ரூ.908 கோடி நிலக்கரி ஊழல்.. "ஆற்காடு வீராசாமி" மறந்துட்டீங்களா.. ரவுண்டு கட்டிய தங்கமணி..!!

அதிமுக ஆட்சி காலத்தில் மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி இன்று நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் “நான் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் நடைபெற்ற செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக வெளியான செய்தியில் துளியும் உண்மை இல்லை. கடந்த மார்ச் 3ம் தேதி … Read more

வரலாற்று சம்பவம் ..!! இன்று நடக்கவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் போடுகிறார் பிரதமர் மோடி..!!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியானது இன்று ஆகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்டை `டிரா’ செய்தாலே இந்தியா தொடரை வென்றுவிடும். ஆனால் உலக … Read more

`ஜனநாயகம்' குறித்து ராகுலிடம் கேள்வியெழுப்பிய ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரின் மகள்! – இணையத்தில் வீடியோ வைரல்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரிட்டனுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று உரையாற்றிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில், லண்டனில் நடைபெற்ற சாத்தம் ஹவுஸ் (Chatham House) சிந்தனையாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண், ராகுல் காந்தியிடம் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது. அந்தக் காணொளியை ராகுல் காந்தியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ராகுல் காந்தி மாலினி மேஹ்ரா எனும் … Read more

மகளிர் தினம் கொண்டாட மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு விடுமுறை – காவல் ஆணையரின் உத்தரவால் உற்சாகம்

மதுரை: மதுரை மாநகரில் மகளிர் தின விழா கொண்டாட ஓட்டுமொத்த பெண் போலீஸாருக்கும் ஒருநாள் விடுமுறை அளித்து, மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் உத்தரவிட்டது, தங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது என பெண் காவலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று மகளிர் தினத்தையொட்டி, மதுரையில் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தியும், கலை நிகழ்ச்சிகளை … Read more

‘என்னது திமுக எம்பி அப்துல்லா ஒரு பெண்ணா.?’- நடிகை கஸ்தூரி சர்ச்சை ட்வீட்.!

போனமுறை கலைஞரை இழிவுபடுத்திய நடிகை கஸ்தூரி, இம்முறை திமுக எம்பி அப்துல்லாவிற்கு மகளிர் வாழ்த்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய ட்வீட்களுக்கு பெயர் பெற்றவர் நடிகை கஸ்தூரி. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி, நாடு முழுவதும் பேசு பொருளானது. குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாகவும், எரிக்கப்படுவதாகவும் வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமிழக அதிகாரிகளுடன் இது குறித்து பேசினார். தொடர்ந்து பீகார் அதிகாரிகள் குழு … Read more

இதுவரை 20 மில்லியன் டன் உணவு தானியம்!கருங்கடல் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது: ஐ.நா

உக்ரைனில் இருந்து விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவும் கருங்கடல் தானிய முன்முயற்சி முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைன் தானிய ஏற்றுமதி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு, உலக அளவில் ஏற்பட்ட தானிய பற்றாக்குறை தீர்ப்பதற்காக உக்ரைன், ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இணைந்து கருங்கடல் உணவு தானிய ஒப்பந்தத்தை மேற்கொண்டன. அதனடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 23 … Read more

கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த விடுதி சமையலர் நியமனங்களில் அனுபவம் இல்லாதவர்கள் தேர்வு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை

மதுரை: கடந்த 2020 அதிமுக ஆட்சியில் நடந்த விடுதி சமையலர் நியமனங்களில் அனுபவம் இல்லாதவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட நியமனங்களை ரத்து செய்த தமிழ்நாட்டு அரசு ஆணையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 29 மாவட்ட ஆதிதிராவிடர், பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் காலியாக இருந்த 954 சமையலர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான … Read more

வானில் பறந்த விமானத்தில் ‘தம்’ அடித்த இளம்பெண்: கைது செய்த போலீசார்

பெங்களூரு: கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தின் கழிப்பறையில் புகைபிடித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இண்டிகோ விமானம் கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு  புறப்பட்டது. அதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரியங்கா சக்கரவர்த்தி (24) என்பவர் பயணம் செய்தார். அப்போது அவர், விமானத்தின் கழிப்பறையில் புகைபிடித்து கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் விமானம் பெங்களூரு  வந்தடைந்தது. முன்னதாக, விமானம் தரையிறங்குவதற்கு முன், பயணிகளை தங்களது இருக்கையில் அமரும்படி விமான பணி ஊழியர்கள் அறிவுறுத்தினர். … Read more