பொருளாதாரத்தில் இந்தியாவை 5-வது மிகப் பெரிய நாடாக மாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு: பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் நாட்டை 5-வது மிகப் பெரிய நாடாக மாற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்து பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் சமூக பொருளாதார தீர்மான நிறைவேற்றப்பட்டது. பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில், இந்தாண்டு 9 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரசியல் மற்றும் … Read more

Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?

Budget Expectations: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்களை அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறை அமைப்பான PHDCCI, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, பொருளாதாரத்தில் மக்களின் வாங்கும் சக்தியை ஊக்குவிக்கும் வகையில், நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி சலுகைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்று  தொழில்துறை அமைப்பு பரிந்துரைத்துள்ளது, இது, எதிர்வரவிருக்கும் யூனியன் பட்ஜெட் 2023-24 இல், நுகர்வுச் செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் அதிகரிக்கும் என்றும், வணிகம் செய்வதற்கான செலவு குறையும் என்றும் நம்பிக்கையை … Read more

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 2 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டார்

டெல்லி: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 2 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டார். கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித் திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது. … Read more

2024 தேர்தல்: `வாக்குச்சாவடி மட்டத்தில் விரிவாக பணி செய்க’- தொண்டர்களுக்கு பாஜக அறிவுரை

“அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் நேரடியாக பொதுமக்களை தொடர்பு கொண்டு கட்சியின் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும்” என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பாஜக தொண்டர்கள் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும், குறிப்பாக எல்லைப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் சென்று சேரும் வகையில் … Read more

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகை முடிந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு, கொண்டாட்டங்களுக்கு பிறகு இன்று பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுகின்றன. இந்நிலையில் காரைக்காலில் இன்று (18.01.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நான்கு நாட்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்கு முன்பும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவிகள் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். கல்லூரிகள் பொங்கல் விழா நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து … Read more

மாநிலங்களவையில் தமிழக எம்பிக்களின் நடவடிக்கை: முதலிடத்தில் திமுக எம்பி கனிமொழி சோமு

புதுடெல்லி: கடந்த 2022-ல் மாநிலங்களவையில் தமிழக எம்பிக்களின் நடவடிக்கைகள் குறித்த தரவுகள் வெளியாகி உள்ளன. இவற்றை, சமூக ஆய்வு அமைப்பான பிஆர்எஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில், விவாதங்களின் முன்மொழிதலை தவிர்த்து, பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன்ஸ் சார்பில் தனியாக தரவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, திமுக எம்பியான கனிமொழி சோமு முதலிடம் வகிக்கிறார். இவர், 125 கேள்விகளை எழுப்பியதுடன், 11 சுயமுயற்சி விவாதங்களில் பேசி தமிழகத்தின் இதர எம்பிக்களை விட அதிகமாக 136 புள்ளிகள் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, … Read more

விபத்தை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் ஒரு கி.மீ தூரம் ஸ்கூட்டரில் இழுத்து செல்லப்பட்ட கார் டிரைவர்

பெங்களூரு: பெங்களூரு மாகடிரோடு சுங்கச்சாவடி அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவரை மடக்கி பிடிக்க வந்த கார் டிரைவரை ஒரு கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாகடி சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கார் மீது ஸ்கூட்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் கார்  சேதம் அடைந்தது. இதுகுறித்து கார் டிரைவர் ஸ்கூட்டர் ஓட்டி வந்தவரிடம் இறங்கி வந்து விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்தவர் அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றார். … Read more

துருக்கியில் வாடகை வீட்டில் உயிரிழந்த கடைசி நிஜாம் இளவரசர்: ஹைதராபாத்தில் உடல் நல்லடக்கம்; தெலங்கானா முதல்வர் அஞ்சலி

ஹைதராபாத்: ஒரு காலத்தில் உலக கோடீஸ்வரராக இருந்த கடைசி நிஜாம் இளவரசர், துருக்கியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடல் நேற்று ஹைதராபாத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஹைதராபாத் நிஜாம் வாரிசுகளின் கடைசி இளவரசர் மீர் அலிகான் ஜா முக்ரான் பகதூர் (89). இவர் ஒரு காலத்தில் உலகின் கோடீஸ்வரராக திகழ்ந்தவர். 7-வது நிஜாம் மன்னரான மீர் உஸ்மான் அலிகானின் பேரனும், நிஜாம் மன்னர் ஆட்சியில் இடம்பெற்ற கடைசி இளவரசருமான … Read more

சபரிமலையில் மகர விளக்கு தரிசனம் முடிந்தும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 20ம்தேதி நடை சாத்தப்படுகிறது

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடையும்  கட்டத்தில் உள்ளது. பிரசித்தி பெற்ற மகரஜோதி தரிசனம்  கடந்த 14ம் தேதி நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  குவிந்த லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசித்து திரும்பிச்  சென்றனர். சபரிமலையில் வழக்கமாக மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னர் பக்தர்கள்  வருகை குறைந்து விடும். ஆனால் தற்போது மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும்  சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. கடந்த 2  தினங்களாக காணப்பட்ட பக்தர்கள் … Read more

அதிர்ச்சி..!! கார் ஓட்டுநரை சாலையில் 1 கி.மீ. தொலைவுக்கு பைக்கில் இழுத்து சென்ற கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பைக் ஓட்டி செல்லும் ஒருவர் தனது வாகனத்தின் பின்புறம் நபர் ஒருவரை 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த பைக் ஓட்டுநர், இந்த நபரின் கார் மீது மோதி உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்து கீழே இறங்கிய கார் ஓட்டுநர், பைக்கை ஓட்டி வந்தவரிடம் நிற்கும்படி கூறியுள்ளார். ஆனால், அந்த நபர் நிற்காமல் தப்பி சென்றுள்ளார். அவரை பிடிக்கும் நோக்கில், முயன்று முடிவில் அவரது … Read more