குடியரசுதலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். ராஷ்டிரபதி பவனில் இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், அரசு திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, லடாக் லெப்டினன்ட் கவர்னர் பிரிகேடியர் டாக்டர் பி.டி. மிஸ்ரா மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவையும் சந்தித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி … Read more

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை : அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. மோனோகுரோட்டோபாஸ் , அசிபெட் உள்ளிட்ட பூச்சி கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சீன அதிபருக்கு புதின் சொன்ன வாழ்த்து… டிக் டாக் செயலிக்கு செக் வைத்த பெல்ஜியம் | உலகச் செய்திகள்

சீன அதிபராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றதையடுத்து ஜின் பிங்கை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்தியுள்ளார். இது மேலும் இரு நாடுகளுக்கு இடையே உண்டான உறவுகளை வலுப்படுத்தும் என்று அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச் சூட்டை நடத்திய குற்றவாளி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் முன்பில்லாத அளவிற்குக் காற்று மாசுபாடு அதிகரித்து மக்கள் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. தாய்லாந்தில் சுமார் 1.32 … Read more

கனடாவில் பயிலும் சர்வதேச மாணவர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன, எவ்வளவு ஊதியம் கிடைக்கும்?

கனடாவில் பயிலும் சர்வதேச மாணவ மாணவியர், முறையான கல்வி உரிமம் பெற்றிருக்கும் நிலையில், அவர்கள் இனி எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்னும் வகையில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கனடா அரசு விதிகளில் மாற்றங்கள் செய்தது. 2023 இறுதி வரை இந்த விதிகள் அமுலில் இருக்கும். ஆக, அவர்களுக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, அவற்றிற்கு எவ்வளவு ஊதியம் எதிர்பார்க்கலாம் என்பதை சுருக்கமாக பார்க்கலாம். என்னென்ன வேலைகளுக்கு எவ்வளவு ஊதியம்? Teaching Assistants … Read more

ரம்ஜானை ஒட்டி தொழுதலை ஒளிபரப்ப, ஒலி பெருக்கி சத்தத்தை குறைக்கவும் தடை! சவூதி அரேபியா கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

ரியாத்: ரம்ஜானை ஒட்டி தொழுதலை ஒளிபரப்ப, ஒலி பெருக்கி சத்தத்தை குறைப்பது உள்பட பல்வேற கட்டுப்பாடுகளை சவூதி அரேபியா  அறிவித்துஉள்ளது. இது அந்நாட்டு இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ரம்ராஜன் மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனப்டி,  ஒலிபெருக்கிகள் தடை,  தொழுதலை ஒளிபரப்ப தடை  மற்றும் மசூதிகளுக்குள் இப்தார் செய்ய வழிபாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், அரபு நாடுகளில் இரண்டாவது பெரிய நாடு … Read more

மதுரை விமான நிலைய பேருந்தில் ‘துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார்’ என FB Live போட்டு கூச்சலிட்ட சசிகலா ஆதரவாளர்!!

மதுரை : மதுரை விமான நிலைய பேருந்தில் ‘உடன் பயணித்த இளைஞர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை துரோகத்தின் அடையாளம் என கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக வழங்கியவர்” என்று கூறினார். தொலைபேசியில் வீடியோ எடுத்தப்படியே கோஷமிட்ட அந்த இளைஞரை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த இளைஞர் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது.

“சுரங்க விரிவாக்கப் பணிக்காக நிலம்‌ கையகப்படுத்தும்‌ பணியை என்.எல்.சி கைவிட வேண்டும்" – விஜயகாந்த்

கடலூரில் இயங்கிவரும் மத்திய அரசின் `நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி)’, சுரங்க விரிவாக்கத்துக்காக மேற்கொண்டுவரும் நிலம்‌ கையகப்படுத்தும்‌ பணியை உடனடியாக கைவிட வேண்டும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். விஜயகாந்த் அந்த அறிக்கையில், “கடலூர்‌ மாவட்டம்‌ நெய்வேலியில்‌ உள்ள என்‌.எல்.சி நிறுவனம்‌ சுரங்க விரிவாக்கப்‌ பணிகளுக்காக அந்தப் பகுதியிலுள்ள வேளாண்‌ நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இதற்கு அந்தப் பகுதி மக்கள்‌ எதிர்ப்பு தெரிவித்து வருவதால்‌, நிலம்‌ கையகப்படுத்தப்பட உள்ள வளையமாதேவி, கீழ்பாதி, கரிவெட்டி, … Read more

மின்சாரப் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது! அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். சென்னையில் தனியார் பேருந்து சேவை தொடர்பாக சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆனால், அமைச்சர், தனியார் சேவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அரசு பேருந்து சேவையில் எந்தவொரு மாற்றமும் கிடையாது என விளக்கம் அளித்தார். … Read more

டெல்லியில் ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணிடம் தவறாக நடந்த சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

டெல்லி : டெல்லியில் ஹோலி பண்டிகையின் போது ஜப்பானிய பெண்ணிடம் தவறாக நடந்த சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் ஜப்பானிய பெண் மீது சிலர் வண்ணப் பொடிகளை தூவி தவறாக நடந்ததாக புகார் கூறப்படுகிறது.

சூரத் – சென்னை இடையே இந்தியாவின் 2வது நீள எக்ஸ்பிரஸ்வே: பணிகள் மும்முரம்| Indias 2nd longest expressway between Surat Chennai: Work in full swing

சென்னை: சூரத் சென்னை இடையே ஆறுவழிச்சாலையாக அமையும் எக்ஸ்பிரஸ்வே பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பாதை இந்தியாவின் 2வது நீளமான எக்ஸ்பிரஸ்வே ஆகும். குஜராத் மாநிலம் சூரத் – சென்னை இடையே ஆறு வழிச்சாலை அமைப்பதற்கான அறிவிப்பு, கடந்த 2019ல் வெளியிடப்பட்டது. சூரத்தில் துவங்கும் அச்சாலை, மஹாராஷ்டிர மாநிலம் நாசிக், சோலாப்பூர், மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாசிக், சங்கம்நெர், அஹமது நகர், … Read more