பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பிகாில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் மருந்து ஆய்வாளர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். மருந்து ஆய்வாளராக பணிபுரியும் இவர் மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் குவிந்து வந்தன. இதன்பேரில், அவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி … Read more

குஜராத் கலவர வழக்கு தீர்ப்பு | 19 ஆண்டாக வேதனைகளை மனதில் புதைத்து கொண்டார் மோடி – அமித் ஷா கருத்து

புதுடெல்லி: குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் உண்மை, பொன்னை போன்று மின்னுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, “பிரதமர் மோடி குற்றமற்றவர்” என்று நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: குஜராத் கலவரம் … Read more

ஜெர்மனி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

ஜெர்மனியில் இன்றும், நாளையும் 48ஆவது ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கால்ஷ் அழைப்பை விடுத்திருந்தார். அதன்பேரில் அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் புறப்பட்டு சென்றார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த … Read more

ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பு 2026 மார்ச் 31 வரை நீட்டிப்பு – மத்திய நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பை 2026 ஆம் ஆண்டு மார்ச்31 வரை நீட்டிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. செஸ் வரி விதிப்பு வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், இழப்பீட்டு செஸ்ஸை 4ஆண்டுகள் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் மூலம் கிடைக்கும் வருவாயை, கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மாநிலங்களுக்கு செலுத்திய கடன்கள் மற்றும் நிலுவைத் தொகையை செலுத்த மத்திய … Read more

தமிழகத்தில் இருந்து கடத்தல் கேரளாவில் 11 டன் ரசாயன மீன் அழிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களாக மீன் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டன. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கேரளாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ரசாயனம் கலந்த கெட்டுப்போன மீன்கள் கொண்டு வரப்படுவது தெரியவந்தது. இதனால் கேரள மாநில எல்லைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர். நேற்று அதிகாலை தென்காசி மாவட்ட எல்லையில் உள்ள ஆரியங்காவு சோதனைச் சாவடியில் கேரள உணவு … Read more

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் – ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: உடல்நிலை குணமடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார். தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தனது உடல்நிலை குறித்து விசாரித்து, குணமடைய வாழ்த்திய பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக் குறைவால் கடந்த சில ஆண்டுகளாக வெளியே செல்லாமல், வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறார். கடந்த வாரம் உடல்நிலை சற்று … Read more

அக்னிபத் திட்டம்: பாதுகாப்பு துறை அமைச்சர் முக்கிய தகவல்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் … Read more

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு மரணம்.. சோதனை நடத்த வந்த அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாக தந்தை புகார்..!

பஞ்சாப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனது மகனை கண்ணெதிரே சுட்டுக்கொன்று விட்டதாக ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் போப்பிலி குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரிகள் சோதனையிட வருவதை அறிந்து ஐஏஎஸ் அதிகாரியின் மகன் கார்த்திக் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக சோதனையிட சென்ற ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தம் மகன் சுட்டுக் கொல்லப்பட்டதை தாம் நேரில் கண்ட சாட்சி என்று சஞ்சய் போப்பிலி கூறியுள்ளார். இதனிடையே, சஞ்சாய் போப்பிலி வீட்டில் நடைபெற்ற சோதனையில் 12 கிலோ … Read more

அடுத்தாண்டு ஏப்ரல் 1 முதல் கார்களுக்கு ஸ்டார் ரேட்டிங்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் புதிய கார்களுக்க விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து நட்சத்திர மதிப்பீடு அளிக்கும் திட்டம் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து புதிய கார்களுக்கும், மற்ற நுகர்வோர் பொருட்களை போல் நடசத்திர மதிப்பீடு (ஸ்டார் ரேட்டிங்) வழங்கப்படும் என்று ஒன்றிய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் அறிவித்தார். ‘இந்த நட்சத்திர மதிப்பீடு அடிப்படையில், பாதுகாப்பான கார்களை மக்கள் தேர்வு … Read more

ஒடிசாவில் மின்சார வசதி கூட இல்லாத திரவுபதி முர்முவின் சொந்த கிராமம்

புவனேஸ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். ஆனால் அவரது சொந்த ஊரான ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் உபர்பேடா கிராமம், இதுவரையில் மின்சார வசதியைக் கூட பெறாத நிலையில் உள்ளது. குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். திரவுபதி முர்முவின் அண்ணன் பகத் சரண் துடுவின் மகன் பிராஞ்சி நாராயண் துடு அந்த கிராமத்தில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். … Read more