ஹேன்ட் பிரேக் போடாததால் லாரி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு – அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கோவையில் ஹேன்ட் பிரேக் போடாமல் லாரியை நிறுத்தியதால், அதன் ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கருமத்தம்பட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில், சேலத்தை சேர்ந்த சுரேஷ்பாபு என்ற லாரி ஓட்டுநர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, ஹேன்ட் பிரேக் போடாமல் இயற்கை உபாதை கழிக்க சுரேஷ்பாபு சென்ற போது, எதிர்பாராதவிதமாக லாரி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவு… சென்னையில் குறைந்த வாக்குப்பதிவு; முழு விவரம்

தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா தொற்று பதித்தவர்கள் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை வாக்களிக்கத்தனர். 11 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வரிசையில் நின்று … Read more

தமிழக அரசு துறையில் தனியார் மயம் – முதல்வர் ஸ்டாலின்.! பறிபோகும் அரசுப்பணி., வெளியான அதிர்ச்சி அறிக்கை.!

தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பணியிடங்களைக் குறைத்து, தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாக வெளியாகி வரும் நம்பத்தகுந்த செய்திகள் பெரும் கவலையும், மிகுந்த ஏமாற்றமும் அளிக்கின்றன. நில அளவை பணியாளர்களின் நலன்கள் எந்த காரணத்திற்காகவும் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கான பணியாளர்கள் மற்றும் … Read more

சம்பள பாக்கி கேட்ட காவலாளி எரித்துக் கொலை.! நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேருக்கு போலீசார் வலை <!– சம்பள பாக்கி கேட்ட காவலாளி எரித்துக் கொலை.! நிறுவன உரிமைய… –>

கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரத்தில் சம்பள நிலுவைத் தொகையை கேட்ட காவலாளியை எரித்துக் கொன்றதாக செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையை சேர்ந்த ரத்தினவேலு என்பவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள எஸ்.எஸ். செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், சில மாதங்களாக நிறுவனம் முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நிறுவன உரிமையாளர் திலீப்குமார் மற்றும் கள அதிகாரியிடம் சம்பளம் கேட்டதற்கு இருவரும் ரத்தினவேலுவை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரத்தினவேலுவை தாக்கி … Read more

கோயில் அறங்காவலரை நியமிக்க என்ன நடைமுறை?- அரசு அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கோயில்களில் நிரப்பப்படாமல் உள்ள அறங்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும், இந்த நியமனங்களை கண்காணிக்க முன்னாள் நீதிபதி தலைமையில், அறநிலையத் துறைஅதிகாரிகள் அடங்கிய குழுவைஅமைக்கக் கோரியும் ரங்கராஜன்நரசிம்மன் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்தவழக்கு மீதான … Read more

கச்சத்தீவு ஆண்டு விழாவில் தமிழர்கள் பங்கேற்க தடையா? – உரிய நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கடிதம்

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறும் ஆண்டு விழாவில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.  கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தில் நடக்கும் ஆண்டுவிழாவில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களும் பங்கேற்பது வாடிக்கை என்றும், வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ஆண்டுக்கான விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை விதித்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக … Read more

Tamil News Today Live: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவு

Go to Live Updates Tamil Nadu News Updates: தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% சதவீத வாக்குகளும், மாநகராட்சிகளில் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. பாஜக பூத் முகவர் மேலூர் கிளைச்சிறையில் அடைப்பு வாக்குச்சாவடியில் பிரச்னை செய்த புகாரில் கைதான பாஜக பூத் முகவர் கிரி ராஜன் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மேலூர் கிளைச்சிறையில் அடைப்பு – மார்ச் 4ம் … Read more

மதுரை : ஹிஜாப் சர்ச்சையில் சிக்கிய பாஜக முகவருக்கு 14 நாட்கள் நீதிமன்றகாவல்..!

ஹிஜாப் அணிந்து வாக்களிக்க கூடாது என கூறிய பாஜக முகவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சிகள் சுயேச்சைகள் என பல முறை போட்டி நிலவியது. இந்நிலையில், நேற்று மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8வது வார்டில் வாக்குப் பதிவு செய்வதற்காக இஸ்லாமிய பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அந்த அதில் இருந்த பாஜக முகவரி நந்தன் என்பவர் அந்தப் … Read more