வேங்கைவயல் விவகாரம்: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை ஒருவர்மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் மாநில அரசை கண்டித்து, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட … Read more

தங்கக்கடன் மோசடி வழக்கில் கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர்கள் 3 பேருக்கு பிடிவாரண்ட்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தங்கக்கடன் மோசடி வழக்கில் தொடர்பாக கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர்கள் 3 பேருக்கு சென்னை ஐகோர்ட் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக் சிரியன் வங்கியின் பாரிமுனை, கோடம்பாக்கம், ராயப்பேட்டை கிளை மேலாளர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், 22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும்,  22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21-03-2023 செவ்வாய்க்கிழமை சென்னை … Read more

RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு மாநிலங்கவை வாழ்த்து

டெல்லி: RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதற்கு மாநிலங்கவை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. RRR படத்தின் இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார்.   

“மோடியை முடிவுக்கு கொண்டுவந்தால்தான்…" – காங்கிரஸ் நிர்வாகி பேச்சும் பாஜக பதிலும்!

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் பா.ஜ.க அரசு அதை ஏற்க மறுப்பதால் பா.ஜ.க அரசுக்கு எதிராக, காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “எங்கள் போராட்டம் அதானியுடன் அல்ல, பா.ஜ.க-வுடன். பா.ஜ.க-வை தோற்கடித்தால் அதானி – அம்பானி அதனுடன் சேர்ந்து காணாமல் போவார்கள். ஆங்கிலேயர்கள் … Read more

என்ன Whatsapp பணம் அனுப்பமுடியுமா? எப்படி செய்யலாம்?

Whatsapp எனப்படுவது வேகமாக குறுஞ்செய்திகளை பரிமாற்றிக்கொள்ளும் ஒரு ஆப் ஆகும். அதிலே தற்போது பணம் அனுப்பும் வசதியும் வந்துள்ளது.   இந்த வசதி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கிறது.  எப்படி அனுப்புவது? முதலில் WhatsApp திறந்து More options என்பதை கிளிக் செய்து Settings உள்ளே சென்று choose Payments options கிளிக் செய்யவும். அதன் பின் Add new account சென்று WhatsApp Pay விதிமுறைகள் … Read more

தன்பாலினத் திருமண அங்கீகார வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

டெல்லி: தன்பாலினத் திருமணத்துக்கு அங்கீகார வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் சுய விருப்பத்துடன் உடல் ரீதியான உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம்’ என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377ன் படி தடை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்தசில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இந்த … Read more

புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 6,000 பணியிடங்கள் நேரடியாகவும், 4,000 பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்படும் என அவர் தெரிவித்தார்.

ராணுவ உற்பத்தியை அதிகரிக்க இலக்கு| Aim to increase military production

புதுடில்லி, வரும் 2024 – 25ம் ஆண்டு, ராணுவ உற்பத்தியை 1.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் நேற்று ராஜ்யசபாவில் கூறியதாவது: நம் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உபகரணங்களை அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரிக்கின்றன. இந்த வகையில், கடந்த 2017 – 18ல் நம் ராணுவ உற்பத்தியின் மதிப்பு 54 ஆயிரத்து 951 கோடி ரூபாயாக இருந்தது. இது, … Read more