ஸ்ரீரங்கம் பக்தர்கள் வசதிகாக பஞ்சக்கரை சாலையில் 6 ஏக்கரில் அமைகிறது வாகன நிறுத்துமிடம்

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, பஞ்சக்கரை சாலையில் 6 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் வரும் கார், வேன், பேருந்து போன்ற வாகனங்களை நிறுத்த உரிய இடவசதி இல்லாததால், கோயிலைச் சுற்றி கிடைக்கும் இடங்களில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, கோயிலுக்கு வரும் … Read more

ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க இயலவில்லை..! – சோனியா காந்தி கூறும் காரணம்..!

மருத்துவ பரிசோதனை காரணமாக தேச ஒற்றுமை யாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க இயலவில்லை என சோனியா காந்தி கூறியுள்ளார். கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை இன்று தொடங்குகிறார். இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும், ராகுல் காந்தி 12 … Read more

பிறந்த நாள் அன்று நேர்ந்த துயரம் – தீயில் கருகி மாணவன் பலி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதுரையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்து ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அரசு பேருந்து மீது மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து பேருந்தில் தீ பரவியது. இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்க ஜெயபால் என்பவருடைய மகன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரவீன் ஒட்டன்சத்திரம் தனியார் பள்ளியில் … Read more

ஆழியார்-வால்பாறை சாலையில் குட்டியுடன் உலா வரும் தாய் யானை: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை, நவமலை, கவியருவி உள்ளிட்ட பகுதிகளை ஒட்டி உள்ள வனத்தில் காட்டு யானைகள், சிறுத்தை, மான்கள், வரையாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி ஆழியார் அணை அமைந்துள்ளதால், ஏராளமான வனவிலங்குகள் மாலை மற்றும் காலை நேரங்களில் தண்ணீர் தேடி அணை கரைக்கு வந்து செல்வது வழக்கம். அணை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, கடந்த சில தினங்களாக ஆழியார்-வால்பாறை சாலை, … Read more

மொத்தமாக இறந்துகிடந்த ஆடுகள்.. வெறிநாய் கடியால் நிகழ்ந்த கொடூரம் – விவசாயி வேதனை!

உச்சிப்புளி அருகே வெறிநாய் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழந்தன.  ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த கல்கிணற்று வலசை சேர்ந்த அர்ஜுன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் ஆடுகளை தொழுவத்தில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டு இன்று காலை திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது நான்கு வெறிநாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி … Read more

இந்திய ஒற்றுமை பயணம் | ராகுல் காந்தி நடைபயணம் – குமரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தேசிய கொடி வழங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து தொடங்கும் இந்த நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை வழங்கி தொடங்கி … Read more

மாணவர்களின் ஹெல்த் எப்படி இருக்கு? -ஆய்வு செய்ய ஆசிரியர்களுக்கு ஆர்டர்!

மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் தலையாய பணியுடன் தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் விவரம் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளும் பள்ளி ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தரப்பட்டு வருகிறது. இவற்றி்ன் வரிசையில் மாணவர்களின் உடல்நலம் சார்ந்த பல்வேறு தகவல்களை சேரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி வைட்டமின் குறைபாடு, ரத்த சோகை, கண் பார்வை பாதிப்பு, காசநோய், தைராய்டு பிரச்னை, பல் நோய்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அந்த தகவல்களை பட்டியலாக அனுப்ப மாநிலம் முழுவதும் … Read more

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் எப்போது தொடக்கம்?

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஆயிரத்து 545 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். படிப்படியாக இந்தத் திட்டம் தமிழகம் … Read more

புதுக்கோட்டையில் நாளை கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி நாளை உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கவிதா ராமு அறிவித்தார்.

சாவியை ஆன் செய்தபடி பழுது பார்த்த மெக்கானிக்; திடீரென வெடித்து சிதறிய எல்.பி.ஜி ஆட்டோ!

ஆவடி அருகே ஆட்டோ பழுது நீக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென தீ பற்றியதால் பரபரப்பு சென்னை அருகே ஆவடியை அடுத்த கோவில் பதாகை திருமுல்லைவாயல் சாலையில் பிரசாந்த் என்பவர் ஆட்டோ பழுது நீக்கம் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் , இன்று பாண்டியன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது ஆட்டோ சாவியை ஆன் செய்து வைத்துக் கொண்டு பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆட்டோ திடீரென தீப்பற்றி … Read more