ஓட்டலில் அறையும் எடுத்து கொடுத்து உதவி பெண் தோழியுடன் ஜாலி கொலையாளிக்கு அனுமதி: 3 போலீசார் வசமாக சிக்கினர்

பெங்களூரு: கொலை குற்றவாளி ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்கு ஓட்டலில் அறை போட்டு கொடுத்த 3 போலீசார் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ெகாலை குற்றவாளியான பச்சாகான் (55) என்பவர் பல்லாரி சிறையில் 20 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு உள்ளார். இவர் சமீபத்தில் தார்வாருக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அவருக்கு 3 போலீசார் காவலுக்கு வந்தனர். போலீசார் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு மீண்டும் பல்லாரி சிறைக்கு … Read more

பேன்ட்டின் உள்பக்கமாக 2 கிலோ தங்கத்தை பசையாக்கி கடத்தல்: கேரளாவில் சுவாரசியம்

திருவனந்தபுரம்: அபுதாபியில் இருந்து 2 கிலோ தங்கத்தை பசையாக்கி கடத்தி வந்தவர், கோழிக்கோடு விமான நிலையத்தில் சிக்கினார்.அபுதாபியில் இருந்து கேரளாவில் உள்ள கோழிக்கோடு வரும்  தனியார் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மலப்புரம் மாவட்ட எஸ்பி சுஜித் தாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால்,  போலீசார் விமான நிலையத்தின் வெளியே கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த பயணியிடம் சோதனை நடத்தினர். ஆனால், அவருடைய பையில் தங்கம் இல்லை. இதனால் குழம்பிய போலீசார், அவர் அணிந்திருந்த … Read more

அமித் ஷா-ஜூனியர் என்டிஆர் சந்திப்பு: தெலுங்கு சினிமாவின் ரத்தினம் என புகழ்ச்சி

ஹைதராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்திப்பு ஞாயிறு அன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமித் ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தெலுங்கு சினிமாவின் ரத்தினம்’ என ஜூனியர் என்டிஆரை அவர் புகழ்ந்துள்ளார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அவருக்கு உலக அளவில் பாராட்டுகளை பெற்றுத் தந்தது. இந்நிலையில், ஹைதராபாத் நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்கும் விதமாக … Read more

ஒன்றிய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவால் மாநில மின்வாரியங்களின் எதிர்காலம் கேள்விக்குறி

மன்னர் ஆட்சி என்பது ஒட்டுமொத்த அதிகாரங்கள் தனி நபரிடம் இருக்கும்.  அவர் வைப்பதே சட்டமாகும். அவர் எடுக்கும் முடிவை யாராலும் மாற்ற முடியாது.  மக்களாட்சி என்பது ஜனநாயக ஆட்சி. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும்  ஆட்சி மக்களாட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசு,  மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் கடந்த சில காலங்களாக சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு உதவும் வகையிலான திட்டங்களை வகுத்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை  அவர்களுக்கு கூறுபோடுவது, அவர்கள் நடத்தும் தொழில்களுக்கு வரி சலுகை அளிப்பது, … Read more

அரசியல் சவால்களை எதிர்கொள்ள மாநில தலைவர்களை மாற்ற பாஜ திட்டம்: சமூக ரீதியில் பிரதிநிதித்துவம்

புதுடெல்லி: அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும், 2024 மக்களவை தேர்தலை குறிவைத்தும், பல்ேவறு  மாநில தலைவர்களை பாஜ மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பீகாரில் சமீபத்தில் பாஜ உடனான கூட்டணியை கழற்றி விட்ட நிதிஷ் குமார், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்து புதிய ஆட்சி அமைத்துள்ளார். இது போல், பல மாநிலங்களில் அரசியல் நிலவரங்கள் மாறிக் கொண்டுள்ளன. சில மாநிலங்களில் பாஜ.வின் கை ஓங்கினாலும், சில மாநிலங்களில் சறுக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய அரசியல் சவால்களை … Read more

விவசாய சங்கத் தலைவர் திகைத் டெல்லியில் கைது

புதுடெல்லி: டெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் கலந்து கொள்ளடெல்லிக்கு வந்த பாரதிய கிசான் யூனியன் (பிகேயூ)  தலைவர் ராகேஷ் திகைத்  கைது செய்யப்பட்டார். வேலைவாய்ப்பு பிரச்னையை கண்டித்து டெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் இதர அமைப்புகள் சார்பில்  மகா பஞ்சாயத்து நடக்க உள்ளது. இதனால், பல பகுதிகளிலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு வர தொடங்கி உள்ளனர். இதை  முன்னிட்டு  டெல்லியில், போலீசார்  குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் … Read more

இந்தியாவின் உட்கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உருவாக்க வேண்டும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியாவின் உட்கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் கட்டுமானப் பொறியாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு வசதிகளை அமெரிக்காவின் தரத்துக்கு உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் இருந்து நல்ல தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, நடைமுறைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். நாடு முழுவதும் 2 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 26 பசுமை விரைவுச் சாலைத் … Read more

சர்ச்சையான ஹிருத்திக் ரோஷன் விளம்பரம்! மன்னிப்பு கேட்ட சொமோட்டோ! என்ன காரணம்?

சமீபத்தில் சொமோட்டோ நிறுவனம் வெளியிட்ட ஹிருத்திக் ரோஷன் நடித்த விளம்பரம் ஒன்று மஹாகாலேஷ்வர் கோயில் பூசாரிகள் உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமோட்டோவின் சமீபத்திய விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தோன்றி நடித்திருந்தார். அவ்விளம்பரத்தில் தமக்கு தாலி (Thaali – Food platter) சாப்பிடத் தோன்றியதால் அதை மஹாகல்லில் இருந்து ஆர்டர் செய்ததாக கூறியிருந்தார். இந்த மஹாகல் என்கிற வார்த்தை தங்களது … Read more

பசுவதையில் ஈடுபடும் நபர்கள் கொலை செய்யுங்கள்..! – பாஜக முன்னாள் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு..!!

நாட்டில் எற்கனவே பசுவதை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்பொழுது பாஜக முனால் எம்எல்ஏ பசுவதை செசெய்பவர்களை கொலை செய்வோம் என்று பேசி உள்ளார். இது குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவியது. அதில் பேசிய அவர் “யாராக இருந்தாலும் சொல்லுங்கள். நான் ஜாமீனில் எடுக்கிறேன். இதுவரைக்கும் ஐந்து பேரை கொன்றிருக்கோம்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. கியான் தேவ். பசுவதையில் ஈடுபடுபவர்களை இப்படி அவர் கொலை செய்ய … Read more

சுங்கச்சாவடி பெண் ஊழியரை கன்னத்தில் ஓங்கி அறைந்த நபர்; பதிலுக்கு செருப்படி கொடுத்த பெண்

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் செல்ல அனுமதி மறுத்த சுங்கச்சாவடி பெண் ஊழியரை ஆண் ஒருவர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கார் – போபால் சாலையில் கச்னாரியா பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தன்னை உள்ளூர்வாசி என அறிமுகப்படுத்திக்கொண்ட ராஜ்குமார் குர்ஜார் என்ற நபர் தனது காரில் சென்றபோது FASTag – மின்னணு கட்டணம் செலுத்தும் முறையில் வரி செலுத்த முடியாது என்று கூறி அங்குள்ள பெண் ஊழியரிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் தனக்கு வரி … Read more