சாதி சான்றிதழ் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் தீக்குளித்தவர் உயிரிழப்பு

சென்னை: நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்த வேல்முருகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் நேற்று மதியம் தீக்குளித்தார் வேல்முருகன். நேற்று மதியம், திடீரென ஒரு நபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டே ஓடி வந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பான் மற்றும் தண்ணீரை ஊற்றி தீயை … Read more

`வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்' இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி ரூ.8.47 லட்சத்தை இழந்த பெண்!

திருமயம் அருகே `வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்’ என்ற விளம்பரத்தை நம்பி 8.47 லட்சம் மோசடி நடந்திருப்பதாகவும், அதனால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கும்மங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மனைவி சீதாலெட்சுமி (27). இல்லத்தரசியான இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருவாய் ஈட்டலாம் என ஆன்லைன் விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தை பார்த்து அதில் வந்த லிங்கை கிளிக் செய்து அதில் … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (12.10.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 12/10/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 26/24/20 நவீன் தக்காளி 35 நாட்டு தக்காளி 34/32 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 65/60/50 ஊட்டி கேரட் 70/55/50 பெங்களூர் கேரட் 35/30 பீன்ஸ் 50/45 பீட்ரூட். ஊட்டி 60/55 கர்நாடக பீட்ரூட் 45 சவ் சவ் 20/18 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 18/15 உஜாலா கத்திரிக்காய் 16/13 வரி … Read more

இனி தலைநகரில் மழைநீர் தேங்கினால் புகார் அளிக்க ஸ்மார்ட்போன் செயலி..!!

தலைநகர் டெல்லியில் இப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்குவது கொசு உற்பத்தியைப் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தொடர்பாக புகார் அளிக்க புதிய செயலியை ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. எம்சிடி 311 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.இந்த செயலியில் 24 … Read more

தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நேற்று நடைபெற்றது. சென்னையில் நடந்த நிகழ்வில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. இதையடுத்து இக்கட்சிகளுடன் இணைந்து 9 கட்சிகள் சார்பில் மனித சங்கிலியில் … Read more

எடப்பாடி செய்யக்கூடாத அந்த தவறு: சைலண்டாக காத்திருக்கும் ஓபிஎஸ்

தமிழக சட்டபேரவைக் கூட்டம் அக்டோபர் 17ஆம் தேதி கூட உள்ள நிலையில் எடுக்க உள்ளதாக கூறப்படும் முடிவு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து வந்தனர். சட்டமன்றத்திலும் அருகருகே அமர்ந்திருந்தனர். அதிமுக உட்கட்சி மோதல் வெடித்ததற்கு பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் இரு தரப்புக்கும் ஏகப்பட்ட தயக்கம் இருப்பதாக சொல்கிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற உடன் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கிய … Read more

‘அது எல்லாம் நம்ம நிலம்தான்’.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு அல்வா கொடுத்த மூவர்..!

‘அது எல்லாம் நம்ம நிலம்தான்’.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு அல்வா கொடுத்த மூவர்..! Source link

ஆயுஷ் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி.? இன்றே கடைசி நாள்.!

ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கான விண்ணப்பம் http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான விண்ணப்பம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று (அக்டோபர் 12-ம் தேதி) மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப … Read more

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவன் மற்றும் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட மாணவர் கைது..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்க்கு சீருடையில் இருக்கும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு தாலி கட்டியுள்ளார். இதனை உடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், கட்டுயா… கட்டுயா என்று கூற.. மாணவனும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை … Read more