Hansika Motwani: "அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" – ஹன்சிகா ஓபன் டாக்

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். பிறகு, இந்தத் தம்பதி கடந்த மார்ச் மாதம் விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமாக 2024-ம் ஆண்டு ஜூலை முதல் பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் விவாகரத்து பெற்றனர். Hanisika Motwani & Soheal Kathuria விவாகரத்தில் ஹன்சிகா எவ்வித ஜீவனாம்சமும் கோரவில்லை. சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், தனது விவாகரத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை … Read more

Akshay Kumar: ஆன்லைன் கேமில் அக்‌ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாணப் படம் கேட்ட நபர் கைது

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார். மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பேசுகையில், ”எனது மகள் கண்ணுக்குத் தெரியாத நபருடன் ஆன்லைன் கேம் விளையாடியபோது எதிர்திசையில் இருந்த நபர் மெசேஜ் மூலம் உரையாடினார். அப்படி உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்கிருக்கிறாய், ஆணா, பெண்ணா என்று கேட்டுள்ளார். பெண் என்று எனது மகள் சொன்னவுடன் நிர்வாண புகைப்படம் … Read more

'KD: The Devil' படத்தின் டிரெயிலர் நீக்கப்பட்டது ஏன்? – KVN தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா நடித்துள்ள கன்னட படம் ‘KD: The Devil’. ‘ஜன நாயகன்’ படத்தைத் தயாரித்த KVN தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. KVN தயாரிப்பு நிறுவனம் படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியானது. ஆனால் நேற்று அப்படத்தின் டிரெய்லரை யூடியூப்பிலிருந்து நீக்கியிருந்தது KVN நிறுவனம். இந்நிலையில் யூடியூப்பிலிருந்து டிரெய்லரை நீக்கியது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. “கவனக் குறைவே காரணம்!” – ‘ஜனநாயகன்’ பட எடிட்டரை இடைநீக்கம் செய்த படத்தொகுப்பாளர்கள் சங்கம்! … Read more

600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார். அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமாக இருக்கிறது. 27 மாடிகள் கொண்ட இந்த அண்டிலியா கட்டிடம் ரூ.15,000 கோடி மதிப்புடையது. இந்த கட்டிடத்தை பராமரிக்கவும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முகேஷ் அம்பானி ஒவ்வொரு ஆண்டும் பல கோடி செலவு செய்து வருகிறார் . அதோடு ஒவ்வொரு மாதமும் 70 … Read more

''அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்; கண்டுபிடிங்க" – சரண்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில்நுட்பத்தில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது. அமர்க்களம் இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் சரண் அஜித், ஷாலினியின் காதல் குறித்து பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், ” அஜித், ஷாலினி லவ் பண்ண விஷயம் எனக்குத் தான் முதலில் தெரியும். என்னிடம் தான் … Read more

இந்திய ரயில்வேயில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை; பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுமா?

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில், சுமார் 29,608 பணியாளர்களைக் குறைக்க இந்திய நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் மட்டும் வரும் 2026 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. இந்திய ரயில்வே ஒருபுறம் அதிவேக ரயில்கள், புதிய வழித்தடங்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பணியாளர்களின் … Read more

நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்?- வெளிப்படையாக சொன்ன அமர்க்களம் இயக்குநர்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில்நுட்பத்தில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது. ஷாலினி – அஜித்| அமர்க்களம் இந்நிலையில் அஜித்தை வைத்து அதிகப் படங்களை இயக்கிய இயக்குநர் சரண், அஜித் ஏன் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார் என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், ” … Read more

சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் : திருமண வரம் தருவாள் தபசு காமாட்சி!

சென்னையில் கோயில்கொண்டிருக்கும் அம்மன் தலங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயிலுக்கும் முக்கியத்துவம் உண்டு. அவற்றில் மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் மிகவும் பழைமையானது. அன்னை காமாட்சி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த தலம் இது. இதன் பின்னணியில் சொல்லப்படும் புராணத் தகவல் சுவாரஸ்யமானது. ஒருமுறை கயிலாயத்தில் பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினாள். ஈசனின் கண்கள் என்பன சூரியன், சந்திரன் அல்லவா… அப்படி உலகுக்கு ஒளிதரும் இரண்டையும்மூடினால் என்ன ஆகும்… உலகமே … Read more

“வீட்டில் எல்லாரும் முடிவு எடுக்குறாங்க… நானோ என்னை இழந்து நிற்கிறேன்” – பேசும் மனசு – 7

“எனக்குத் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. புதிய குடும்பம், புதிய மனிதர்கள், புதிய சூழல் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, பழகிக்கொள்ள நான் முயற்சி செய்தேன். ஆனால், காலப்போக்கில் ஒரு விஷயம் என்னை மிகவும் பாதிக்க ஆரம்பித்தது.என்னுடைய வாழ்க்கையில் எடுக்கப்படும் பெரும்பாலான முடிவுகள் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்படுகின்றன. மாமியார் – மருமகள் வீட்டில் நான் என்ன சமைக்க வேண்டும், நான் எங்கே போக வேண்டும்?, யாருடைய நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும்?, எப்போது … Read more