Angammal: "அங்கம்மாளாக மாற நேர்மை தேவைப்பட்டுச்சு!" – கீதா கைலாசம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘அங்கம்மாள்’ படத்தை என்ஜாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். கீதா கைலாசமும், சரண் சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கீதா கைலாசம் – சரண் சக்தி தவிர பரணி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். டிசம்பர் 5-ம் தேதி … Read more

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் உயர்கல்வி சீரழிவு: தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பு

சென்னை: ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்காடி காரணமாக பல்வேறு பல்கலைக்கங்களில் படித்துவரும் மாணவ மாணவிகளின் உயர்கல்வி சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி,  தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பு என குற்றம் சாட்டி உள்ளார். சென்னை  பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை; மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்க நிதி இல்லை,  தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி சீரழிந்து போய் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  விமர்சித்து உள்ளார். … Read more

மத்திய அரசு உத்தரவை ஏற்று… காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் லோக் பவன் என உடனடியாக பெயர் மாற்றம்

ஐதராபாத், நாட்டின் மாநிலங்களில் மத்திய அரசு பிரதிநிதியாக செயல்படும் கவர்னர்கள் தங்க கூடிய கவர்னர் மாளிகை, ராஜ் பவன் என்று அழைக்கப்படுகிறது. மாநிலங்களில் கவர்னர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜ் பவன் பெயரை, லோக் பவன் என மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் கவர்னர்களின் மாநாடு புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் … Read more

முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: சூர்யவன்ஷி புதிய சாதனை

ஆமதாபாத், 18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் கொல்கத்தாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் (பி பிரிவு) மராட்டிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இதில் வைபவ் சூர்யவன்ஷி சதத்தின் (ஆட்டமிழக்காமல் 108 ரன், 61 … Read more

உயிரியல் பூங்காவில் தடுப்புச் சுவரை தாண்டி குதித்த வாலிபரை தாக்கி கொன்ற சிங்கம்

பிரேசிலியா, பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அங்கு சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இதனை காண நண்பர்கள் சிலர் அங்கு சென்றிருந்தனர். அதில் மச்சாடோ (வயது 20) என்ற வாலிபர் ஆர்வ மிகுதியில் தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு மரம் வழியாக கீழே இறங்க முயன்றார். அப்போது அங்கிருந்த ஒரு சிங்கம் அவரை தாக்கி இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த மச்சாடோ … Read more

Vikatan Digital Award: “அப்பா கமல் ரசிகர்; அவரோட திருமணத்திற்கு கூட'' – தமிழ் டெக் தமிழ்ச்செல்வன்

சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் ‘விகடன் டிஜிட்டல் விருதுகள் – 2025’ கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். தமிழ்ச்செல்வன் விருதைப் பெற்ற பிறகு பேசிய தமிழ்ச்செல்வன், “சுட்டி விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினதுல இருந்து ரெண்டாம் க்ளாஸ் படிக்கும்போது கம்யூட்டர் க்ளாஸ் சேர்த்துவிட்டது வரைக்கும் எல்லாமே என் அப்பா தான் பண்ணாரு. எங்க அப்பா கமல் சாரோட மிகப்பெரிய ரசிகர். அப்படி ஒரு ரசிகரை பார்க்க முடியாது, … Read more

ரூ.2.5 லட்சம் வரை கல்வி உதவித்தொகை… மத்திய அரசின் சிறப்பு திட்டம்! – விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் பல மாணவர்கள் திறமை இருந்தும், போதிய நிதி வசதி இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை பாதியிலேயே கைவிடும் அவல நிலை உள்ளது.

18 வயதில்..பிரியங்கா மகள் வாங்கிய விலை உயர்ந்த கார்! எத்தனை லட்சம் தெரியுமா?

Priyanka Daughter Zaara Expensive Car Price : பிரபல தொகுப்பாளர் பிரியங்காவின் மகள், சாரா புதிதாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்; இன்றே கடைசி… கனமழைக்கு கொஞ்சம் ரெஸ்ட் – வெதர்மேன் அப்டேட்

Tamil Nadu Weatherman Pradeep John: தற்போதைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்வது இன்றே கடைசி என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். 

வந்தாச்சு மத்திய அரசின் பாரத் டாக்ஸி செயலி! ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு சிக்கல்

Bharat Taxi app : நாடு முழுவதும் டாக்ஸி தொழிலில் தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், மத்திய அரசு இதற்கு ஒரு முடிவுகட்ட பாரத் டாக்ஸி என்ற செயலியை உருவாக்கியுள்ளது. டாக்ஸி மற்றும் கேப் ஓட்டுநர்களை தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கவும், பயணிகளுக்கு மலிவான மற்றும் நம்பகமான சேவையை வழங்கவும் இந்த பாரத் டாக்ஸி செயலியை உருவாக்கியுள்ள மத்திய அரசு, இதன் முன்னோட்ட சேவையை (Pilot Project) … Read more