இந்தியாவில் நுழைந்த மங்கி பாக்ஸ்? கேரளாவில் தனிமையில் ஒருவர்.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம் : கேரளாவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. 1960ம் ஆண்டில் இந்த காய்ச்சல் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே அதிகமாக பரவி வந்த இந்தக் காய்ச்சல் சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இங்கிலாந்து, … Read more

புதிய தலைமை பொருளாதார ஜோதிடரை நிர்மலா நியமிக்க வேண்டும் – ப.சிதம்பரம்

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரகங்களை துணைக்கு அழைத்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நாசா வெளியிட்ட பிரபஞ்சத்தின் புகைப்படங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், பணவீக்கம் 7.01 சதவீதமாகவும், வேலையின்மை 7.8 சதவீதமாகவும் இருந்த அதே நாளில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வியாழன், புளுட்டோ மற்றும் யுரேனஸின் புகைப்படங்களை வெளியிட்டதில் தனக்கு எந்த … Read more

“தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமிப்பீர்” – நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த ப.சிதம்பரம்

புதுடெல்லி: பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை விடுத்து மத்திய நிதியமைச்சர் நாசா புகைப்படங்களை சிலாகித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “தலைமைப் பொருளாதார ஜோதிடரை வேண்டுமானால் நியமிக்கலாம்” என்று கிண்டல் செய்துள்ளார். தன்மீது நம்பிக்கையிழந்த நிதியமைச்சர் ஆரம்பகட்டமாக தலைமைப் பொருளாதார ஜோதிடரை வேண்டுமானால் நியமிக்கலாம் என்றும் அவர் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக சிதம்பரம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “பணவீக்கம் 7.01 சதவீதமாக உள்ளது, வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் நிர்மலா சீதாராமனோ ஜூபிடர், ப்ளூட்டோ … Read more

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்,டீசல் விலை 3 ரூபாயும் குறைப்பு

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூவாயும் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் பாஜக – சிவசேனா அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றபோது, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்தார். அதன்படி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டுவரியில் 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் 3 ரூபாயும் குறைக்கப்படுவதாக  அறிவித்துள்ளார். Source link

மகாராஷ்டிராவில் 11 மாவட்டங்களுக்கு கனமழை..மும்பையில் பருவமழை தீவிரம்..: வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்

மும்பை: மும்பையில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த இடைவிடாத மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மும்பையின் உயிர்நாடியாக விளங்கும் மின்சார ரயில் போக்குவரத்தில் மழையின் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ரயில்கள் காலதாமதமாக இயங்கியது. அந்தேரி மிலன் சுரங்கப்பாதையில் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. குர்லா கமானி சந்திப்பு, தேவ்னார் நீலம் ஜங்ஷன், … Read more

தெலங்கானாவில் பலத்த மழை: பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் உட்பட அனைத்து மாவட்டங்களிலிலும் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. பல அணைகள் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால் கடந்த திங்கட்கிழமை 11-ம் தேதி முதல் நேற்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை … Read more

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை பாதிப்பு?

கேரளாவில் குரங்கம்மை அறிகுறிகளுடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என தெரியவரும் என அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். Source link

நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவி உடையில் வரச்சொல்வார்களா?: காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் கேள்வி

டெல்லி: நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவி உடையில் வரச்சொல்வார்களா? என காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பேசக்கூடாது என்ற அறிவிப்புக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.   

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்பே குரங்கம்மை குறித்து உறுதியாக … Read more

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: கர்நாடக கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில், அதனை கண்டித்து இந்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு கல்லூரிகளில் வன்முறை வெடித்ததால் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து உடுப்பியை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் சிலர், ஹிஜாப் தடையை நீக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் 15-ம் தேதி, “ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான … Read more