`அதிக தற்கொலை பதிவாகும் மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம்’ – என்.சி.ஆர்.பி தகவல்

2021-ம் ஆண்டில் இந்திய அளவில் நடந்த தற்கொலைகளில் அதிக தற்கொலை பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 18,295 தற்கொலைகள் பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு முன் முதலிடத்தில் மஹாராஷ்ட்ரா உள்ளது. அங்கு 22,207 தற்கொலைகள் பதிவாகியிருந்துள்ளன. இந்திய அளவில் பதிவான தற்கொலைகளில், 11.5% தற்கொலைகள் தமிழ்நாட்டில் தான் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவான தற்கொலைகளில் 8,073 குடும்ப பிரச்னைகளினால் ஏற்பட்டிருப்பதாக … Read more

பத்ம விருதுக்கு பரிந்துரைக்க செப். 15-ம் தேதி கடைசி நாள்

புதுடெல்லி: பத்ம விருதுகளுக்கு பெயர்கள் பரிந்துரை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும். குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் விருது வழங்கப்படும். அந்த வகையில் 2023-ம் ஆண்டின் பத்ம விருதுக்கான விண்ணப்பம் www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் … Read more

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

கட்சித் தலைவர் தேர்தல்: காங்கிரஸில் தொடரும் குழப்பம்; ரேஸில் யாரெல்லாம் தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், காந்தி குடும்பத்தைச் சேராத தலைவர்கள் களத்தில் இறங்குவார்களா என்பது குறித்து கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவுகிறது. ஒருவேளை ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டால், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் அல்லது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரில் ஒருவரை களம் இறக்க வேண்டும் என சோனியா காந்திக்கு நெருக்கமான தலைவர்கள் கருதுகிறார்கள். அடுத்த தலைவர் … Read more

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதும், தன் பாலின உறவுகளால் குடும்ப அமைப்பு பல வடிவங்கள் பெற வாய்ப்பு – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது மற்றும் தன் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் குடும்ப உறவின் வடிவங்கள் மாற்றம் பெற வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஒரு வழக்கில் குடும்ப உறவுகள் என்றால் என்ன? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான மற்றும் முக்கியமான கருத்துகளை தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு ஆகஸ்ட் 28-ல் தான் … Read more

ஜார்க்கண்ட் அரசியல் நெருக்கடி: ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கருக்கு இடம் பெயர்வு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில், அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இடம் பெயர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணி அரசுக்கு, 49 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு, 30 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு, … Read more

நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை விரட்டி பிடித்து திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்

பீகாரில் நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை அவரது குடும்பத்தினர் விரட்டி பிடித்து திருமணம் செய்து வைத்துள்ளனர். நவாடா மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்த பெற்றோர், வரதட்சணையாக இருசக்கர வாகனத்துடன் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளனர். ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்ய இளைஞர் மறுத்ததால், அவரது பெற்றோர் மணமகள் வீட்டாரிடம் பேசி திருமண தேதியை ஒத்திவைத்து வந்தனர். இந்நிலையில், மக்கள் கூடும் சந்தைக்கு வந்த … Read more

அரசு மருத்துவமனை ஆம்புலன்சின் கதவைத் திறக்க முடியாமல் ஏற்பட்ட தாமதத்தால் நோயாளி உயிரிழப்பு; கேரளாவில் சோகம்

திருவனந்தபுரம்; ஆம்புலன்சின் கதவு  கதவைத் திறக்க முடியாமல்  ஏற்பட்ட தாமதத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு 66 வயதான கோயமோன் உணவகத்தில் இருந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சாலையைக் கடக்கும்போது, ​​இருசக்கர வாகனம் மோதியது. அவர் உடனடியாக அருகிலுள்ள கடற்கரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து  சிகிச்சைக்காக அருகே … Read more

குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்

2002 குஜராத் கலவரம் தொடர்பான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்குகள் சில இன்றும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்த மனு, குஜராத் காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் … Read more

ஆந்திரா: ஆலையில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

காக்கிநாடா: ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், வாகலபூடி பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றிக்கொண்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.பின்னர் தகவல் அறிந்து போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைத்தனர். இதே தொழிற் சாலையில் கடந்த 19-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டதில் … Read more