nupur sharma case: உச்ச நீதிமன்ற கருத்துக்கு நீதிபதிகள் கடும் கண்டனம்!

முகமது நபிகள் குறித்து நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா ஆகியோர், இந்த விஷயத்தில் நூபுர் ஷர்மாவின் கருத்து நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுவாக கடுமையான வார்த்தைகளை … Read more

கடந்த 17 நாட்களில் 7 வது முறை.. அடுத்தடுத்து தொழில் நுட்பக் கோளாறுக்கு உள்ளாகும் ஸ்பைஸ் ஜெட் விமானம்..!

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானம் ஒன்றில் நடுவானில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. ஏற்கனவே இன்று காலை அதே நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானம் ஒன்று துபாய் செல்லும் வழியில் எரிபொருள் அளவை காட்டும் சமிக்ஞை விளக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த 17 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இது ஏழாவது முறை என்பது … Read more

பிரதமர் யார் நலனின் அக்கறை காட்டுகிறார்?.. ஜிஎஸ்டி வரி குறித்து ராகுல் காந்தி கண்டனம்..!

டெல்லி: நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரியான ‘ஜிஎஸ்டி’, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை ஜிஎஸ்டி நிறைவு செய்த நிலையில், மத்திய பாஜக அரசு அதனைக் கொண்டாடி வருகிறது. மத்தியில் பாஜக … Read more

வைரத்திற்கு 1.5% வரி! மருத்துவ காப்பீட்டிற்கு 18% வரியா? – ராகுல் காந்தி கேள்வி

நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குறைவான அளவிலான ஒற்றை ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவதன் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவ முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வைரங்களுக்கு ஒன்றரை சதவிகித வரியும் மிகவும் அத்தியாவசியமான மருத்துவ காப்பீடுகளுக்கு 18 சதவிகித வரியும் … Read more

ஐ.என்.எஸ். விக்ராந்தின் இறுதி சோதனை ஓட்டம் இந்த வாரத்தில் கொச்சி கடற்பகுதியில் நடைபெற உள்ளதாக தகவல்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தின் இறுதி சோதனை ஓட்டம், இந்த வாரத்தில் கொச்சி கடற்பகுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் அந்த கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக 28 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த கப்பல், 7 ஆயிரத்து 500 நாட்டிக்கல் மைல் தூரம் தொடர்ந்து பயணிக்கும் திறன்கொண்டது. கடலில் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிந்ததும், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை … Read more

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு; காரில் ஆட்டம் போட்ட குற்றவாளிகள் கைது: டெல்லி போலீஸ் அதிரடி

புதுடெல்லி: பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஆயுதங்களுடன் காரில் ஆட்டம் போட்ட மேலும் 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு வீரர் அங்கித் மற்றும் அவரது கூட்டாளி சச்சினை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மூசேவாலாவை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் காரில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் … Read more

நுபுர் சர்மா குறித்த நீதிபதிகளின் கருத்தில் எந்த நியாயமும் இல்லை – 117 பேர் கூட்டறிக்கை

நுபுர் சர்மா குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட 117 பேர் இணைந்து கூட்டாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நுபுர் சர்மாவை கட்சி … Read more

கேரளாவில் ஒரே நாளில் 14 பேரை கடித்து குதறிய தெரு நாய்

கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரே நாளில் 14 பேரை கடித்த தெரு நாயை தீயணைப்பு வீரர்கள் பிடித்து சென்றனர். கேரளாவில் வெறிநாய் கடியால் ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மலப்புரத்தில் உள்ள நிலம்பூர் பகுதியில் ஒரே நாளில் 5 வயது குழந்தை உள்பட 14 பேரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் உடன் தங்கியவருக்கு ஜாமின்: மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உடன் தங்கியிருந்த சித்தார் பிதானிக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. கடந்த 2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பலரை கைது செய்தனர். அந்த வகையில் கடந்த மே மாதம் சுஷாந்த் சிங்கின் அறையில் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானியும் கைது செய்யப்பட்டார். அவர் மீது போதைப்பொருள் … Read more

விமான பைலட், சிப்பந்திகளுக்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நூலினால் ஆன சீருடைகளை அறிமுகப்படுத்தியது ஆகாசா ஏர் விமான நிறுவனம்

இந்தியாவை சேர்ந்த ஆகாசா ஏர் புதிய தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது பைலட்டுகள் மற்றும் விமான சிப்பந்திகளுக்காக, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நூலினால் ஆன சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களது காலணிகளும் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பரால் உருவாக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தை இந்த சீருடைகள் வலியுறுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.   Source link