அந்தமான் – நிகோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அந்தமான் – நிகோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேத்திர மோடி சூட்டினார். பராக்கிரம தினம்: நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான இன்றைய தினம் (திங்கள்கிழமை) பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் – … Read more

அடிச்சு ஆடும் அமித் ஷா… வசமாகுமா பூமிகார் வாக்குகள்? ஆட்டம் காணும் பிகார் அரசியல்!

பிகார் மாநிலத்தில் 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 39 இடங்களில் வென்றது. இதில் பாஜக 17, ஐக்கிய ஜனதா தளம் 16, லோக் ஜன்சக்தி 6 அடங்கும். இந்நிலையில் பாஜக உடனான கூட்டணியை நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் முறித்து கொண்டது. இதையடுத்து மகாகத் பந்தன் என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணி உருவானது. மகாகத் பந்தன் கூட்டணி இதில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா … Read more

பாலக்காட்டில் 4 ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது..!

கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் நான்கு ஆண்டுகளாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர்  பிடித்தனர். வயல்களை சேதப்படுத்தி வீடுகளை தாக்கி ஊர்மக்களையும் அந்த யானை தாக்கி வந்தது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில், வயநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 கும்கி யானைகளுடன் வனத்துறை அதிகாரிகளின் சிறப்புக் குழு அப்பகுதிக்கு வந்தது.    பல முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், நேற்று ஒருவழியாக  யானை மயக்க ஊசி செலுத்தி … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை கடந்த டிசம்பரில் ஏற்றுமதி செய்து ஆப்பிள் நிறுவனம் சாதனை

டெல்லி: ஐபோன் மீது எப்போதுமே இந்தியர்களுக்கு ஒரு மோகம் இருக்கும். விலை அதிகமாக இருந்தாலும் அதன் லுக், தரம், பயன்பாடு, அம்சங்கள் என பல்வேறு விஷயங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம்தான் ஐபோன்களைத் தயாரித்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூ.8,100 கோடி மதிப்புள்ள ஐபோன்களை கடந்த டிசம்பரில் ஏற்றுமதி செய்து ஆப்பிள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் … Read more

பாரதியார், பாரதிதாசனின் இல்லங்களில் இந்தி, ஆங்கில விளம்பர பதாகைகள்! தமிழ் புறக்கணிப்பு?

புதுச்சேரியில் முதுபெரும் தமிழறிஞர்களான மகாகவி பாரதியார் மற்றும் பாரதிதாசன் வாழ்ந்த வீடுகளில் ஜி 20 மாநாட்டிற்காக வைக்கப்பட்ட  விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்து விட்டு இந்தி மற்றும் ஆங்கிலம் இடம்பெற்றுள்ளதற்கு பாரதிதாசன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜி20 நாடுகளின் ஓராண்டுக்காலத் தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனிடையே ஆரம்பகட்ட மாநாடு வரும் ஜனவரி 30 மற்றும் 31ந் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறுகின்றது. இதற்காக புதுச்சேரி முழுவதும் விளம்பர பதாகைகளை அரசு வைத்துள்ளது. அந்த விளம்பர பதாகைகளில் இந்தியும் ஆங்கிலமும் … Read more

ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்.. டிக்கெட் பரிசோதகர் கைது.. நண்பருக்கு வலை..!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள சந்தவுசி ரயில் நிலையத்தில் 32 வயது பெண் ஒருவர் தனது 2 வயது மகனுடன் ரயிலுக்காக காத்திருந்தார். அவர், பிரயாக்ராஜில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க அவர் டிக்கெட் வாங்கி இருந்தார். அந்த நேரம், அப்பெண்ணுக்கு தெரிந்த ராஜு சிங் என்ற டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் அப்பெண்ணிடம், “ஏன் தனியாக பொதுப்பெட்டியில் ஏறுகிறாய், அதில் அமர இடம்கூட கிடைக்காது. என்னுடன் வா, ஏசி … Read more

தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு வேறு பொறுப்புகள்?

தமிழ்நாடு ஆளுநர் ரவி, வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், டெல்லி சென்று வந்ததிலிருந்து ஆளுநர் மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். பொங்கல் விழாவுக்காக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் என்று இருந்தது. அதே போல் இலச்சினை மத்திய அரசுடையது இருந்தது. இந்த இரண்டு விவகாரமும் பேசு … Read more

உச்ச நீதிமன்றம், பிபிசி ஆவணப் படம் குறித்த கிரண் ரிஜிஜு பார்வை: மஹுவா மொய்த்ரா கடும் விமர்சனம்

புதுடெல்லி: “உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக அவமதிக்கும் மத்திய சட்ட அமைச்சர், குஜராத் கலவரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த பிபிசியின் கருத்தை நம்பியதற்காக மற்றவர்களை கேள்வி கேட்கிறார்” என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாஜகவின் பாசாங்குத்தனம்: ‘நீதிமன்றம் அரசியல் சாசனத்தை ஹைஜாக் செய்துவிட்டது’ என்ற உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் பேச்சை வைத்து மத்திய சட்ட அமைச்சர் உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக அவமதிப்பது அவர்களுக்கு பிரச்சினை … Read more

குடியரசு தின அணிவகுப்பில் எத்தனை அலங்கார ஊர்திகள்? மத்திய அரசு தகவல்!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் இடம்பெறக் கூடிய பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் … Read more

Budget 2023: PLI திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம்

உற்பத்தியை ஊக்குவிக்கவும், நவீன தொழில்நுட்பத்தைக் கவரவும், தரத்தை மேம்படுத்தவும் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை (பிஎல்ஐ) மத்திய அரசு அறிமுகம் செய்தது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், வரவிருக்கும் பட்ஜெட்டில் பொம்மைகள், சைக்கிள்கள், தோல் மற்றும் காலணி போன்ற வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளுக்கும் பிஎல்ஐ திட்டம் அறிவிக்கப்படலாம். தற்போது, ​​14 துறைகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவில் … Read more