டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நமீபியா

பார்படாஸ், 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – நமீபியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது தொடக்கத்தில் ஜேபி கோட்ஸே ரன் எதுவும் எடுக்காமலும் , ஜான் ப்ரைலின்க் 12 ரன்களிலும் , நிகோலாஸ் டேவின் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த கேப்டன் ஹெகார்ட் … Read more

தைவான் அதிபரின் வாழ்த்துக்கு பதிலளித்த மோடி – எதிர்ப்பு தெரிவித்த சீனா

பீஜிங், இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு தைவான் அதிபர் லாய் சிங்-டே வாழ்த்து தெரிவித்திருந்தார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வேகமாக வளர்ந்து வரும் தைவான்-இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்துவதையும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் … Read more

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கு: மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரை

சென்னை: குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை, மீண்டும் மற்றொரு இரு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்து மூன்றாவது நீதிபதியான ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று அவரை குண்டர் … Read more

ரூ.1 லட்சம் உத்தரவாத அட்டை கேட்டு லக்னோ காங். அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

லக்னோ: ரூ.1 லட்சம் பணம் பெறுவதற்கான உத்தரவாத அட்டை கேட்டு, லக்னோ காங்கிரஸ் அலுவலகத்தில் பல பெண்கள் நேற்று வரிசையில் நின்றனர். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ வீட்டுக்கு வீடு உத்தரவாதம்’ என்ற திட்டத்தை உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் 25 உத்தரவாதங்கள் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 8 கோடி வீடுகளுக்கு சென்று குடும்பத் தலைவிகளிடம் உத்தரவாத அட்டைகளை காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். அதில் வறுமைக்கோட்டுக்கு கீழ் … Read more

ஜனநாயகத்தையும் மாநில நலனையும் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்… தெலுங்கு தேசம் எம்.பி.க்களுக்கு சந்திரபாபு நாயுடு அறிவுரை

நாடாளுமன்ற மற்றும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, “ஜனநாயகத்தையும் மாநில நலனையும் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். மேலும், “இதற்கு முன் முதலமைச்சரை பார்க்க முடியாமல் மக்கள் … Read more

ஜாலியா ஹாங் காங் டூர் முடிச்சுட்டு கிளம்புன விக்கி- நயன்; பிரச்னையை இழுத்துவிட்ட ஏர் இந்தியா!

சென்னை: தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பின்னர் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள் காத்து வாக்குல ரெண்டு காதல், போன்ற படங்களையும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் அந்தாலாஜி படமாக உருவாகிய பாவ கதைகளில் லவ் பண்ணா விட்ரனும் என்ற பகுதியை விக்னேஷ்

பங்குச்சந்தை மோசடி… ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்முறையாகத் தேர்தல் நேரத்தில் பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததைக் குறிப்பிட்டோம். பங்குச்சந்தை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். ஜூன் 4 ஆம் தேதி பங்குச் சந்தை உயரும் என்றும், நீங்கள் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி கூறினார், … Read more

சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த அமெரிக்கா

டல்லாஸ், 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான், அறிமுக அணியான அமெரிக்காவுடன் விளையாடியது. டல்லாஸ் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கத்தில் முகமது ரிஸ்வான் 9 ரன்களும் , உஸ்மான் கான் 3ரன்களும் , பகர் ஜமான் 11 ரன்களும் … Read more

இளவரசி கேத் மிடில்டன் இனி அரச கடமைகளுக்கு திரும்ப மாட்டார்- வெளியான பரபரப்பு தகவல்

லண்டன்: இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு (வயது 42) கடந்த ஜனவரி மாதம் வயிற்று பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு, தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார். வயிற்றுப்பகுதியில் செய்யப்பட்ட ஆபரேசனுக்கு பிறகான சோதனையின்போது புற்றுநோய் பாதிப்பு … Read more

பெறுமதியான பல நன்மைகளுடன் ஜயகாமு ஸ்ரீலங்கா திருகோணமலையில்…

பெறுமதியான பல நன்மைகளுடன் ஜயகாமு ஸ்ரீலங்கா, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் ஜூன் 7 மற்றும் ஜூன் 8 ஆம் திகதிகளில் திருகோணமலை “மக்கைசர்” விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. “ஜயகமு ஸ்ரீலங்கா டிஜிட்டல் மயமாக்கலுடன் தொடர்புடைய புதிய தொழில் உலகத்திற்கு ஏற்ற அறிவார்ந்த இலங்கை தொழிலாளர்களின் தலைமுறையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் இத்தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ … Read more