ரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை

மாஸ்கோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இருவரும் காணொலி காட்சி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். உக்ரைனுடனான போர் காரணமாக … Read more

year ender 2022: உலகை உலுக்கிய, வியப்பில் ஆழ்த்திய நிகழ்வுகள் ஓர் மீள்பார்வை!

2022 இல் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த அகிலத்தை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்திய முக்கிய நிகழ்வுகள், சம்வங்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு. வெப்ப அலையில் சுருண்ட ஐரோப்பா பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் குளிர் காலமாகவே இருப்பது வழக்கம். இந்த வழக்கத்துக்கு மாறாக, 2022 ஆண்டில் ஐரோப்பிய நாடுகளை வெப்பம் வாட்டி வதைத்தது. பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, போலந்து உள்ளிட்ட நாடுகலில் எழுந்த வெப்ப அலை பொதுமக்களை வாட்டி … Read more

இதுவரை இல்லாத அளவிற்கு உக்ரைனை ஏவுகணைகளால் துளைத்தெடுத்த ரஷ்யா..!

கீவ் உள்பட பல உக்ரைன் நகரங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய தாக்குதலை ரஷ்யா நடத்திய நிலையில், அத்தாக்குதலை உக்ரைன் ராணுவம் முறியடித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில், 85 ஏவுகணைகள் மூலமும், 63 முறை பல ராக்கெட் அமைப்புகள் மூலமும், 35 முறை வான்வெளியாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்தியாதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து சுமார் 120 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில், 18-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்களும், 10 … Read more

உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்காது; சீன அதிபர் புடினுக்கு விளக்கம்.!

போர் மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து ரஷ்யா சீனா இடையே இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக ரஷ்யா தெரிவித்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்த வாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுபோவதாக் ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். அதன்படி இருநாட்டுட் தலைவர்களும் இன்று காணொளி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தினர். உக்ரைன் மீதான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பாதை சுமூகமாக இருக்காது என்றும், இந்த விவகாரத்தில் சீனா தனது … Read more

சீனாவுடன் ராணுவ, அரசியல் உறவை வலுப்படுத்த நம்பிக்கை தெரிவித்த ரஷ்ய அதிபர்..

சீனாவுடனான, ராணுவ மற்றும் அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பை பலப்படுத்த விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற சந்திப்பில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், எதிர்கொள்ள ரஷ்யாவுடன், சீனா இணைந்து எடுத்துவரும் முயற்சிகளுக்கு புதின் பாராட்டு தெரிவித்தார். மேலும், ரஷ்யாவிற்கு அரசுமுறை பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகையை எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே, இக்கட்டான … Read more

2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா: ஜெய்சங்கர் உறுதி| Our goal is to make India a major manufacturing hub and to emerge as a $5 trillion economy by 2025

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நிகோசியா: 2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்காக நிர்ணயித்துள்ளோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியாக கூறியுள்ளார். சைப்ரஸ் சென்றுள்ள ஜெய்சங்கர், நிகோசியா நகரில் நடந்த தொழில் மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது: உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மூலம் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீட்டிற்கான வலுவான இலக்குகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியது. … Read more

ஆங் சான் சூச்சிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை: மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு

நேபிதாவ்: மியான்மரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சான் சூச்சி-க்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மியான்மரில் ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராகவும், அந்நாட்டின் ஆட்சியாளராகவும் இருந்தவர் ஆங் சான் சூச்சி. இவரது ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்தது. மேலும், ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியது உள்பட 14 குற்றச்சாட்டுக்களைக் கூறி அவரை வீட்டுச் சிறையில் அடைத்தது. அதோடு, மேலும் 19 … Read more

இனிமேலும் சீனாவை நம்ப முடியாது; அமெரிக்கா முக்கிய நகர்வு.!

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, சுகாதாரத் துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய பரவலுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வகை தொற்றால், அடுத்த மூன்று மாதங்களில், சீனாவின் … Read more

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மியான்மர் நீதிமன்றம்!

யாங்கூன்: மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஆட்சியாளருமான ஆங் சான் சூகிக்கு ஊழல் குற்றச்சாட்டில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியான்மரில் உள்ள ராணுவ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. 18 மாதங்களாக நீடித்த வழக்கு விசாரணைக்கு பிறகு அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது மொத்த தண்டனை 33 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் சூகிக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020ம் ஆண்டு நடந்த … Read more

சீனாவில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா; உலக சுகாதார அமைப்பு கவலை!

சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை … Read more