தூத்துக்குடி: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரச் சீர்கேடு! – கவனிப்பார்களா அதிகாரிகள்?

தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இடமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் மூடிகளும், கழிவுநீர் தொட்டி மூடிகளும் பெயர்ந்து காணப்படுகின்றன. தகரத்தினால் செய்யப்பட்ட இந்த மூடிகள் பல ஆண்டுகளாக கவனிப்பு இல்லாமல் இருக்கின்றன. இதனால் தற்போது துருப்பிடித்த நிலையில், பெயர்ந்து காணப்படுகின்றன. கழிவுநீர் வெளியேறும் இடங்களும், கழிவுநீர் தொட்டிகள் இருக்கும் இடங்களும் ஆபத்தான வகையில் திறந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு சுகாதாரச் சீர்கேடு … Read more

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க இருக்கும் நிலையில், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மூன்றாயிரத்து 185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பொதுத்தேர்வைக் கண்டு அச்சப்பட வேண்டாம்; உங்களுக்கு தேவை தன்னம்பிக்கையும் … Read more

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையோரம் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்தவர் மீது கார் எறியதில் 3 பேர் உயிரிழப்பு

திருச்சி; திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையோரம் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்தவர் மீது கார் எறியதில் 3 பேர் உயிரிழந்துள்ளர். மதுபோதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய லட்சுமிநாராயணன், அஸ்வந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இயற்கை உர தயாரிப்பில் கோசாலை : நிடி ஆயோக் அறிக்கை வெளியீடு| Kosalai on Natural Fertilizer Production: Nidi Aayog Report Released

புதுடில்லி :இயற்கை உரம் தயாரிப்பில் கோசாலைகளின் பங்களிப்பு குறித்து, ‘நிடி ஆயோக்’ அமைப்பின் சிறப்பு பணிக் குழு நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிடி ஆயோக் அமைப்பு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை உரங்கள் உற்பத்தி தொடர்பாகவும், அதற்கு உதவும் கோசாலைகளின் நிதி நிலையை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு பணிக் குழு, நாடு முழுதும் ஆய்வுகளை நடத்தி, தன் அறிக்கையை தாக்கல் … Read more

வரவிருக்கும் ஹூண்டாய் கார்கள் மற்றும் எஸ்யூவி விபரம்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் புதிய வெர்னா உட்பட புதிய கிரெட்டா, ஸ்டார்கேஸர் எம்பிவி ரக மாடல் மற்றும் கேஸ்பர் எஸ்யூவி காரை அறிமுகம் செய்யலாம். டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் தனது மற்றொரு பிராண்டான கியா ஆகியவற்றுடன் கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய மாடல்களை நவீன வசதிகளுடன், டிசைன் மாற்றங்களுடன் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. சமீபத்தில் ஹூண்டாய் அல்கசார் … Read more

`பீ.டீம் மூலம் அதிமுக-வை முடக்க நினைத்தால், திமுக இல்லாமல் போகும்!' – இ.பி.எஸ் எச்சரிக்கை

சிவகங்கையில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை சாலையிலுள்ள அம்மா அரங்கத்தில் நடந்த இந்த விழாவுக்கு, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்துப் பேசினார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட பிரதான கட்சி அ.தி.மு.க. இந்தக் கட்சியை ஒடுக்கவோ, அழிக்கவோ நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். நான் விவசாயக் குடும்பத்தைச் … Read more

சோனியா குறித்து மார்பிங் வீடியோ: ஒருவர் கைது

புதுடெல்லி: சோனியா குறித்து மார்பிங் வீடியோ வெளியிட்ட ஒருவர் கைது செய்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டதற்காக பிபின் குமார் சிங் சாண்டில்யா என்ற நபரை போலீசார் செய்துள்ளனர். இதுகுறித்து பிரதாப்கர் எஸ்.பி. அமித் குமார் வெளியிட்டுள்ள தகவலில், ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள பிபின் குமார் சிங் சாண்டில்யாவை மார்ச் 14 வரை நீதிமன்ற … Read more

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை சுட்டுப் பிடித்தது போலீஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை போலீஸ் சுட்டுப் பிடித்தது. தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெயப்பிரகாஷ் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஜெயப்பிரகாஷின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடிகள்: லிங்கை தொட்டால் பணம் அபேஸ்| Cybercrime Scams on the Rise: Money Abes for Clicking Link

புதுச்சேரி: புதுச்சேரியில் புதுப்புது விதங்களில் அதிகரித்து வரும் சைபர் க்ரைம் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.உலகையே உள்ளங்கையில் கொண்டு வரும் மொபைல் தொழில்நுட்பம், நமக்கு பல வகையில் பயனாக அமைந்தாலும், சில நேரம் இழப்புகளை ஏற்படுத்துகிறது. கடந்த காலங்களில் வங்கி பரிவர்த்தனைகள் கடினமாகவும், கால விரயத்தையும் ஏற்படுத்தியது.தற்போது இன்டர்நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் வந்த பின், ஒரு நொடியில் அடுத்தவர் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது. புதுச்சேரியில் 50 சதவீத்திற்கும் அதிகமான … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – மார்ச் 13 முதல் 19 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link