இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்…

ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6.05 மணியளவில் பெசிசிர் செலாடன்(தென் கடற்கரை) மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 82 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுங்க்கம் காரணமாக, சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலநடுக்கமானது அருகில் உள்ள ஜம்பி … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் தேர்தல் அலுவலர் சிவகுமார் வழங்கினார்.

“ஆளுங்கட்சி கூட்டணியில் பணம் பாதாளம் வரை பாய்ந்தது துரதிஷ்டமானது!" – ஜி.கே.வாசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். இந்த வெற்றியை தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், `இந்த வெற்றி வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சாரம்’ எனக் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தஞ்சாவூர், மாவட்டம், கும்பகோணத்துக்கு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஈரோடு கிழக்குத் தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை. … Read more

66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட  66,575 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்.27ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.  இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைத்துள்ளது என்பது ஒரு ஆறுதலான விஷயம்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி!

சென்னை: அதிமுகவின் தற்போதையை நிலைமை மிகுந்த மனவேதனை அளிக்கிறது என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைத்துள்ளது என்பது ஒரு ஆறுதலான விஷயம் என்று கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தேர்தலில் கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும்தான் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியால் தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வருகிறது எனவும் கூறிள்ளார்.

நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு| Actress Sushmita Sen suffered a heart attack

மும்பை: பாலிவுட் நடிகையும், முன்னாள் அழகியுமான சுஷ்மிதா சென், 47 திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த இரு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தக்க சமயத்தில் ஆஞ்ஜியோ பிளாஸ்ட் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது நலமுடன் உள்ளேன். தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் பதிவேற்றியுள்ளார்.சமீபத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மும்பை: பாலிவுட் நடிகையும், முன்னாள் … Read more

"மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்..!" – மம்தா அறிவிப்பு

நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தலில், திரிபுராவில் தனித்து களமிறங்கிய, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி, நோட்டாவை =விடவும் குறைவான வாக்கு சதவிகித்தை பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. அதாவது, தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் திரிபுரா மாநில தேர்தல் முடிவுகளில், திரிணாமுல் காங்கிரஸ் 0.88 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. ஆனால், நோட்டாவில் 1.36 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. திரிபுரா சட்டமன்றத் தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பரில் மேற்கு … Read more

மூழ்கிய புலம்பெயர் மக்களின் படகு… சிறார்களை கடலில் வீசிய கொடூரர்கள்

இத்தாலி அருகே கடலில் மூழ்கிய புலம்பெயர் மக்களின் படகில் இருந்து உயிர் தப்பியவர்கள் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 சிறார்கள் உட்பட 67 பேர்கள் இத்தாலி அருகே புலம்பெயர் மக்களின் படகு ஒன்று கடுமையான கடல் சீற்றத்தில் சிக்கி உடைந்துள்ளது. இதில் 14 சிறார்கள் உட்பட 67 பேர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி துரித நடவடிக்கையால் 80 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். @AP துருக்கியில் இருந்து புறப்பட்ட அந்த படகில் 170 அல்லது அதற்கும் மேற்பட்ட … Read more

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முழு உடல் பரிசோதனை மற்றும் டயாலிசிஸ் மையம்! அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள  வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட  முழு உடல் பரிசோதனை மற்றும் டயாலிசிஸ் மையத்தை அமைச்சர்  கே.என்.நேரு  திறந்து வைத்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏற்கனவே,  பகுப்பாய்வுக் கூடம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியின்போது, செயல்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், அதை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, கட்டிடத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி மூலதன நிதியின்கீழ் ரூ.37லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பாரோ அதேபோல் அதிமுகவினர் செயல்பட்டனர் என்று கூறியுள்ளார்.