வடமேற்கு இந்தியாவை வாட்டும் கடும் குளிர்: பள்ளிகளுக்கு ஜன.15 வரை விடுமுறை நீட்டிப்பு

புதுடெல்லி: பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் கடும் குளிர் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஎம்டிவ்(IMD) இன்று காலை வெளியிட்ட அறிக்கையின் படி இன்றைய தினம் (ஜன 9) பஞ்சாப், ஹரியாணா, உ.பி.யில் கடும் குளிர் நிலவும் ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்தில் குளிர்ந்த காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்து அண்மைத் தகவல்கள்: 1. கடும் குளிர் காரணமாக … Read more

120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த சாமியார்… யார் இந்த ஜலேபி 'பாபா' ?

120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோவாக எடுத்த ஜலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஹரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத்  கோயில் குருக்களாக இருந்த ஜலேபி பாபா என்ற அமர்புரி என்பவர் மீது பல்வேறு பாலியல் ரீதியிலான வழக்குகள் இருந்தன. அதன்மீதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக, அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரை அடுத்து அவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து, அவரின் குடியிருப்பில் போலீசார் … Read more

டெல்லியில் கடும் பனிமூட்டத்தால் 15 விமானங்கள் தாமதம்

டெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் 15 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. கடும் பனிமூட்டத்தால் சார்ஜா – டெல்லி விமானம் ஜெய்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: விருப்பமுள்ளவர்கள் பங்கேற்க பாஜக அழைப்பு

சென்னை: ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் ‘தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்குமாறு தமிழக பாஜக அழைப்பு விடுத்துள்ளது. தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும், பயத்தையும் போக்கி, துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, 2018-ம்ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ‘தேர்வும் தெளிவும்’ என்ற பெயரில், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் … Read more

சிறுநீர் கழித்த விவகாரம் ஏர்இந்தியா முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கலாம்: டாடா குழும தலைவர் வருத்தம்

மும்பை: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்று டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் வருத்தம் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி சங்கர் மிஷ்ரா, பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்து கொண்டார். இந்த விவகாரம் 3 மாதங்களுக்கு பிறகு தெரிய வந்து அவர் தற்போது கைது … Read more

தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.9) லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் … Read more

இந்தியா – பாக். எல்லையில் கண்காணிப்பு பணியில் ரேடார் பொருத்தப்பட்ட டிரோன்கள்.!

எல்லையில் சுரங்கம் அமைத்து பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுவுவதை தடுக்க, முதன்முறையாக எல்லை பாதுகாப்புப்படையினரால் ரேடார் பொருத்தப்பட்ட டிரோன்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு பகுதியில் நிலத்தடி சுரங்கப்பாதைகளின் அச்சுறுத்தலை தொழில்நுட்ப ரீதியில் எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பி.எஸ்.எஃப். மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். தற்போது பயன்படுத்தப்படும் ரேடார்கள் இந்திய தயாரிப்பு என்றும், அவை வலுவான ரேடியோ அலைகளை வெளியிடுவதன் மூலம் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதைகள் இருப்பதை உறுதிசெய்து, அதன் நீளத்தை … Read more

பாஜ ஆளும் மாநிலத்திலும் நடை பயணத்திற்கு ஆதரவு: அரியானாவில் ராகுல் பேட்டி

கர்னல்: பாஜ ஆளும் மாநிலங்களிலும் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு அமோக ஆதரவு கிடைப்பதாக ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் பல்வேறு மாநிலங்களை கடந்து, அரியானாவில் கடந்த வியாழக்கிழமை நுழைந்தது. அங்கு, குருஷேத்ரா நகரில் கடும் குளிருக்கு மத்தியில் நேற்று காலை 6 மணிக்கு யாத்திரை தொடங்கியது. அப்போது வெறும் டிசர்ட் அணிந்தபடி குளிரில் நடந்து வந்த ராகுலை உற்சாகப்படுத்த இளைஞர்கள் பலரும் தங்களின் சட்டையை … Read more

முழு அதிகாரம் இல்லாததால் எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கைகளை… முதல்வர் ரங்கசாமி கவலை!

புதுச்சேரி முழுமையான அதிகாரம் உள்ள மாநிலம் அல்ல என்பதால் பேரவையில் எம்.எல்.ஏக்கள் கூறும் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது என முதல்வர் ரங்கசாமி கவலை தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பதாக அந்த தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஏனாமில் நடைபெற்ற கலாச்சார விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி பேசியபோது… எங்களது அரசை பொருத்தவரை மாநிலத்தின் எல்லா … Read more

என்ன மனுஷங்கடா நீங்க… அண்ணன் தம்பி போல் நினைத்து பழகிய 15 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்..!!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மில்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது பழைய இரும்புக்கடையில் வேலை பார்த்து வந்த 27 வயது இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளைஞர் சிறுமியை ஒரு நாள் அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் யாருமில்லாததை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது போல … Read more