ஈரோடு, நாமக்கல், சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது

சென்னை: ஈரோடு, நாமக்கல், சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாமக்கல், சேலத்தில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தில் நீட் மசோதா உள்ளது: ஜனாதிபதி தகவல்| Ministry of Home Affairs has NEET bill: President Dravupati Murmu informs

புதுடில்லி: நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தகவல் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி வெங்கடேசன் எம்.பி. ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதிலளித்து கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்டமசோதா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுடில்லி: நீட் விலக்கு மசோதா … Read more

நீட் விலக்கு மசோதா – ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம்

புதுடெல்லி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி … Read more

பொதுவெளியில் சரியாக ஆடை அணியவில்லையென ஆத்திரம்; மனைவியைக் கொன்ற கணவன் – உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில், பொதுவெளியில் சரியாக உடை அணியவில்லை என மனைவியைக் கணவன் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்ட நபர் சப்னா என்றும், கொலைசெய்த நபர் மோஹித் குமார் என்றும் தெரியவந்திருக்கிறது. மனைவியைக் கொலைசெய்த கணவன் காஜிபூர் கிராமத்தில் வசித்த இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கிறார். மேலும் சப்னாவுக்கும், மோஹித் குமாருக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம், சப்னாவுக்கும், மோஹித் குமாருக்கும் … Read more

2023 ஏற்படபோகும் பேராபத்து! உலகமே முடங்கும்.. பாபா வங்காவின் கணிப்பு

பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார். 1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் 1996 ஆம் ஆண்டில் தனது 84 வது வயதில் இறந்து போனார்.  வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளன. குறிப்பாக இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடங்கி பல்வேறு சர்வதேச விஷயங்கள் அப்படியே … Read more

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது!

திண்டிவனம்: விழுப்புரம் அருகே திண்டிவனத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில்,  தடை மீறி வந்த ராஜாவை,  பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் காவல்துறையினர் கைது செய்தனர். திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பாஜக தேசிய செயலாளர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் ஹெச். ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய 6 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் முறைகேடாக மணல் அள்ளிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ள பயன்படுத்திய 5 டிப்பர் லாரிகள், 3 டிராக்டர்கள், 2 ஜே.சி.பி. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண்: சாதனை படைத்த முதல் பெண் ஓட்டுநர்| Asia’s first woman loco pilot now runs Vande Bharat Express

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்குரிய சுரேகா யாதவ் என்ற பெண், வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேகா யாதவ். இவர், கடந்த 1988 ம் ஆண்டு, ரயில்வே ஓட்டுநரானார். இதன் மூலம் இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 1989 ல் … Read more

சுரங்க வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரிக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

ராஞ்சி, முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிற ஜார்கண்ட் மாநிலத்தில், சட்டவிரோதமாக ரூ.1000 கோடிக்கும் அதிகமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து ஊழல் அரங்கேறி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சுரங்க வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அருண் இலக்காவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. … Read more

புதுக்கோட்டை: `முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா' பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டையில் புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலின் மாசிமகத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறும். முன்னதாக பிப்ரவரி 26-ம் தேதி அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா கோலகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டுத் திருவிழாவானது, மார்ச் 5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்பு கட்டியது முதலே, தினமும் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு, தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் தினமும், பால்குடம், காவடி எடுத்து வந்தும், அலகுக் காவடி … Read more