கொலை வழக்கில் தொடர்பு ராக்கெட் ராஜா அதிரடி கைது; திருவனந்தபுரத்தில் தனிப்படை சுற்றிவளைப்பு

நாங்குநேரி: நாங்குநேரி அருகே இளைஞர் கொலை வழக்கு ெதாடர்பாக, ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சாமித்துரை (23). இவர் கடந்த ஜூலை 28ம்தேதி நள்ளிரவு வீட்டின் முன்புநிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொலை செய்தது. நாங்குநேரி போலீசார் நடத்திய விசாரணையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏர்வாடி … Read more

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? – தேர்வு செய்யும் பணி தீவிரம்

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்திடம் பதவி ஓய்வுப் பெறவுள்ளதால், அடுத்த நீதிபதியை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்று பரிந்துரை செய்யுமாறு யு.யு.லலித்திடம் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் அடுத்த மாதம் 8- ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறவுள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த மூத்த நீதிபதியாக இருப்பவர் சந்திரசூட் இருப்பதால் அவரது பெயரை … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழகத்தின் 710 ஓட்டுக்களில் சசி தரூர்-க்கு எத்தனை?

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: தமிழகத்தின் 710 ஓட்டுக்களில் சசி தரூர்-க்கு எத்தனை? Source link

பட்டாசு கொண்டு செல்லத் தடை – மீறினால் 5 ஆண்டு சிறை!!

பண்டிகை காலம் நெருங்கி உள்ளதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதே போல் பயணிகள் பலரும் பட்டாசு போன்ற பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வார்கள். இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு சிறிய தீப்பொறி கூட பயங்கரமான … Read more

பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ராக்கெட் ராஜா கைது..!

நெல்லை மாவட்டத்தில் பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ராக்கெட் ராஜாவை  கொலை வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில்  கடந்த ஜூலை 29ஆம் தேதி தனது வீட்டினருகே படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவர் சரணடைந்த நிலையில் , விசாரணையில் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராக்கெட் ராஜா வெளிநாடு தப்பிச்செல்லவிருப்பதாக வந்த தகவலையடுத்து திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். இம்மாதம் 20ஆம் … Read more

இன்று குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் குறைதீர் கூட்டம், 15 பகுதி அலுவலகங்களிலும் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் இன்று (அக்.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீர் வாரியத்தின் 15 இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறைதீர்க்கும் … Read more

36ஆவது தேசிய விளையாட்டு போட்டி: தனி நீதிபதி உத்தரவு ரத்து!

குஜராத்தில் நடக்கும் 36ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வாலிபால் சங்கம் தேர்வு செய்த வீரர்களை அனுமதிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 36ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் தமிழக வாலிபால் சங்கம் சார்பில் கலந்து கொள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கு குழு ஒன்றை நியமித்து இந்திய வாலிபால் கூட்டமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து … Read more

விருந்து நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் பலி

திருவாரூர்: திருவாரூர் அருகே திருவாசல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (29). இவரது மனைவி மாரியம்மாள் (26). இவர், 5 மாத கர்ப்பமாக உள்ளார். அவருக்கு, 5ம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு சாதங்களுடன் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் வேலுக்குடி கிராமத்தை சேர்ந்த பிஎஸ்என்எல் மோடம் நெட்வொர்க்  ஒப்பந்த நிறுவன மேலாளர் செல்வமுருகன் (24), … Read more

பிரபல நடிகையை கடைக்குள் வைத்து ஷட்டரை மூடிய ஊழியர்கள்!!

மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அன்னா ரேஷ்மா ராஜன், தனது அம்மாவின் செல்போனிலுள்ள சிம்கார்ட்டில் பிரச்னை ஏற்பட்டதால் வேறு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்க ஆலுவா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்றார். பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, தலையை துப்பட்டாவால் மூடிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள 25 வயது பெண் மேலாளர் இவரிடம் முறையாக பதில் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அவர் குறித்து புகார் அளிக்க அவரை புகைப்படம் எடுத்துள்ளார். தன்னை … Read more