என்எல்சியால், நிலத்தடி நீர் 1000 அடிக்குக் கீழே சென்று விட்டது! அன்புமணி ராமதாஸ்

சென்னை:  மக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டிய பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ், என்எல்சியால் அந்த பகுதியில்  நிலத்தடி நீர் 1000 அடிக்குக் கீழே சென்று விட்டது என்றும் தெரிவித்தார். என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த போராட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு காவல்துறையை குவித்து உள்ளது. அரசு பேருந்துகள் மொத்தம் மொத்தமாக காவல்துறை பாதுகாப்புடன் … Read more

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயன்ற 2 பேர் கைது

சென்னை: சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயன்ற பெங்களூருவைச்சேர்ந்த ஞானகிறிஸ்டோபர், சின்னராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கர்நாடகாவில் முதியவர்கள் வீட்டில் இருந்தபடி ஓட்டு போடலாம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு| Election Commission comes up with Vote From Home option for voters above 80 yrs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: கர்நாடகாவில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது: முதல்முறையாக கர்நாடகாவில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதற்காக, அதிகாரிகள் 12டி விண்ணப்பத்துடன் அங்கு சென்றுள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுப்போடுவதை வரவேற்கும் நாங்கள், ஓட்டுச்சாவடிக்கு … Read more

மதுபான கொள்கை வழக்கு: தெலுங்கானா முதல்-மந்திரியின் மகள் கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜர்

டெல்லி, டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவர் ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றகாவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு கோர்ட்டு அனுமதியளித்தது. மேலும், சிசோடியாவை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநர் vs அரசு – இறுதிச்சுற்றில் வெல்லப் போவது யார்?!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. பின்னர், அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 19-ம் தேதி சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டு, 28-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுக்களால், உயிரிழப்புகள் அதிகரித்து வந்ததால், மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்தன. 27 நாட்களுக்குப் பிறகு நவம்பர் … Read more

சாப்பிட்டவுடன் தூக்கம் வந்தால் இந்த நோயா? உஷார் மக்களே

பொதுவாக நம்மில்  சிலருக்கு சிலருக்கு சாப்பிட்டவுடனே பயங்கரமாக தூக்கம் வரும்,சோம்பலாக இருக்கும்.   அலுவலகத்தில் கிடைக்கும் இடைவேளையில் ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள்.   இதனை “food coma” என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.   food coma என்றால் என்ன? இதன் மருத்துவ பெயர் போஸ்ட்ப்ரான்டியல் சொம்னோலன்ஸ் (postprandial somnolence ) ஆகும். இந்த food coma ஏற்பட காரணம் என்னவெனில், கார்போவைதரேட்டுகள் அதிகம் உள்ள உணவானது, இன்சுலினில் ஒரு பெரிய ஸ்பைக்கைத் தூண்டுகிறது. இது உங்கள் மூளைக்குள் சில … Read more

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆனந்தபாபு நடராஜன், துணைத்தலைவர்களாக கல்யாணசுந்தரம், சேகர், ஜமீர்அகமதுஅல்பாசி, குணசேகர், ஜெயராமன், கோவளன், டேனியல்ராஜ், கயல்விழி ஆகியோரும், 23 தொகுதிகளுக்கான வட்டார தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் முன்னிலையில் … Read more

லஞ்சம் வாங்கிய 2 முன்னாள் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை!!

சென்னை : விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க சான்றிதழ் வழங்க ரூ.20,000 லஞ்சம் வாங்கிய முன்னாள் அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சேலம் தென்குமரையில் 1997ல் லஞ்சம் வாங்கிய அப்போதைய விஏஓ அருணாச்சலத்திற்கு ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.  அதே போல் மீன்பிடி படகிற்கு பதிவு சான்று தர ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கடல்சார்வாரிய முன்னாள் அதிகாரிக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 90 பேர் இந்த வகை வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இதில் கர்நாடகாவில் 26 பேருக்கு ‘எச்3.என்.2’ வைரஸ் … Read more

3 எஸ்யூவி கார்களை வெளியிட உள்ள மாருதி சுசூகி

நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் அடுத்த சில மாதங்களில் ஃபிரான்க்ஸ் (Fronx) , ஜிம்னி மற்றும் பிரெஸ்ஸா சிஎன்ஜி என மூன்று மாடல்களை வெளியிடுவது உறுதியாகியுள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபிரான்க்ஸ் மற்றும் ஜிம்னி என இரண்டு கார்களுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. பலினோ காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கிராஸ்ஓவர் எஸ்யூவி ரக Fronx மாடலில் இரு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை பெற உள்ளது. மிக முக்கியமான … Read more