பேருந்து நிழற்குடையில் +2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. அதன் அருகில் பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுண்டி பேருந்து நிறுத்தம் உள்ளது.  இந்த நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து பல்வேறு பகுதிகளில் விசாரணை செய்ததில் சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வெங்காயதலமேடு கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் … Read more

நாடு முழுவதும் ஒரே நுழைவு தேர்வு நடத்த ஒன்றிய அரசு திட்டம்: ஒன்றிய கல்வி இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தகவல்

காஞ்சிபுரம்: நாட்டில் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக ஒன்றிய  கல்வித்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.  காஞ்சிபுரத்துக்கு வந்துள்ள ஒன்றிய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வெள்ளிங்கேட் பகுதியில்  தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் நீட் தேர்வு என்பது தேசத்தின் பொதுவான நுழைவு தேர்வு என்றும், இது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்றும் தெரிவித்தார். மாணவர்கள் … Read more

கோவை மாவட்டத்தில் மின்னல் வேட்டை ; ரவுடிகளின் மீது காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் ரவுடிசத்தில் ஈடுபடும் ரவுடிகளின் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களில் 88 ரவுடிகளின் மீது காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 9 நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ரவுடிசத்தில் ஈடுபட்ட 62 ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் மீது நன்னடத்தை பிணையம் … Read more

'வில்லிசை வேந்தர்' பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் மறைவு.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.!

பிரபல இசை கலைஞர் வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் பிறந்தவர் சுப்பு ஆறுமுகம் (வயது 93). கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், சுப்பையா பிள்ளை ஆகியோரின் குழுவில் இருந்து வில்லுப்பாட்டு பயின்ற இவர் வில்லிசை வேந்தர் என்று அழைக்கப்படுகிறார். கடந்த 40 வருடங்களாக ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் மூலமாக பொது மக்களுக்கு பாடி வந்தவர் சுப்பு … Read more

மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்!!

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) இன்று காலமானார். இந்த தகவலை அவரது மகன் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவிற்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில்,குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆகஸ்ட் மாதம் முதலே தீவிர உடல் நலக்குறைவுக்கு ஆளான முலாயம் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த ஒர வாரமாகவே அவரது உடல் நிலை … Read more

பிரம்மாண்டமாக நடந்த திமுக பொதுக்குழு

சென்னை: சென்னையில் நேற்று திமுக பொதுக்குழுக் கூட்டம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. * பொதுக்குழுக் கூட்டத்துக்கு வருவோரை வரவேற்கும் வகையில், மைதான வாயிலில் மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. * மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஸ்டாலினைப் பாராட்டுவது போன்ற வரைபடம் பொதுக்குழு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. * சிறப்பு அழைப்பாளர்கள், அழைப்பாளர்கள் உள்ளிட்ட பேட்ஜ் கொண்டு வந்திருந்தவர்களை மட்டுமே போலீஸார் உள்ளே அனுமதித்தனர். * பொதுக்குழுவின் மதிய உணவில் பலாக்காய் பிரியாணி, திருவையாறு அசோகா … Read more

காய்கறி சந்தைக்கு சென்று விசாரித்தால் தீர்வு கிடைக்குமா?: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பகடி செய்த ப.சிதம்பரம்

திருப்பூர் : சந்தைக்கு சென்று சுண்டைக்காய் என்ன விலை, கீரை என்ன விலை என்று கேட்டால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பகடி செய்துள்ளார். சென்னை மைலாப்பூரில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு காய்கறிகளின் விலையை கேட்டறிந்தார். இதை குறிப்பிட்டு முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பகடி செய்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் திமுக சுற்றுசூழல் அணி செயலாளர் கார்த்திகேயன் … Read more

கோவை அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி: நடவடிக்கை உறுதி என அதிகாரி தகவல்

கோவை அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி: நடவடிக்கை உறுதி என அதிகாரி தகவல் Source link

ப்ளூடூத் கருவியுடன் ராணுவ போட்டி தேர்வு எழுதிய வடமாநில இளைஞர்கள்!

சென்னையில் பாதுகாப்புத் துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு! சென்னை நுங்கம்பாக்கம் அடுத்த எம்எச் சாலையில் செயல்பட்டு வரும் ராணுவப் பள்ளியில் பாதுகாப்புத் துறையில் குரூப்-சி பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இந்தியா முழுவதும் இருந்து 1728 பேர் கலந்து கொண்டனர். இந்தத் தேர்வில் கலந்து கொண்ட அரியானாவைச் சேர்ந்த 29 பேர் சிறிய அளவிலான ப்ளூடூத் கருவியை காதில் அணிந்து கொண்டு தேர்வு மையத்திற்கு வெளியே இருக்கும் நபரிடன் உதவியுடன் … Read more

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: பிஎப்ஐ நிர்வாகி வீட்டில் போலீசார் திடீர் சோதனை..!

கன்னியாகுமரியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைதான பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தி லேப்டாப், சிம்கார்டு, வங்கி பாஸ் புக் உள்ளிட்ட 31 முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். கருமன்கூடலைச் சேர்ந்த பாஜக பிரமுகரான கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் கடந்த மாதம் 24-ம் தேதி இரவு மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக ஷமில்கான் என்பவரை கைது செய்த போலீசார் நேற்று மதியம் … Read more