”DMK FILES PART TWO கோவையில் வெளியிடப்படும்..” – அண்ணாமலை..!

DMK FILES PART TWO கோவையில் வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,28-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய செங்கோல் அங்கே செல்ல இருக்கிறது என்றார் தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் கரூரில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ள அண்ணாமலை, இதற்கு முழு பொறுப்பையும் திமுக … Read more

நடுவானில் விமானத்தின் அவசர கால கதவை திறந்து காத்து வாங்கிய பயணி….!

194 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகாலக் கதவை பயணி ஒருவர் திடீரெனத் திறந்ததால், பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். தென் கொரியாவில் ஜேஜூ என்ற தீவில் இருந்து அந்த விமானம் டாயேஜூ என்ற நகருக்கு பறந்துக் கொண்டிருந்தது. ஒருமணி நேரப்பயணத்திற்குப் பின் தரையிறங்குவதற்காக 700 அடி உயரத்தில் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது பயணி கதவைத் திறந்துவிட்டார். இதையடுத்து அவரை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்தனர்.விமானத்தில் பயணிகள் எடுத்த … Read more

ஏர் இந்தியாவின் டெல்லி-சிட்னி விமானத்தில் 224 பயணிகளை அச்சமூட்டிய கொந்தளிப்பு…!

ஏர் இந்தியாவின் டெல்லி-சிட்னி விமானத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புகள் தொடர்பான விசாரணையில் அன்று விமானத்தை ஓட்டிய இரண்டு விமானிகளையும் முழுமையான விசாரணை நிறைவடையும் வரை பணியிடை நீக்கம் செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மே 16ம் தேதி அந்த விமானத்தில் பலமுறை ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக ஏழு பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விமானத்தில் மொத்தம் 224 பயணிகள் இருந்தனர்.  Source link

ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிபா மாகாணத்தில் இருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவானது. இதன் தாக்கம் தலைநகர் டோக்கியோவில் கடுமையாக உணரப்பட்டதன் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. இதையடுத்து ரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. மேலும், டோக்கியோவுக்கான சர்வதேச நுழைவாயிலான நரிட்டா விமான நிலையத்தில் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி … Read more

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடிய நபரை சுட்டு பிடித்த போலீசார்

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். குந்தலாடிப் பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த தனிப்பிரிவு போலீசார் ஷியாபுதின், அன்பழகன் ஆகியோர் அதிகாலை நேரத்தில் டாஸ்மாக் கடை திறந்திருந்ததையடுத்து, அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, இரண்டு பேர் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க முயற்சித்தபோது, கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் 2 போலீசாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கியால் காலில் … Read more

விமானம் தரையிறங்கும் போது அவசரகால கதவை திறந்த பயணி.. கைது செய்த போலீசார்..!

தென்கொரியாவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில், விமானத்தின் அவசர கால கதவை திறந்துவிட்ட பயணியை போலீசார் கைது செய்தனர். ஜேஜு தீவில் இருந்து 194 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டேகு சர்வதேச விமான நிலையத்தை தரையிறங்கிய போது, அதிலிருந்த ஒரு நபர் திடீரென கதவை திறந்துவிட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர். விமானம் தரையிறங்கியவுடன் விமானத்தின் கதவை திறந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விமானம் … Read more

மனித மூளையில் சிப் பொருத்தி பரிசோதிக்கும் முறைக்கு அமெரிக்காவின் FDA அனுமதி

மனித மூளையில் சிப் பொருத்தி சோதனை செய்யும் முறைக்கு அமெரிக்காவின் FDA அமைப்பின் அனுமதி கிடைத்துள்ளதாக எலன் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் அறிவித்துள்ளது. மூளையில் சிப் பொருத்துவதன் மூலம் ஆட்டிஸிம், உடல் பருமன், மன அழுத்தம், மனக்கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தலாம் என கடந்த ஆண்டு எலன் மஸ்க் தெரிவித்திருந்தார். மிகவும் பாதுகாப்பான முறையில் சிப் பொருத்தப்படும் என்றும், தனது குழந்தைகளுக்கு கூட அதனை பொருத்தலாம் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த பரிசோதனை தொடர்பாக FDA எனப்படும் உணவு … Read more

திருடி விடுவார்களோ என அச்சம்.. பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 பழமையான கார்கள் ஏலம்..!

வெளி உலகிற்கு தெரியாமல், பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 பழமையான கார்கள் நெதர்லாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளன. பழமையான கார்களை சேகரிப்பதை வாடிக்கையாகக் கொண்ட பால்மென், அவற்றை யாரேனும் திருடி விடுவார்களே என்ற அச்சத்தில், எங்கேயும் எடுத்து செல்லாமல் குடோனில் ரகசியமாக மறைத்து வைத்துள்ளார். அதனால், கார்கள் பழுதாகிவிடக்கூடாது என்பதற்காக கார் எஞ்சினை முறையாக ஸ்டார்ட் செய்துவந்துள்ளார். வயதாகி நோய்வாய்பட்டதாலும், வாரிசுகள் இல்லாததாலும் அவற்றை கார் டீலர் ஒருவரிடம் அண்மையில் பால்மென் விற்றுவிட்டார். தற்போது அந்த கார்கள் … Read more

செங்கோலை “வாக்கிங் ஸ்டிக்” போல வைத்திருந்தது காங்கிரஸ்- அமித் ஷா சாடல்

இந்திய கலாச்சாரம் மீது காங்கிரஸ் கட்சி ஏன் இவ்வளவு வெறுப்பு வைத்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பதை விமர்சித்து, ட்விட்டரில் அமித் ஷா பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஆங்கிலேயரிடம் இருந்து 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததை குறிக்கும் வகையில் செங்கோல் வழங்கப்பட்டதற்கு எந்த ஆதாரமுமில்லை என காங்கிரஸ் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.    நேருவிடம் வழங்குவதற்காக செங்கோலை தமிழகத்தை … Read more

மாணவர்கள் தமிழ்வழியில் கல்வி கற்பது தான் அரசின் குறிக்கோள் – அமைச்சர் பொன்முடி

மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது தான் அரசின் குறிக்கோள் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சில உறுப்பு கல்லூரிகளில் தமிழ்வழி பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டு இருப்பது அரசுக்கே தெரியாமல் பல்கலைகழகம் எடுத்த முடிவு என்றார். தகவல் அறிந்தவுடன் பல்கலை கழக துணை வேந்தரை தொடர்பு கொண்டு, இது தவறான முடிவு என்றும், தமிழ்வழி கல்வியை வளர்ப்பது தான் முதல்வரின் நோக்கம் … Read more