வெள்ளப்பெருக்கில் சேதமான பொருட்களுடன் கிடந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.6.31 லட்சம் அபேஸ்: தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில்  இருந்து பழைய வீட்டு பொருட்களுடன் கிடைத்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி  ரூ.6.31 லட்சம் பணத்தை அபேஸ் செய்த தமிழக லாரி டிரைவரை செங்கனூர் போலீசார்  கைது செய்தனர். கேரள மாநிலம் செங்கனூரை  சேர்ந்தவர் ஷாஜி. இவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து  வருகிறார். கடந்த இரு வருடங்களுக்கு முன் செங்கனூர் பகுதியில் கடும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஷாஜியின் வீட்டுக்குள்ளும் தண்ணீர்  புகுந்தது. இதில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. … Read more

கேரளாவில் நாய்களிடையே பரவும் புதிய வைரஸ்..!! மனிதர்களுக்கு ஆபத்து?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு கடந்த 3 மாதங்களாக ஏராளமான தெரு நாய்கள் அதிகளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கால்நடைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் இதற்கு காரணம் தெருநாய்களிடையே பரவும் கேனைன் டி வைரஸ் என்றும், இந்த வைரஸ், பாதிப்புக்குள்ளான நாய்களிடமிருந்து மற்ற நாய்களுக்கு பரவும் என்றும் கால்நடைத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாது என கூறிய அவர்கள், … Read more

70 வயது பெரியவர் என கூட பார்க்காமல் கொடூரமாக தாக்கிய பெண் போலீசார்..!! வைரலாகும் வீடியோ

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் நேவல் கிஷோர் பாண்டே (70). இவர், 40 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றியவர். அந்த நிலையில் சம்பவத்தன்று தனியார் பள்ளியில் சில குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு அவர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​பாட்னாவில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள பபுவாவில் உள்ள பரபரப்பான பகுதியில் அவரது சைக்கிளில் இருந்து சறுக்கி விழுந்தார். இதனால் அவருக்கு பின்னால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே, … Read more

நாட்டில் அமைதியை பேண மாநில காவல்துறையும், மத்திய அமைப்புகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாட்டில் அமைதியை பேண மாநில காவல்துறை மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற  டிஜிபிக்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், மாநில காவல்துறையும், மத்திய அமைப்புகளும் தங்களது அனுபவங்களையும், தொழில்நுட்ப திறன்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். நடந்து ரோந்து செல்வது போன்ற பாரம்பரிய கண்காணிப்பை காவல்துறையினர் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு … Read more

நீதிபதிகள் நியமனம்: உச்ச நீதிமன்றம் மீது ஓய்வு பெற்ற நீதிபதி விமர்சனம்: ஆடியோவை வெளியிட்டார் ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தால் சட்டங்களை உருவாக்க முடியாது என்று ஓய்வு பெற்ற  நீதிபதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இது சம்மந்தமான ஆடியோவை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியத்தின் நடைமுறைகள் வெளிப்படையாக இல்லை. எனவே, கொலீஜியத்தில் ஒன்றிய அரசு பிரதிநிதி இடம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக … Read more

கேரளாவை அச்சுறுத்திய பிடி-7 யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் தோணி பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த பிடி-7  என்கிற காட்டுயானையை வனத்துறையினர் நேற்று மயக்கஊசி செலுத்திப்பிடித்து  கூண்டிற்குள் அடைத்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில்  தோணி, அகத்தேத்தரை, முண்டூர், மலம்புழா மற்றும் கஞ்சிக்கோடு ஆகிய  இடங்களிலுள்ள மலையடிவார பகுதியில்  பிடி-7 என்ற ஒற்றை யானை, ஊருக்குள்  புகுந்து தோட்ட பயிர்களை துவம்சம் செய்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற  முடியாத நிலையில் கடந்த சில மாதங்களாகவே அந்த யானை அச்சுறுத்தி வந்தது.  யானையை … Read more

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து; 60 பேர் படுகாயம்!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தின் திரிவேனி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுவிட்டு நேற்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பினர். இந்திய-நேபாள எல்லையில் நேபாளத்தின் துஹிபெரி என்ற பகுதியில் பேருந்து வந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 குழந்தைகள் உள்பட 60 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நேபாள … Read more

பத்து ரூபாய் பணக் கட்டால் நின்று போன திருமணம்..!!

உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் முகமதாபாத் கொத்வாலி பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற முடிவானது. இதில் துர்காப்பூர் கிராமத்தில் வசிக்கும் மணமகளுக்கும், பபீனா சாரா கிராமத்தில் வசிக்கும் மணமகனுக்கும் இடையே 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் பேசி, நிச்சயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் மதிய உணவு முடிந்து, இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதன்பின்பு, மாலையில் திருமண ஊர்வலம் நடந்தது. அதனையடுத்து, நள்ளிரவில் திருமண சடங்குகளும் நடந்தன. அப்போது, மணமகளின் சகோதரருக்கு திடீரென்று ஒரு … Read more

பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட்: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்

புதுடெல்லி: பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் 29-ம் தேதி நடைபெறுகிறது. வரும் 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிப். 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக சமர்ப்பிக்கும் கடைசி முழு நீள பட்ஜெட் இதுவாகும். இதையடுத்து பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய … Read more

கேரளாவில் ரூ.25 கோடி பம்பர் பரிசு பெற்றவர் லாட்டரி கடையை தொடங்கினார்

திருவனந்தபுரம்,: கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி திருவனந்தபுரத்தில் லாட்டரி விற்பனைக் கடையை தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அனூப் என்பவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது. பரிசு விழுந்த சிறிது நேரத்திலேயே இவரது புகைப்படமும், பேட்டியும் பத்திரிகைகளிலும் டிவிக்களிலும் வெளியானது. இதன் பிறகு தான் … Read more