நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : நாளை வாக்குப்பதிவு <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : நாளை வாக்குப்பதிவு –>

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் மொத்தமாக 57ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவும், 7 மணிக்கு வாக்குப்பதிவும் நடைபெறும். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தோர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more

மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு காட்சிப்படுத்தப்படும் குடியரசு தின அலங்கார ஊர்திகள்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பும் தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி கூறியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் … Read more

வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த சாரைப்பாம்பு: அச்சத்துடன் பணியாற்றும் ஊழியர்கள்

கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் நகராட்சி வாக்கு எண்ணும் மைய பணியின்போது பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம், வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தை கடந்த 10 நாட்களாக தயார் செய்து வரும் நிலையில், இன்று இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரி கார்டுகளையும், மர பலகைகளையும் தொழிலாளர்கள் எடுத்தனர். அப்போது … Read more

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது- உச்ச நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்திய தமிழக அரசு!

வனவிலங்குகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களை புறக்கணித்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் பதற்றமான சுற்றுச்சூழல் மண்டலத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தை (ஐஎன்ஓ) அமைக்க விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த திட்டம் கூச்ச சுபாவமுள்ள புலிகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு “பெரிய” மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு கூறியது. தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், அமையவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து … Read more

இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!!

கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நாளை தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என … Read more

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 47 பேர் விடுவிப்பு <!– இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 47 பேர் விடுவிப்பு –>

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, கடந்த டிசம்பர் மாதம் தமிழக மீனவர்கள் 56 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த வாரம் 9 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி, சொந்த ஊர் திரும்பிய நிலையில், மேலும் 47 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களுக்கு வரவேற்பு அளித்த மீன்வளத்துறை அதிகாரிகள் தனி வேன் … Read more

அஞ்சல்துறை தபால் பிரிக்கும் பணி: 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்- சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

மதுரை: அஞ்சல்துறை; தபால் பிரிக்கும் பணிக்கு தேர்வானவர்களில் 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.தேர்வுகள் மையப்படுத்தப்படாமல் மாநில அளவில் நடத்தப்பட வேண்டும்.இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அஞ்சல் துறையில் தமிழ் நாட்டில் அஞ்சல் உதவியாளர்களாக, தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக 10.02.2022 வெளியிடப்பட்டுள்ள 946 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலின் நிலைமை … Read more

சென்னை: 2021-ல் சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

இலங்கை கடற்படையால் 2021 ஆண்டு சிறைபிடிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட் நிலையில், இன்று அதிகாலை விமானம் மூலம் தமிழகம் திரும்பினர். கடந்த டிச.19, 2021ல் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 56 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், 27 பேர் ராமநாதபுரத்தையும், 20 பேர் புதுக்கோட்டையையும் சேர்ந்தவர்கள். மீனவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ராமேஸ்வரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் … Read more

இந்திய மகளிர் கிரிக்கெட் அப்டேட்.. உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை.. மேலும் செய்திகள்

ஒரு நாள் தொடர்: தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து மகளிர் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள்  கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. நியூசிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒரு … Read more