இசை தந்த தேவதை; தேன் குரலுக்குச் சொந்தக்காரி – ஸ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல் | Visual Story

தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளைக் கடந்து தன் தேன் குரலால் பலரது மனதைக் கட்டிப்போட்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் 1984 ல் மேற்கு வங்கத்தில் பிறந்தவர். நான்கு வயதில் இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியவரின் முதல் ஆல்பமான `பென்தெக்கி பீனா’ 1998 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. 16 வயதில் அதாவது ஜீ தொலைக்காட்சியில் `ச ரி க ம ப’  ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னரானார்.  பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி யின் தாயார் … Read more

பிரித்தானியாவின் பலம் மற்றும் பாதுகாப்பு இது! இருநாட்டு தலைவர்களை சந்திக்கும் பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானியாவின் உலகளாவிய கூட்டணி பலம் மற்றும் பாதுகாப்பின் மிகப்பெரிய ஆதாரம் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணம் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான Aukus ஒப்பந்தத்தின் கீழ், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது குறித்து விவாதிக்க ரிஷி சுனக் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடன் இந்த சந்திப்பில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேஸும் கலந்து கொள்கிறார். ஜோ பைடனுடன் இருவரும் இணைந்து நீர்மூழ்கி கப்பல் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளனர். நீர்மூழ்கி கப்பல் … Read more

தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய நாட்டில் தன்பாலின திருமணங்களை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பாக பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்பு இணையாக தன்பாலின திருமணங்களை கருத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காததால் அடிப்படை உரிமைகள் … Read more

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவு

நய்பிடாவ்: மியான்மரில் பூமிக்கு அடியில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை துவக்கம்| Budget session of Parliament to resume on March 13

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 2023-24 ம் ஆண்டுக்கான பார்லிமென்ட் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை (மார்ச் 13) துவங்க உள்ளது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31ம் தேதி துவங்கி ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்கள் நடக்கும் எனவும், பிப்.,14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் ஜன.,31ல் துவங்கியது. பிப்.,1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. … Read more

எனக்கு கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது: பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தாண்டியா மாவட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த சில நாட்களாக பெங்களூரு மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. நமது நாட்டின் வளர்ச்சியை கண்டு பெருமையுடன் இளைஞர்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர். அனைத்து திட்டங்களும், வளர்ச்சி மற்றும் செழுமையை கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்களும் திறந்து வைக்கப்படுகின்றன. கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் மைசூரு முக்கியமான நகரங்கள். ஒரு நகரம் தொழில்நுட்பத்திற்கும், மற்றொரு நகரம் பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது. இரு நகரங்களையும் தொழில்நுட்பங்கள் … Read more

விமான கழிவறையில் ஒலித்த அலாரம்; பதறிய பயணிகள்., நடுவானில் இந்திய வம்சாவளி அமெரிக்கரின் அலட்சிய செயல்

லண்டனிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து வந்த இந்திய வம்சாவளி அமெரிக்கர் அலட்சியமாக செய்த காரியத்தால், அவர்மீது மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லண்டன்-மும்பை விமானத்தில் ஏர் இந்தியா லண்டன்-மும்பை விமானத்தில் கழிவறையில் புகைபிடித்ததாகவும், மற்ற பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் இந்திய வம்சாவளி அமெரிக்க குடிமகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்தனர். 37 வயதான ரமாகாந்த் (Ramakant ), மார்ச் 11-ஆம் திகதி செவ்வாய்கிழமை நடுவானில் விமானத்தில் சிரமத்தை ஏற்படுத்தியதற்காக … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 571 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 571 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி வீரர் விராட் கோலி 364 பந்துகளில் 186 ரன்கள் எடுத்த நிலையில் மர்ஃபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பெங்களூரு- மைசூரு இடையேயான விரைவுச்சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பெங்களூரு, பெங்களூரு-மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.8 ஆயிரத்து 480 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு 75 நிமிடங்களில் இந்த விரைவுச்சாலையில் செல்ல முடியும். இந்த சாலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன்படி, பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை உள்பட ரூ.16 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கிவைத்தார். இந்த சாலை மூலம் பெங்களூருவில் இருந்து குடகு, ஊட்டி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவாக செல்ல … Read more