ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – டெல்லி அரசு அதிரடி

டெல்லியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை தடையை மீறி பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் கோபால் ராய் எச்சரித்துள்ளார். ஜூலை 10ஆம் தேதி வரை கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் அதனை மீறி பயன்படுத்தினால்  5 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  Source link

ஏக்நாத் முதல்வரான நிலையில் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்ேட முதல்வரான நிலையில், தற்போது எதிர்கட்சியை சேர்ந்த சரத்பவாருக்கு எதிராக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஏக்நாத் ஷிண்டே முதல்வரான … Read more

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு – என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் மீது ஏற்றுமதி வரி விதித்துள்ளது. இதனால் ஏற்றுமதியை குறைத்து ரிலையன்ஸ் உள்ளிட்ட எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டிலே அதிக அளவில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நடவடிக்கை மூலம் எரிபொருள் விலை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் கூடுதல் லாபத்தில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்படுகிறது. தற்போது … Read more

துப்பாக்கி குண்டுகள் துளைக்காத 200 ராணுவ வாகனங்கள்.. அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை..!

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, துப்பாக்கி குண்டுகள் துளைக்காத நவீன வசதிகள் கொண்ட 200 ராணுவ வாகனங்கள் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் களமிறக்கப்பட்டுள்ளன. தரையிலும், தண்ணீரிலும், வனப்பகுதியிலும் எளிதாக இந்த வாகனங்களை இயக்க முடியும் என்பதோடு, வெடிகுண்டுகளை கண்டறியும் ரேடார் வசதியும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 கிலோ எடையுள்ள குண்டு வெடித்தாலும் வாகனத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  Source link

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; அமலாக்கத்துறை முன் சிவசேனா எம்பி ஆஜர்

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எதிராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. மும்பை கோரேகாவ் பகுதியில் பத்ரா குடிசை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட  நிறுவனம் ரூ.1,039 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதில், ரூ.100 கோடியை  பிரவின் ராவத் என்பவர் சஞ்சய் ராவத் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் வங்கி  கணக்கிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான சட்டவிரோத  பணப்பரிமாற்றம் … Read more

புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்

கிராமங்கள், நகரங்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் வாழ்ந்து வருபவை பாம்புகள். பாம்புகள் என்றாலே பலருக்கும் பயம். சமீபகாலமாகப் பாம்பு கடித்ததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 54 லட்சம் பேர் பாம்புக் கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், பாம்புக் கடியால் ஆண்டுக்கு 1,38,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 320 பாம்பு வகைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள நச்சுப் பாம்புகளில் … Read more

திரெளபதி முர்முவுக்கு சிரோண்மனி அகாலி தளம் ஆதரவு

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரவளிக்க உள்ளதாக சிரோண்மனி அகாலி தளம் கட்சி அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய, அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், சீக்கிய மக்களுக்கு எதிராக கொடுமைகள் இழைத்த காங்கிரசுக்கு ஒருபோதும் ஆதரவு இல்லை என்றார். இதேபோல், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகௌடாவும் திரௌபதி முர்முவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார். Source link

ஐதராபாத்தில் நாளை, நாளை மறுநாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ‘பை பை மோடி’ பேனர் வைத்ததால் பரபரப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் நாளையும், நாளை மறுநாளும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ‘பை பை மோடி’ பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடந்த அரசியல் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம்  நாளையும் (ஜூலை 2), நாளை மறுநாளும் ெதலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் நடக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஐதராபாத்துக்கு வருகிறார். ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை … Read more

ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! – முழுவிவரம்

கோவிட் பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டுவரும் நிலையில், 2022 ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,306 கோடி மாநில ஜிஎஸ்டி ரூ.32,406 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.75,887 கோடி (பொருள்கள் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.40,102 கோடி உட்பட), செஸ் வரி ரூ.11,018 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.1,197 கோடி உட்பட) என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2021 … Read more

“எஸ்பிஐ தங்க நகைக்கடன்கள் மதிப்பு ரூ.1 இலட்சம் கோடியைத் தாண்டியது” – தலைவர் தினேஷ் காரா

பாரத ஸ்டேட் வங்கியில் தங்க நகைக் கடன்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் தங்க நகைக் கடன்கள் வழங்குவது குறிப்பிடத் தக்க அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தங்க நகைக் கடன்களில் 24 விழுக்காட்டை பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Source link