காஷ்மீரில், தேசிய கொடி ஏற்றினார் ராகுல் காந்தி.. பிரமருக்கு இணையான பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!

காஷ்மீரின் வரலாற்று சிறப்புமிக்க லால் சவுக் மணிக்கூண்டு அருகே தேசிய கொடியை ஏற்றிய ராகுல் காந்திக்கு, பிரதமருக்கு இணையான பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. 10 நிமிடங்கள் மட்டுமே கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றபோதும், நேற்றிரவு முதலே லால் சவுக் பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டு அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நாளை காஷ்மீரில் நிறைவடைகிறது. Source link

கவுகாத்தி உயர்நீதிமன்றத்திற்கு ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து வந்த வக்கீல் வெளியேற்றம்: நீதிபதி அதிரடி உத்தரவு

கவுகாத்தி: கவுகாத்தி உயர்நீதிமன்றத்திற்கு  ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து கொண்டு வந்த வழக்கறிஞரை, நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் மகாஜன் என்பவர், ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து கொண்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர், ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக நீதிபதி கல்யாண் ராய் சுரானா முன்பு ஆஜரானார். வழக்கறிஞர்களுக்கான வழக்கமான உடையை அணியாமல், வழக்கறிஞர் மகாஜன் ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்ததை பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனடியாக அங்கிருந்த … Read more

பட்ஜெட்டில் எதெற்கெல்லாம் வரிச்சலுகைகள்?.. நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகள் என்ன?

இன்னும் இரண்டு நாட்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், நடுத்தரவர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, பிப்ரவரி 1ஆம் தேதி சமர்ப்பிக்க உள்ளார். மேலும் தற்போதைய பிரதமர் மோடி அரசின் கடைசி முழுபட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, அடித்தட்டு மக்கள், தொழில்துறையினர், ஊதியம் பெறுவோர் எனப் பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்பார்த்து உள்ளனர். முந்தைய பட்ஜெட்களைப் … Read more

நடுத்தர வர்க்கத்தினரை சென்றடையுங்கள்; அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு.!

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நிதி அமைச்சக அதிகாரிகள் பாரம்பரிய ”அல்வா” கிண்டி வழங்கும் விழாவை கடந்த 26ம் தேதி நடத்தினர். அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டினார். இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். பட்ஜெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ரகசியம் காக்கும் வகையில் ‘அல்வா’ விழாவுக்குப் பிறகு ‘லாக்-இன்’ … Read more

திடீரென மோதிய பறவையால் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்..!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதியதை அடுத்து விமானம் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் ஏசியா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் விமானம், 170 பயணிகளுடன் லக்னோவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் மீது பறவை ஒன்று மோதியது. உடனடியாக விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டு, தரையிறக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது. Source link

சமீபத்தில் மோடியால் தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயிலில் குப்பை: பயணிகள் மீது ஐஏஎஸ் அதிகாரி கோபம்

புதுடெல்லி: வந்தே பாரத் ரயிலில் பயன்படுத்தப்பட்ட குப்பையை கொட்டியதற்கு ஐஏஎஸ் அதிகாரி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி,  செகந்திராபாத்-விசாகப்பட்டினம் வரையிலான வந்தே பாரத் விரைவு ரயிலை தொடங்கி  வைத்தார். இந்த ரயில் பெட்டியில் குப்பைகள் கிடந்ததை அடுத்து, அந்த  ரயிலில் பயணம் செய்து ஒருவர் அதனை வீடியோ எடுத்து வைரலாக்கினார். அந்த  வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். அந்த வீடியோவில், … Read more

போலீஸ் அதிகாரியால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் சிகிச்சைப் பலனின்றி மரணம்

புவனேஷ்வர்: காவல் துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவலை அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. அமைச்சர் நபா கிஷோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டம், பிரஜாராஜ் நகர் பகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அவர் காரை விட்டு … Read more

நடப்பு ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி; பிரதமர் பேச்சு.!

பிரதமர் நரேந்திர மோடிஇன்று 2023 ஆம் ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். இது பிரதமரின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியின் 97வது பதிப்பாகும். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, “பத்ம விருது பெற்றவர்கள் கணிசமான எண்ணிக்கையில் பழங்குடி சமூகங்கள் மற்றும் பழங்குடி சமூகத்துடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். பழங்குடியினரின் வாழ்க்கை நகர வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது, அதற்கும் அதன் சொந்த சவால்கள் உள்ளன. இவை அனைத்தையும் மீறி, பழங்குடி சமூகங்கள் எப்போதும் தங்கள் பாரம்பரியங்களைப் பாதுகாக்க … Read more

துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழப்பு புவனேஸ்வர் மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி நபா தாஸ் உயிரிழப்பு இன்று முற்பகலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற அமைச்சர் மீது, தலைமைக் காவலர் கோபால் தாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டார் ஒடிசாவின் பிரஜ்ராஜ் நகர் என்ற பகுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மூர்ச்சையானார் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வர் கொண்டுவரப்பட்டு … Read more

மக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில் ரயிலில் அடிபட்டு சிறுத்தை பலி

அம்ரோஹா: உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் கைல்சா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை அதிவேக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று ரயில் தண்டவாளத்தில் சென்றது. எதிர்பாராதவிதமாக ரயில் மோதியதில், தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சிறுத்தை பலியானது. இதனை பார்த்த அப்பகுதிமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விபத்தில் பலியான சிறுத்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால், மக்கள் … Read more