'பயணிகள் துறை', 'புகார் தீர்வு உதவி எண்', 'பொது இணையதள வசதி' ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ‘பயணிகள் துறை’, ‘புகார் தீர்வு உதவி எண்’, ‘பொது இணையதள வசதி’ ஆகிய திட்டங்களை சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பள்ளன் இல்லத்தில் உள்ள மையத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் 1800 599 1500 என்ற இலவச எண் மூலம் பயணிகள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா: சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்து – 12 மணி நேரமாக தொடரும் தீயணைப்பு பணி

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் பூரி நகரில் அமைந்துள்ள சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக விளங்கும் இந்த சந்தை வளாகத்தில், நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென பரவியதால், அருகில் இருந்த கட்டடங்களும் தீப்பற்றி எரியத்தொடங்கின. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 160 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை … Read more

எனர்ஜியோடு எக்ஸாம் எழுதலாமா! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் எந்நேரமும் புத்தகம் கையுமாக இருப்பார்கள் அவர்கள் சோர்வடையாமல் எப்பொழுதும் உற்சாகமாக இருக்க செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை. அவர்கள் கேட்பதை அரவணைப்போடு தட்டிக் கொடுத்து சாப்பிடச் சொல்லி படிக்க வைக்க வேண்டும் பெற்றோரின் அரவணைப்பு இருக்கும்போது அவர்கள் … Read more

தனக்கு தானே கல்லறை கட்டிய பிரபல தமிழ்ப்பட நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ்ப்பட நடிகை ரேகா தனக்கு தானே கல்லறை கட்டிய விடயம் மீண்டும் வைரலாகியுள்ளது. நடிகை ரேகா புன்னகை மன்னன், கடலோரக் கவிதைகள் படங்கள் மூலம் தமிழில் பிரபலமடைந்த நடிகை ரேகா. கதாநாயகியாக தமிழ், மலையாளப் படங்களிலும், குணச்சித்திர வேடத்தில் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற ரேகா, சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார். தனக்கு தானே கல்லறை தன் மீது அதீத அன்பு கொண்ட ரேகா, … Read more

திருவண்ணாமலை அருகே 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

திருவண்ணாமலை: மலைப்பாம்பாடி கிராமம் அருகே 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க வலதுபக்கம் பேருந்தை இயக்கியபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜனதா கவுன்சிலர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

கொள்ளேகால்- சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுனில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டது. அந்த பஸ் நிலையம் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த பஸ் நிலையத்தை திறந்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரி கொள்ளேகால் நகரசபை பா.ஜனதா கவுன்சிலர்கள் மதுசந்திரா, கவிதா ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நேற்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் கொள்ளேகால் டவுன் பா.ஜனதா நிர்வாகிகள் ரமேஷ், சங்கர், … Read more

`ஒரே ஏ4 பேப்பரில் 135 கோயில்களின் ஓவியம்'- சாதனை படைத்த தஞ்சைக் கல்லூரி மாணவி!

தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர் ரப்பர், பென்சில் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தாமல் பேனாவை மட்டும் பயன்படுத்தி ஒரே ஒரு ஏ4 பேப்பரில் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 135 முக்கிய கோயில்களின் தோற்றத்தைப் படம் வரைந்து சாதனை படைத்துள்ளார். அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். வரைந்த கோயில் படங்களுடன் கல்லூரி மாணவி யமுனா தஞ்சாவூர் அருகே வல்லம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இருக்கிறார். இவரது மனைவி சசிகலா. … Read more

அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்…

சென்னை: அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை” என  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்துவரி, மின்கட்டணம் உள்பட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில்,  அரசு கேபிள் டிவி கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், இன்று, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது.  … Read more

மலேசியா முன்னாள் பிரதமர் முஹ்யிதின் யாசின், ஊழல் தடுப்பு விசாரணை முகமையால் கைது

கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் முஹ்யிதின் யாசின், ஊழல் தடுப்பு விசாரணை முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா நிவாரண திட்டப்பணிகளில் முறையான விதிகளை கடைபிடிக்கவில்லை என்பது அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.