பேரறிவாளன் விவகாரத்தில் மே 10க்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு கெடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மே 10ம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று (மே 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை … Read more

இந்தியாவின் திட்டம் பலிக்குமா.. $70 கீழாக கச்சா எண்ணெய் கிடைக்குமா.. ரஷ்யாவின் முடிவு?

இந்தியாவுக்கு ரஷ்யா ஏற்கனவே சலுகை விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்வதாக அறிவித்திருந்த நிலையில், மீண்டும் தற்போது பேரலுக்கும் இன்னும் குறைக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் பேரலுக்கு 70 டாலர்களுக்கும் கீழாக சப்ளை செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க! உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யா மீது கடுமையான பொருளாதார … Read more

“மத விழாக்கள் நாட்டில் வகுப்புவாத அரசியலுக்கான ஆயுதங்களாக மாறிவிட்டன..!" – பிருந்தா காரத்

ரம்ஜான் பண்டிகை நேற்று இந்தியாவில் மிகவும் விமரிசையாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் ரம்ஜான் கொண்டாட்டத்தின்போது, வகுப்புவாத வன்முறை வெடித்தது. இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 52 பேரை போலீஸார் கைது செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக அரங்கேறிவரும் வகுப்புவாத வன்முறைகள் குறித்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஐ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்சிஸ்ட்) `பொலிட்பீரோ’ உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சித்திருக்கிறார். இந்து-முஸ்லிம் கலவரம்- ராஜஸ்தான் இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் … Read more

பிரித்தானியாவில் 120 விமான சேவைகள் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்பு!

பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்-ஸின் அனைத்து விமான சேவைகளையும் இன்று நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. புதன்கிழமையான இன்று பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான விமான சேவையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது 120 குறுகிய தூர விமானங்களை ரத்து செய்துள்ளது. இதில் எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவிற்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 28 உள்ளுர் குறுகிய தூர விமான விமானங்களையும், ஜெனீவா மற்றும் லியோனுக்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 94 வெளியூர் குறுகிய … Read more

கோயில் நகைகளை உருக்குவதால் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கோயில் நகைகளை உருக்கிய பணத்தை வங்கியில் செலுத்துவதன் மூலம், சம்மந்தப்பட்ட கோயில்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது. இதன்மூலம் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி,  கோயில்களில் பணிபுரிபவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள் என்றும், கோவில் நகைகளை உருக்குவதில் எவ்வளவு பணம் கிடைக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு … Read more

தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பெயர் மாற்றம்- சட்டசபையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:- மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் மற்றும் மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடனும், தகவல் தொழில்நுட்பவியல் துறை 5-10-1998 அன்று உருவாக்கப்பட்டது.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைத் துறைகளின் வளர்ச்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். எனவே ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு முன்முயற்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கைவழி அணுகுமுறை தேவைப்படுகிறது. முதல்கட்டமாக … Read more

1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடியில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: 1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடியில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்ட பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலாசார மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம், சிஆர்ஆர் விகிதம் உயர்வு.. யாருக்கெல்லாம் லாபம்..? யாருக்கெல்லாம் நஷ்டம்..?!

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் திடீர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியாக அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கப்பட்டது போலவே வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரின் கடனுக்கான வட்டி விகிதம் உயரும். இதன் மூலம் வீட்டுக்கடன், வாகன கடன், தங்க கடன், தனிநபர் கடன் உட்பட அனைத்துக் கடன்களுக்கான ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும். இதேபோல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயரும். … Read more

59-ல் 29 பேர் அண்ணாமலை ஆதரவாளர்களா… அதிருப்தியில் சீனியர்கள்! – என்ன நடக்கிறது தமிழக பாஜக-வில்?

தமிழக பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருநந்தே அதிரடிகளுக்குப் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது கட்சி. புதிதாக 59 மாவட்டத் தலைவர் நியமனம் தொடர்பாகவும் கட்சிக்குள் முணுமுணுப்புச் சத்தம் கேட்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாவட்டத் தலைவர் ஒருவர், “அண்ணாமலை தலைவரானதில் இருந்து கட்சியில் சீனியர்கள் ஒருபக்கமாக ஒன்றுதிரண்டுவிட்டார்கள். எனினும், தலைவராகத் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, கட்சிக்குள் அதிரடிகளைச் செய்துகொண்டிருக்கிறார் அண்ணாமலை. சமீபத்தில் இரண்டு தவணையாக 16 மாவட்ட நிர்வாகத்தைக் கலைத்தார் அண்ணாமலை. அடுத்ததாகத் தற்போது கட்சி அமைப்பு … Read more