மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 குழந்தைகள் அட்மிட்! – என்ன நடக்கிறது சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில்?
திருச்சி மாம்பழச்சாலை அருகே `சாக்சீடு குழந்தைகள் இல்லம்’ செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தைகள் சைல்டு லைன் மற்றும் மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவினரால் மீட்கப்பட்டு, இந்த சாக்சீடு குழந்தைகள் இல்லத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் இந்தக் காப்பகத்தில் தற்சமயம் 35 குழந்தைகள் இருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தக் காப்பகத்திலுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு, 8 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, மருத்துமனையில் அனுமதித்து … Read more