“திமுகவினரைப் பார்த்தே பயப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின்” – இபிஎஸ்

சேலம்: “இப்போது தமிழகத்தை ஆளுகின்ற முதல்வர் எத்தனையோ அவதாரமெடுத்து அதிமுகவை அழிக்கப் பார்த்தார். அத்தனை அவதாரங்களையும் தவிடுபொடியாக்கிய கட்சி அதிமுக” என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக் கட்சியினர், அதிமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், “திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுக வீழ்ந்துவிட்டது, அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே தமிழகத்திலும், … Read more

அங்கீகரிக்கப்படாத 30,000 மனைகள் பதிவு பதிவுத்துறை அலுவலர்கள் பலர் சஸ்பெண்ட்: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: அங்கீகரிக்கப்படாத 30 ஆயிரம் மனைப்பிரிவுகளை பதிவு செய்த விவகாரத்தில், பதிவுத்துறை அலுவலர்கள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகளை மோசடியாக விற்பனை செய்வதுடன், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்கின்றனர்.   உள்ளாட்சி பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் … Read more

ஓடும் பேருந்தில் இருக்கை உடைந்து சாலையில் விழுந்த பயணி – குமரியில் அரசு பேருந்தின் அவலம்!

கன்னியாகுமரியில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் சீட் கழன்று விழுந்து பயணி பேருந்தில் இருந்து வெளியே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்து இன்று காலை இடைக்கோடு பகுதியில் வைத்து பேருந்தின் பின்புற வாசல் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் வலதுபக்க சீட் விழுந்து அந்த சீட்டில் இருந்த மேல்புறம் அருகே வட்டவிளை பகுதியில் தங்கி நியாயவிலை கடையில் வேலை … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்கள்? தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா சூசக தகவல்

தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்கள்? தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா சூசக தகவல் Source link

ரூ.7 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது

சேலத்தில், 7 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார். மணியனூரைச் சேர்ந்த திவாகர், வைஷ்ணவி தம்பதியர், அதிநவீன ஆடை வடிவமைப்பு எந்திரங்கள் வாங்கித்தருவதாகவும், தையல் ஆர்டர்கள் பெற்றுத்தருவதாகவும் கூறி சுமார் 200 பேரிடமிருந்து 7 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திவாகர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வைஷ்ணவி ஓராண்டிற்கு மேலாக தலைமறைவாக இருந்தார். தற்போது திவாகர் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், … Read more

கடலூர் | வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுபாக்கத்தில் கொடிக்கம்பியில் துணி உலர வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுப்பாக்கம் கிராமத்தில் ஆறுமகன் மகன் ராமன் (55) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (30) ஆகியோர் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது தங்களது வீட்டின் மேல் பகுதியில் காய வைத்திருந்த துணியை எடுக்கச் சென்ற ராமன், கொடிக்கம்பியிலிருந்த துணியை எடுக்க முயன்றபோது, … Read more

இரட்டை குழந்தை விவகாரம்: நயன்தாராவிடம் விசாரணை!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி உள்ளனர். இந்த செய்தியை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும். உயிர் மற்றும் உலகம்.” என பதிவிடப்பட்டிருந்தது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி நீண்டநாட்களாக … Read more

நெல்லையைச் சேர்ந்த பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் மரணம்: பத்மஸ்ரீ விருது பெற்றவர்

நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94) சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் 1928ல்  நெல்லை தச்சநல்லூர் அருகேயுள்ள சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் சுப்பையா  பிள்ளை – சுப்பம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆரம்பப்  பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்த முதல் ஆசான் ராம அய்யர். உயர்நிலை  பள்ளியில் … Read more

வற்றிய கிணற்றுக்குள் புகுந்த மழைநீர்..! வழுக்கி விழுந்த பதினைந்து வயது சிறுமி..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கிரே நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய கிணறு நீண்ட நாட்களாக வற்றியிருந்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் பத்து அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனைக் கண்ட அவரின் பதினைந்து வயது மகள் மோட்டார் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென கால் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். சில நேரத்திற்கு பிறகும் மகளைக் காணாததால் பதற்றமடைந்த மோகன்ராஜ் கிணற்றுக்கு அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது உயிருக்கு போராடிய நிலையில் தனது … Read more