இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் கெடு….

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் ஒருவாரம் கெடு விதித்துள்ளது. இல்லையென்றால் ராஜபச்சே அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவரை பதவி விலக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் பதவி விலக மறுத்து வருகிறார். இதையடுத்து, அவர்மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் … Read more

500 பெண் ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1லட்சம் மானியம் – 1லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு…

சென்னை: 500 பெண் ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு புதிய ரிக்ஷா வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும், 1லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாப்பு வழங்கப்படும் என்ற  சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை, தொழிலாளர் நலத்துறை, … Read more

விளையாட்டு சங்கத்தில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?! உயர்நீதி மன்றம் கடும் காட்டம்

சென்னை: விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை என சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது. தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்கத் தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வட்டெறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரணை நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் விசாரணையைத் தொடர்ந்து வழங்கிய தீர்ப்பில், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே … Read more

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுப்பு!

டெல்லி: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துவிட்டதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா டிவிட் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் வகையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் தொடர்  ஆலோசனை நடத்தினார். 3 முறை நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, அகில … Read more

மே 15ஆம் தேதி முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்! தமிழகஅரசு தகவல்…

சென்னை: மே மாதம் 15ஆம் தேதி முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழகஅரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கோடை வாசஸ்தலங்கள் செல்லும் குடிமகன்கள், குடித்துவிட்டு மதுபாட்டில்களை காடுகளில் தூக்கி வீசுவதால், வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  வனப்பகுதிகளில் வீசிச் செல்லும் உடைந்த பாட்டில்களை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் … Read more

6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்த டிசிஜிஐ அனுமதி!

டெல்லி:  கொரோனா நான்காவது அலை பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு  இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமது வழங்கியுள்ளது. அதுபோல,  5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Corbevax க்கு அவசரகால பயன்பாட்டுக்கும் டிசிஜிஐ அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, … Read more

ரூ.8.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி பதிவுத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ரூ.8.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 சார்பதிவாளர் அலுவலகம் உள்பட வணிகவரி பதிவுத்துறை கட்டடங்களை  காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி,  ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் வணிகவரி, பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் வணிகவரி, பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பதிவுத்துறை … Read more

டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்! உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை மற்றும் 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி சட்டப்பேரவையில் இன்று கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் காலை நடைபெற்ற கேள்வி நேரத்தில் திமுக திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோவி செழியன், தனது தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் மற்றும், அரிசி ஆலை  அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். … Read more

சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கு! இளைஞனுக்கு தூக்கு தண்டனை விதித்தது சேலம் நீதிமன்றம்…

சேலம்: சேலம் மாவட்டத்தில் 13 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்து,  கொடூரமாக கொலை செய்த இளைஞனுக்கு சேலம் மாவட்ட போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் சாமிவேல். இவரின் மனைவி சின்னப்பொண்ணு. இவர்களின் கடைசி மகள் ராஜலட்சுமி வயது 13. இவர் சம்பவத்தன்று அந்த … Read more

மின் வெட்டு பிரச்சினை: ஜார்கண்ட் முதல்வருக்கு காட்டமாக டிவிட் போட்ட தோனியின் மனைவி சாக்ஷி

ராஞ்சி: தொடர் மின்வெட்டு பிரச்சினை குறித்து ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி கேள்வி எழுப்பி டிவிட் போட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை தலைதூக்கி உள்ளது. இந்த நிலையில்,  அங்கு ஆட்சி செய்து வரும், ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு, பொருளதார நெருக்கடி காரணமாக,பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள ஜார்க்கண்ட் … Read more