நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் பரீசிலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது! குடியரசு தலைவர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநர் மூலம் அனுப்பிய நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் பரீசிலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்து உள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே அதிமுக ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டத. இதையடுத்து திமுக ஆட்சி பதவி ஏற்றதும்,  2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இம்மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் … Read more

சென்னை பாரிமுனையில் லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

சென்னை: சென்னை பாரிமுனையில் லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். லிங்குசெட்டி தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தின் லிப்டில் சிக்கி கீமாராம் என்பவர் உயிரிழந்தார். 4 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடத்தின் சர்வீஸ் லிப்ட்டில் பயணித்த கீமாராம், இரண்டாவது தளத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.சர்வீஸ் லிப்ட் கீழே இறங்கிய போது, ஒரத்தில் நின்று எட்டி பார்த்தபோது விபத்து என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உடலை மீட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Shine 100 : நாளை.., புதிய ஹோண்டா 100 பைக் அறிமுகம்

ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய ஷைன் 100 அல்லது வேறு ஏதேனும் பெயருடன் வெளியாக உள்ள மாடலின் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள ஸ்ப்ளெண்டர், HF 100, HF டீலக்ஸ், பிளாட்டினா பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விற்பனையில் உள்ள சிபி ஷைன் 125 பைக்கின் அடிப்படையில் தயாரிக்கப்ட்டிருக்கும் புதிய 100சிசி பைக் மைலேஜ் அதிகபட்சமாக 70 கிமீ எதிர்பார்க்கப்படுகின்றது. ஹோண்டா Shine … Read more

`தமிழகம் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார பாதையை எட்டும்’ -அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னையில் நடைபெற்ற சிஐஐ யின் முன்னோக்கிய தமிழக எழுச்சி மாநாட்டில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், `தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி இந்த ஆண்டு 1.76 லட்சம் கோடியை தொட்டுள்ளது.  தமிழகம்  இப்போது தேசிய  அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.  சிஐஐ ஆண்டு விழா “வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லையென்றால் திருப்பூர் பின்னலாடைத்துறை இயங்காது”- ஐ.கே.எஃப்.ஏ தலைவர் மாநிலத்தின்இந்த தொடர்ச்சியான வளர்ச்சியின் மூலம் வரும் ஆண்டுகளில் மேலும் உயர்ந்த இடத்தை பிடிப்போம் என்று நம்புகிறோம்.  கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு அமைப்புகள் செய்த 60 பில்லியன் டாலர் முதலீடுகள் வரும் ஆண்டுகளில் 75%-க்கும் அதிகமான விகிதத்தை எட்டும் என்ற நம்பிக்கை  இருக்கிறது. தமிழகத்தில் 1  ட்ரில்லியன் டாலர் பொருளாதார பாதையை எட்டமுடியும். அதையே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். மேலும் இந்த இலக்குகளை எட்ட,  அடுத்த 7 ஆண்டுகளில் என்னென்ன செய்யவேண்டும் என்பது  குறித்தும் ஆராயப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். லட்சுமி வேணு “வணிகவரி, பதிவுத்துறையில் ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி! மேலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து சுந்தரம் கிளேட்டன் இணை நிர்வாக இயக்குநர் லட்சுமி வேணு கூறுகையில், “இந்தியாவிலேயே  தமிழகம்  தொடர்ந்து  வலுவான  உற்பத்தி மாநிலமாக உள்ளது. மிகவும் தொழில் மயமானது மற்றும் ஜிடிபியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு அற்புதமான பணி நெறிமுறை உள்ளது. திறன் மற்றும் … Read more

”உக்ரைனின் எதிர்காலம் பக்முட் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது” ஜெலென்ஸ்கி

உக்ரைன் நாட்டின் எதிர்காலம் பக்முட் மற்றும் மற்ற முக்கிய நகரங்களின் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். பக்முட்டில் கடுமையான போர் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. இப்போரில் லட்சக்கணக்கான மக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். உக்ரைனிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். @pbs தற்போது கடுமையாக நடைபெற்று வரும் இப்போரில் ரஷ்யா உக்ரைனின் பக்முட் என்ற … Read more

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்திர மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!

சென்னை: இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வி நிறுவனமான சென்னை  ஐ.ஐ.டி.யில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐஐடியில் 3ம் ஆண்டு படித்து வந்தவர், ஆந்திராவை சேர்ந்த மாணவர் புஷ்பக். அவர் விடுதியில் தங்கியிருந்து 3வது ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று  விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

கோவை அருகே கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநில தொழிலாளி கொலை வழக்கு: கொலையாளிக்கு குண்டாஸ்

கோவை: கோவை செட்டிப்பாளையம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநில தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைதான சார்லஸ் என்பவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பீகாரைச் சேர்ந்த கேவத் என்பவரை, சார்லஸ் அடித்துக்கொலை செய்து தப்பி ஓடியுள்ளார்.

வெளிநாடுகளில் காங்கிரசை தாக்கி பிரதமர் மோடி பேசியவற்றை விட ராகுல் காந்தி குறைவாகவே பேசியுள்ளார்: சசி தரூர் எம்.பி. பேட்டி

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 11-ந்தேதியுடன் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இதன்படி, இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இதில், உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. எனினும், இரு அவைகளில் எதிர்க்கட்சிகளின் அமளியால், மதியம் 2 … Read more

How To: AFCAT தேர்வு முடிவை இணையத்தில் பார்ப்பது எப்படி? | How To Check AFCAT Result Online?

இந்திய விமானப்படை (IAF) மூலம் நடத்தப்படும் விமானப்படை பொது நுழைவுத்தேர்வுக்கான (AFCAT – Air Force Common Admission Test) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரபூர்வ இணையதளமான fcat.cdac.in -ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. indian air force How to: ஆரோக்கியம் தரும் வெந்தயக்களி செய்வது எப்படி? | How To Make Fenugreek Pudding? முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அடுத்தடுத்து AFSB சோதனை, … Read more