பூரண மதுவிலக்கு… கனிமொழி, செந்தில் பாலாஜி பேச்சும், திமுக நிலைப்பாடும்!

மாணவ, மாணவிகளுடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில், எம்.பி கனிமொழி கலந்துகொண்டார். அதில் மாணவிகளின் கேள்விகளுக்கு கனிமொழி பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி, “ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்னீர்கள், எப்போது மதுவிலக்கு அமலுக்கு வரும்? தந்தை, அண்ணன், தம்பியின் மதுப்பழக்கத்தினால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது” என்று கேள்வி கேட்டார். கனிமொழி எம்.பி அதற்குப் பதிலளித்த கனிமொழி, “இந்தத் தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஒரு … Read more

220 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள ரஷ்ய எண்ணெய்யை பிரித்தானியா இறக்குமதி செய்தது அம்பலம்!

உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் 220 மில்லியன் மதிப்புள்ள ரஷ்ய எண்ணெய்யை பிரித்தானியா இறக்குமதி செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை வெளியான புள்ளிவிவரங்களில், புடின் படையெடுப்பபை தொடங்கிய நாள் முதல் 1.9 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெய்யை பிரித்தானியா இறக்குமதி செய்துள்ளதை காட்டுகிறது. கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் பிரச்சாரகர்களால் எண்ணெய் இறக்குமதி கண்காணிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா அரசாங்கத்தின் பாசாங்குத்தனம் … Read more

மாநிலங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும்! தமிழகஅரசை சாடிய பிரதமர் மோடி…

டெல்லி: மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைக்காத தமிழகஅரசை பிரதமர் மோடி குறை கூறினார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில், அதுகுறித்து பிரதமர் மோடி இன்று மதியம் மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். இந்த … Read more

சென்னை அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜத்திடம் ஒப்படைக்க வேண்டும்- ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜம் என்ற அமைப்பு சார்பில் அயோத்தியா மண்டபம் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. இங்கு நிதி முறைகேடுகள் நடப்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அயோத்தியா மண்டபத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையில், தக்காரை நியமித்து அன்றைய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீராம் சமாஜம் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த தனி … Read more

தஞ்சை களிமேடு தேர் விபத்து!: காயம் அடைந்தவர்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

தஞ்சை: தஞ்சை களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிதி உதவியை முதல்வர் வழங்கினார். தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியாகினர்.

இந்தியாவில் 3 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியது. கடந்த 24 மணிநேரத்தில் 2,927 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,927 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,65,496 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,252 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை … Read more

எலான் மஸ்க் தலைமையில் டுவிட்டரை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் 2 மடங்காக அதிகரிப்பார்கள்…!

புதுடெல்லி உலக அளவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். இந்த தளத்தை  ரூ.3.36 லட்சம் கோடி கொடுத்து வாங்கியுள்ளார் உலகின் முன்னணி  பணக்காரர் எலான் மஸ்க்.  அந்த செய்தி உறுதியானது முதல் டுவிட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சு அதிகரிக்கக்கூடும் என தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர் மனித உரிமை ஆர்வலர்கள். ஏனெனில் ‘பேச்சு சுதந்திரத்தை விரும்புபவன் நான்’ என வெளிப்படையாகவே மஸ்க் சொன்னது தான் இதற்கு காரணம். முன்னதாக, கடந்த மார்ச் மாதம் … Read more

இந்திய பார்மா நிறுவனத்தில் முதலீடு செய்யும் அபுதாபி அரசு நிறுவனம்.. வாவ்..!

ஐக்கிய அரபு நாடுகள் உள்நாட்டு மருந்து மற்றும் மருந்து பொருட்களின் உற்பத்தி பிரிவை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளைப் பார்மா பொருட்களுக்கான ஏற்றுமதி ஹப் ஆக மாற்றவும் திட்டமிட்டு உள்ளது. இப்பிரிவில் வர்த்தகக்தை குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவில் உருவாக்க ஐக்கிய அரபு நாடுகளுக்கு முக்கியக் கூட்டணி நிறுவனமாக விளங்குவது இந்தியா பார்மா நிறுவனங்கள். இந்நிலையில் அபுதாபி அரசு முதலீட்டு நிறுவனம் இந்திய பார்மா நிறுவனத்தில் முதலீடு … Read more

`வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை வேறு வழியில் மாற்றுங்கள்!' – மனு கொடுத்த புதுக்கோட்டை மக்கள்

புதுக்கோட்டை செம்பாட்டூர் ஊராட்சி நரங்கியன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் அளித்த மனுவில், “செம்பாட்டூர் ஊராட்சியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் குடிநீர் ஊரணி ஒன்று உள்ளது. இந்த ஊரணி எங்கள் பகுதி சுற்றுவட்டார பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு ஆதரமாக விளங்கி வருகிறது. 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஊரணியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை இந்த ஊரணி வழியாக செயல்படுத்த நிலம் … Read more

நடிகர் தனுஷ் எங்கள் மகன் என கூறும் தம்பதி! பரபரப்பாகும் வழக்கு… நீதிமன்றம் முக்கிய உத்தரவு

நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்த விவகாரத்தில் அவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நடிகர் தனுஷ் எங்கள் மகன், அவர் எங்களை பராமரிக்க வேண்டும் எனறு பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் திகதி நடிகர் தனுஷ் தரப்பில், … Read more