ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு; உள்துறை செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 51 இடங்களில் பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் சார்பில் தமிழக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு, அம்பேத்கர் நூற்றாண்டு, விஜயதசமி ஆகியவற்றையொட்டி இந்த பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனிநீதிபதி முன்பாக வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் … Read more

பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கொடுமைப்படுத்துகிறார்: மாஜி டிஜிபி திலகவதி மகன் மீது மருமகள் சேலம் போலீசில் புகார்

சேலம்: பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி தமிழக மாஜி டிஜிபி திலகவதியின் மகன் மீது மருமகள் சேலம் போலீசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக் (48). இவரின் மனைவி சுருதி திலக் (40). இவரின் பெற்றோர் வீடு சேலம் அழகாபுரம் பிருந்தாவன ரோட்டில் உள்ளது. இன்று சுருதி திலக், தனது தந்தை கண்ணுசாமியுடன் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் … Read more

2 மணி நேரமாக காத்திருந்த மக்கள்.. எம்எல்ஏ வராததால் நூலகத்தை அவர்களே திறந்துவைத்த சம்பவம்!

நியாய விலை கடை மற்றும் நூலகம் திறப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ வராததால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்துக் கிடந்த பொதுமக்கள், அவர்களே நியாய விலை கடை திறந்து வைத்துள்ள சம்பவம் மேல்மருவத்தூர் அருகே நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கீழ்மருவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சக்தி ஸ்ரீநகர், எஸ்.வி.எஸ். நகர் ஆகிய பகுதியில் குடியிருப்புக்கான ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் நூலகம் சக்தி ஸ்ரீ நகரில் கட்டப்பட்டது. இந்த நியாய விலை … Read more

மாணவர்களே மறந்துடாதீங்க.. நாளை மதியம் 12 மணிக்கு ஹால் டிக்கெட்..!

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோபர் 10 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்கள் நாளை (செப். 29-ம் தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்களுக்கான ஹால்டிக்கெட்களை … Read more

பெரியார், அம்பேத்கர் சிலைகள் அமைக்க மக்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்: உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

மதுரை: தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை அமைக்க மக்கள் யாரும் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்று உயர் நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மேல் மாந்தையைச் சேர்ந்த திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பி.காலாடி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “என் வீட்டின் அருகே எனக்கு சொந்தமான இடத்தில் தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை நிறுவியிருந்தேன். 2007ல் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி நடைபெற்றதால் இரு சிலைகளும் … Read more

சீமான் தந்த ஐடியா; PFI அமைப்புக்கு சூப்பர் சான்ஸ்!

நாடு முழுவதும் 24 மாநிலங்களில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள் மற்றும் படுகொலைகளில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதன் பேரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த 22ம் தேதி அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் 45 பேர் கைது செய்யப்பட்டனர். … Read more

நரிக்குறவர் பெண்ணின் குழந்தைக்கு பெயர் வைத்து அழகு பார்த்த சேலம் மாவட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தாரமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் பங்கேற்றார. அப்போது அவரை சந்தித்த நந்தினி என்ற நரிக்குறவர் பெண் தான் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தனக்கு உரிய மருத்துவ வசதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களை அழைத்து அவருக்கு தேவையான மருத்துவ உதவி செய்யுமாறு உத்தரவிட்டார்.  இந்த நிலையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது … Read more

கொடுங்கையூரில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் நண்பர் கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

பெரம்பூர்: கொடுங்கையூரில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில், அவரை நாற்காலியில் அமரவைத்து கொன்ற நண்பரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் பகீர் தகவல்கள் வெளியாகின.சென்னை கொடுங்கையூர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, ஆதிவாசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (47). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி பெரியநாயகி (38),  2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் நண்பர் ஆறுமுகம் (40) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும் … Read more

இந்து முன்னணி பிரமுகர் கார் உடைப்பு.. அதே அமைப்பை சேர்ந்தவர் கைது..!

கோவை இந்து இளைஞர் முன்னணி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில், அதே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் தாக்குதல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 7 இடங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு … Read more

பல்கலை. பெயரிலுள்ள 'மனோன்மணியம்' பெயரை 'மனோன்மணீயம்' என மாற்ற பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெயரில், ‘மனோன்மணியம்’ என்பதை ‘மனோன்மணீயம்’ என மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த முத்து சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடியவர் மனோன்மணீயம் பி.சுந்தரம் பிள்ளை ஆவார். அவர் நினைவாக நெல்லையில் 1990-ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்தப் பெயரில் பிழை உள்ளது. அனைத்து புத்தகங்களிலும் பி.சுந்தரம் பிள்ளை இயற்றிய நாடகத்தின் பெயரும் மனோன்மணீயம் என்றே … Read more