போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கமா? – தமிழகம் அரசு மறுப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்ய உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்த தகவல்களை தமிழக அரசு மறுத்துள்ளது. இது குறித்து உயர் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களைப் பணிநீக்கம் செய்யுமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரால் ஆணையிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் நோக்கம் தற்போது பணிபுரிந்துவரும் … Read more

'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்'… தமிழக அரசின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது – விஜயகாந்த்

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பே, தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி, மக்கள் பாதுகாப்பாக பயணிக்க புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் இருக்கை கழன்றதால் அதில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பேருந்தில் இருந்து வெளியே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் … Read more

RSS அமைப்புகள், அமைப்புகள் அல்ல. நாசக்கார சக்திகள் -துரைவைகோ கடும் விமர்சனம்

MDMK Warns Hindi Imposition: இந்தி திணிப்பில் ஒன்றிய அரசின் அணுகுமுறை தொடர்ந்து இருந்தால் கடந்த 1965 இல் மொழிப்போர் நடந்ததை விட வீரியமிக்க மொழிப்போராக இந்தி ஆதிக்கத்தையும் இந்தி திணிப்பையும் எதிர்த்து மாநிலம் முழுவதும் கண்டிப்பாக போராட்டம் வெடிக்கும் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ எச்சரித்துள்ளார். இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள தேரடி வீதியில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ கலந்து … Read more

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டவேண்டும்: சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

காஞ்சிபுரம்: குழந்தைகளுக்கு அழகான தமிழ்பெயர் சூட்டவேண்டும் என காஞ்சிபுரத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் நேற்று நடந்தது.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார். கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் ஜி.செல்வம், … Read more

தமிழ்நாட்டில் மதுவிலக்கு இதுவரை சாத்தியமில்லை ஏன்? உயர்நீதிமன்றம் சொன்ன காரணம்

மதுவிலக்கு சட்டம் 1937ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டாலும், வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் மதுபான விற்பனை உள்ளதால் தமிழகத்தில் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. டெண்டர் கோரி விண்ணப்பிக்கும்போது நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றை நிர்பந்திக்கவில்லை எனவும், டெண்டர் இறுதி செய்த பின் நில உரிமையாளர்களிடம் குத்தகை … Read more

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : நவம்பர் 15 முதல் அமல்படுத்த உத்தரவு

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : நவம்பர் 15 முதல் அமல்படுத்த உத்தரவு Source link

தமிழகம் முழுவதும் 500 இடங்களில் நடந்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

சென்னை: சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் 500 இடங்களில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் … Read more

வடகிழக்கு பருவமழை: மின்வாரிய பணிகள் நிலவரம்.. செந்தில்பாலாஜி விளக்கம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. மின்வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது: பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பருவமழையில் பாதிப்பு ஏற்பட்டால் மாற்றியமைப்பதற்காக 14,442 மின்மாற்றிகள், 1,50,992 மின்கம்பங்கள், 12 ஆயிரம் கி.மீ மின் கம்பிகள் தயார் நிலையில் … Read more

மேட்டூர் அணைக்கு காவேரி நீர்வரத்து வினாடிக்கு 33,000 கனஅடியாக உயர்வு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு காவேரி நீர்வரத்து வினாடிக்கு 33,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று மாலை 9,644 கனஅடியாக நீர் வந்து கொண்டிருந்த நிலையில் 3 மடங்கிற்கு மேல் நீர் வரத்து உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு வரும் நீர் அளவு இதே நிலை தொடர்ந்தால் இன்று இரவுக்குள் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.