ஒடுக்குமுறைக்கு எதிரான முன்னோடி கலகக் குரல்; சாவித்ரிபாய் புலே மறைந்த தினம் இன்று! | #Visual Story

சாவித்திரி புலே, இந்தியப் பெண்களின் வழிகாட்டியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக, முதல் ஆசிரியராக வலம்வந்த பெண் என என்றும் நினைவுகூரப்படுபவர் சாவித்ரிபாய் புலே. அவர் இறந்த தினம் இன்று! Child சாவித்ரி, 1831 ஜனவரி 3, மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியின் நைகாவ்ன் பகுதியில் பிறந்தார். தோட்ட வேலை செய்யும் `மாலி’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாவித்ரியின் பெற்றோர்.  child marriage அன்றைய வழக்கப்படி, 1840 ஏப்ரல் 11 அன்று, ஒன்பது வயதான சாவித்ரியை `ஜோதிராவ் புலே’ … Read more

மெஸ்ஸி, நெய்மர் உட்பட 4 PSG அணி வீரர்களுடன் எம்பாப்பே பேசவில்லை! வெளியான தகவல்

லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் உட்பட 4 பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி வீரர்களுடன் கைலியன் எம்பாப்பே பேசவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நான்கு PSG அணி வீரர்கள் El Nacional-ன் அறிக்கையின்படி, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) சூப்பர் ஸ்டார் கைலியன் எம்பாப்பே (), சமீபத்தில் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மற்றும் பிரேசில் வீரர் நெய்மர் (Neymar Jr.) உட்பட நான்கு அணி வீரர்களுடன் பேசவில்லை. எம்பாப்பேவுக்கு மெஸ்ஸி மீது அந்த … Read more

குற்றவாளி மீது துப்பாக்கி சூடு சம்பவம்: கோவை காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை குற்றவாளிமீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரின் கஸ்டடியில் இருக்கும்போது, குற்றவாளியால் எப்படி துப்பாக்கியால் சுட முடிந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி சத்தியபாண்டியை கடந்த மாதம் (பிப்ரவரி)  12ஆம் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. … Read more

மகளிர் பிரிமியர் லீக் டி20: உ.பி.வாரியர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20: உ.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி வெற்றி இலக்காக 138 ரன்களை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி 13 ஓவர்களில் தேவிகா வைத்யா 36 ரன்களும், அலிசா ஹீலி 96 ரன்களும், எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கள்ள நோட்டு மாற்றிய பெண் அதிகாரி சஸ்பெண்ட்| Female officer suspended for exchanging fake notes

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம் :கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவசாயத் துறை பெண் அதிகாரி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சமீபத்தில் வியாபாரி ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்தார். அதில், ஏழு 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டு என்பதை உறுதி செய்த அதிகாரிகள், போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நோட்டுகளை கொடுத்தது எடத்துவா என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயத் … Read more

ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா; இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு நனவாகுமா?

பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸூம் கண்டுகளித்தனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கி, கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 6 மணி நேரத்திற்கும் மேலாகக் களத்தில் நின்று, 251 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் கவாஜா முதல் நாள் ஆட்டத்தின் கடைசி … Read more

அகோரி பூஜைக்காக மாதவிடாய் வெளியேற்றத்தை சேகரித்த கணவர், மாமியார் மீது பெண் புகார்!

புனேவில் அகோரி பூஜைக்காக மாதவிடாய் ரத்தம் எடுத்ததாக கணவர் மற்றும் மாமனார்-மாமியார் மீது பெண் புகார் அளித்துள்ளார். கணவர் மற்றும் மாமியார் மீது செவ்வாய்க்கிழமை புகார் ‘அகோரி பூஜை’ செய்வதற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து துன்புறுத்தியதாக 27 வயதான பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது செவ்வாய்க்கிழமை புகார் அளித்ததை அடுத்து, புனேவில் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மகாராஷ்டிராவின் பீட் (Beed) மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று விஷ்ராந்த்வாடி காவல் … Read more

நேபாளத்தின் புதிய அதிபராக நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திரா பவுடல் தேர்வு!

காத்மாண்டு: நேபாள நாட்டின்  புதிய அதிபராக நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேபாள நாட்டில் தேர்வு முறையானது, இந்தியாவைப் போது, சட்டமன்ற (மாகாண சபை) உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பனிர்களும் வாக்களித்து தேர்வு செயப்படுகின்றனர். தற்போதைய  அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த … Read more

மகளிர் பிரிமியர் லீக்: யு.பி.வாரியர்ஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி

மும்பை: மும்பையில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், யு.பி.வாரியர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 19.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.பி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது.

"பி.எஸ்.எஃப்-ல் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு!" – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் போராட்டத்துக்கும், எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்துக்கும் வழிவகுத்த ஒன்றுதான், மத்திய அரசு கொண்டுவந்த `அக்னிபத்’ திட்டம். இந்திய ராணுவத்தின் முப்படைகளின் புதிய ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபத் திட்டத்தில் தேர்வு பெறும் வீரர்கள், நான்காண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவர். அதன்பிறகு அதிலிருந்து 25 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர். மற்ற 75 சதவிகிதம் பேர் ஓய்வுபெற்றவர்களாவர். அக்னிபத் திட்டம் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மத்திய துணை ராணுவப் படை மற்றும் அஸ்ஸாம் … Read more