்கை சூழலில் ஒரு பொழுதேனும் மணல்மகுடி நாடகக் குழுவின் பெயரை கேட்டால், அதில் பங்கேற்காமல் விட்டு விடாதீர்கள். நீங்கள் தவறவிட கூடாத ஒரு நாடக நிகழ்ச்சி என்பதை கண்டு கேட்ட பின்பு உணர வைக்கின்றன இந்த விசித்திர புதுமொழி நாடகங்கள். கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நாடக குழு ‘மணல் மகுடி’. இதன் ஆசிரியர் முருக பூபதி. வாராவாரமோ, மாதமாதமோ அல்ல எப்போது பாமர மக்களின் குரல் ஒலிக்க முடியாமல் போகிறதோ, அவர்களின் … Read more

வெற்றி மாறனின் விடுதலை படத்தில் இணைந்த ராஜீவ் மேனன்

வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடியன் சூரி கதையின் நாயகனாக நடித்து வரும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை படமாக்கி வரும் வெற்றிமாறன் அடுத்தபடியாக ஒரு பிரமாண்டமான சண்டை காட்சியை படமாக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விடுதலை இரண்டாம் பாகத்திற்கு … Read more