யோகா வகுப்பு எடுப்பதாக கூறி குர்தாவை தூக்கி வயிற்றை காட்டிய ம.பி முதல்வர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

செஹோர்: யோகா வகுப்பு எடுப்பதாக கூறி தனது குர்தாவை தூக்கி வயிற்றைக் காட்டி செய்து செய்து காட்டிய மத்திய பிரதேச முதல்வரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. பாஜக மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், செஹோர் மாவட்டம் நஸ்லுல்லாகஞ்சில் நடந்த யோகா பயிற்சி மையத்திற்கு சென்றார். அப்போது நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, திடீரென மேடையில் அமர்ந்தவாறு ேயாகா குறித்த விளக்கங்களை அளித்தார். பின்னர், மூச்சுப் பயிற்சி மற்றும்  பிராணாயாமத்தின் … Read more

மனைவியை பழிவாங்க இப்படியா செய்வது? பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட கணவர்.. பீகாரில் பயங்கரம்!

கணவர் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப சண்டையில், மனைவி தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதால், விரக்தியடைந்த கணவன் கோபத்தில் தன் அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்டுள்ள சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் உள்ள மாதேபுரா மாவட்டத்தில் முரளிகஞ்ச் அருகே நயா நகர் காவ்ன் கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணா பசுகி என்ற 25 வயது வாலிபர் பஞ்சாபில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகர சங்கராந்தி பண்டிகையொட்டி நயா நகரில் உள்ள தன் வீட்டிற்கு சென்று … Read more

அயோத்தியில் நடக்க இருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அவசர கூட்டம் ரத்து

அயோத்தி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த, கூட்டமைப்பின் அவசர பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமரையும் இடைநீக்கம் செய்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் நடக்கும் தர நிர்ணயத்திற்கான போட்டி உள்ளிட்ட மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், … Read more

மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீட்டில் இருந்து பெண் விரட்டியடிப்பு: ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண் அமைச்சர் ஒருவரின் வீட்டில் இருந்து பெண் ஒருவர் விரட்டியடிக்கப்படும் வீடியோ வைரலாகி வருவதால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மம்தா பூபேஷ் என்பவரின் வீட்டில் இருந்து பெண் ஒருவர் ஆண் ஒருவரால் கட்டாயப்படுத்தி விரட்டி வெளியேற்றப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைராகி வருகிறது. இந்த வீடியோவை ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். … Read more

60 வயது ஆசிரியரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய காவலர்கள்! பதறவைக்கும் வீடியோ

பீகாரில் 60 வயதான முதியவரை பெண் காவலர்கள் இருவர் சேர்ந்து லத்தியால் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் பர்ஹுலி கிராமத்தைச் சேர்ந்தவர் நவல் கிஷோர் பாண்டே. 60 வயதான இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. ஆசிரியர் நவல் கிஷோர் சாலையில் விழுந்ததால் அவ்வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் … Read more

கல்வித்துறையில் மோடி அரசு தோற்றுவிட்டது: கல்விநிலை அறிக்கையை பகிர்ந்து மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்

புதுடெல்லி: கல்வித்துறையில் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டதாக மல்லிகார்ஜூன கார்கே இ குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் வெளியான 2022ம் ஆண்டுக்கான கல்விநிலையின் அறிக்கையை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கல்விநிலை குறித்த மோடி அரசின் ரிபோர்ட் அட்டையும் “எஃப்” பெறுகிறது. எஃப் என்றால் ஃபெயில் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதில் சமீபத்திய கல்விநிலை குறித்த ஆண்டு அறிக்கை (ASER 2022) செய்தியை சுட்டிக்காட்டி … Read more

80 சீட்டிலும் பாஜக தோல்வி… 2024 தேர்தல் முடிவுகள் இப்படித்தான் வரும்- அகிலேஷ் பளீர்!

கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே. ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கும் மக்களவை தேர்தல் 2024 மே மாதம் நடைபெற உள்ளது. இதில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. இங்கு மட்டும் 80 தொகுதிகள் இருக்கின்றன. தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் உத்தரப் பிரதேச மாநிலம் மிகவும் முக்கியமானது. மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக 62, அப்னா தல் (சோனேலால்) 2, பகுஜன் … Read more

மும்பையில் ரூ.23 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: போலீசார் விசாரணை

மும்பை: கோவந்தி பகுதியில் ரூ.23 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த காவல்துறையினர். இருவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

பிரதமர் மோடியின் தலைமையில் உலகின் 4வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: யோகி ஆதித்யநாத்

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா, உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று உத்தரப்பிரதசே முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய யோகி ஆதித்யாநாத், ”உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தது. புதிய நடைமுறையின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான மாநிலமாகவும், நல்லாட்சி நடைபெறும் மாநிலமாகவும் உத்தரப்பிரதேசம் திகழ்வதால் உலகின் மிகப் … Read more

சாலையில் டிராபிக் ஜாம்… வயதான ஆசிரியரை லத்தியால் அடித்த பெண் காவலர்கள் – அதிர்ச்சி வீடியோ

பிகாரில் கைமூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் வயதான ஒருவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, அவர் சாலையில் கிடந்த சைக்கிளை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இரண்டு மகளிர் போலீசார், கீழே இருந்த சைக்கிளை வேகமாக எடுக்கும்படி கூறி அந்த முதியவரை லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில், இரண்டு பிகார் மகளிர் போலீசார் இணைந்து பட்டப்பகலில், நடுரோட்டில் ஒரு முதியவரை ல்த்தியால் … Read more