தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை!

சென்னை: திருவாரூர் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு,  திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. சைவ சமயத்தின் தலைமை இடமாகவும், பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயிலின் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆழி … Read more

முதல்வர் பற்றி நாவடக்கம் இன்றி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: செல்வப்பெருந்தகை

சென்னை: முதல்வர் பற்றி நாவடக்கம் இன்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அநாகரிகத்தின் உச்சம்; மேலும் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. வக்கிர குணம் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு பேச முடியும் எனவும் கூறினார்.

கோவை: புலம்பெயர் தொழிலாளிமீது தாக்குதல் – இந்து முன்னணி பிரமுகர் உட்பட 4 பேர் கைது!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் கௌதம் சியாமல் கட்டுவா. இவர் கோவை இடையர் வீதியில் புலம்பெயர் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்கள் தன்மாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். புலம்பெயர் தொழிலாளிமீது தாக்குதல் `இணைந்தது 10,000 பேரா, 4,000 பேரா?’- பலமுறை முதல்வரே வந்தும், கோவை திமுக-வால் முடியாத அந்த டார்கெட்? அப்போது அந்த வழியாக வந்த சூரிய பிரகாஷ், பிரகதீஷ், பிரகாஷ், வேல்முருகன் ஆகியோர் வந்திருக்கின்றனர். தொடர்ந்து அவர்கள் … Read more

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கிய HSBC வங்கி!

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு HSBC வங்கி வாங்கியுள்ளது. வெறும் 1 பவுண்டுக்கு கைப்பற்றியது திவாலாகி பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய துணை நிறுவனத்தை (Silicon Valley Bank UK Limited) வெறும் 1 பவுண்டுக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.399) வாங்குவதாகக் கூறியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி, பிரித்தானியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனமாக இயங்கி வருகிறது. இரண்டே நாட்களில் … Read more

நீதி, வருவாய்த்துறை அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கியது செல்லாது! உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழ்நாடு அரசு, நீதி, வருவாய்த்துறை அதிகாரங்களை காவல் துணை ஆணையர்களுக்கு  வழங்கிய நிலையில், அது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதித்துறை, வருவாய்த்துறையில்  நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர்மீது, துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணைகள் வெளியிட்டது. இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், நீதித்துறை, வருவாய்த்துறையில்  நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோர்மீது, காவல்துறை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு … Read more

வாழப்பாடி அருகே அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். ஆத்தூரிலிருந்து சேலம் நோக்கி சென்ற பேருந்து பைக் மீது மோதியதில் யுவராஜ் (22), வசந்தகுமார் (22) உயிரிழந்தார்.

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: அடுத்த மாதத்தில் முடிகிறது பணி| The Smart City project in Tamil Nadu will be completed next month

புதுடில்லி : தமிழகத்தின் எட்டு நகரங்கள் உட்பட நாடு முழுதும், 22 இடங்களில் நடந்து வரும், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் அடுத்த மாதத்தில் முடிவடைகின்றன. மீதமுள்ள 78 நகரங்களில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட உள்ளன. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாசு ஏற்படுத்தாத வகையிலும், தொழில்நுட்ப உதவியுடன் கூடிய தீர்வுகள் அளிக்கக் கூடியதாக நகரை மாற்றும் வகையிலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால், 2015ல் அறிவிக்கப்பட்டது. இதன்படி நாடு முழுதும் 100 நகரங்கள் … Read more

மறைந்து இருந்து பெண்களை முத்தமிடும் 'சீரியல் கிஸ்ஸர்'

பாட்னா பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம மனிதன ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இதுகுறித்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜாமுய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த சம்பவம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளி மருத்துவமனை சுவர் ஏறி குதித்து உள்ளார். அந்த பெண் மொபில் போனில் பேசிக்கொண்டு வந்து உள்ளார். திடீர் … Read more

“அதானியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது; சட்டத்தை திருத்துங்கள் நிதியமைச்சரே!" – சு.வெங்கடேசன்

அதானி குழுமத்தின் மோசடிகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில், அரசு இன்சூரன்ஸ் நிறுவனம், வங்கிகளில், அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்த விவரங்களை வெளியிடுமாறு, நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் கேள்வியெழுப்பினார். அதானி – மோடி அதற்கு, `ரிசர்வ் வங்கி சட்டப்படி அதனை வெளியிட முடியாது’ என மத்திய … Read more

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லண்டன்; இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அவ்வாறு வருபவர்கள், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார். இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருந்தும் ஏராளமானோர் அதிகரித்து வருகின்றனர். மேலும், சிறிய படகுகளில் சட்டவிரோதமாக கடக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் கணிசமான அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உளளது. சிறிய படகுக;ள மூலம் ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து கரைகளில் இறங்கும் இந்தியர்களின் … Read more