குடியரசு தினத்தையொட்டி, டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், ஏர் பலூன்கள் பறக்க தடை

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி, டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், ஏர் பலூன்கள், பாராகிளைடர்கள் ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, குடியரசு தினத்தையொட்டி, வழக்கம்போல் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும், பயங்கரவாதிகளும், இந்தியாவுக்கு எதிரானவர்களும் டிரோன்கள், பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் … Read more

காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்

ஜம்மு: காஷ்மீரில் வசிக்கும் இந்து பண்டிட் சமூகத்தினருக்கு அநீதி இழைத்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். ராகுல் காந்தி தொடங்கிய பாரத ஒற்றுமைப் பயணம் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ஜம்முவில் நேற்று நடைபெற்ற பாத யாத்திரையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: இன்று காஷ்மீரி பண்டிட்டுகளின் பிரதிநிதிகள் என்னை சந்தித்து இங்கு நடக்கும் அவலநிலை … Read more

ஏழுமலையானுக்கு கொட்டிய ரூ.650 கோடி… செம சர்ப்ரைஸ் ஆன திருப்பதி தேவஸ்தானம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலை தேவஸ்தானம் (TTD) நிர்வகித்து வருகிறது. இந்த தேவஸ்தானம் ”ஸ்ரீ வெங்கடேஸ்வர அலயால நிர்மானம் ட்ரஸ்ட்” (Srivani) என்ற பெயரில் அறக்கட்டளையை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இதில் பக்தர்கள் பலரும் தொடர்ச்சியாக நன்கொடை அளித்து வருகின்றனர். ஸ்ரீவானி ட்ரஸ்ட்கடந்த 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்ரீவானி ட்ரஸ்ட், இந்து சனாதன தர்மத்தை நிலைநாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக எஸ்.சி, எஸ்.டி, பி.சி காலனிகளில் கோயில்கள் கட்டுவது, … Read more

ஒடிசாவில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காத விவகாரம்.. மாவட்ட ஆட்சியர் உள்பட 3 அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்திவைக்க உத்தரவு..!

ஒடிசாவில் 51 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் உள்பட 3 அரசு அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தி வைக்குமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்குல் மாவட்டத்தில் 1961ம் ஆண்டில் குகூர்பேட்டா நீர்ப்பாசனத் திட்டத்திற்காக188 பேருக்குச் சொந்தமான 62 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வரை அங்குல் மாவட்ட ஆட்சியர், நிலம் கையகப்படுத்தும் அலுவலர் … Read more

135 பேரை பலி கொண்ட மோர்பி பால விபத்தில் அஜந்தா எம்டிக்கு வாரண்ட்

மோர்பி: குஜராத்தில் 135 பேரை பலி கொண்ட மோர்பி பால விபத்து வழக்கில் அஜந்தா நிறுவன எம்டிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆங்கிலேயர் காலத்து தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக பாலத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட அஜந்தா குழுமம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மோர்பி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எம்ஜே கான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. … Read more

பாஜகவின் ‘பி டீம்’களாக செயல்படும் 3 கட்சிகள் – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு வெளியில் இருந்து ஆட்கள் கொண்டுவரப்படுவதாக காங்கிரஸை விட்டு விலகிய முன்னாள் மூத்த தலைவரும், டிஏபி கட்சியின் நிறுவனருமான குலாம் நபி ஆசாத் கூறினார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: குலாம்நபி ஆசாத்தின் டிஏபி கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படவில்லை. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், ஆம் … Read more

நீதிபதிகளை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் – கிரண் ரிஜிஜு

நீதிபதிகளையும், அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையும் மக்கள் பார்த்துக்  கொண்டு இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற பார் அசோசியேசன் நிகழ்ச்சியில் உரையற்றிய அவர், அரசியல்வாதிகளைப் போல நீதிபதிகள் தேர்தலில் போட்டியிடவோ, பொதுமக்களின் பார்வைக்கு ஆளாவதோ இல்லை என்றாலும், தங்கள் செயல்பாடுகளால் பொதுமக்களின் பார்வைக்குள்ளாவதாகத் தெரிவித்தார். நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை பொதுமக்கள் பார்த்து கொண்டு இருப்பதாகக் கூறியுள்ள கிரண் ரிஜிஜு, இந்த சமூக ஊடக யுகத்தில் எதையும் மறைத்துவிட முடியாது,  என்றும் கூறியுள்ளார். … Read more

மகாராஷ்டிரா கவர்னர் கோஷ்யாரி பதவி விலக விருப்பம்

மும்பை: சத்ரபதி சிவாஜி குறித்து மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் கவர்னர் பதவியில் இருந்து விலகுவதற்கு பகத்சிங் கோஷ்யாரி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\” கடந்த 19ம் தேதி  மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடியிடம் கவர்னர் பதவியில் இருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்தேன். எனது அனைத்து அரசியல் பொறுப்புக்களில் இருந்தும் விடுபட்டு எனது வாழ்நாள் … Read more

எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் ஊடுருவிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எப்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் (ஊரக) எஸ்எஸ்பி ஸ்வபன் சர்மா நேற்று கூறியதாவது: கடந்த 21-ம் தேதி இரவு பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய வான் எல்லைக்குள் ட்ரோன் நுழைய முயன்றதைப் பார்த்த போலீஸார் பிஎஸ்எப் வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த ட்ரோனை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். மேலும் அதிலிருந்த 5 கிலோ ஹெராயினையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு சர்மா கூறினார். சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன், அமெரிக்கா மற்றும் சீனாவின் உதிரி பாகங்களைக் … Read more

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பெண் ஊழியரிடம் தகராறு – இறக்கிவிடப்பட்ட பயணிகள்

டெல்லியில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த இரண்டு பயணிகள் முறையற்ற நடத்தை காரணமாக இறக்கி விடப்பட்டனர். ஹைதராபாத் புறப்படவிருந்த அந்த விமானத்தில் ஏறிய ஆண் பயணி ஒருவர், விமானப் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பயணிக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்து பாதுகாப்புப் படை அதிகாரிகள், பெண் ஊழியரிடம் தவறாக நடந்துக் கொண்ட பயணி மற்றும் அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரையும் கீழே இறக்கி விசாரணை … Read more