இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட 301 சாலைகள் – சுற்றுலாப் பயணிகள் பரிதவிப்பு

மண்டி: நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட மண்டி-குல்லு தேசிய நெடுஞ்சாலை 20 மணி நேரத்திற்குப் பின் நேற்றிரவு(திங்கள்கிழமை) திறக்கப்பட்டது. எனினும், மேலும் பல சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டி–குல்லு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிமை மாலை முதல் போக்குவரத்து முடங்கியது. இச்சாலையில் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள் நடுவழியில் சிக்கித் தவித்து வந்தனர். இந்தநிலையில் … Read more

கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பரவல்: கலெக்டர் பிறப்பித்த அதிரடி உத்தரவு: பன்றி இறைச்சிக்கு தடை!

கொரோனா பாதிப்புக்கு தற்சமயம் முடிவு கட்டி அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு பற்றிய செய்தி கேரளாவில் இருந்து வருகிறது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் உதயகிரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு நாழலி பரம்பில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனியார் பண்ணைகளில் உள்ள பன்றிகளை அழிக்க கண்ணூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நான்கு பண்ணைகளில் உள்ள அனைத்து பன்றிகளையும் உடனடியாக கொன்று புதைக்கவும், பாதிப்பு பதிவான இடத்திற்கு … Read more

முத்தலாக் முறைக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை! பொது சிவில் சட்டம் அவசியம்-பிரதமர்

PM Modi In Bhopal: இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரதமர்.

“பாஜகவுக்கு வாக்கு வங்கி அரசியல் தேவையில்லை” – முத்தலாக் முறையை விமர்சித்த பிரதமர் மோடி

போபால்: அரசியலில் வாக்கு வங்கி பாதையில் செல்வதில்லை என பாஜக முடிவு செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், முத்தலாக் முறை பற்றி கடுமையாக விமர்சித்து, பொது சிவில் சட்டத்தை அவர் வலியுறுத்தினார். பிரதமர் மோடி இன்று மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். ‘எனது பூத் எல்லாவற்றையும் விட பலமான பூத்’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களில் சிறப்பான … Read more

பெங்களூரு டூ தர்வாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… டைமிங், டிக்கெட் ரேட், ஸ்டாப்ஸ் – முழு விவரம்!

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ரயில் சேவையையும் தானே முன்னின்று பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். இதுவரை 18 வந்தே பாரத் ரயில் சேவைகள் பயன்பாட்டிற்கு வந்தன. இந்நிலையில் இன்று (ஜூன் 27) ஒரேநாளில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவை, புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மும்பை … Read more

மத்தியப் பிரதேசம் | போபாலில் இருந்து 5 வந்தே பாரத் விரைவு ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

போபால்: மத்தியப் பிரதேச தலைநகரில் இருந்தவாறு, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கான 5 வந்தே பாரத் விரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, இரண்டு ரயில்களை நேரடியாகவும், மூன்று ரயில்களை காணொலி வாயிலாகவும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்தியப்பிரதேச மாநில ஆளுநர் மங்குபாய் பாடீல், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் … Read more

மனிதாபிமானத்தோடு அணுகுவது பலவீனமல்ல – மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு அரணாக நிற்கும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை

இம்பால்: மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு ஆதரவாகப் போராடும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதாபிமானத்தோடு தாங்கள் அணுகுவதை தங்களின் பலவீனமாகக் கருதி பெண்கள் கலவரக்காரர்களை ஆதரிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மே மாதம் தொடங்கி.. கடந்த மே மாதம் தொடங்கியதிலிருந்தே மணிப்பூர் மாநிலம் வன்முறை பூமியாகப் பற்றி எரிகிறது. காரணம் மேதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல். இதில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதேயி … Read more

பிரதமர் நரேந்திர மோடி அரசு போதைப் பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க நடவடிக்கை – அமித் ஷா உறுதி

புதுடெல்லி: சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இருந்து போதைப் பொருள் புழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முழுவதுமாக ஒழிக்கும். அத்துடன், இந்தியாவில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதையும் தடுத்து நிறுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற இலக்கு சாத்தியமாகும். அந்த நிலையை எட்டும் வரை நாங்கள் ஓயமாட்டோம். போதைப் பொருள் தடுப்புப் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்கள் இனி பயப்பட வேண்டாம்.. வெளியான முக்கிய அறிவிப்பு… தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருப்பதிஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. விடுமுறை நாட்களில் இந்த கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கடந்த சில நாட்களாக கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதியில் பக்கர்கள் கூட்டம் அலை மோதியது.​ அனாதையான அம்மா உணவகங்கள்… ஒதுக்கப்பட்ட நிதி மடை மாறிவிட்டதா? ஓ. பன்னீர்செல்வம் கடும் தாக்கு!​பாத யாத்திரைஇலவச … Read more

நடு வானில் பரபரப்பு… விமானத்தில் இருக்கை அருகே மலம் கழித்த ஏர் இந்தியா பயணி!

கடந்த சில மாதங்களாகவே, சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில், ஏர் இந்தியா பயணி ஒருவர் தனது பயணத்தின் போது நடுவானில் மலம் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.