சாலையோரம் கொட்டிக்கிடந்த ரூ.500 கட்டுகள்: ஆசையில் அள்ளிச்சென்ற மக்கள் – போலீசார் விசாரணை

வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்துள்ளனர். இதுகுறித்து வேலூர் வடக்கு துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ … Read more

அண்ணன், தங்கை பாசத்தை பேசும் மஞ்சக்குருவி

பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களின் பாணியில் அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் மஞ்சக்குருவி. இதில் அண்ணனாக கிஷோர் நடிக்க, தங்கையாக நீரஜா நடித்துள்ளார். வில்லனாக 'குங்பூ மாஸ்டர்' ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர். சௌந்தர்யன் இசையமைத்துள்ளார். ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கிறார். அரங்கன் சின்னத்தம்பி இயக்கி உள்ளார். படம் … Read more

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்

]கடற்றொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய திட்டமும், புதிய காப்புறுதி திட்டமும் அறிமுகப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீர் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த காவத்த தெரிவித்துள்ளார். கடற்றொழில் சமூகத்தை அண்டி வாழ்வோரின்; மனநிலையை மேம்படுத்துவதற்காக அவர்களின் பிள்ளைகளின் ஆற்றலுக்கான வேலைத்திட்டம் என்ற தொனிப்பொருளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். கடற்றொழிலாளர்கள் மாதாந்த கொடுப்பனவை பெறுபவர்கள் அல்ல இதனால் இவர்கள் தங்களது உழைப்பில் கிடைக்கப்பெறும் பணத்திலே வாழுகின்றனர். இவர்களுக்கு … Read more

தனியாக வரும் பெண்களுக்கு தங்கும் மையம்.. மாநில அரசு அறிவிப்பு..!

கேரளாவின் முக்கிய நகரங்களில், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்கும் வகையில், இலவச தங்கும் மையம் அமைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “முக்கிய நகரங்களில் ‘மையம் எனது கூடு’ என்ற பெயரில் அரசு மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில், குழந்தைகளுடன் தனியாக வரும் பெண்கள் தங்கிக் கொள்ளலாம். இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக … Read more

5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

6ஆவது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் இரண்டு நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 13 இடங்களில் 5ஜி சேவை அறிமுப்படுத்தப்பட்டுள்ளது. 5ஜி தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா … Read more

கோவை மூதாட்டி விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவிய டி.எஸ்.ஆர்… மறுக்கும் போலீஸ்… நடந்தது என்ன?

மகளிருக்கு அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் குறித்து, அமைச்சர் பொன்முடி ஓ.சி என்று கூறியிருந்தார். இதனிடையே, கோவை மதுக்கரை அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு துளசியம்மாள் என்கிற மூதாட்டி ஓர் பேருந்தில் ஏறினார். கோவை அதிமுக கூட்டத்தில் மூதாட்டி “ஏன், மாவட்டச் செயலாளர் உங்களைப் பரிந்துரைக்கவில்லையா?” – மகளிர் நிர்வாகியைக் கேட்ட கோவை மா.செ மனைவி நடத்துனர் இலவச பயணத்துக்கான சீட்டை கொடுத்தபோது அதை வாங்காமல், “எனக்கு ஓ.சி தேவையில்லை.” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த … Read more

அக்.11-ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: 10 கட்சிகள், 13 அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இம்மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று 10 கட்சிகள் மற்றும் 13 அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் … Read more

ப.சிதம்பரத்துக்கு செம பதவி; மீண்டும் தொடங்கும் ஆட்டம்!

கட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் இல்லாத நிலை உள்ளது. இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்தாலும் கூட, கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருவரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான மனுத்தாக்கல் செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. … Read more

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்: மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு!

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் … Read more

பாண்டவர் அணியின் அதிரடி… நடிகர் சங்கத்திலிருந்து பாக்யராஜ் நீக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ஆம் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. அப்போது வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டடது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதால், அவரால் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும், வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டது.  … Read more