உங்கள் பணம் எப்போது பாதியாக குறையும்… தெரியுமா? கணக்கிடும் வழிமுறைகள் இதுதான்!

நேற்றைய ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பும் இன்றைய ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பும் நாளைய ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பும் வேறு வேறு என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்தானே? பணத்தின் மதிப்பை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது பணவீக்க விகிதம் (Inflation)  ஆகும். பணம் 100 ஆண்டுகளுக்கு முன் `பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்’ சொன்ன பண ரகசியம்… | பர்சனல் ஃபைனான்ஸ் – 7 முதலீடு லாபத்தை விழுங்கும் பணவீக்கம்..! இந்தியாவில் கடந்த 35 ஆண்டுகளில் பணவீக்கம்  ஆண்டுக்கு … Read more

பெங்களூருவில் ரூ. 17,000 கோடி மதிப்பில் ரிங் ரோடு அமைக்கப்படவுள்ளது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

பெங்களூரு: பெங்களூருவில் ரூ. 17,000 கோடி மதிப்பில் ரிங் ரோடு அமைக்கப்படவுள்ளது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிகூறினார்.  இது மைசூருவுக்கு நேரடியாகப் பயணிக்க உதவும். இந்த புதிய சாலையின் மூலம் பெங்களூரில் இருந்து மைசூருவுக்கு 1 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும் எனவும் பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

“சிறு வயதில் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்!" – சுவாதி மாலிவால்

டெல்லியின் பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சிறு வயதில் தான் தன்னுடைய தந்தையால் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி பெண்கள் ஆணையத்தின், சர்வதேச பெண்கள் தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சுவாதி, “நான் நான்காம் வகுப்பு படிக்கும் வரை, என்னுடைய தந்தையால் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன். அப்படி தொந்தரவுக்கு ஆளாகும்போது, நான் கட்டிலின் அடியில் தப்பித்து ஒளிந்துகொள்வேன். ஸ்வாதி மாலிவால் அந்த சமயத்தில் இப்படிப்பட்ட ஆண்களுக்கு எவ்வாறு பாடம் புகட்டுவது, எப்படி பெண்கள், … Read more

மார்ச் 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 295-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 295-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தென்காசி – நெல்லை இடையே மின்வழித்தட அகல ரயில் பாதையில், நாளை அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை

தென்காசி: தென்காசி – நெல்லை இடையே மின்வழித்தட அகல ரயில் பாதையில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின்பொறியாளர் ஏ.கே.சித்தார்தா தலைமையில் நாளை அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை நடைபெற உள்ளது. சோதனை நடைபெறும் நேரத்தில் தண்டவாளத்தைக் கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

“மன்மோகன் சிங் சிறந்த பிரதமராக அறியப்படுவார்!’’ – ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன்!

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜனின் சுயசரிதை புத்தகம் `ஃபோர்க்ஸ் இன் தி ரோட் : மை டேஸ் அட் ஆர்.பி.ஐ அண்ட் பியாண்ட் (Forks in the Road: My Days at RBI and Beyond)’ சில மாதங்களுக்கு வெளியானது. ரிசர்வ் வங்கியில் அவர் பணி செய்த நாள்கள், முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோருடனான தொடர்பு, பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியா எப்படி மீண்டெழுந்து 5 ட்ரில்லியன் டாலர் … Read more

கோல் கீப்பரை ஏமாற்றி 3000வது கோல் அடித்த எம்பாப்பே! கட்டிப்பிடித்து நெகிழ்ந்த மெஸ்ஸி

லீக் 1 தொடரில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியை வீழ்த்தியது. சோலர் அபார கோல் Stade Francis-Le Ble மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், PSG-யின் 37வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் கோல் அடித்தார். எம்பாப்பே கோல் வலையை நோக்கி உதைத்த பந்தை கோல் கீப்பர் தடுத்தார். ஆனால், அது திரும்பி வந்தபோது விரைந்து செயல்பட்ட சோலர் அதனை கோலாக மாற்றினார். அதன் பின்னர் 43வது நிமிடத்தில் பிரெஸ்ட் … Read more

உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.14 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.11 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.43 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்தார் விராட் கோலி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். டெஸ்ட் வரலாற்றில் தனது 28-வது சதத்தை அடித்து விராட்கோலி சாதனை  படைத்தார். 3வகையான கிரிக்கெட் போட்டியிலும் விராட்கோலி இதுவரை 75 சதங்களை விளாசி சாதனை செய்துள்ளார்.