நீட் தேர்வு: உள்ளாடையை அகற்றச் சொன்னோமா? விளக்கம் கொடுத்த தேசிய தேர்வுகள் முகமை

நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு கூறியதாக எழுந்த புகாருக்கு தேசிய தேர்வுகள் முகமை மறுப்பு தெரிவித்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடையை அகற்றுமாறு தேர்வு மைய அதிகாரிகள் கூறியதாக மாணவி ஒருவரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உள்ளாடையில் மெட்டல் இருப்பதாக கூறி அதை அகற்ற வற்புறுத்தியதாகவும் இதனால் தனது மகள் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பதிலளித்துள்ள தேசிய தேர்வுகள் முகமை, கடந்த … Read more

சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் 100 கோடி தேசியக் கொடிகள் பறக்கவிட ஏற்பாடு – அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் 100 கோடி தேசியக் கொடிகள் பறக்கவிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ‘அம்ருத் மசோத்சவ் ஆஸாதி’ என்ற பெயரில் 75-ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் நாடு முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இதன் உச்சமாக, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்தியது. ‘ஹர் கர் திரங்கா (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி)’ … Read more

Lulu Mall: லுலு மாலில் பிரார்த்தனை: நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி உத்தரவு!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லுலு மாலில் வழிபாடு நடத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யூசுப் அலி, பிரபல தொழிலதிபர். இவர், லுலு குழுமத்தின் தலைவர் ஆவார். இந்தக் குழுமம், லுலு என்ற பெயரில் வணிக வளாகத்தை உலகின் பல நகரங்களில் அமைத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், இந்தக் … Read more

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதித்தால் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்வர்: அமைச்சர் துரைமுருகன்

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதித்தால் தமிழக அரசு அதிகாரிகள் உடனடியாக வெளிநடப்பு செய்வார்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் டெல்லியில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்ட சூழலில், அதனை … Read more

உத்தவ் தாக்கரேவா – ஏக்நாத் ஷிண்டேவா? யார் உண்மையான சிவசேனா? தேர்தல் ஆணையம் இன்று முடிவு

சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி இரண்டாக பிளவுப்பட்டிருக்கும் நிலையில், யார் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வந்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி வகித்து வந்தார். இதனிடையே, கடந்த மாதம் சிவசேனா மூத்த அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏக்கள் திடீரென மாயமாகினர். … Read more

ஜிஎஸ்டி, அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி – நாள் முழுவதும் 2 அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: அக்னிபாதைத் திட்டம், ஜிஎஸ்டி வரி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் 2 அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. ஆக. 12 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட 27 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய … Read more

பாஜக வை விமர்சித்த பாஜக எம்.பி – என்ன காரணம் தெரியுமா ?

அரிசி பால் தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருண் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அத்தியாவசிய பொருட்களான அரிசி பால் தயிர் போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி … Read more

தமிழிசைக்கு வரவேற்பு அளிப்பது யார்..? இருதரப்பினரிடையே மோதல்

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் சென்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏனாம் பிராந்தியத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற தமிழிசை சவுந்தரராஜனுக்கு வரவேற்பு அளிப்பதில், ஏனாம் எம்.எல்.ஏ  கொல்லப்பள்ளி அசோக்கின் ஆதரவாளர்களுக்கும், புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடிகிருஷ்ணாராவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆளுநர் கண் முன்னே மாறி மாறி தாக்கிகொண்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். Source link

நுபுர் ஷர்மாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: முகமது நபிகள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் ஷர்மாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நுபுர் ஷர்மாவிற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்கள், பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 12 லட்சம் மதிப்புள்ள நகை பணம் கொள்ளை போனதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கர்நாடக மாநில எல்லையில் உள்ளது ஆனெக்கல் பகுதி, இங்குள்ள முனிவெங்கடப்பா லே-அவுட் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுநாத், இவர், தனது குடும்பத்தோடு ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இந்நிலையில், அவரது வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மூன்று பேர் நள்ளிரவில், அவரது … Read more