நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நன்னடத்தை உறுதியை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைதண்டனை விதிக்க துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கியது செல்லாது. காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரை சிறையிலடைத்து துணை ஆணையர்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்ற இந்திய அணி| Indian team qualified for World Test Championship final

புதுடில்லி: வரும் ஜூன் 7ல் லண்டனில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றால் உலக டெஸ்ட் … Read more

போலி நகைகளை அடகு வைத்து நூதன மோசடி; முன்னாள் எஸ்.ஐ உட்பட நால்வர் கைது – இளம்பெண்ணுக்கு போலீஸ் வலை!

காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்தவர் கைலாஷ் (36). இவர், காரைக்கால் பெரமசாமி பிள்ளை வீதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு 10-ம் தேதி மர்ம நபர் ஒருவர் வந்து, தன்னிடம் 12 பவுன் செயின் இருப்பதாகவும், அதை அடகு பிடித்துக் கொண்டு, பணம் தரும்படியும் கேட்டிருக்கிறார். அந்த நபரிடம் நகையை கைலாஷ் வாங்கி சோதனை இயந்திரத்தில் பரிசோதித்ததில், 916 தங்க நகை என்றும், 12 பவுன் இருப்பதாகவும் காட்டியிருக்கிறது. இருந்தும் நகையில் சற்று சந்தேகம் … Read more

மூட்டு வலியா? இதோ ஒரு அறிய தீர்வு!!

மூட்டு வலி என்று கூறும்போதே அதில் வலி தெரியும் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு அது வலி தரும். மூட்டு வலி உடனடியாக தீவிரம் அடையாது. ஆனால் அது வந்துவிட்டால் வலி அதிகரிக்கும். உடலின் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்று மூட்டு. உடலின் அனைத்து எடையையும் தாங்கக்கூடிய சுமைதாங்கியாக காணப்படுகிறது. உடல் இயக்கங்கள் அனைத்திலும் அதன் பங்கு முக்கியமானதாகின்றது.  மூட்டு வலி வருவதற்கான அறிகுறிகள் மூட்டு வீக்கம் மூட்டுப்பகுதியில் சூடான உணர்வு மூட்டு சிவந்து காணப்படும் நெஞ்சுவலி … Read more

சினிமா தொடர்பாக யாரும் என்னைத் தொடர்பு கொள்ளக்கூடாது! அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பாளராகவும், விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சினிமா தொடர்பாக இனிமேல்  யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவித்துள்ளார். திமுகவில் இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி, சினிமா தயாரிப்பு , விநியோகம்  மட்டுமின்றி சில படங்களில் நாயகனாக நடித்து வந்தார். சிறிது சிறிதாக திரையுலக்குள் புகுந்த உதயநிதி தற்போது தமிழ்நாட்டின் திரையுலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். இதனால்  சர்ச்சைகள் எழுந்த … Read more

வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது;  சென்னையின் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும் – வளத்தைப் பாதுகாக்கவும் திமுக அரசு அமையும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக முன்னெடுத்த பணிகளின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பணிகள் அமைந்துள்ளன.வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவாரம் பனியில் சிக்கிய 81 வயது முதியவர்… இனிப்பு, ரஸ்க், ஐஸ் உண்டு தப்பிய அதிசயம்!

அமெர்க்காவைச் சேர்ந்த 81 வயது ஜெர்ரி ஜோரெட் முன்னாள் நாசா ஊழியர் மற்றும் கணிதவியலாளர். இவர், கலிஃபோர்னியா பிக் பைனில் உள்ள தன்னுடைய மலை வீட்டில் இருந்து, நெவாடா கார்ட்னெர்வில்லேவில் உள்ள தன்னுடைய குடும்பத்தினரின் வீட்டிற்குச் செல்ல, பிப்ரவரி 24 அன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்தப் பகுதிக்குச் செல்ல மூன்று மணிநேரமாகும் என்ற நிலையில், 30 நிமிடங்களிலேயே காரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். கார் தாறுமாறாக ஓடி பனியில் பாதியளவு புதைந்துள்ளது. காரில் இருந்து வெளிவர முடியாத … Read more

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றிலிருந்து கேட்ட பெண்ணின் அலறல்… தீப்பிடித்த வீடு; விசாரணையில் ஏற்பட்டுள்ள சந்தேகம்

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், அந்த வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பமே பலியாகியுள்ளது. வெளியான புதிய தகவல்கள் மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள Yverdon-les-Bains என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்று திடீரென தீப்பிடித்ததில் அந்த வீட்டில் வாழ்ந்த 45 வயது ஆண் ஒருவர், 40 வயது பெண் மற்றும் 13, 9 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் மூவர் என மொத்தக் குடும்பமும் தீயில் எரிந்து பலியானதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அந்த குடும்பத்தின் தலைவர், … Read more

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? உயர் நீதிமன்றம் கேள்வி…

 சென்னை:  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவிட்டதா?  என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச்செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பல ஒபிஎஸ் உள்பட பலரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்,  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக் குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் … Read more

முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு 100 நாள் வேலை வழங்க பரிந்துரை:அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சிவகங்கை: முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு 100 நாள் வேலை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி அளித்துள்ளார். ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தி உள்ளது வேதனையளிப்பதாக அமைச்சர் சிவகங்கையில் பேட்டி அளித்துள்ளார்.