வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் இன்னமும் நடக்குதா? தீயாய் பரவும் தகவல்.. நம்பலாமா?

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கு அப்படியொரு காரணமும் உள்ளதாக சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கதைகள் உலா வருகின்றன. அடுத்த மாதம் ரிலீஸ் கெளதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிம்பு, சித்தி இத்னானி நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு வரும் செப்டம்பர் 15ம் தேதி … Read more

அடுத்த சீனா யார்.. உண்மையில் இன்னொரு சீனா-வை உருவாக்க முடியுமா..?

சர்வதேச நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் மலிவான விலையில் உற்பத்தி செய்ய, கூட்டணியிலோ அல்லது முதலீட்டின் வாயிலாகவோ கடந்த 10 – 15 வருடத்தில் சீனாவில் சிறிதும் பெரிதுமாக உற்பத்தி தளத்தை அமைத்து லாபம் பார்த்து வந்தது. ஆனால் தற்போது இதே சர்வதேச நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளைக் காரணம் காட்டி இனி சீனா வேண்டாம் என்று உற்பத்தி தளத்தை வேறு நாடுகளுக்கு மாற்றப் பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முடிவெடுத்து வருகிறது. உண்மையில் இன்னொரு சீனா-வை உருவாக்க … Read more

இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்ள அர்ப்பணிப்பதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையுடன் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை மேலும் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி மதமெலா சிறில் ரமபோசா (Matamela Cyril Ramaphosa), ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்கா கடந்த காலங்களில் இலங்கையுடனான உறவு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாகவும் இரு … Read more

டெல்லி: திருமணம் மீறிய உறவு; 48 வயது பெண்ணின், 17 வயது மகளை இடைஞ்சல் எனக் கொன்ற 18 வயது இளைஞர்!

டெல்லியில் திக்ரி எல்லைப் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஷ் (18). பஹதுர்கரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இவர் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 48 வயது பெண்ணுடன் ஹரிஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்திருக்கிறார். ஹரிஷ் இந்த பெண்ணின் குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. தன்னுடைய தந்தை உயிருடன் இருக்கும் போதே, அம்மா வேறு ஒருவருடன் பழகுவது இந்த சிறுமிக்கு மனவேதனையும், கோபத்தையும் ஏற்படுத்தி … Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வரும் 27ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், … Read more

திமுகவில் இணைவதாக விஷமப் பிரச்சாரம்: அதிமுக எம்எல்ஏ ஆவேசம்

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி, திமுகவில் இணைய உள்ளதாக நேற்று தகவல்கள் பரவின. இதையடுத்து, அமுல் கந்தசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “திமுகவினர் விஷமத்தனமான பிரச்சாரத்தை செய்துள்ளனர். இதுபோன்ற பிரச்சாரங்களை செய்வது திமுகவின் வாடிக்கை. நான் அன்னூரில் குடியிருக்கிறேன். 150 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை புறக்கணிக்கும் திமுகவுக்கு ஒருபோதும் நான் தலைவணங்க மாட்டேன். இறக்கும்வரை அதிமுகவில்தான் … Read more

‘ஒத்துழைக்காத மத்திய அரசு’ – பெகாசஸ் உளவு வழக்கில் நிபுணர் குழு அறிக்கையை அலசிய உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் கண்காணிப்பில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த ‘பெகசாஸ்’ உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், … Read more

டெக்சாஸ் வறண்ட ஆற்றில் தென்பட்ட 11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் கால்தடங்கள்

வாஷிங்டன்: டெக்சாஸில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில், அங்கு வறண்ட ஆறு ஒன்றில் 11 கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசரின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க மாகாணங்களில் ஒன்று டெக்சாஸ். கடற்கரைகளை ஓட்டி அமைந்துள்ள இம்மாகாணத்தில் டைனோசர்களின் கால்தடங்கள் முன்னரே கண்டறியப்பட்டிருந்தன. இதன் காரணமாக டெக்சாஸில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி டைனோசர் பள்ளத்தாக்கு பூங்கா என்றழைக்கப்படுகிறது. இந்த நிலையில், வறட்சி காரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் பல ஆறுகள் வறண்டு உள்ளன. இதில் டைனோசர் … Read more

கொதித்தெழுந்த பிடிஆர் – யூடர்ன் போட்டு ஓடிய நபர்! மத வன்முறை திட்டம் தவிடுபொடி!

சமூக விரோத கருத்துக்களை பகிரும் இடமாக சமூக வலைதளங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். போலியான விஷமத்தனமான கருத்துக்கள் அதிகமாக பகிரப்பட்டு சாமானிய மக்களை சென்றடைகின்றன. அவசரத்தில் பலர் இந்த கருத்துக்களை உண்மை என நம்பக்கூடும் . அப்படியான ட்வீட் பதிவு ஒன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்ணில் பட கொதித்தெழுந்துவிட்டார். ட்விட்டைல் ‘ராதா இல்லா படம் சாதா’ என்ற ஐடியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை குறிப்பிடும் விதமாக, ‘அவர் 2022-23 பட்ஜெட்டில் இந்து கோவில்களை … Read more

பில்கிஸ் பானு வழக்கு: குஜராத், மத்திய அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கும்பல் ஒன்றால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது பெண் குழந்தையை அவரிடம் இருந்து பிடுங்கி அருகில் இருந்த கல்லில் ஒங்கி அடித்து அக்கும்பல் கொன்றது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரையும் அக்கும்பல் கொன்றது. இந்த சம்பவம நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீண்ட நாட்கள் நடைபெற்ற … Read more