நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பால் சட்டீஸ்கர் துணை சபாநாயகர் மறைவு: முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல்

கான்கேர்: சட்டீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டம் பானுபிரதாப்பூரை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் மாண்டவி, மாநில சட்டப் பேரவையின் துணை சபாநாயகராக இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மனோஜ் மாண்டவி காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த மத்தியப் பிரதேச மாநிலமாக இருந்து இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 1998ல் முதல்முறையாக மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். … Read more

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? – நாளை தேர்தல்.. தயார்நிலையில் ஏற்பாடுகள்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை நடக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஓட்டு பெட்டிகளும், ஓட்டு சீட்டுகளும் டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. … Read more

சிபிஐ சம்மன் | டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நாளை கைதாகிறாரா?

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நாளை காலை 11 மணிக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சிபிஐ சம்மன் வெளியானவுடனேயே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சவுரவ் பரத்வாஜ். அப்போது அவர் பேசுகையில், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. … Read more

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 2023ல் புதிய ‘டோல்’ கட்டணம் அமல்?: ரோடு தேய்மானம் ஆவதால் சுமைக்கு ஏற்றவாறு வசூல்

புதுடெல்லி: அடுத்தாண்டு முதல் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு புதிய டோல் கட்டணம் முறை அமல்படுத்த ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, வாகனங்களில் பொருத்தப்படும் தானியங்கி நம்பர் பிளேட்கள் மூலம் பணம் வசூலிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சாலைப் போக்குவரத்து மற்றும் … Read more

22 வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம் என்ன தெரியுமா?

22 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் நடக்கவுள்ளது. சென்னை சத்யமூர்த்தி பவனில் ஏற்பாடுகள் தீவிரமாகிவருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி என நேருவின் குடும்பத்தை சேர்ந்த யாரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. … Read more

ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: வெற்றியை தீர்மானிக்கப் போகும் 4 விஷயங்கள்!

68 எம்.எல்.ஏக்கள் கொண்ட ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் அடுத்த ஆட்சி யாருடையது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 90களுக்கு பிறகு பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சி அமைந்து வருகிறது. அதன்படி 2022 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் 2024ஆம் ஆண்டு … Read more

விளையாடிய போது பலத்த காயம்; அடுத்தடுத்து 2 கபடி வீரர்கள் மரணம்: சட்டீஸ்கரில் அதிர்ச்சி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நடந்த கபடி போட்டியின் போது அடுத்தடுத்த இரு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் கன்கேர் மாவட்டத்தில் நடந்த ஹியா ஒலிம்பிக் போட்டியில் பலத்த காயம் அடைந்த பெண் கபடி வீராங்கனை சாந்தி மாண்டவி (30), என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கொண்டகான் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினரான இவரது மறைவுக்கு, அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு ரூ … Read more

75 டிஜிட்டல் வங்கி அலகுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

75 டிஜிட்டல் வங்கி அலகுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் … Read more

அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வாஷிங்கடன்: அமலாக்கத் துறை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது போலி குற்றச்சாட்டு அது முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது. பொருளாதாரக் குற்றங்களைக் கையாளும் அமைப்பு அது. மத்திய அமைப்புகள் அதன் கடமைகளைச் செய்கின்றன. யாரையும் குறிவைத்து நடவடிக்கைகள் எடுப்பதில்லை. எந்த ஒரு விசாரணையிலும் எடுத்தவுடனேயே அமலாக்கத் துறை வருவதில்லை. ஒரு … Read more

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: நாளை ஆஜராகும்படி மணீஷ் சிசோடியாவுக்கு சம்மன்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு, சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசிலும், கட்சியிலும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் இருப்பவர், மணீஷ் சிசோடியா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதலமைச்சர் மணீஷ் … Read more