ராணுவ ஆட்தேர்வில் வன்முறை வெடித்தது துப்பாக்கி சூட்டால் அதிர்ச்சி

போபால்: மத்திய பிரதேசத்தின் மோரேனா மாவட்டத்தில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் அக்னிபாதை திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்ய நேற்று நடந்த சோதனையில் இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், அம்பேத்கர் திடலில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவை விரட்டி கொண்டு ஓடுவது, பின்னர் இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபடுவது, உருட்டு கட்டைகளைக் கொண்டு தாக்கி கொள்வது, இறுதியில் கைகலப்பில் ஈடுபட்டது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன. … Read more

உணவில் பல்லி : 33 மாணவியருக்குவாந்தி, மயக்கம்| Dinamalar

ஹைதராபாத்,தெலுங்கானாவில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 33 பேருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள வர்தன்னாபேட்டையில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் தயாரித்து வைத்த உணவில், ஒரு பல்லி இறந்து கிடந்தது. இதுபற்றி, ஒரு மாணவி சமையல்காரரிடம் கூறினார். ஆனால், அது பச்சை மிளகாய் என அவர் கூறி விட்டார்.இந்நிலையில், அந்த உணவை சாப்பிட்ட மாணவியருக்கு, வாந்தி, மயக்கம் … Read more

சுஷ்மிதா சென் – லலித் மோடி 'காதல்' பிரேக் அப்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தலைவராக செயல்பட்டவர் லலித் மோடி. அதன்பிறகு சில ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்து அங்கு லலித் வசித்து வருகிறார். அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தியில் அவரது பெயர் இடம் பெறும். கடந்த ஜுலை மாதம் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் 'புதிய வாழ்க்கை' ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இருவரும் ஜோடியாக இருக்கும் … Read more

சீன நிலநடுக்கத்தில் 65 பேர் பலி50 ஆயிரம் பேர் வீடிழந்தனர்| Dinamalar

பீஜிங்:தென்மேற்கு சீனாவில், நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 65 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவின் சிசுவான் மாகாணத்தில், நேற்று முன்தினம், 6.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு, அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.மலைகள் அதிகம் உள்ள சிசுவானின் லுாடிங் பகுதியில், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பாறைகள் விழுந்ததில், வீடுகள், சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன.தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ள … Read more

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ராணி லுக்கிலேயே வந்த த்ரிஷா!

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு இன்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல் மற்றும் ரஜினி கலந்துக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படம் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷமி, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். … Read more

மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது; ஜே.டி.எஸ். வேட்பாளரின் குளறுபடியால் துணை மேயர் பதவியும் கிடைத்தது

மைசூரு: மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது. ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரின் குளறுபடியால் துணை மேயர் பதவியும் பா.ஜனதாவுக்கு கிடைத்தது. மேயர், துணை மேயர் தேர்தல் கர்நாடகத்தில் மைசூரு, சிவமொக்கா உள்ளிட்ட சில மாநகராட்சிகளுக்கு 4-ம் கட்ட மேயர், துணை மேயர் தேர்தலுக்கு இடஒதுக்கீடு அளித்து கர்நாடக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி மைசூரு மாநகராட்சி மேயர் பதவி பொது பிரிவு ஆண்களுக்கும், துணை மேயர் பதவி எஸ்.டி. பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து … Read more

குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

அரியலூர் விளையாட்டு போட்டிகள் அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றிய அளவிலான குறுவட்ட போட்டிகள் நடைபெற்றது. தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த சாத்தம்பாடி, குணமங்கலம், கோவிந்தபுத்தூர், முத்துவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, சுத்தமல்லி,கோடாலிகருப்பூர், சிலால் உள்ளிட்ட 11 பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் கோ-கோ, வாலிபால், கேரம், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்றது. இதில் … Read more

வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குகிறது ரஷியா- அமெரிக்க உளவுத்துறை

வாஷிங்டன், உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்துள்ள ரஷியா ஆயுதங்கள், தளவாடங்கள் பற்றாக்குறையால் தவிப்பதாக சொல்லப்படுகிறது. ஈரான் தயாரித்த டிரோன்களை வாங்கி ரஷியா பயன்படுத்தியது. ஆனால் இந்த டிரோன்களில் தொழில்நுட்ப கோளாறுகளை ரஷியா எதிர்கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் உக்ரைன் போருக்காக வட கொரியாவிடம் இருந்து ராக்கெட்டுகளையும், பீரங்கி குண்டுகளையும் வாங்கும் நடவடிக்கையில் ரஷியா இறங்கி உள்ளது என அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுபற்றி பெயர் குறிப்பிட … Read more

வாட்ஸ்ஆப் போன் கால் செய்ய கட்டணமா? டிராய் எடுக்கப் போகும் முடிவு என்ன?

வாட்ஸ் ஆப் செயலி மூலம் போன் கால், வீடியோ கால் செய்ய விரைவில் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு இலவச அழைப்புகள், டேட்டா போன்றவை வழங்கப்பட்டன. பின்னர் சில மாதங்கள் கழித்து கட்டணம் வசூலிக்கப்பட்டன. இப்போது ஜியோ, ஏர்டெல், வீ என எல்லா டெலிகாம் நிறுவன கட்டணங்களும் கிட்டத்தட்டச் சமமாகவே உள்ளன. எனவே இணையதள டேட்டா உள்ள பேக், வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள வைஃபை சேவையை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் … Read more

ஒகேனக்கல் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: 1.36 லட்சம் கன அடியாக நீர்வரத்து உயர்வு

தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் இன்று (செப்.6) காலை நீர் வரத்து 1.36 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று(5-ம் தேதி) காலை நிலவரப்படி விநாடிக்கு 43 ஆயிரம் கன … Read more