20,000 பேருக்கு வீடு ஜேபி வழக்கில் உத்தரவு| House for 20,000 people ordered in JP case

புதுடில்லி,புதுடில்லியைச் சேர்ந்த, ‘ஜேபி இன்ப்ராடெக்’ நிறுவனத்தை வாங்கும் திட்டத்துக்கு, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, ௨௦ ஆயிரம் பேருக்கு விரைவில் வீடு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜேபி இன்ப்ராடெக் நிறுவனத்தின் சார்பில், புதுடில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், இந்த திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால், வீடு வாங்க முன்பதிவு செய்திருந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் ஜேபி … Read more

மேஜைகளை உடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர் சஸ்பெண்ட்! – விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் உத்தரவு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திலுள்ள அமானி மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் பாலக்கோடு சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து வரும், 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்; 45 ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர்.   இந்த நிலையில், இந்தப் பள்ளி மாணவர்கள், சில மாணவிகள், வகுப்பறையிலுள்ள, மேஜை, நாற்காலிகளை கட்டை, குச்சிகளால் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, சம்பவம் குறித்து விசாரிக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவிட்டார். மேஜைகளை நொறுக்கிய … Read more

வெறும் $1 டாலருக்காக வங்கியை கொள்ளையடித்த 65 வயது முதியவர்: அமெரிக்காவில் விசித்திர சம்பவம்

அமெரிக்காவில் வங்கியில் இருந்து $1 பணத்தை கொள்ளையடித்த 65 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி பணம் கொள்ளை அமெரிக்காவின் மேற்கு மாநிலமான உட்டாவின் தலைநகர், சால்ட் லேக் சிட்டியின், 300 தெற்கு பிரதான தெருவுக்கு அருகிலுள்ள வங்கியில் 65 வயதான டொனால்ட் சான்டாக்ரோஸ் என்பவர் திங்கட்கிழமை நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க வந்து இருப்பதாக ஊழியர்களை மிரட்டியுள்ளார். மேலும் சந்தேக நபர் வங்கி ஊழியர்களிடம் இருந்து பணத்தை பெறாமல் வங்கியை விட்டு வெளியேற மாட்டேன் என … Read more

அரசு பணி தேர்வுகளில் மோசடி? ஜம்மு – காஷ்மீரில் ஆர்ப்பாட்டம்!| Cheating in government job exams? Demonstration in Jammu and Kashmir!

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் அரசுப் பணிகளுக்கான தேர்வு நடத்த, கறுப்புப் பட்டியலில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்த, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, ‘ஏப்டெக்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு கடந்தாண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் கறுப்புப் பட்டியலில் உள்ள அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு – காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், … Read more

10.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 10 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

எரிசக்தி நிலையங்களை தாறுமாறாக தாக்கிய ரஷ்யா: ஏவுகணைகளால் சிதைந்த உக்ரைன்! பிரதமர் எச்சரிக்கை

ரஷ்யாவின் பயங்கரமான வான்வெளி தாக்குதலில் எட்டு பிராந்தியங்களில் எரிசக்தி வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் அறிவித்துள்ளார். வான்வெளித் தாக்குதல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை தொடங்கி ஓராண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், கிழக்கு நகரமான பாக்முட்டில் கடுமையான சண்டை நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா இன்று உக்ரைன் முழுவதும் வான்வெளி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் நாட்டின் முக்கிய நகரங்களில் பெரிய அளவு பாதிப்பை சந்தித்து வருகின்றன. sky news … Read more

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நிறைவு!

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது. 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழ்நாடு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிலுக்கு அருகே அசைவ உணவு தர ஸ்விக்கி ஊழியர் மறுத்ததால் பரபரப்பு| A Swiggy employee refused to serve non-vegetarian food near the temple causing a commotion

புதுடில்லி,:புதுடில்லியில், அனுமன் கோவிலுக்கு மிக அருகே பிரசாதம் விற்பனை செய்யும் கடை வைத்துள்ள நபருக்கு, மட்டன் குருமாவை, ‘டெலிவரி’ செய்ய முடியாது என, ‘ஸ்விக்கி’ ஊழியர் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுடில்லியின், காஷ்மீரி கேட் என்ற பகுதியில் மர்காட் அனுமன் கோவில் உள்ளது. இங்கு, ராம் கச்சோரி ஷாப் என்ற சிற்றுண்டி கடை உள்ளது. இங்கு அனுமன் கோவில் பிரசாதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடை அனுமன் கோவில் வளாகத்துக்குள், கோவிலுக்கு மிக அருகே … Read more

`சென்னையில் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதியளிக்க அரசு திட்டம்!' – விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், `Gross Cost Contract’ முறையில் முதற்கட்டமாக 500 தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்தி வெளியானது. சென்னை பேருந்து இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பேருந்து வசதி குறைவாக இருக்கும் இடங்களில்தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆலோசிக்கப்படுவதாக விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இத்தகைய முடிவு குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில், வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உண்டு: அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய மசோதாவை ரத்து செய்த ஐகோர்ட், மீண்டும் கொண்டு வர தடை இல்லை என கூறியுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர், நாங்கள் அதிகாரம் உள்ளது என தெளிவுபடுத்தி இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.