முதன்முறையாக தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுத அனுமதி!

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 2022 ஆண்டுக்கான பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வு (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination) அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கான எழுத்து தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும். முதல்தாளில் … Read more

செகந்திராபாத் ஷாப்பிங் மால் தீ விபத்து – ட்ரோன் கேமரா மூலம் 3 உடல் கண்டுபிடிப்பு

செகந்திராபாத்: செகந்திராபாத் 5 அடுக்கு கொண்ட டெக்கான் மாலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு திடீரென கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 20 மணி நேரம் கழித்துதான் தீ கட்டுக்குள் வந்தது. அதற்குள் அந்த 5 அடுக்குமாடி முழுவதும் தீயால் சேதமடைந்தது. கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதையடுத்து சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டிடம் எந்த … Read more

வடமாநிலங்களில் கடும் குளிர்,மழை: சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் முடக்கம்

புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருகிறது. நேற்று திடீரென மழையும் பெய்ததால் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டன. வடமாநிலங்கள் முழுவதும் குளிரின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. டெல்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், ஜம்மு, காஷ்மீர், உபி, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு நிலையை விட அதிக குளிர் நிலவியது. இந்தநிலையில் பனிப்பொழிவுடன் சேர்ந்து நேற்று திடீர் மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டன. விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பனிகொட்டியது. அங்கு வீடுகளில் … Read more

அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் வயிற்றில் சிக்கிய அடிபம்ப் கைப்பிடி..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரி பகுதியில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் நேற்று அதிகாலை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த அடிப்பம்பு மீது மோதியது. அப்போது அடிப்பம்பு கைப்பிடி வயிற்றை துளைத்து உள்ளே சென்று விட்டது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்துள்ளார். அவரது நிலையை பார்த்த பலரும் … Read more

கள்ளகாதலனுக்காக தான் பெற்ற 3 வயது பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சுனிதா. 5 குழந்தைகளுக்கு தாயான சுனிதா, தற்போது கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சுனிதா 2 குழந்தைகளையும், அவருடைய கணவர் 3 குழந்தைகளையும் பராமரித்து வந்தனர். இந்த நிலையில், கணவனை விட்டுப் பிரிந்துவாழும் சுனிதாவுக்கு, சன்னி என்ற நபருடன் திருமணம் மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சுனிதா – சன்னி ஆகிய இருவருக்கும் 3 வயது பெண் குழந்தை கிரண் தொல்லையாக இருப்பதாகச் … Read more

மத்திய அரசுத் துறைகளில் பணியாற்ற நாடு முழுவதிலும் 71,000 பேருக்கு பிரதமர் மோடி நியமன ஆணை

புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற, நாடு முழுவதிலும் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆய்வு செய்த பிரதமர் மோடி, அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு … Read more

கலப்பட பால் விற்ற வழக்கில் 32 ஆண்டுக்கு பின் 6 மாத தண்டனை

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் கபீர் சிங் என்பவர் கலப்பட பால் விற்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பால் ஆய்வக சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் அவர் கலப்பட பால் விற்றது உறுதியானது. இது தொடர்பாக உணவுப்பொருள் ஆய்வாளர் சுரேஷ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கபீர் மீது 1990ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி வழக்கு பதியப்பட்டது. இதனை விசாரித்த கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிரசாந்த் குமார் கபீருக்கு 6 மாத சிறைத் தண்டனை, … Read more

காவல் துறை வேலைவாய்ப்புகளில் போலீஸாரின் வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: தமிழக போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல் துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் மன உறுதி, விசுவாசம், நேர்மையை ஊக்கப்படுத்தும் வகையில், போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல்துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில், … Read more

71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல் அரசுப்பணி நியமன செயல்முறை ஒன்றிய அரசு சீர்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு ஒன்றிய அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி, ‘‘பாஜ ஆட்சியில் அரசுப்பணி ஆட்சேர்ப்பு செயல்முறை சீர் செய்யப்பட்டு, வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார். வரும் 2024ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்து, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இதைத் தொடர்ந்து, கடந்த … Read more

பணியாளர் தேர்வாணைய தேர்வை இனி தமிழில் எழுதலாம்: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் டி பிரிவு பதவிகளுக்கு  அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளின் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல்முறையாக எஸ்எஸ்சி நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் … Read more