காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை

புதுடெல்லி: காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்ளும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு சில இடங்களில் நடைபயணத்தைத் தவிர்த்து வாகனத்தில் செல்லுமாறு அவருக்கு மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ராகுல் காந்தியின் பயணப் பாதையின் பாதுகாப்பு அம்சங்கள், அவர் இரவில் தங்குமிடத்தின் பாதுகாப்பு அம்சங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 52 வயது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தின் … Read more

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.2000: மகளிரணி விழாவில் பிரியங்கா உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்று மகளிரணி விழாவில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா தெரிவித்தார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நானே.. நாயகி என்ற தலைப்பில் விழா நடந்தது. இதில்  பொது செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டர், தினசரி குடும்ப செலவு, அத்தியாவசிய  விலைவாசி உயர்வால் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி … Read more

"24 மணி நேரத்தில் இரண்டு முறை என் மீது தாக்குதல் முயற்சி நடந்தது" – மத்திய இணையமைச்சர் அஸ்வின் சவுபே குற்றச்சாட்டு

பாட்னா: கடந்த 24 மணிநேரத்தில் தன் மீது இரண்டுமுறை தாக்குதல் முயற்சி நடந்ததாக மத்திய இணையமைச்சர் அஸ்வின் சவுபே திங்கள்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் அஸ்வின் சவுபே,” விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பக்சரில் நான் உண்ணாவிரதம் இருந்த போது, 5-6 அடி தூரத்தில் சிலர் கைகளில் தடியுடன் என்னை தாக்க ஓடிவந்தனர். அதற்குள்ளாக, எனது பாதுகாவலர்களும் காவல்துறையினரும் அவர்களில் மூன்று பேரை பிடித்து என்னை காப்பாற்றினர். அவர்கள் தடுக்கப்படவில்லை என்றால் என்ன … Read more

இந்த இடத்திற்கு டூர் போக பிளான் பண்றீங்களா… இது ரொம்ப கட்டாயமாம்!

Kerala Covid Protocals: பொது இடங்களில் மக்கள் மூக்கு மற்றும் வாயை மூடும் வகையில் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள அரசு நேற்று அறிவித்துள்ளது. மேலும் அனைத்து வாகனங்களில் செல்வோரும் தங்கள் முகம் மற்றும் மூக்கை மறைக்க வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள், சமூகக் கூட்டங்கள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் அனைவரும் முகமூடியைப் பயன்படுத்தி மூக்கு மற்றும் வாயை மறைக்க வேண்டும். அனைவரும் … Read more

திடீரெனெ அதிகரிக்கும் கொரோனா: கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம்.! மாநில அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. சீனாவில் சமீப காலமாக கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுடன் ஒரு பூஸ்டர் ஊசியை செலுத்தியவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்  கேரள அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு … Read more

மகனை கடித்த நாயை கொன்று போலீசிலும் புகாரளித்த தந்தை!

ஐந்தறிவு ஜீவனுக்கு வாழ்வளிப்பது நல்ல செய்தி தான் அதே சமயம், அது மத்தவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கையாளவேண்டும். சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் உணவு டெலிவரி செய்யும் ரிஸ்வான் என்ற ஒரு இளைஞர் நாய்க்கு பயந்து மாடியிலிருந்து கீழே குதித்து பலியான சம்பவம் அடங்குவதற்குள்ளாக. ஹரியானா மாநிலம் கர்னாலில் ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது. முனாக் என்ற கிரமத்தில் மெஹர் சிங் என்பவரின் 12 வயது மகன் ஒசாந்த் என்பவரை, பூல்சிங் என்பவரது வளர்ப்பு … Read more

வரும் குடியரசு தினத்தன்று ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த திட்டம்: ஜெய்ஷ் தீவிரவாதிகள் சதி கண்டுபிடிப்பு

புதுடெல்லி: குடியரசு தினத்தன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியது. ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டினார். 2024-ம் ஆண்டில் கோயிலை பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கும் வகையில் அங்கு கட்டுமானப் பணி … Read more

அணுசக்தி வல்லமை கொண்ட பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்தால்? பாக் பிரதமர் அச்சம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான மூன்று போர்கள் மக்களின் துன்பம், வறுமையை அதிகரித்ததுடன் வேலையின்மை என பல பிரச்சனைகளை மட்டுமே கொண்டு வந்துள்ளன என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தானின் தவறை ஒப்புக் கொள்வதுபோல, பாகிஸ்தானின் இன்றையப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே மேஜையில் அமர்ந்து காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் ஷேபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.  ‘போர்களில் இருந்து பாடம் கற்றுள்ளோம், இப்போது அமைதியை விரும்புகிறோம்’ … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 114 பேர் பாதிப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் சமீப காலமாக கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுடன் ஒரு பூஸ்டர் ஊசியை செலுத்தியவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.   நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் … Read more

9 மாநில தேர்தலே இலக்கு: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் முதல் நாள் நிகழ்வில் கட்சியினருக்கு வலியுறுத்தல்

புதுடெல்லி: பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் 2023ல் நடைபெறவுள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்ய உழைக்குமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக டெல்லியில் பாஜக பிரம்மாண்ட சாலைப் பேரணியை மேற்கொண்டது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பிரம்மாண்ட வெற்றி பெற்றுத் தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் முதல் நாள் … Read more