பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. சென்னை அண்ணா சிலை அருகில் தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை பேரணி நடைபெறுகிறது. 

ரெயில்வே துறைக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகாரிகள் நியமனம் – ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி, ரெயில்வே துறையில் இந்திய ரெயில்வே நிர்வாக சேவைக்கான (ஐ.ஆர்.எம்.எஸ்) அதிகாரிகளை தேர்வு செய்ய யு.பி.எஸ்.சி. மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த தேர்வுக்கு பதிலாக யு.பி.எஸ்.சி. மூலமாக சிவில் சர்வீசஸ் தேர்வு மூலமே இந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக நேற்று வெளியிடட அறிக்கையில், ‘ரெயில்வே அமைச்சகம் யு.பி.எஸ்.சி. மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, யு.பி.எஸ்.சி.யால் நடத்தப்படும் 2023-ம் ஆண்டுக்கான சிவில் … Read more

விருதுநகர்: அதிகாரிகள் மீது மலைவாழ் மக்கள் சரமாரி புகார்… எச்சரித்த நீதிபதி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு, குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின் மாவட்ட செயலாளரும், சார்பு நீதிபதியுமான இருதயராணி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், மலைவாழ் … Read more

அரசு பாடசாலை ஆசிரியராக இருந்து பயங்கரவாதியாக மாறிய நபர் கைது! நூதன வெடிகுண்டை கைப்பற்றிய பொலிஸார்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதியை கைது செய்த பொலிஸார், வாசனை திரவிய வெடிகுண்டை கைப்பற்றினர். ஆசிரியராக இருந்த பயங்கரவாதி ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் ஜனவரி 21ஆம் திகதி அன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 9 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரியாசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரிப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினைச் சேர்ந்த பயங்கரவாதி என்று தெரிய வந்தது. மேலும், அவர் … Read more

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை

புதுச்சேரி: ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது. 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளது. தற்போது புதுச்சேரி அரசும் அதிரடியான அறிவிப்பை இன்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் குமரி, நெல்லை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், குமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? – சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இடையீட்டு மனு இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் … Read more

அயோத்தியில் ராமஜென்ம பூமி வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு தீவிரம்

அயோத்தி, உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் உள்ளிட்ட ராமஜென்ம பூமி வளாகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அயோத்தியின் ராம்கோட் பகுதியில் வசித்து வரும் மனோஜ் என்பவரின் போனுக்கு அழைத்த அவர், அந்த வளாகத்தை வியாழக்கிழமை (நேற்று) காலை 10 மணிக்கு தகர்க்கப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனே இது குறித்து மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. … Read more

சிவகாசி: கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்களிடம் 27 சவரன் நகை திருட்டு – கைவரிசை காட்டிய திருடர்கள்

சிவகாசியில் பிரசித்திப்பெற்ற பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்தவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி, அசாதம்பாவிதங்கள்‌ ஏற்படாத வண்ணம் தடுக்கும்வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பக்தர்களின் ஒருபகுதி இந்நிலையில் பக்தர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்மநபர்கள் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த சிவகாசியை சேர்ந்த 6 பெண்களிடம் மொத்தம் 27 சவரன் தங்க நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை … Read more

பிரபல இயக்குநர், நடிகர் கே.விஸ்வநாத் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகரான கே.விஸ்வநாத் மரணமடைந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பழம்பெரும் இயக்குநர் தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் கே. விஸ்வநாத். இயக்குநராக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது முழுப்பெயர் காசிநாதுனி விஸ்வநாத் ஆகும். இவர் இயக்கிய சங்கராபரணம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், பல விருதுகளை வாங்கிக் குவித்தது. … Read more