முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்? எடப்பாடி, ஓ.பி.எஸ்., இடையே போட்டி

முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்? எடப்பாடி, ஓ.பி.எஸ்., இடையே போட்டி Source link

தலைமைச் செயலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!

கும்பகோணம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால் தீக்குளிக்க முயற்சி! கும்பகோணத்தை சேர்ந்த விமலா என்ற பெண் தன் குடும்பத்தினருடன் தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ளே நுழைந்த அவர் நான்காவது நுழைவாயில் அருகே வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்துள்ளனர்.  பிறகு விமலாவை … Read more

ரூ.12 லட்சம் கடனால் வீடு ஜப்தி.. நோட்டீஸ் வந்த 2 மணி நேரத்தில் கிடைத்த ரூ.70 லட்சம்..!

கேரளாவில், 12 லட்சம் ரூபாய் வங்கிக் கடனை கட்ட முடியாதவருக்கு 2 மணி நேரத்தில் ரூ.70 லட்சத்துக்கான லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி பூக்குஞ்சு (40). மிகவும் வறுமையில் இருக்கும் இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கார்பரேசேன் வங்கியிலிருந்து வீடு கட்டுவதற்காக ரூ. 7.45 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால், அவரால் கடன் தொகையை திரும்ப செலுத்த இயலவில்லை. இதன் காரணமாக அவர் வாங்கிய கடன் வட்டியுடன் … Read more

கைக்குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்த இளம்பெண்.. தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 8 மாத கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வதற்காக கிணற்றில் குதித்த இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. அண்ணாபுரம் வடக்குக்காடு பகுதியை சேர்ந்த செல்வக்குமார்- தேன்மொழி தம்பதிக்கு, திருமணமாகி 7 வருடங்களுக்கு பின், ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தேன்மொழி தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். குழந்தை நீரில் மூழ்கி இறந்துவிட்டது. … Read more

நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் தேவைப்பட்டால் நேரில் விசாரணை: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தைகள் பிறந்த மருத்துவமனை கண்டறியப்பட்டுள்ளது என்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருநங்கைகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதில் தேசிய மருத்துவ ஆணையம் சில விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் … Read more

ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம்: ராமதாஸ் கோரிக்கை!

சென்னை ஆதம்பாக்கம் சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு தலைக் காதல் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நிறுவனர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, அவரது தந்தை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த … Read more

PFI Ban​: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு அலுவலகங்களுக்கு சீல்

கோவை: கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம்  தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது பலர் கைது செய்யப்பட்டு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் … Read more

சேலத்தில் பெய்த கனமழையால் மாநகரில் முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்-வாகனங்கள் பழுதாகி நின்றது

சேலம் : சேலத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால் மாநகர பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீரில் மூழ்கிய வாகனங்கள் பழுதடைந்து சாலைகளில் நின்றதால் மக்கள் சிரமத்தில் ஆழ்ந்தனர். குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. சேலத்தை பொறுத்தமட்டில் கடந்த 11ம் தேதி இரவு விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இந்த நிலையில் நேற்று … Read more

ஆசை காட்டி மோசம் செய்துட்டார்.. மாஜி அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை..!

என்னை பார்த்துக் கொள்வேன் என்று கூறியதால்தான் வழக்கை வாபஸ் பெற்றேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார் எனக்கூறி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை நடிகை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த அடையாறு … Read more

கடலூர் மாவட்டத்தில் எம்ஜிஆர் சிலையை உடைத்த மர்மநபர்கள்… பரபரப்பு சம்பவம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த மருதத்தூர் கிராமத்தில், எம்.ஜி.ஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால், அங்கு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தகவலறிந்து அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழி வர்மன், சேதமடைந்த சிலையை பார்வையிட்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source link