காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை சாதியைக் குறிப்பிட்டு தரக்குறைவாக பேசியதாக, பேராசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசியைச் சேர்ந்த சண்முகராஜா, இக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது துறையில் பயிலும் மாணவ, மாணவிகளை சாதியைக் குறிப்பிட்டு ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர், கடந்த பிப்ரவரி 17ம் தேதி பேராசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக வீடியோவும் வெளியானது. இது தொடர்பாக மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் … Read more

நாட்டின் சமூகநீதிக்கு வழிகாட்டிய போராட்டம் – கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

சென்னை: நாட்டின் சமூகநீதிக்கு வழிகாட்டியது வைக்கம் போராட்டம் என்று கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நேற்று `வைக்கம் சத்தியாகிரகப் போராட்ட நூற்றாண்டு விழா’ நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து கொச்சி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, கேரள தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவி, மாவட்ட ஆட்சியர் எஸ்.கே.உமேஷ், திமுக கேரள மாநிலச் செயலாளர் முருகேஷ், தலைவர் மோகன்தாஸ் … Read more

எளிதில் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளவர்களுக்கு கூடுதல் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை

புதுடெல்லி: கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர் கள், கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் நோய்த் தடுப்புக்கான நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள வழிகாட்டு தல்களில் கூறியிருப்பதாவது. முதியோர், இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு உட் பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முன்கள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இவர்கள் பூஸ்டர் தடுப்பூசி … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி? மூன்று வாரங்களில் கிடுகிடு ஏறுமுகம்!

கொரோனா வைரஸ் என்றாலே ஒருவித கலக்கம் மனதிற்குள் இருக்கத்தான் செய்கிறது. மூன்று அலைகள், பல லட்சம் உயிர்கள், தீராத மன உளைச்சல், பெரும் பொருளாதார இழப்பு என சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் முடிந்தது. இனி கொரோனா வராது என நம்பிக்கை நிலவிய சூழலில் 2023ஆம் ஆண்டு சற்றே பதற்றத்தை கூட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக ஏறுமுகத்தை நோக்கி சென்றுள்ளது. … Read more

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படங்கள்!

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிம்பு நடிப்பில் ‘பத்து தல‘ மற்றும் சூரி நடிப்பில் ‘விடுதலை’ போன்ற இரண்டு பெரிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.  இதுதவிர இந்த மாதத்தில் மற்ற சில படங்களும் வெளியாகியுள்ளது, அவை இப்போது இந்த வார இறுதியில் ஓடிடி தளங்களில் காண கிடைக்கிறது.  இப்போது ஓடிடி-யில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம். பகீரா: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ஒரு உளவியல் காதல் திரில்லர் படம் தான் ‘பகீரா’.  இப்படத்தில் பிரபுதேவா, அமைரா … Read more

ரஷ்யா, உக்ரைன் இடையே அதிகரித்துள்ள ட்ரோன் தாக்குதல்கள்.. எதிரி வீரர்களைக் கண்டறிந்து, டேங்குகள் மீது குண்டு வீசும் ட்ரோன்கள்!

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிநவீன ட்ரோன்கள் மூலம் அதிகப்படியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த ஒரு வருடத்தில், ,இத்தகைய ட்ரோன்கள் போரின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர் நாட்டு வீரர்கள் பதுங்கியிருக்கும் இடங்களைக் கண்டறிதல், டேங்குகள் மீது சிறிய குண்டுகளை வீசி பெரும் சேதத்தை விளைவித்தல் போன்றவை ட்ரோன்கள் மூலம் நடத்தப்படும் முன்னணித் தாக்குதல்களாகும். க்ரோன்ஸ்டட், ஆர்லன் 10, எலரான் 3 உள்ளிட்ட ட்ரோன்கள் … Read more

நாடு முழுவதும் மீண்டும் பரவும் கொரோனா… முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ள சுகாதார அமைச்சகம்!

நாடு முழுவதும் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கிய நிலையில் சுகாதார அமைச்சகம் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால் ஆன்ட்டி பயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களும் கோவிட் பாதிப்புக்கு இணை பாதிப்புகள் குறித்து கவனமாக செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மிதமான நோய்க்கூறு இருப்பவர்களுக்கு ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. Source link

தலிபான்களின் கொடூர ரகசிய பொலிசாரிடம் சிக்கிய 3 பிரித்தானியர்கள்: கலக்கத்தில் குடும்பம்

ஆபத்தான சுற்றுலாப்பயணி என அறியப்படும் பிரித்தானிய இளைஞர் உட்பட மூவரை தலிபான்களின் கொடூர ரகசிய பொலிசார் கைது செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தூதரக ரீதியான நடவடிக்கை இதில், ஆபத்தான சுற்றுலாப்பயணி என அறியப்படும் 23 வயதான Miles Routledge, தொண்டுநிறுவனம் சார்பில் மருத்துவ உதவிகளை மேற்கொள்ளும் 53 வயதான கெவின் கார்ன்வெல் மற்றும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான ஹொட்டல் ஒன்றை நடத்திவரும் பிரித்தானியர் ஒருவரும் சிக்கியுள்ளார். @PA இந்த விவகாரம் தொடர்பில் தூதரக … Read more

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: லக்னோ அணி வெற்றி

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணிக்கு 194 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயித்தது. பின்னர் டெல்லி அணி 20 ஓவர்களில் முடிவில் 143 ரன்கள் எடுத்த நிலையில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்கும் … Read more

தீண்டாமை வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை ஜாமீனுக்கு முன் பரிசீலிக்க வேண்டும்: 2 ஆண்டுக்கு முன் வழங்கிய ஜாமீன் ரத்து

மதுரை: தீண்டாமை வன்கொடுமை வழக்கில் ஜாமீன் வழங்கும் முன் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே சாம்பிராணிபட்டியில் உள்ள நிலத்தின் மீதான உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது. கடந்த 24.2.2020ல் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியில் ஒரு தரப்பினர் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது எஸ்சி – எஸ்டி … Read more