Thani Oruvan 2: 'தனி ஒருவன் 2' படத்தின் வில்லன் இந்த நடிகரா.?: நடந்தா நல்லாருக்கும்.!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ‘தனி ஒருவன்’. நீண்ட காலமாகவே இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருந்தனர். எட்டு ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு ‘தனி ஒருவன் 2’ படம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.

ஜெயம் ரவி அவரது அண்ணன் மோகன்ராஜ் கூட்டணியில் உருவான படம் ‘தனி ஒருவன்’. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி, நயன்தாரா, நாசர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தொடர்ந்து ரீமேக் படங்களையே இயக்கி வருகிறார் என்ற விமர்சனத்தை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கி இருந்தார் மோகன்ராஜ்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தில் மித்ரன் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். மேலும் சித்தார்த் அபிமன்யு என்ற வில்லன் கேர்கடரில் மெர்சல் காட்டி இருந்தார் அரவிந்த் சாமி. அவரது நடிப்பு, ஸ்டைலிஷ் லுக் எல்லாமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட படத்தில் நடித்த அனைவருக்குமே கெரியர் பெஸ்ட் படமாக ‘தனி ஒருவன்’ அமைந்தது.

ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோ அளவிற்கு வில்லனின் கதாபாத்திரமும் முக்கியம் என்பதை இந்தப்படம் நிரூபித்தது. இந்நிலையில் ‘தனி ஒருவன்’ படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதை அண்மையில் படக்குழுவினர் ரசிகர்களுடன் கொண்டாடினர். அதனை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பும் வெளியானது.

‘தளபதி 68’ அப்டேட்: ஆரம்பமே அமர்க்களம்.. பெருசா சம்பவம் செய்யும் வெங்கட் பிரபு.!

மேலும் ஜெயம் ரவியின் அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தனர். ஹாலிவுட் லெவல் மேக்கிங்கில் இருப்பதாக இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அத்துடன் வில்லன் யார் என்ற கேள்வியுடன் இந்த வீடியோ முடிக்கப்பட்டிருந்தது. அரவிந்த் சாமி அளவிற்கு இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

அவர் அளவிற்கு யாரால் ஈடு கொடுத்து நடிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ‘தனி ஒருவன் 2’ படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் ரத்ன வேலுவாக மிரட்டியிருந்த பகத் பாசில். இந்தப்படத்தில் அவரின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அவர் ‘தனி ஒருவன் 2’ படத்திலும் வில்லனாக நடித்தால் நல்லாருக்கும் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

குல்லா இல்லாத சிவகார்த்திகேயன்.. முதன்முறையாக வெளியான ‘எஸ்கே 21’ லுக்: தீயாய் இருக்கே.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.