`சென்னையில் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதியளிக்க அரசு திட்டம்!' – விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், `Gross Cost Contract’ முறையில் முதற்கட்டமாக 500 தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்தி வெளியானது. சென்னை பேருந்து இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பேருந்து வசதி குறைவாக இருக்கும் இடங்களில்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆலோசிக்கப்படுவதாக விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இத்தகைய முடிவு குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில், வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உண்டு: அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய மசோதாவை ரத்து செய்த ஐகோர்ட், மீண்டும் கொண்டு வர தடை இல்லை என கூறியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர், நாங்கள் அதிகாரம் உள்ளது என தெளிவுபடுத்தி இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்; திருப்பியனுப்பிய ஆளுநர் – மீண்டும் சட்டமியற்ற அமைச்சரவை முடிவு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானம், ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அது தொடர்பாக ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தெளிவான பதிலை தமிழ்நாடு அரசும் வழங்கியது. ஆனால், கடந்த 6-ம் தேதி ஆன்லைன் விளையாட்டுத் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் ஆளுநரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளானது. இந்த நிலையில், மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட முன்வடிவை இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவர, இன்று … Read more

சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிப்பவை இவைகளா?

நம் உடலின் முக்கியமான பகுதியில் ஒன்று சிறுநீரகம். உடலில் உள்ள நீர்ம சமநிலையை சிறுநீரகங்கள் தான் பராமரித்து வருகிறது. உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்க இதையெல்லாம் ஒருப்போதும் செய்யக்கூடாது. அறிகுறிகள் தலைவலி தலைசுற்றல் உடல் மந்தம் குமட்டல் கழுத்து வலி இடுப்பு வலி  செய்யகூடாதவை வலி நிவாரணி மாத்திரைகள் அதிகமாகப் பயன்படுத்துதல் சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை. தலைவலி அல்லது மூட்டுவலியாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையின்றி, வலிநிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டால் பாதிப்பு ஏற்படும். அதிக உப்பு உட்கொள்ளுதல் சிறுநீரகத்தின் … Read more

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே சென்னையில் நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டம்: டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிப்பு…

சென்னை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே சென்னையில் நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்துக்கான  டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மார்ச் 13ந்தேதி முதல் ஆன்லைனிலும், மார்ச் 18ந்தேதி  கவுண்டரிலும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் ஆட்டம் சென்னையில் மார்ச் 22 அன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டு உள்ளது. இந்தியா … Read more

சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட் நீதிபதி அறிவிப்பு!

சென்னை: சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட் நீதிபதி அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்காவில் சீரமைப்பு பணி நடக்கிறது. நிலத்தடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க 2011-ல் ஷெனாய் நகரில் 8.8 ஏக்கரில் உள்ள திரு.வி.க. பூங்கா மூடப்பட்டது.

படம்! – குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அப்பா எனக்கு செல்போன் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டார். லேட்டஸ்ட்  மாடலாம்.  கும்பகோணத்துலேந்து பஸ்ல வந்திட்டு இருக்கேன்னு அம்மாவுக்கு போன் பண்ணிட்டார். அவருக்காக காத்துக்கிட்டு இருக்கிறேன். “ஏங்க அவன் மேல ஒரு கண்ணு வைங்க…செல்போன்ல  கண்டத பாத்து கெட்டு போயிட போறான்…” – நேத்து ராத்திரி  அப்பாகிட்ட அம்மா சொன்னது  போர்வைக்குள்ள … Read more

கனடாவில் முதன்முறையாக…சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக டொராண்டோ பள்ளி வாரியம் எடுத்துள்ள முடிவு

கனடாவில் முதன்முறையாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வாக்கெடுப்பில் டொராண்டோ பள்ளி வாரியம் வாக்களித்துள்ளது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக வாக்கு கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவின்(Toronto) பள்ளிகளில் சாதிய ஒடுக்குமுறை நிலவுகிறது என்பதை அங்கீகரித்து அந்த மாவட்ட பள்ளி வாரியம் வாக்களித்து இருப்பதாக குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவில் சாதிய ஒடுக்குமுறை இருப்பதை ஒரு பள்ளி வாரியம் ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது. Unsplash அத்துடன் சாதி பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு தீர்வு … Read more

டிரெண்டிங் எதிரொலி: குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என கேள்வி எழுப்பி  சமூக வலைதளங்களில் இளைஞர்கள் டிரெண்டிங் செய்த நிலையில், இன்று  மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் … Read more

அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்: செல்லூர் ராஜூ பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம்; திருமாவளவன் எங்கள் சகோதரர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு அனைத்து அதிகாரமும் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.