துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு

ஒடிசாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் இன்று துப்பாக்கியால் சுடப்பட்டார். ஜார்சுகுடா மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்காக சென்றுகொண்டிருந்தார். பிரஜ்ராஜ்நகர் பகுதியில் சென்றபோது உதவி காவல் துணை ஆய்வாளர் (ASI) கோபால் தாஸ் என்பவர் திடீரென அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.  இந்த தாக்குதல் சம்பவம் மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. அமைச்சர் காரில் இருந்த இறங்கிய நேரத்தில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனால், அமைச்சரின் ரத்த வெள்ளத்தில் … Read more

ஒடிசாவில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழப்பு

ஒடிசா: ஒடிசாவில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார்.புவனேஸ்வர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார். ஒடிசாவில் பிரஜாராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. உதவி சார்பு ஆய்வாளர் கோபால் தாஸ் துப்பாக்கியால் சுட்டதில் நபா தாஸ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.

”உலகிலேயே கிருஷ்ணரும் ஹனுமனும்தான் சிறந்த ராஜதந்திரிகள்” – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

உலகிலேயே கிருஷ்ணரும் அனுமானும்தான் சிறந்த ராஜதந்திரிகள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் புனேவில் நடந்த தனது புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். The India Way: Strategies for an Uncertain World என்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய புத்தகத்தின் மராத்தி பதிப்பான பாரத் மார்க் புத்தக வெளியீட்டு விழா புனேவில் நடைபெற்றது. அதனை மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “உலகின் சிறந்த ராஜ … Read more

‘பாஜகவிற்கு தைரியம் இருக்கா..?’ – தெலங்கானா முதல்வரின் மகன் காட்டம்.!

ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் முதன்மையில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இருக்கிறார். பாஜக தூக்கி வங்க கடலில் எரிய வேண்டும் எனக்கூறியவர், பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் முன்னணியை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அந்தவகையில் ஹைதராபாத்தில் உள்ள கம்மம் நகரில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற பாரதிய ராஷ்டிர சமிதியின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் … Read more

Budget 2023: பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்தப்படும்…

பட்ஜெட்டுக்கு முன்னதாக, உங்கள் அசெட் ஒதுக்கீடு உத்தி எப்படி இருக்க வேண்டும், பட்ஜெட்டில் ஏற்றம் பெற வாய்ப்புள்ள துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் தந்திரோபாய மற்றும் முக்கிய போர்ட்ஃபோலியோவில் எப்படி மாற்றங்களைச் செய்யலாம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை எவ்வாறு அலங்கரிக்கலாம்? இதனுடன், பட்ஜெட்டுக்கு முன்னும் பின்னும் உங்கள் முதலீட்டிற்கான தயாரிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வது அவசியமாகும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பட்ஜெட் 2023க்கு முன் விரிவாகத் தெரிந்து … Read more

‘மோடியை தவிர வேறு எந்த பிரதமரும் தன்னை அமைச்சராக்கியிருக்க மாட்டார்கள்’ – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பிரதமர் மோடியை தவிர வேறு எந்த பிரதமரும் தன்னை அமைச்சராக்கியிருக்க மாட்டார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வெளியுறவுத்துறை செயலாளராக வரவேண்டும் என்பதே தனது லட்சியத்தின் எல்லை என்றும், அமைச்சராக வேண்டும் என்று தான் கனவில்கூட நினைத்ததில்லை என்றும் தெரிவித்தார். மோடி பிரதமராக இல்லாவிட்டால் அரசியலுக்கு வர தனக்கு தைரியம் இருந்திருக்குமா என்று சில நேரங்களில் தன்னை தானே கேட்டுக்கொள்வதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். Source link

கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் நடைபயணம் ஸ்ரீநகரில் நாளை நிறைவு: 21 கட்சிகளில் 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு

காஷ்மீர்: கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் நடைபயணம் நாளை ஸ்ரீநகரில் நிறைவு பெறுகிறது. இதையொட்டி நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற பெயரில் கடந்த செப். 7ம் தேதி கன்னியாகுமரியில் தனது நடைபயணத்தை தொடங்கினார். ஜம்மு – காஷ்மீர் வரையிலான இந்த நடைபயணத் திட்டத்தில், 3,970 கிமீ தூரம் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை ராகுல் காந்தி … Read more

மும்பையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா: இந்தியா – எஸ்சிஓ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆலோசனை

மும்பை: மும்பையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation) திரைப்பட விழாவிற்கிடையே “இந்தியா – எஸ்சிஓ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்” குறித்த வட்டமேசை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”மும்பையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழாவிற்கிடையே ‘இந்தியா – எஸ்சிஓ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்’ குறித்த வட்டமேசை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா … Read more

இந்திய காதலனை கரம் பிடிக்க விமானத்தில் பறந்து வந்த சுவீடன் பெண்.. 10 ஆண்டு கால பேஸ்புக் பழக்கம் காதலாக மாறியது..!

பேஸ்புக்கில் 10 ஆண்டுகளாக நண்பராக பழகி வந்த இந்திய இளைஞரை சுவீடன் பெண் இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். உத்தரப்பிரதேசம் ஏத் பகுதியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான பவன்குமார் பேஸ்புக்கில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டன் லீபெர்ட் உடன் 2012ம் ஆண்டு முதல் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், பவன்குமார் மீது காதல் வயப்பட்ட கிறிஸ்டன் அங்கிருந்து விமானத்தில் இந்தியா வந்த நிலையில் இருவருக்கும் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் இந்து மத முறைப்படி திருமணம் நடைபெற்றது. Source … Read more

குட்டையில் மூழ்கி8 வயது மாணவன் பலி

சுரேந்திரநகர்: குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் தாமா கிராமத்தில் அரசுப் பள்ளி செயல்படுகிறது. அந்தப் பள்ளியில் படித்து வந்த எட்டு வயது மாணவன் குல்தீப் முன்ஜ்பரா, வகுப்பு முடிந்தவுடன் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று தேடினர். அப்போது பள்ளிக்கு வெளியே உள்ள குட்டையில் குல்தீப் முஞ்ச்பராவின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த ஜின்சுவாடா போலீசார், குட்டையில் மூழ்கியிருந்த மாணவனின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி ஒருவர் … Read more