மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து விலக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி விருப்பம்..!

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி மராட்டிய மன்னர் சிவாஜி குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த நவம்பர் மாதம் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 19ம் தேதி மும்பை வந்த போது பிரதமர் மோடியிடம் … Read more

உளவுத்துறையில் 1,675 பணியிடம்.. விண்ணப்பிக்க பிப். 10 கடைசி தேதி..!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறை அமைப்பில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட், எக்ஸிகியூட்டிவ், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உட்பட பல்வேறு பணிப் பிரிவுகளில் நாடு முழுவதும் 1,675 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். புலனாய்வு பற்றிய கள அனுபவம் பெற்றிருக்க வேண்டும். செக்யூரிட்டி அசிஸ்டென்ட், எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற … Read more

“ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும்” – ராகுல் காந்தி

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று ஜம்மு நகருக்குள் நுழைந்தது. அப்போது, ஏராளமானோர் கூடி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், ராகுல் காந்தியின் யாத்திரையில் இணைந்து அவர்களும் நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ”ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இம்மாநில மக்களின் மிகப் பெரிய … Read more

சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதற்கான ஆதாரம் இல்லை; காங்கிரஸ் தலைவர் சுளீர்.!

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா என்ற இடத்தில் துணை ராணுவப் படையினர் வந்த பேருந்து மீது, பயங்கரவாதி ஒருவர் தனது வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் பயணித்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், அந்த பயிற்சி முகாமும் அங்கிருந்த பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டதாக … Read more

ஊழியர்கள் க்ரீன் கார்டு பெறுவதை முடக்கிய கூகுள்..!

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்து வருவதோடு, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஊழியர்கள் அமெரிக்காவின் க்ரீன் கார்டு பெறுவதற்கான செயல்முறையை முடக்கி வருவது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிற்கு பணிக்குச் செல்வோர் அந்நாட்டின் பிரேம் எனப்படும் தொழிலாளர் துறையின் சான்றிதழைப் பெற வேண்டும். இந்நிலையில், பிரேம் தொடர்பாக ஊழியர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும், இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என்று ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. … Read more

கேரளாவில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன் நேரில் ஆய்வு..!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் இன்று (23.01.2023) பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வின்போது, செய்தி … Read more

போதையில் பெங்களூரு உணவகத்தில் பிரியாணி ஆர்டர் செய்த மும்பை பெண்! எகிறிய பில்; க்ளைமேக்ஸ்?

போதையில் இருந்த மும்பை பெண் ஒருவர் பெங்களூருவிலுள்ள ஒரு பிரபல பிரியாணி உணவகத்தில் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு உணவும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. என்ன மும்பையில் வசிக்கும் பெண்ணுக்கு பெங்களூருவில் இருந்து உணவு டெலிவரி செய்யப்பட்டதா! ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா! வாருங்கள் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். இந்தியாவை பொருத்தவரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளில் டாப் லிஸ்ட்டில் இருப்பது பிரியாணிதான். இதனை கடந்த ஆண்டு சொமேட்டோ தரவுகளும் உறுதிசெய்திருக்கிறது. மேலும் ஸ்விக்கியிலும் கடந்த … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக ‘துல்லியத் தாக்குதல்’ நடத்தியற்கு ஆதாரம் இல்லை: திக்விஜய் சிங்

ஜம்மு: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”பாகிஸ்தானுக்குள் சென்று சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொய்களின் உதவியுடன் பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த நாடு நம் அனைவருக்குமானது என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். புல்வாமா … Read more

‘கோயில்களில் மணி அடித்தவர்கள்..’- உ.பி. முதல்வரை பொளந்த பீகார் அமைச்சர்.!

பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் கடந்த ஜனவரி 11ம் தேதி நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே ஆற்றிய உரையில், ‘‘ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ராமசரித்மானஸ் கவிதை சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது. ராம்சரித்மனாஸின் சில பகுதிகள் மீண்டும் குறிப்பிட்ட சாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது. ராம்சரித்மனாஸுக்கு ஏன் எதிர்ப்பு வந்தது? கல்வியைப் பெற்ற பின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பாம்புகளைப் போல ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்று அது கூறுகிறது. ‘ராம்சரித்மனாஸ்’ மற்றும் ‘மனுஸ்மிருதி’ சமூகத்தை … Read more

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டி சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மகாகாளீஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை

உஜ்ஜைன்: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டி இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உஜ்ஜைனில் உள்ள மகாகாளீஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்  செய்தனர்.   இந்தூரில் நாளை நடைபெற உள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி, 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மிகவும் பிரசித்தி … Read more