தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு

திருமலை: தெலங்கானாவில் அரசு அழைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று விவசாயிகள், பொதுமக்கள், அதிகாரிகள் ஒரு நிமிடம் தேசிய கீதம் பாடினர். இதற்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நாட்டின் 76வது சுதந்திர தினவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, நேற்று  காலை 11.30 மணிக்கு அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்தில் ஒரு நிமிடம் நின்று தேசிய கீதம் பாடும்படி தெலங்கானா அரசு வேண்டுகோள் விடுத்தது.ஐதராபாத் அபிட்ஸ் ஜிபிஓ. நேரு சிலை அருகே … Read more

காங்கிரஸில் தொடரும் அதிருப்தி | நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பதவியை ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்

காஷ்மீர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸின் பிரசாரக் குழுத் தலைவராக உள்ள ஆசாத், பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தலைவர் பதவி மட்டுமல்ல, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார். முதல்கட்ட தகவலின்படி, இந்த நியமனம் தனது மதிப்பிற்கு குறைவானதாக … Read more

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பதற்றமான சூழல்.. எல்லையில் நவீனமாகும் இந்திய ராணுவம்..!

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சீன ராணுவத்துடன் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் ஒத்திகையை இன்று நடத்தியது. மேலும், எல்லைகளை கண்காணிக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் போன்றவை இன்று ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன… எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பாங்கோங் ஏரியில் இந்திய ராணுவம் சார்பில் இன்று தாக்குதல் ஒத்திகை நடைபெற்றது. நவீன படகில் பயணித்து ஏரியின் மையத்தை அடைந்து திரும்புவது போன்ற ஒத்திகையை, ராணுவ வீரர்கள் நிகழ்த்தி காண்பித்தனர். ஒரே நேரத்தில் … Read more

கூட்டு பலாத்காரம், 7 பேர் படுகொலை பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பொதுமன்னிப்பு என்ற பெயரில் குஜராத் அரசு சர்ச்சை உத்தரவு

அகமதாபாத்: குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம், 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை அம்மாநில அரசு பொது மன்னிப்பு என்ற பெயரில் விடுதலை செய்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளன. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு, ரன்திக்பூர் கிராமத்தில் 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு  கூட்டு … Read more

மகாநதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்கள் பரிதவிப்பு.. தனித்தீவாக மாறிய 100க்கும் மேற்பட்ட கிராமங்கள்..!

ஒடிசாவில், மகாநதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் கட்டாக்,  ஜகத்சிங்பூர், கேந்திரபாடா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. தொடர் மழையால் ஹிராகுட் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போன்று, பைதரணி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கனி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் … Read more

சுகாதார திட்டங்களுக்கான ஒன்றிய அரசு தரும் நிதியை விரைவாக பெற வேண்டும்: மாநிலங்களுக்கு அறிவுரை

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழகத்தின் சார்பில், சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்றார். இக்கூட்டம் குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு: நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும், விரிவு படுத்துவதற்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. மாவட்ட, … Read more

விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா

நாட்டில் மூலை மூடுக்கெல்லாம் வசிக்கும் மக்கள், ஒரு வேளை உணவையாவது வயிறு நிறைய இன்று சாப்பிடுகிறார்கள் என்றால் அது எந்தவித லாபம் நோக்கமும் இன்றி நிலத்தை உழவு செய்யும் ஒவ்வொரு விவசாயியின் உழைப்புதான். விவசாயியின் ஒவ்வொரு துளி வியர்வையும் ஒவ்வொரு குடிமகன்களின் பசியை போக்குகிறது. ஆனால், விவசாயியின் பசியை போக்க வேண்டிய ஒன்றிய அரசு, விவசாயத்தையே அழிக்கும் வேளையில் இறங்கி உள்ளது.‘விவசாயம்’ நாட்டின் முதுக்கெலும்பு. விவசாயத்தையும், விவாசயிகளையும் காக்கும் எந்த நாடும் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், … Read more

நிதிஷ் குமார்.. தேஜஸ்வி ஷாக்; விடாமல் துரத்தும் கருப்பு!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், பாஜக மேலிடம் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் பாஜவுடன் கூட்டணியை முறிப்பதாக நிதீஷ் குமார் திடீரென அறிவித்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது தான் உறவை முறிப்பதற்கான காரணம் என நிதீஷ் குமார் அறிவித்தது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த … Read more

சத்தீஷ்கரில் 295 பெட்டிகளுடன், மூன்றரை கிலோ மீட்டர் நீள பிரமாண்ட சரக்கு ரெயில் சோதனை இயக்கம்..!

தென் கிழக்கு மத்திய ரெயில்வே தனது மிக நீளமான சரக்கு ரெயிலான சூப்பர் வாசுகி ரெயிலை சோதித்து பார்த்தது. ஐந்து சரக்கு ரெயில்களின் பெட்டிகளை ஒன்றிணைத்து 295 பெட்டிகளுடன் ஒரே ரயிலாக நேற்று சூப்பர் வாசுகி தனது வெள்ளோட்டத்தை தொடங்கியது. 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு , மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அந்த ரெயில் காட்சியளித்தது. இதுவே, இந்திய ரெயில்வே இயக்கிய அதிகளவு நிலக்கரியை ஏற்றிச்சென்ற மிக நீளமான சரக்கு ரயிலாகும். சத்தீஷ்கர் மாநிலத்தின் … Read more

வடக்கு வங்கக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…

ராஜஸ்தான்: ராஜஸ்தான், ஒடிசா மற்றும் காஸ்மீரில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு வங்க கடலில் உருவாகியுள்ள மற்றோரு காற்றழுத்த தாழ்வு நிலையால் ஒடிசாவில் பல மாவட்டங்களில் 4 நாட்களுக்கு தொடர் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தேவி ஆற்றில் வெள்ளம் கரை … Read more