கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் ‘வகிர்’ சேர்ப்பு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
மும்பை: இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, கல்வாரி வகை நீர்மூழ்கியின் ஐந்தாவது கப்பலான ஐஎன்எஸ் ‘வகிர்’ திங்கள்கிழமை கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஐஎன்எஸ் ‘வகிர்’ பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மஸகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விழாவில், கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார் முன்னிலையில் கடற்படையில் வகிர் இணைக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்த நீர்மூழ்கி கப்பல், இந்தியாவின் கடல்சார் நலன்களை மேம்படுத்துவது, எதிரிகளைத் தடுப்பது, புலனாய்வு செய்வது, … Read more