உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மத்திய அரசு அதிரடி அறிவிப்பு| Central Government Action Notification on Organ Transplantation

புதுடில்லி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் நோயாளிகள், தங்கள் மாநிலத்தில் மட்டுமின்றி, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில், எம்.பி., ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்து இருந்ததாவது: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் நோயாளிகள், தங்கள் மாநிலத்தில் மட்டுமின்றி, நாட்டில் எங்கு … Read more

“அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்" – அமைச்சர் உதயநிதி

“அதிகாரிகள் அரசு திட்டப்பணிகளை விரைந்து சிறப்பாக செயல்படுத்தினால் மட்டுமே அரசுக்கு நல்லப் பெயர் கிடைக்கும்” என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நலத்திட்ட உதவி வழங்கிய உதயநிதி உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று தஞ்சாவூர் வந்தார். அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட அனிதா நினைவு அரங்கம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்த உதயநிதி பின்னர், தஞ்சாவூர் வந்தார். … Read more

வீட்டில் ஆரோக்கியமான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய வேண்டுமா? இதை முயற்சியுங்கள்!!

மாலை நேர சிற்றுண்டிக்கு உதவுவது உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். இது இரவில் சாப்பிடுவதற்கு ஏற்றது மற்றும் சுற்றுலாவிற்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்றது. இருப்பினும், பெரிய அளவில் உட்கொண்டால், உருளைக்கிழங்கு சிப்ஸ் உடல் பருமன் மற்றும் பிற அபாயகரமான நிலைமைகளின் ஆபத்தை ஏற்படுத்தும். காலப்போக்கில், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.  ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சத்தானது. மற்றும் சாப்பிடுவதற்கு ஆசையாகவும் இருக்கும். வீட்டில் எவ்வாறு சுவையாக … Read more

உலகளவில் 68.17 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.13 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.47 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மார்ச்-15: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 298-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இன்றைய நாணயத்தின் மாற்று விகிதம் (14-03-2023)

இலங்கை மத்திய வங்கி இன்று (14-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, நாணயம் கொள்முதல் பெறுமதி  விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர் 319 ரூபா 84 சதம் 335 ரூபா 68 சதம் ஸ்ரேலிங் பவுண் 387 ரூபா 92 சதம் 410 ரூபா 07 சதம் யூரோ 341 ரூபா 42 சதம் 361 ரூபா 29 சதம் சுவிஸ் பிராங் 348 ரூபா  48 சதம்  371 ரூபா 27 சதம் கனடா டொலர் 232 ரூபா 38 சதம் 246 ரூபா 88 சதம் ஜப்பான் யென் 2 ரூபா 39 சதம் 2 ரூபா 52 சதம் அவுஸ்திரேலிய டொலர் 211 ரூபா 42 சதம் 225 ரூபா … Read more

போபால் விஷ வாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு கிடையாது: சுப்ரீம் கோர்ட்| No additional compensation in Bhopal gas leak case: Supreme Court

புதுடில்லி, போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடாக, 7,844 கோடி ரூபாய் வழங்கக்கோரி மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த, ‘யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்’ என்ற ரசாயன தொழிற்சாலையில், 1984 டிச., 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் விஷ வாயு கசிந்தது. கணக்கெடுப்பு இதில், 3,000 பேர் உயிரிழந்தனர்; ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணப்படுத்த … Read more

பிரித்தானியாவில் நகைக் கடைக்குள் புகுந்து 5 கிலோ நகை திருட்டு..! பட்டப்பகலில் அரங்கேறிய சம்பவம்

பிரித்தானியாவில் பட்டப்பகலில் நகைக் கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த நபர்களுக்கு 16 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் திருட்டு பிரித்தானியாவின் பர்மிங்ஹாமில் கடந்தாண்டு மார்ச் மாதம் சிறிய ரக சரக்கு வாகனத்தை திருடிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, பட்டப்பகலில் திருடிய வாகனத்துடன் நகைக் கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு கடைக்குள் புகுந்தனர். பின் அங்கிருந்தவர்களை கோடாரியை காட்டி மிரட்டியதுடன், சம்மட்டியால் கண்ணாடி பெட்டியை உடைத்து 3 கோடி மதிப்புள்ள … Read more

இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்த வங்கதேசம்: டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த புலிக்குட்டீஸ்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வங்கதேச அணி புதிய சாதனை படைத்துள்ளது. வங்கதேச அணி வெற்றி ஷேரே பங்களா நேஷனல் மைதானத்தில் இன்று இங்கிலாந்து எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி விளையாடியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ஓட்டங்கள் குவித்தது. … Read more