கஞ்சா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைக்காக வாழ்க்கையை தொலைக்கும் இளைய சமுதாயம்; ஸ்டைலுக்காக ஆரம்பித்து பழக்கத்தை விட முடியாமல் தவிப்பு

பள்ளிகொண்டா: பறந்து விரிந்த இந்த மானுட உலகில் கடவுளால் மனிதன் படைக்கப்பட்டது அர்த்தமுள்ள ஒரு வாழ்வினை வழிப்போக்கன் போல் வாழ்ந்து விட்டு செல்வதற்கே. ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு உண்டாகும் சில விரக்திகளால் தவறான பாதைக்கு சென்று சீரழிந்து கொண்டு வருவது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. பிள்ளைகள் தவறான வழிக்கு செல்ல ஆரம்பிக்கும் போதே பெற்றோர்கள் அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களுடன் பழகும் நண்பர்களை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். … Read more

கன்னியாகுமரி: அரசுப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்திய ஆசிரியர் போக்சோவில் கைது

இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் எடுக்கும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ … Read more

'ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக உரிமை கொண்டாடுகிறது' – சசிகலா சாடல்

தஞ்சாவூர்: ஏழை, எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு தாம் செய்ததாகக் கூறி உரிமை கொண்டாடுவது நல்லதல்ல என்று சசிகலா விமர்சித்துள்ளார். அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு சசிகலா தனது தஞ்சாவூர் இல்லத்தில் இன்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடன் பல்வேறு கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்துப் பேசுகையில், “பேரறிஞர் அண்ணாவின் வழியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் செயல்பட்டனர். அதேபோல் அண்ணாவின் … Read more

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அடிக்கல்! ஸ்டாலின் தொடங்கி வைத்த பணிகள்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ. 70.57 கோடி மதிப்பில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார் மதுரையில் அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகருக்கு வருகை புரிந்தார். அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட … Read more

’அறிவுப்பசி போக்க வயிற்று பசி ஆற்றும் தமிழகம்’ நூற்றாண்டு கடந்து தொடரும் சமூகநீதி திட்டம்

கல்வி கற்க வரும் மாணவர்களின் பசியை போக்கும் உணவுத் திட்டம் இன்று நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. நீதிக்கட்சி தொடங்கி வைத்த இந்த திட்டத்தை தமிழக முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரும் தங்களின் ஆட்சிக்காலத்தில் அடுத்தடுத்து மேம்படுத்திக் கொண்டே வந்தனர். பசியால் ஒரு குழந்தை படிப்பை நிறுத்திவிடக்கூடாது, பசியை போக்கவாவது அவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட உன்னத திட்டம் இது.  வறுமையால் … Read more

கோவில்பட்டி அருகே பரபரப்பு; நடுரோட்டில் லாரி கவிழ்ந்து ரூ.3 லட்சம் முட்டைகள் நாசம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வாத்து முட்டைகள் உடைந்து நாசமாகின. லாரியை மீட்கும் பணி தாமதமானதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தஞ்சாவூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 50 ஆயிரம் வாத்து முட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் லாரி புறப்பட்டது. லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம், வடமருதூரைச் சேர்ந்த மனோஜ்குமார் ஓட்டினார். இதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் … Read more

விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிக்காக வைத்திருந்த மின் கம்பியில் சிக்கி பெண் யானை பலி

பாலக்காடு அருகே காட்டுப் பன்றிக்காக விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் ஏராளமான யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் படையெடுப்பது வழக்கம். இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் முத்தூர் அருகே உள்ள அச்சம் பள்ளி என்ற பகுதியில், விவசாயத் தோட்டம் அருகே வந்த பெண் யானை ஒன்று அங்கு காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் … Read more

தெலுங்கானாவில் உள்ள புலிக்கு தமிழகத்தில் முறம் வீசுகிறார் தமிழிசை : மீண்டும் விமர்சித்த தி.மு.க

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் தன்னை யாரும் அவமதிக்கவும் இல்லை தான் அவமானப்படவும் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில்தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்டது பேட்டி அல்ல சில ஆளுனர்களுக்கு சொன்ன பாடம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அப்பாவியாக இருப்பதாகவும், பேட்டி தரும்போது சில செய்திகளை … Read more

தேனி || பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.! போகோவில் கல்லூரி மாணவர் கைது.!

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மகாவிஷ்ணு(21). இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மகாவிஷ்ணு, தென்றல் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார்.  மேலும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மகாவிஷ்ணு, தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மாணவி … Read more

விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்

விருதுநகர்: விருதுநகரில் 2 லட்சம் சதுர அடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.15) அடிக்கல் நாட்டினார். மதுரையில் பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் வந்தார். மாவட்ட எல்லையான கே.உசிலம்பட்டி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர். Source … Read more