இடத்தகராறில் அண்ணன், தங்கை இடையே பிரச்னை : வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதால், தாக்கிக்கொண்ட 2 குடும்பத்தினர்..!

கரூர் மாவட்டம் புகழூர் அருகே, இடத்தகராறில், அண்ணன் மற்றும் தங்கை குடும்பத்தினர் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. செம்படாபாளையம் பகுதியை சேர்ந்த பாப்பாத்திக்கும், இவரின் அண்ணன் செல்வத்திற்கும் நீண்ட நாட்களாக இடப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, கைகலப்பாக மாறிய நிலையில், செல்வம் மற்றும் பாப்பாத்தி குடும்பத்தினர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இருதரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source … Read more

வடகிழக்கு பருவமழை: பொருட்கள் சேதமாவதை தவிர்க்க ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் 

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்களை சேதமடைவதைத் தவிர்க்க கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் 17 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் விவரம்: கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்புக்குள்ளாகக் … Read more

சபாநாயகருக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்: ஆலோசிக்க மறக்க வேண்டாம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தால் தன்னிடம் ஆலோசிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை உச்சம் பெற்று வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கே பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து … Read more

ஊத்தங்கரை அருகே 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் கிராமத்தில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த இரண்டு நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியை ஆண்ட நுளம்பர்களின் பழங்கன்னட பொறிப்புள்ள நடுகல் ஒன்றும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடுகற்களில் பல்லவர் காலத்தை சேர்ந்த இரண்டை தொல்லியல் துறையைச் சேர்ந்த பூங்குன்றன் நேரில் ஆய்வு செய்து படித்தளித்தார். அதில், முதல் நடுகல்லில், சாத்தனாதி சேத்தன் என்பவர் பொருமந்தைகளை மீட்கும் போது இறந்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம் நடுகல் … Read more

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான மான நஷ்ட ஈடு வழக்கு வாபஸ் – மனுக்கள் தள்ளுபடி

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான 3 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பான தகவல்கள் கடந்த … Read more

சுகர் 300 வரை எகிறினாலும் சட்டுனு குறைக்க வழி இருக்கு… வீட்டிலேயே இதைப் பண்ணுங்க!

சுகர் 300 வரை எகிறினாலும் சட்டுனு குறைக்க வழி இருக்கு… வீட்டிலேயே இதைப் பண்ணுங்க! Source link

கிருஷ்ணகிரி :  அரசு பள்ளி மாணவர்கள் ஏற்றி சென்ற வேன் லாரி மீது மோதி விபத்து! – 11 பேர் படுகாயம்! 

கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில், 11 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அரசு பள்ளி மாணவர்களை ஏற்றுச் சென்ற வேன் மீது லாரி ஒன்று கொடூரமாக மோதியது. இந்த விபத்தில் 11 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். காயமடைந்தவர்களி மீட்ட பொது மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக … Read more

வெளிநாட்டில் சிக்கியுள்ள 35 தொழிலாளர்களை துரிதமாக மீட்கவேண்டும் – மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்

மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 35 தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்க வலியுறுத்தி மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்க்கு விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது: அதிக வருமானத்தை எதிர்பார்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள். இவர்களில் தொழில்நுட்ப பயிற்சியோ, கல்வி தகுதியோ இன்றி ஏஜெண்டுகளை நம்பி குவைத் சென்று பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். … Read more

சட்டசபை நோக்கி நடைபயணம்… 17 ஆம் தேதி சம்பவம் செய்ய மக்கள் முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காஞ்சிபுரம் தாலுக்காவைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவை சேர்ந்த ஏகனாபுரம், எடையார்பாக்கம் குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம்,ஆகிய 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைத்தால் … Read more

பேருந்தில் செல்லும் வழியில் திடீர் மாரடைப்பு – இருக்கையிலேயே உயிரைவிட்ட 30 வயது இளைஞர்!

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்தில் பயணித்த பயணி மாரடைப்பால் மரணமடைந்தார். சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு சொகு சுபேருந்து சென்று கொண்டிருந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வந்தபோது, சிவகாசி வெற்றிலை ஊரணி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(30) என்பவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் அருகே அமர்ந்து வந்த அவரது சகோதரர் எழுப்பியபோது எழுந்திருக்காததால் உடனடியாக பேருந்தை நிறுத்தி இறக்கி உள்ளனர். ஆனால் அதற்குமுன்பே அவர் உயிரிழந்துவிட்டார்.  இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் … Read more