தற்கொலைக்கு முயன்ற தினேஷ் கார்த்திக்! மனைவி செய்த துரோகம்… தடைகளை தாண்டி உச்சம் தொடும் தமிழன்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும் தமிழத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சொல்லப்போனால் ஆர்.சி.பி அணியே அவரை நம்பி தான் உள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு தொடரில் அவரால் தான் ஆர்.சி.பி அணி வெற்றிகளை பெற்று வருகிறது. வாழ்க்கையில் பல்வேறு அடிகளை தாண்டியே தினேஷ் கார்த்திக் மீண்டு எழுந்து வந்துள்ளார். அவரது சக அணி வீரர் முரளி விஜய், தினேஷின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார். இது தமிழ்நாடு … Read more

பொதுப்பணித்துறை பொறியாளர்களின் பயன்பாட்டுக்கு ரூ. 2.38 கோடி மதிப்பிலான 22 வாகனங்கள்! முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை:  பொதுப்பணித் துறை பொறியாளர்களின் பயன்பாட்டுக்கு 2.38 கோடி மதிப்பிலான 22 வாகனங்கள்! முதலமைச்சர் வழங்கினார். தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில்,  பொதுப்பணித்துறை பொறியாளர்களின் பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட  22 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இந்த வாகனங்கள் பொதுப்பணித் துறையின், தலைமைக் கட்டட கலைஞர் மற்றும் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக ₹2.38 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.  அதன்படி,  7 சீருந்துகள் மற்றும் 22 … Read more

தருமபுரம் ஆதீனம் பல்லக்கு நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டும்- சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரமில்லா நேரத்தில் பேசியபோது கூறியதாவது: பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில், 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இது இந்த ஆதீனத்தில் மட்டுமல்ல, திருவாடுதுறை ஆதீனத்திலும் நடைபெற்று வருகிறது. இதன்படி பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமர வைத்து எந்தவித கட்டாயப்படுத்துதல் இல்லாமல் மனமுவந்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் சுமந்து வரும் ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒரு பக்தி திருவிழா ஆகும். பாரம்பரியமாக நடைபெற்று … Read more

வட்டியுடன் வரி செலுத்தியதை கருத்தில் கொள்ளாமல் வழக்கு தொடர்ந்த வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: வட்டியுடன் வரி செலுத்தியதை கருத்தில் கொள்ளாமல் சென்னை ஏ.எம்.கே. சொல் யூசன்ஸ் நிறுவனம் வரிஏய்ப்பு செய்ததாக வழக்கு தொடர்ந்த வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நோட்டிஸ் அனுப்பும் முன்பே வட்டியுடன் ரூ.6,85,462-ஐ வாரியாக செலுத்தியதால் புகாரை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. உண்மை தகவலை மறைத்து வழக்கு தொடர்ந்த செயல்பாடு அதிகார துஷ்பிரயோகம் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமையல் எண்ணெய் விலை ஜூன் மாதம் குறையும்.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

சமையல் எண்ணெய் விலை பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஜூன் மாதம் முதல் குறையும் என நம்புவதாக அதானி விலமர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான ஆங்ஷு மல்லிக் கூறியுள்ளார். இந்தியா ஆண்டுதோறும் அதன் சமையல் எண்ணெய் நுகர்வில் 55 சதவீதத்துக்கும் அதிகமாக இறக்குமதியைத்தான் நம்பியுள்ளது. அதில் 7.2 மில்லியன் டன் பாமாயில் இந்தோனேசியாவில் இருந்தும் 5.4 மில்லியன் டன் மலேசியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. கிட்டதட்ட 2 … Read more

சாத்தூர் அருகே உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – தொழிலாளி பலி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பெரியகருப்பன் (57) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 15 அறைகள் இருக்கின்றன. இந்த நிலையில், வழக்கம்போல இன்று காலை பட்டாசு ஆலையைத் திறந்து இன்றைய பணிக்குத் தேவையான மருந்துகளை கலக்கும் பணியில் சுந்தரகுடும்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த சோலைவிக்னேஷ் (26) என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. அதில் … Read more

ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்.. மருத்துவமனை பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது, ஷிகெல்லா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள கடையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரைப் போல அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், காசர்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

பேரறிவாளன் விஷயத்திலும், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்! உச்சநீதிமன்றம் அதிரடி….

டெல்லி: பேரறிவாளன் விஷயத்தில் மத்தியஅரசு முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் முடிவு எடுக்க வேண்யதிருக்கும் என கறாராக கூறிய உச்சநீதிமன்றம், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க போகிறோம் என்று தெரிவித்து உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு பல கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்ததுள்ளது. இன்றைய விசாரணையின்போது, காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் மத்திய … Read more

ஆன்மீகத்துக்கு எதிரான அரசியல் கட்சியாக தி.மு.க.வை சித்தரிக்க திட்டமிட்டு முயற்சி- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்லும் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தை தடை செய்து அறிவித்துள்ளது. இதற்கு அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்டசபையில் இன்று இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம் அளித்தார். அப்போது, ‘அவர் சன்னிதானத்துக்கும், சடங்குகளுக்கும் பிரச்சினை இல்லாமல் முதல்-அமைச்சர் நடுநிலையோடு தீர்வு காண்பார்’ என்று கூறினார். இந்த … Read more

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும்  மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். வழக்கமான வகுப்புகளுக்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.