5 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% ஊக்கத் தொகை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை வரும் 15ம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்துவரி தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 2022-2023ம் நிதியாண்டின், முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை 30.09.2022க்குள் செலுத்த வேண்டும். அதன்படி, 2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியில் ரூ.696.97 கோடி சொத்து உரிமையாளர்களிடமிருந்து, வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் … Read more