'கன்னியாகுமரி டு டெல்லி' – பல்வேறு கோரிக்கைகள்… நீதி கேட்டு பயணிக்கும் விவசாயிகள் குழு!

`வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கான நிரந்தரச் சட்டம் கொண்டு வர வேண்டும். மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக் கூடாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளை நிலங்களை விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் கைப்பற்றக்கூடாது. சந்தைப்படுத்துவதில் இந்திய விவசாயிகள், உள்நாட்டு வணிகர்கள், சிறுகுறு தொழில் முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய சந்தை உத்தரவாத சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். பருவநிலை மாற்றத்திலிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க மேற்கு … Read more

கொடூரமான துஷ்பிரயோகம்… 400 ஆண்டுகள்: இழப்பீடு தரக் கோரும் பிரித்தானிய எம்.பி

பிரித்தானியாவின் முன்னாள் கரீபியன் காலனி நாடுகளுக்கு, 400 ஆண்டுகள் இழைத்த கொடுமைகளுக்காக கண்டிப்பாக இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கரீபியன் நாடுகளுக்கு கிரெனடா நாட்டில் தங்கள் மூதாதையர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய கோடீஸ்வர குடும்பத்தினரை நினைவூட்டிய தொழில் கட்சி எம்.பி கிளைவ் லூயிஸ், கரீபியன் நாடுகளுக்கு பிரித்தானியா அரசாங்கமும் இழப்பீடு அளிப்பதில் தவறில்லை என்றார். பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பிரித்தானியா தனது கடந்த காலத்தை எதிர்கொண்டு அதைச் சரிச் செய்ய … Read more

தெலுங்கான முதல்வர் மகள் 11ந்தேதி அமலாக்கத்தறையில் ஆஜராக உள்ள நிலையில், நாளை டெல்லியில் உண்ணாவிரதம்…

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகள் அமலாக்கத்துறை விசாரணைக்கு 11ந்தேதி  ஆஜராக அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை (10ந்தேதி) டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் நாளை உண்ணா விரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய … Read more

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகியுள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரையில் இன்று வெப்பநிலை அதிகபட்சமாக 96 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக பதிவாகியுள்ளது. நாமக்கல், புதுச்சேரி, சேலம், ஆகிய இடங்களில் இன்று வெப்பநிலை தலா 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக பதிவாகியுள்ளது.

குடியாத்தம்: நிலத்தை அளக்க ரூ.15,000 லஞ்சம் – இடைத்தரகருடன் சர்வேயரை சிக்கவைத்த விவசாயி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலிருக்கும் டி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலு. இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை அளந்து, அதற்கான வரைப்படம் வழங்கக் கோரி குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். நிலத்தை அளவீடு செய்ய சர்வேயர் விஜய்கிருஷ்ணா ரூ.15,000 லஞ்சம் கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி வேலு, அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகாரளித்தார். இதையடுத்து, சர்வேயரை கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், ரசாயனம் தடவிய 500 ரூபாய் தாள்களை விவசாயி வேலுவிடம் … Read more

கால்பந்து மைதானத்தில் 135 பேர் பலியான துயரம் சம்பவம்! இரண்டு அதிகாரிகளுக்கு சிறை

இந்தோனேஷியாவில் கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரத்தில் பலர் பலியான சம்பவம் தொடர்பில், இரண்டு அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். 135 பேர் பலியான துயர சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங்கில் அரேமா எஃப்சி மற்றும் பெர்செபயா சுரபயா அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. அப்போது திடீரென கலவரம் வெடித்தது. ஆடுகளத்திற்குள் பலர் புகுந்தனர். இதனால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது பார்வையாளர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. @H … Read more

பீகார், ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பயத்தை போக்க நடவடிக்கை! டிஜிபி

கோவை: பீகார், ஜார்க்கண்ட் மக்கள்  இன்னும்  பயத்தில் உள்ளனர், அவர்களிடம் அவர்கள் மொழியிலேயே பேச பயத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  தொழில்துறையினருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்திகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களிலும், கட்டுமான நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த பல ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு திரும்பினர். இதையடுத்து, தமிழ்நாட்டின் தொழிற்நிறுவங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, வதந்தி குறித்து, தமிழக காவல்துறையும், மாநிலஅரசும் பல்வேறு … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கிடப்பில் போட வேண்டும் என்பதே ஆளுநரின் நோக்கம்: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கிடப்பில் போட வேண்டும் என்பதே ஆளுநரின் நோக்கம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சித்து விளையாட்டு போன்று ஆளுநர் நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். மசோதாவை மீண்டும் அனுப்பினால் அதை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு எந்த சட்டவாய்ப்பும் கிடையாது எனவும் கூறியுள்ளார்.

“வதந்தி வீடியோ; முன்ஜாமீன் பெற்றவர் தமிழகத்தில்தான் கையெழுத்திட வேண்டும்!" – டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்த நிலையில், அவர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் டி.பி.ஜி சைலேந்திர பாபு இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பூரைப் பொறுத்தவரை 471 பின்னலாடை நிறுவனங்களுக்குச் சென்று காவல்துறையினர் ஆய்வு நடத்தியதுடன், சுமார் 46,000 வடமாநிலத் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திருக்கின்றனர். சைலேந்திர பாபு திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக … Read more

நூதன முறையில் தங்கத்தை கடத்த முயன்ற விமானப் பணியாளர் கைது!

 கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானப் பணியாளர் ஒருவர் தங்கம் கடத்தியதாகக் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகச் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்க கடத்தல் கேரள மாநிலத்தின் வயநாட்டைச் சேர்ந்த ஷாபி என்பவர் ஏர் இந்தியா விமான நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் 1487 கிராம் தங்கத்தைக் கடத்தியதற்காகக் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பஹ்ரைன்-கோழிக்கோடு-கொச்சி சர்வீஸ் கேபின் க்ரூ உறுப்பினர் ஷாஃபி என்பவர் தங்கம் கொண்டு வருவதாகச் சுங்கத் தடுப்பு … Read more