இந்தியாவில் தொடரும் பிட் புல் நாய் தாக்குதல்! பெண் ஒருவருக்கு தலை, கை, கால்களில் 50 தையல்!

ஹரியானா மாநிலம் ரேவாலி மாவட்டத்தில் உள்ள பலியார் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவர் கிராம சபையின் முன்னாள் தலைவராக (sarpanch) இருந்தவர். இவர் தனது பிட் புல் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, அவர் செல்லமாக வளர்த்து வந்த பிட் புல் நாய் அவரது மனைவியின் மீது பாய்ந்து மூர்க்கத்தனமாக கடிக்க துவங்கியுள்ளது.அவரது மனைவி மட்டுமல்லாது அவரது இரு … Read more

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பிரபல மேஜிக் நிபுணர் மரணம்: உத்தரபிரதேசத்தில் சோகம்

கான்பூர்: சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பிரபல மேஜிக் கலைஞர் ஓ.பி.சர்மா, கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணம் அடைந்தார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் ஓ.பி.சர்மா (76), தனது மேஜிக் மூலம் உலகளவில் புகழ் பெற்றவர் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து பார்ச்சூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து … Read more

'ஒருவரை திருமணம் செய்துவிட்டு மூன்று பேருடன் ரகசிய வாழ்க்கை' – ஒவைசி கட்சி பிரமுகர் பேச்சால் சர்ச்சை 

புதுடெல்லி: ”திருமணமோ ஒரு முறை, ரகசிய வாழ்க்கையோ மூன்று பேருடன்” என்று தனது வைரல் வீடியோவில் இந்துக்களை விமர்சித்ததாக ஒவைசி கட்சிப் பிரமுகர்ர் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சம்பல் நகரில் நேற்று நடந்த கூட்டத்தில் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் உ.பி.தலைவர் சவுகத் அலி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது இந்த வீடியோ பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது காவல் நிலையத்தில் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்குச்சீட்டு எப்படி இருக்கும்? எவ்வாறு வாக்களிப்பது?

நாட்டின் மூத்த அரசியல் கட்சியாக திகழும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி, கடந்த மூன்று ஆண்டுகளாக சரியான தலைமையின்றி தவித்து வந்தது. இந்த சூழலில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேதியும் இறுதியானது. முக்கியத் தலைவர்கள் பலரின் பெயர்கள் அடிபட கடைசியில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் என இரண்டே பேருடன் வாக்குச்சீட்டு சுருங்கிப் போனது. நாளைய தினம் (அக்டோபர் 17) காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை … Read more

வேன், லாரி, பேருந்து மோதல்; 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி: கர்நாடகாவில் சோகம்

பெங்களூரு: கர்நாடகாவில் வேன், பால் லாரி, பேருந்து ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர். கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அர்சிகெரே அடுத்த காந்திநகர் வழியாக 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று அதிவேகமாக சென்றது. அந்த வேன், எதிரே வந்த கேஎம்எஃப் பால் டேங்கர் லாரி மீது மோதியது. அதன்பின் பால் டேங்கர் லாரியை பின் தொடர்ந்து வந்த அரசு பேருந்து, அந்த லாரியின் … Read more

“ரூபாய் வீழவில்லை; டாலர்’தான் உயர்கிறது” – நிர்மலா சீதாராமனின் கருத்தும் விமர்சனங்களும்!

அமெரிக்காவிற்கு அலுவல் ரீதியான பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வாஷிங்டன் டிசியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது நிருபர் ஒருவர், “வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு என்னென்ன சவால்களை சந்திக்கக்கூடும்? ரூபாய் மதிப்பு சரிவதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? “ என்று கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், “நான் அதை அப்படி பார்க்கவில்லை. ரூபாய் சரிவதாக பார்க்கவில்லை. தொடர்ந்து டாலர் வலுவடைந்து வருவதாகப் பார்க்கிறேன். மற்ற அனைத்து நாணயங்களும் … Read more

மோடியின் துரோகம்; பகீர் கிளப்பிய பாஜக மூத்த தலைவர்!

தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுப்பிரமணிய சாமி. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பல்வேறு விஷயம் தொடர்பாக அடிக்கடி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். பாஜகவில் இருந்து கொண்டு சொந்த கட்சியையே கிழித்து தொங்கப்போடுவது சுப்பிரமணிய சாமிக்கு கை வந்த கலை. ஆனாலும் பாஜ மேலிடம் அது குறித்து எப்போதும் கருத்து தெரிவிக்காது. ஒருவேளை சுப்பிரமணிய சாமியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்துமேயானால், ‘அது.. சுப்பிரமணிய சாமியின் சொந்த கருத்து. கட்சி கருத்து இல்லை’ என, தடாலடியாக பாஜக … Read more

பீகார் முதல்வர் சென்ற படகு விபத்தில் சிக்கியது: மின் கம்பத்தில் மோதியதால் பரபரப்பு

பாட்னா: கங்கை நதியில் கட்டப்பட்ட சாத்காட் பகுதியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆய்வு செய்த போது, படகு மின் கம்பத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கங்கை நதியின் கட்டப்பட்ட சாத்காட் பகுதியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழுவுடன் நீராவி படகில் சென்றார். அப்போது நதியின் இடையே இருந்த மின் கம்பத்தின் மீது ‘ஸ்டீமர்’ படகு மோதியது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தானாபூரில் … Read more

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தி மொழியில் எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்கள்: அமித் ஷா அறிமுகம்

போபால்: இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திமொழியிலான எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிமுகம் செய்துவைத்தார். போபாலில் எம்பிபிஎஸ் பாடப் புத்தக இந்திப்பதிப்பு வெளியீட்டு நிகழ்வை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியிலான எம்பிபிஎஸ் பாடப்புத்தகம் அறிமுகம் செய்யப்படும் இந்நிகழ்ச்சி மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. விழாவில் … Read more

கார் ஏற்றுமதியிலும் விற்பனையிலும் சாதனை படைத்துள்ள Maruti Suzuki!

மாருதி சுசுகி மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராகி, சாதனை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி இந்தியா, இந்தியாவில் வாகனங்களின் முன்னணி ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.  மாருதி சுசூகி இந்தியா, 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடம் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து சிறந்த விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்தது. இதன் மூலம், இந்திய வாகன உற்பத்தியாளர் இந்தியாவின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள … Read more