டிரெண்டிங் எதிரொலி: குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என கேள்வி எழுப்பி  சமூக வலைதளங்களில் இளைஞர்கள் டிரெண்டிங் செய்த நிலையில், இன்று  மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் … Read more

அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்: செல்லூர் ராஜூ பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்; திருமாவளவன் எங்கள் சகோதரர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு அனைத்து அதிகாரமும் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை: பெண் தோழியுடன் விடுதிக்குச் சென்றவர் சடலமாக மீட்பு! – விசாரணையில் போலீஸ்

சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரகாஷுக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி காலை, பிரகாஷ் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் பெரியமேட்டிலுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். பின்னர் இருவரும் மது அருந்திவிட்டு, தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு நேரத்தில், பிரகாஷ் உடன் வந்த பெண், விடுதி மேலாளரிடம் பதற்றத்துடன் சென்று, `என்னுடன் வந்த நபர் இறந்துவிட்டார்’ … Read more

என்னை சிலுவையில் அறைய பார்க்கிறார்கள்., போலீசிடம் தஞ்சம் அடைந்த 'வாழும் இயேசு'

கென்யாவில் ‘வாழும் இயேசு’ என தன்னை கூறிக்கொண்டிருக்கும் நபர், இப்போது தனது உயிருக்கு ஆபத்து என கூறிக்கொண்டு காவல்துறையிடம் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வாழும் இயேசு’ கென்யாவின் புங்காமோ மாகாணத்தில் டோங்கரேன் பகுதியைச் சேர்ந்த கிருத்துவ மத போதகர் எலியுட் வெகேசா (Eliud Wekesa). இவர் தன்னைத் தானே இயேசு வா டோங்கரென் (Yesu Wa Tongaren) எனக் கூறி வந்துள்ளார். அதாவது வாழவும் இயேசு என அர்த்தம். 20 வயதில் திருமணம் செய்து … Read more

விசாயிகளுக்கு 18 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது! அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிர்நாட்டில் தற்போது விசாயிகளுக்கு 18 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழக மின்துறை தொடர்பான வெளியான தகவல்களைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் விவசாயிகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘திமுக ஆட்சியில்தான் 18 மணி … Read more

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க பட்டறையில் சிறார்களை பணிக்கு வைத்திருந்த வழக்கில் 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க பட்டறையில் சிறார்களை பணிக்கு வைத்திருந்த வழக்கில் 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகள் இணைந்து நடத்திய சோதனையில், நகைப்பட்டறைகளில் இருந்து 23 சிறார்கள் மீட்கப்பட்டனர்.

சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு| Compulsory retirement of underperforming officials

சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை, ராஜ்யசபாவுக்கும் பரவியுள்ளது. முதல்கட்டமாக ராஜ்யசபா செயலகத்தில் பணியாற்றும், 67 ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்தது முதல், மத்திய அரசு அதிகாரிகளின் பணி சூழல் மாறியு உள்ளது.ஒழுங்காக வேலை செய்யாதவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.கடந்த, 2019 நவ.,ல் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில், குரூப் ஏ எனப்படும், 96 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு … Read more

`பொது நீதிக்காகப் போராடினால் பொய் வழக்கா?… பாஜக-வினர் சிறைக்கு அஞ்சுவதில்லை!' – அண்ணாமலை

தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்றும், பீகார் தொழிலாளர்கள் வெளியேறுவதாகவும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், `வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவோர்மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தார். மேலும், தமிழகத்திலுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, ‘வடமாநிலத்தவர்மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதல்வர்?’ என்ற … Read more

ரஷ்ய கோடீஸ்வரரின் போயிங் 737 விமானத்தை கைப்பற்ற அமெரிக்காவுக்கு அனுமதி

ரஷ்ய நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தை கைப்பற்ற அமெரிக்காவுக்கு வாரண்ட் கிடைத்துள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மேற்கோள் காட்டி, ரஷ்ய எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான 25 மில்லியன் டொலர் போயிங் 737-ஐ பறிமுதல் செய்ய நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானம் PJSC Rosneft Oil Co. நிறுவனத்திற்கு சொந்தமானது, இது மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டது மற்றும் … Read more

இசைக்கலைஞர் சந்திரசேகர் மறைவுக்கு இளையராஜா இரங்கல்…

இசைஞானி இளையராஜா இசையமைத்த பல்வேறு படங்களில் பணியாற்றிய இசைக்கலைஞர் சந்திரசேகர் இன்று காலமானார். கிட்டார் இசைக்கலைஞரான இவர் இளையராஜா இசையமைத்த ‘இளய நிலா பொழிகிறதே’ உள்ளிட்ட பல பாடல்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியுள்ளார் சந்திரசேகர். சந்திரசேகர் மற்றும் அவரது இளைய சகோதரர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன் இருவரும் இளையராஜாவின் பல படங்களில் பணியாற்றியுள்ளனர். Rest in peace, Chandrashekar sir. A brilliant … Read more