புலியிடம் தப்பிய யானைக் குட்டி; கூட்டத்துடன் சேர்த்த வனத்துறை! வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா பேகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பபாறா என்ற பகுதியில் யானை குட்டி ஒன்று தனியாக உலவுவதைக் கண்டு அருகில் சென்றுள்ளனர். மேலும் அந்த குட்டியின் உடலில் காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக முத்தங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து கால்நடை மருத்துவர்களை அழைத்து யானை குட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளனர்‌. காயங்கள் ஓரளவிற்கு குணமடைந்து உடல்நிலை தேறி வருகிறது. தாயைப் பிரிந்து தவிக்கும் … Read more

ஆக. 28-ல் திருச்சியில் ஈஷா சார்பில் நெல் சாகுபடி கருத்தரங்கு, கண்காட்சி

சென்னை: ஈஷா விவசாய இயக்கம் சார்பில் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஆக 25) நடைபெற்றது. இதில் ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: “நமது வாழ்வில் அன்றாடம் நாம் … Read more

பாஜகவும் 40 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் – ‘ஆபரேஷன் லோட்டஸ்’ பின்னணி

புதுடெல்லி: ‘ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 40 எம்எல்ஏக்களை பிரிக்க ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் பாஜக மேற்கொள்ளும் சதி தோல்வியடைய வேண்டும்’ என்ற நோக்குடன் கேஜ்ரிவால் தலைமையில் எம்எல்ஏக்கள் இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை செய்தனர். டெல்லியில் இன்று கேஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் அவசரமாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் பேசிய ஆம் ஆத்மி தலைவர் சவுரவ் பரத்வாஜ், “மொத்தமுள்ள 62 எம்எல்ஏக்களில் 50 பேர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். இன்று … Read more

மெரினாவில் பேனா நினைவு சின்னம்…! – அனுமதி அளிக்குமா மத்திய வல்லுநர் குழு..?

மறைந்த முன்னாள் முதல்வர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை பிரமாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது . இது மாநிலம் முழும் பேசு பொருள் ஆகி பல்வேறு தரப்பினர் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மத்திய வல்லுநர் குழு சென்னை மெரினாவில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க ஆய்வு நடத்தி உள்ளது. சென்னை மெரினாவில் சுமார் 137 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் … Read more

BSNL Rs 321 Plan: ஒரே ரீசார்ஜ், ஒரு வருஷ வேலிடிட்டி! காவலர்கள் பேசிக்கொள்ள முழுக்க முழுக்க இலவசம்!

பாரத் சன்சார் நிகம் லிமிட்டெட் நிறுவனம் இன்னும் சில நாட்களில் 4G சேவையை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள காவல்துறையினருக்காக புதிய அதிரடி சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் ரீச்சார்ஜ் தளத்திற்கு சென்று தமிழகத்திற்கான ரீச்சார்ஜ் திட்டங்களின் கீழ் தேடினால் இது கிடைக்கும். திட்டத்தின் பலன்கள் என்னென்ன? Bsnl அறிவித்துள்ள இந்த ரீச்சார்ஜ் திட்டமானது சிறப்பு சலுகையாக தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது.இதன்படி ரூபாய் 321 செலுத்தி ரீச்சார்ஜ் … Read more

பாராதி ராஜாவுக்காக பிரான்ஸில் சிறப்பு பிரார்த்தனை செய்த தமிழின் முன்னணி நடிகை

உடல்நலப் பிரச்சனை காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ’இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கவலைப்படும் வகையிலான பிரச்சனை ஏதும் இல்லை எனவும், நான்கு நாட்கள் சிகிச்சை முடிந்த பிறகு வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. திடீரென பாரதி ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று இயக்குநர் இமயம் பாரதிராஜாவை சந்தித்து ஆறுதல் … Read more

தாயை தனிமையில் விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயன்ற மகன் விமான நிலையத்தில் கைது

சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துர்காம்பாள். இவருக்கு வயது 74 ஆகும். இவர் கடந்த 15 ஆம் தேதி அன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் எனது கணவர் குப்புசாமி கடந்த மாதம் 3 ஆம் தேதி மரணம் அடைந்தார். மூத்த மகன் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். இளைய மகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி விட்டான். இவர் தனது தந்தை இறப்புக்கு கூட வரவில்லை. ஆனால் … Read more

புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவியதன் மூலம் பிரபலமான நபர் கோவிலில் தற்கொலை

தொழிலாளர்களை விமானத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததன் மூலம் பிரபலமானவர் பப்பன் சிங். கோவில் ஒன்றில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு. கொரோனா ஊரடங்கின் போது புலம்பெயர்ந்தவர்களை விமானத்தில் ஊருக்கு அனுப்பி வைத்த விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவில் 2020-ம் ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் போது ஊரடங்கு போடப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மனைவி, குழந்தையோடு பல நூறு கிலோமீட்டர் உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்து சென்றனர். அந்த நிலையில், டெல்லியில் … Read more

பில்கிஸ் பானோவுக்கு நீதி வழங்குங்கள்! ராகுல்காந்தி டிவிட்

டெல்லி: “பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்”  என ராகுல்காந்தி  டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த 2002-ம் குஜராத்தில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது,  5 மாத கர்ப்பிணியாக இருந்த 21 வயதான பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த  2008ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., … Read more

மூன்று வாரங்களாக சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியருக்கு தடை நீடிப்பு

கம்பம்: சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மூன்று வாரங்களாக நீடிப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் சுருளி அருவியாகும். சுருளி அருவிக்கு தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு ஊர்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர். இந்நிலையில் கேரளா மற்றும் கேரளாவையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளான தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர், பாளையம் மற்றும் சின்னமனுரில் தென்மேற்கு பருவமழை … Read more