மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 குழந்தைகள் அட்மிட்! – என்ன நடக்கிறது சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில்?

திருச்சி மாம்பழச்சாலை அருகே `சாக்சீடு குழந்தைகள் இல்லம்’ செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தைகள் சைல்டு லைன் மற்றும் மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவினரால் மீட்கப்பட்டு, இந்த சாக்சீடு குழந்தைகள் இல்லத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் இந்தக் காப்பகத்தில் தற்சமயம் 35 குழந்தைகள் இருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தக் காப்பகத்திலுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு, 8 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, மருத்துமனையில் அனுமதித்து … Read more

தமிழகத்திலுள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் 29 சுங்கச்சவாடிகளில் 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை சுங்க கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கார்கள் தொடங்கி கனரக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணங்கள் 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், செங்குன்றம், பட்டறை … Read more

திமுக ஆட்சி காலத்தில் காவிரி – வைகை – குண்டாறு இணைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு பணிகளை முடித்தே தீருவோம் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில், நேரமில்லாநேரத்தில், காவிரி – வைகை -குண்டாறு இணைப்பு திட்டப்பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில், அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, ‘‘7 மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பான இத்திட்டத்தை செயல்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில், ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிடப்பட்டு, ரூ.6,441 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் … Read more

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த கேரளா எதிர்ப்பு

திருவனந்தபுரம்: இந்தியாவின் திருமண சட்டங்களின்படி பெண்ணின் திருமண வயது 18, ஆணின் வயது 21 ஆக உள்ளது. இந்த சூழலில் பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்ய சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜேட்லி தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு கடந்த 2021-ம்ஆண்டில் மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. ஜெயா ஜேட்லி குழு அளித்த பரிந்துரைகளின்படி பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை … Read more

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; எடப்பாடி தலைமையில் முக்கிய முடிவுகள்!

அதிமுக என்றாலே பிரதான எதிர்க்கட்சி என்பதை தாண்டி, சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டதா? என்று தான் கேட்க தோன்றுகிறது. அந்த அளவிற்கு கடந்த ஜூலை 11, 2022 தொடங்கி தற்போது வரை சட்ட சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. கடைசியாக அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை என்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். நீதிமன்ற வழக்குகள் இதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், … Read more

Viduthalai: விடுதலை படத்தில் நடித்ததற்கு சூரி வாங்கிய சம்பளம்..இவ்வளவு தானா ?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி தற்போது ஒரு ஹீரோவாக உயர்ந்துள்ளார். விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி நாயகனாக நடித்த முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தியுள்ளார். திரைத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல வருடங்களாக போராடி வந்த சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதற்கு முன்பு பல … Read more

ஏப்ரல் 02: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 316-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 316-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது குருத்தோலை பவனி விழா!

நாகப்பட்டினம்: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக குருத்தோலை பவனி விழா தொடங்கியது. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 2 பேர் உயிரிழந்துள்ளார், 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்

பெங்களூரு: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி கட்சியை சேர்ந்த ஏ.டி. ராமசாமி பாஜவில் இணைந்தார். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரகலகூடு மஜத எம்எல்ஏ ஏடி ராமசாமி நேற்று முன்தினம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து டெல்லி சென்ற ஏடி ராமசாமி பாஜ கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஏடி ராமசாமிக்கு கட்சியின் கொடியை அணிவித்து வரவேற்றார். அதன் பிறகு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரையும் … Read more