36 பந்தில் சதம்! வாணவேடிக்கையால் அதிர்ந்த மைதானம்..மிரட்டல் வீரரின் வீடியோ

PSL தொடரில் முல்தான் வீரர் உஸ்மான் கான் 36 பந்துகளில் சதம் விளாசி மிரள வைத்தார். உஸ்மான் கான் ருத்ர தாண்டவம் பாகிஸ்தான் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முல்தான் சுல்தான் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குவெட்டா அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முல்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் உஸ்மான் கான் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே சரவெடியாய் வெடித்த உஸ்மான், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். SHOT, … Read more

சென்னை ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் தலா ரூ.5-10 கோடி வரை நிதி ஒதுக்கி நவீன முறையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அம்பத்தூர், அரக்கோணம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கிண்டி, மாம்பலம், சென்னை கடற்கரை, பூங்கா, பெரம்பூர், பரங்கிமலை, திருவள்ளூர், திருத்தணி ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

போதையில் மட்டையான மணமகன் : திருமணத்தை நிறுத்திய மணமகள்| Drunk bridegroom : Bride who called off the wedding

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் குவஹாத்தி: அசாமில் குடி போதையில் மணமகன் மயங்கி விழுந்ததால், மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அசாமில் அரங்கேறி உள்ளது. அசாமின் நல்பாரி கிராமத்தைச் சேர்ந்த பிரசஞ்சித் ஹலோய் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடக்கவிருந்தது.இவர்களின் திருமணத்திற்காக, இரு வீட்டாரும் இணைந்து விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், திருமண நாளின் போது, மண்டபத்திற்கு தள்ளாடியபடி மணமகன் வந்ததை பார்த்த மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மணமகன் … Read more

IND v AUS: `அடிப்பேங்கய்யா!' சண்டை செய்யும் இந்தியா; அனல் பறக்கும் ஆட்டமாக மாறிய அஹமதாபாத் டெஸ்ட்!

பார்டர் – கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாகவே 5 நாள்கள் முழுமையாக டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில்லை என்று சொல்லப்பட்டு வந்த குறை இந்தத் தொடரின் மூலம் மேலும் வலுவாகிக் கொண்டிருந்தது. தற்போது அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் இந்திய அணி அபாரமாக ஆடிக் கொண்டிருக்கின்றது. அதிலும், இந்த ஆட்டத்தை டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான அரையிறுதி ஆட்டமாக நினைத்து இந்தியா ஆடி வருகிறது. இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிவதால் செல்வம் சேருமா ?

சாதாரணமாக மோதிரங்கள் அழகுக்கு பல விரல்களில் பல விதமாக அணிவதை பார்க்கலாம். குறிப்பாக இந்த விடயங்களில் பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள்,ஆனால் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி மோதிரம் அணியும் போது அழகு மற்றும் அத்தோடு அதற்கான பலன் அறிந்து அணிந்துகொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். வெள்ளி மோதிரம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பஞ்ச உலோகங்களில் வெள்ளிக்கு மகத்துவம் அதிகம் என கூறப்படுகிறது.  வெள்ளி நிறம் அமைதியை குறிக்கிறது. வெள்ளி வியாழனையும் சந்திரனை … Read more

முதல்வரின் புகைப்பட கண்காட்சி.. புகழ்ந்த ரஜினி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” என்ற தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த கண்காட்சியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், திரைப்பட துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை இன்று நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். … Read more

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் ஜார்ஜ் ஆபிரகாமை சைதாப்பேட்டை மகளிர் போலீஸ் கைது செய்தது.

தென்காசி: கனிமவளக் கடத்தல் லாரி மோதி மூன்று இளைஞர்கள் படுகாயம்; ஓட்டுநர் கைது!

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எடுக்கப்படும் பாறைகள், ஜல்லி, கல், எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமம் ஏற்றிச் செல்லும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தென்காசி மாவட்டம் புளியறை செக்போஸ்ட் வழியாக கேரளாவுக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. கனிமவளக் கடத்தல் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தென்காசி: “கனிம வளக் கடத்தல் லாரிகளால் தொல்லை” – சாலையின் நடுவே பள்ளம் தோண்டிய பஞ்சாயத்து தலைவர்! கேரளாவுக்குச் செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதால் சாலைகள் நாசமடைகின்றன. … Read more

கேரளாவில் அரசு பேருந்து- கார் மீது மோதி பயங்கர விபத்து

பத்தினம்திட்டா: கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர் பகுதி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. அந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கேரள அரசு பேருந்து சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கார் மீது மோதியவுடன் அங்கிருந்து கிறிஸ்துவ தேவாலய வெளிப்புறச்சுவர் மீது மோதியதில் தேவலாயத்தில் … Read more

ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு

ஈரோடு: ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீசியுள்ளார். ஆபத்தான நிலையில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தில் ஆசிட் வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.