“முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்” – கரூரில் இபிஎஸ் பேட்டி

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இந்த பொதுக்கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நெரிசல் ஏற்பட்டதாகவும் எங்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தகவல் வந்துள்ளது. தவெக கூட்டம் நடைபெறுகின்ற போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். … Read more

சோனம் வாங்சுக் கைது ஏன்? – லடாக் டிஜிபி விளக்கம்

லே: லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி, சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் தலை​மை​யில் நடைபெற்ற உண்​ணா​விரம் போராட்​டம் வன்முறையாக மாறியது. இது குறித்து லடாக் டிஜிபி சிங் ஜாம்​வல் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: உண்​ணா​விரத போராட்​டம் வன்​முறை​யாக மாற சோனம் வாங்​சுக் காரண​மாக இருந்​தார். இந்த போராட்​டத்​தில் பாகிஸ்​தானுக்கு தொடர்பு உள்​ள​தான என விசா​ரணை நடை​பெறுகிறது. வாங்​சுக் ஏற்​கெனவே பாகிஸ்​தான் சென்​றுள்​ளார். இஸ்​லாம​பாத் அதி​காரி​களு​டன் அவர் பேசி​யுள்​ளார். லே பகு​தி​யில் போராட்​டம் மேலும் தீவிரமடைவதை … Read more

கொடி கட்டிய ஆம்புலன்ஸ், மின்தடை.. பல சந்தேகங்கள் – எடப்பாடி பழனிசாமி!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவத்தில் பல சந்தேகங்கள் உள்ளது என்றும் தீவிர விசாரணை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

39 பேர் பலி / 111 பேர் காயம்: கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 35 பேர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு…

சென்னை: கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்த நிலையில், பலியானவர்களில் 35 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.  தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம்  கரூரில் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.  அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட … Read more

கரூர்: “நடுநிலை வேண்டும், இவ்வளவு வேகமா ஒரு நபர் கமிஷன் அமைத்ததன் பின்னணி?'' – எடப்பாடி பழனிசாமி

கரூரில் நடந்த துயர சம்பவத்தை அடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கரூர் சென்றுள்ளார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரும் இருந்தனர். உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின், செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது… “பரப்புரை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பரப்புரையின் போது மின்சார விளக்குகள் அணைந்துள்ளன… அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி இவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்பவை எங்களுக்கு ஊடகத்தின் வாயிலாகத் தெரிய … Read more

பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

மதுரை: சிலை கடத்​தல் தடுப்​புப் பிரி​வில் ஐ.ஜி.​யாக பொன்​ மாணிக்​கவேல் பணி​யாற்​றிய​போது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்​ளிட்​டோர் சிலை கடத்​தலுக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. இதற்​கிடையே, பொன்​ மாணிக்​கவேல் மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை கூறி, உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் காதர்​பாட்சா மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், பொன்​ மாணிக்​கவேல் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கு​மாறு சிபிஐ-க்கு உத்​தர​விட்​டது. அதன்​பேரில், அவர் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு … Read more

2029-ம் ஆண்டுக்குள் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு

சூரத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத், மகா​ராஷ்டிர மாநிலம் மும்பை இடையே புல்​லட் ரயில் திட்​டத்தை மத்​திய அரசு கட்​டமைத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று சூரத் பகு​தி​யில் கட்​டப்​படும் ரயில் நிலை​யத்தை மத்திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பார்​வை​யிட்​டார். பின்​னர் அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் முதல் புல்​லட் ரயில் திட்​டத்​தின் சூரத் மற்​றும் குஜ​ராத்​தில் உள்ள பிலிமோரா இடையே​யான 50 கி.மீ. நீளத்​துக்கு 2027-ம் ஆண்டு திறக்​கப்​படும். மேலும் 2029-ம் ஆண்​டுக்​கு மும்​பை அகம​தா​பாத் இடையே​யான முழுத் … Read more

கரூர் தவெக கூட்ட நெரிசல்: 39 பேர் பலி.. பிரபலங்கள் இரங்கல்!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்த நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். 

கரூர் துயரம்: “இனி ஒரு உயிர்கூட போகக் கூடாது" – நடிகர் வடிவேலு, சூரி உருக்கம்

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு, சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சூரி நடிகர் சூரி தன் எக்ஸ் பக்கத்தில், “கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் … Read more

கைது செய்யப்படுவாரா விஜய்? தவெக மீது கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்பட 4 பிரிவுகளில் வழக்குஸ

கரூர்: விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி 111பேர் காயம் அடைந்த நிலையில்,   தவெக மீது கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்பட 4 பிரிவுகளில் கரூர் மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. , இதற்கிடையில், தமிழக பொறுப்பு டிஜிபியும் நேரில் சென்று நள்ளிரவில் விசாரணை மேற்கொண்டார். தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்துக்கு கட்டுக்கடங்காத கூட்டம் … Read more