'உயிரோடு எரித்துவிடுவேன்' – அரசியல்வாதிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த எழுத்தாளர் – காரணம் என்ன?

இஸ்தான்புல், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து மாதக்கணக்கில் போர் நீடித்து வருகிறது. இந்த போரையடுத்து ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளன. அமெரிக்காவை தலைமையாக கொண்ட நேட்டோ ராணுவ அமைப்பில் துருக்கி உறுப்பு நாடாக உள்ளது. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் மட்டுமே புதிய உறுப்பு நாடுகள் நேட்டோவில் சேர முடியும். ஆனால், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய முட்டுக்கட்டையாக உள்ளது. நாங்கள் பயங்கரவாத இயக்கமாக … Read more

அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கி சூடு….! ஒரே ஆண்டில் 44,000 பேர் பலி!

கலிபோர்னியா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இதில், கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபரின் ஓட்டல் ஒன்று உள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் ஆண்டுதோறும், 2 நாட்கள் சீனாவின் சந்திர புதுவருட திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில், லட்சக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது வழக்கம். இதேபோன்று, நடந்த முதல் நாள் திருவிழாவின்போது, அந்த ஓட்டலில் நேற்று இரவு சீன புதுவருட தினம் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு … Read more

பாகிஸ்தானில் மகளை சுட்ட தந்தை கைது| Father arrested for shooting daughter in Pakistan

கராச்சி, பாகிஸ்தானில், நீதிமன்றத்திலேயே புது மணப்பெண்ணான மகளை சுட்டுக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மலைவாழ் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண், சமீபத்தில் டாக்டர் ஒருவரை காதல் திருமணம் செய்தார். இதை பெற்றோர் ஏற்காத நிலையில், வீட்டில் இருந்து வெளியேறிய இவர், கராச்சியில் கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில், தான் விருப்பப்பட்டு திருமணம் செய்தது குறித்து கூறுவதற்காக, இவர் நேற்று கராச்சியில் உள்ள நீதிமன்றத்துக்குச் சென்றார். அப்போது, அங்கிருந்த … Read more

மே-14 ஆம் தேதி துருக்கியில் அதிபர் தேர்தல்.. எர்டோகன் மீண்டும் போட்டி..!

துருக்கியில், மே 14 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலும், அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது. பள்ளி தேர்வுகளை முன்னிட்டு, ஒரு மாதம் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அதிபர் தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு முதல் பிரதமராகவும், 2014 ஆம் ஆண்டு முதல் அதிபராகவும் பதவி வகித்துவரும் எர்டோகன் மீண்டும் அதிபர் தேர்தலில் களம்காண்கிறார். விலைவாசி உயர்வை முன்னிட்டு மக்கள் மத்தியில் நிலவிவரும் அதிருப்தியால் இந்த தேர்தல் அவருக்கு பெரும் சவாலாக இருக்கும் என … Read more

கனடா: விஜய் மக்கள் இயக்கத்திற்கு பர்லிங்டன் நகர மேயர் பாராட்டு

கனடாவில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் செய்துவரும் இரத்ததான முகாம், உணவு வழங்குதல் உள்ள சமூகல நலப்பணிகளை ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு பாராட்டியுள்ளார். மிகச் சிறப்பான முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்த சமூக நலப்பணிகளை அவர்கள் தொடர வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். Source link

ஜப்பானில் குறைந்த பிறப்பு விகிதம்; பிரதமர் கவலை.!

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி, உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது. மேலும், இது 2080களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்றும் 2100 வரை அந்த நிலையில் இருக்கும் என்றும் அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான … Read more

பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் நாள் முழுக்க மின்சாரம் துண்டிப்பு

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் நாள் முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின் பகிர்மான நிலையத்திலுள்ள ஜெனரேட்டர்களை முறையாக பராமரிக்காததால், தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு, காலை முதலே கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலம் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர். மருத்துவமனைகளில், எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ கருவிகளை இயக்கமுடியாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இரவு 10 மணிக்குள் மின் விநியோகம் சீரடைந்துவிடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Source … Read more