புதுச்சேரியில் நில மோசடிகளை விசாரிக்க சிறப்பு பிரிவு: பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் நிம்மதி| Special Unit to Probe Land Scams in Puducherry: Relief for French Citizens

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பலர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் பிரான்சில் வசிக்கின்றனர். புதுச்சேரியிலும் பல கோடி மதிப்புள்ள வீடு, நிலம், மனை உள்ளிட்ட சொத்துகளை வாங்கி, விட்டு சென்றுள்ளனர். ஆண்டிற்கு ஒருமுறை அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் புதுச்சேரியில் மன நிம்மதிக்காக வந்து தங்கி, அப்படியே தங்களுடைய சொத்துகளையும் பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.அப்படி வந்து பார்க்கும்போது, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுகிறது. அவர்களின் சொத்துகளை போலி பத்திரம் தயாரித்து … Read more

"இந்தியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க முடியாது"- மத்திய அரசு

புதுடெல்லி உலகம் முழுவதும் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால் மற்றவர்களைப் போன்று அவர்களும் மனிதர்கள்தான் என்பதை இந்த சமூக அமைப்பு கண்டுகொள்ளாமல் அவர்களை ஒதுக்கிவைக்கவே நினைக்கிறது. இருப்பினும் தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து இவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகவும் தற்போது பல குரல்கள் சேர்ந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா ஆகிய நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் … Read more

மசூதி ஒலிபெருக்கி; `அல்லாஹ்' குறித்து பாஜக முன்னாள் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!

டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடந்த ஆண்டு, ராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற இந்து பண்டிகைகளின்போது, பல இடங்களில் இந்து, முஸ்லிம் குழுக்களிடையே கலவரங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக, மசூதிகளிலிருந்து ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் என இந்து அமைப்புகளும், பா.ஜ.க-வினரும் குரலெழுப்பினர். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன. ஒலிபெருக்கி இந்த நிலையில் கர்நாடக மாநில பா.ஜ.க முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, மசூதி ஒலிபெருக்கியைக் குறிப்பிட்டு அல்லாஹ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். … Read more

பிரான்ஸ் வேலைநிறுத்தத்தால் பாரீஸ் நகர தெருக்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை

பிரான்ஸ் முன்வைத்துள்ள ஓய்வூதிய மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஏராளமான பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரீஸ் தெருக்களில் மலைபோல் குவிந்துள்ள குப்பை  துப்புறவுப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதைத் தொடர்ந்து, பாரீஸ் தெருக்களில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன. குப்பைகளை எரிக்கும் மூன்று மையங்கள் வேலைநிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தெருவோரங்களில் ஏராளம் பிளாஸ்டிக் பைகளையும் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகளையும் காணமுடிகிறது. விடயம் என்னவென்றால், இப்படி தெருக்களில் குப்பை குவிந்தும், எலிகள் நடமாட்டம் காணப்பட்டும், மக்களில் … Read more

சேப்பாக்கம் மைதான புதிய கேலரியை 17ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் புனரமைக்கப்பட்டுள்ள   புதிய கேலரிகள் திறப்பு விழா வரும்  17ந்தேதி நடைபெற உள்ளதாகவும்,  முதல்வர் மு.க.ஸ்டாலின்  புதிய கேலரியை திறந்து வைப்பார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவரான அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி  தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் வகையில்,  நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 17ம் தேதி திறந்து வைக்க இருப்பதாக, இன்று  அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு … Read more

முறையான அனுமதியுடனே திறப்பு: ஐகோர்ட் கிளையில் சரவணா ஸ்டோர்ஸ் பதில்

மதுரை: கட்டிடம் முழுவதுமாக கட்டப்பட்டு, முறையான அனுமதி பெற்ற பின்னரே திறக்கப்பட்டது என ஐகோர்ட் கிளையில் மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் பதில் அளித்துள்ளது. மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டுமான பணி, பாதுகாப்பு வசதி நிறைவடையும் வரை இடைக்கால தடை விதிக்கக் கோரிய வழக்கில் பதில் மனு அளித்துள்ளது. அவசர காலத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்து விதமான ஏற்பாடுகளும் கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி … Read more

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாதி பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில். கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. தொடங்கிய உடனே, ஆளும் கட்சி உறுப்பினர்கள், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து எழுப்பினர். அதனைதொடர்ந்து அதானி விவகாரம் … Read more

கர்நாடகா: Vote From Home திட்டம்; மாற்றுத்திறனாளிகள், முதியோருக்காக அறிவிப்பு – கட்சிகள் எதிர்ப்பு

கர்நாடகா மாநிலத்தில், விரைவில் தேர்தல் நடக்கவுள்ளதால், பா.ஜ.க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படியான நிலையில், கடந்த மூன்று நாட்களாக, மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கர்நாடகத்தில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள், கள நிலவரத்தை ஆய்வு செய்ய, சுற்றுப்பயணம் வந்துள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான அதிகாரிகள், … Read more

ஒரு டொலரின் ஒன்றின் தற்போதைய விற்பனை விலையில் எவ்வளவு தெரியுமா? இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று (13-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, கொள்முதல் பெறுமதி  விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர் 311 ரூபா 82 சதம் 328 ரூபா 86 சதம் ஸ்ரேலிங் பவுண் 376 ரூபா 59 சதம் 399 ரூபா  08சதம் யூரோ 333 ரூபா 36 சதம்  353 ரூபா 03 சதம் சுவிஸ் பிராங் 338 ரூபா 42 சதம் 361 ரூபா 33 சதம் கனடா டொலர் 225 ரூபா 60 சதம் … Read more

தமிழக கேந்திரிய வித்யாலயாவில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிப்பு! மத்தியஅரசு பதில்

டெல்லி:  தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயாவில் 15 பள்ளிகளில் மட்டும் தமிழ் பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக உறுப்பினரின் கேள்விக்கு மத்தியஅரசு பதில் கூறியுள்ளது. அதுபோல ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் பதில் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் கேந்திரிய வித்யிலயா பள்ளிகளில் தமிழ்பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில், கேந்திர வித்யாலயா … Read more