பஞ்சாப் உளவுத்துறை தலைமையத்தில் குண்டு வீசி தாக்குதல்; முக்கிய நபர் கைது.!

கடந்த ஆண்டு மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை தலைமையகத்தில் கையெறி குண்டு வீசி தாக்கியதில் முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதி ஒருவர் உத்தரபிரதேசத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரி இன்று தெரிவித்தார். ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சுரக்பூரில் வசிக்கும் தீபக் ரங்கா புதன்கிழமை காலை கோரக்பூரில் இருந்து கைது செய்யப்பட்டதாக மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த ஆண்டு மே மாதம் மொஹாலியில் … Read more

அதிர்ச்சி… அரசு வேலைக்காக 5 மாத குழந்தையை கொன்ற கொடூர பெற்றோர்

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் மாவட்டத்தில் ஒரு தம்பதியை போலீசார் கடந்த திங்கட்கிழமை (ஜன. 23) அன்று கைதுசெய்துள்ளனர். அவர்களின் 5 மாத குழந்தையை கால்வாயில் தூக்கிவீசியதற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் அந்த கொலைக்கு கூறிய காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள சந்தாசர் கிராம அரசு பள்ளியில் உதவியாளராக பண்ணியாற்றி வந்துள்ளார், ஜான்வர்லால். அரசு பள்ளியில் ஒப்பந்ததின் அடிப்படையில் பணியாற்றி வந்த இவர், தனது பணி நிரந்தரமாவதற்காக காத்திருந்துள்ளார். ஜான்வர்லால் மற்றும் அவரது … Read more

லடாக்கில் எல்லை பகுதிகளை இழக்கிறதா இந்தியா?.. அதிர்ச்சி தகவல்..!

லடாக்: கிழக்கு லடாக்கில் உள்ள 65 ரோந்து புள்ளிகளில் 26 இடங்களின் கட்டுப்பாட்டை இந்திய ராணுவம் இழந்துள்ள அதிர்ச்சி தகவல். டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற வருடாந்தர காவல் துறை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கட்டுரையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற காவல் துறை வருடாந்தர ஆய்வு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையில் இந்திய ராணுவத்தின் பிலே சேப் என்ற மென்மையான அணுகுமுறையால் எல்லையில் எளிதில் செல்லக்கூடிய பகுதிகள் கூட எளிதில் அணுக முடியாத நிலைகளாக … Read more

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து சர்ச்சை கருத்து; ராகுல் காந்தி கடுப்பு.!

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா என்ற இடத்தில் துணை ராணுவப் படையினர் வந்த பேருந்து மீது, பயங்கரவாதி ஒருவர் தனது வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் பயணித்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், அந்த பயிற்சி முகாமும் அங்கிருந்த பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டதாக … Read more

தெலங்கானாவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்துள்ளது அம்மாநில அரசு

ஹைதராபாத்: தெலங்கானாவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குடியரசு தின அணிவகுப்பை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாததால் ஆளுநர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகரில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் அங்கு ராணுவ பாசறைகளில் உள்ள வீரர்கள் அணிவகுத்து வருவர்.

மூத்தத் தலைவர் ஏ.கே. ஆண்டனி மகன் காங். கட்சியிலிருந்து விலகல் – மோடிக்கு ஆதரவா?

முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அணில் ஆண்டனி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே. ஆண்டனி கேரளாவின் முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் கலவரங்களுக்கு நரேந்திர மோடி பொறுப்பு என குற்றம் சாட்டும் பிபிசி ஆவணப்படத்தை எதிர்த்து அணில் ஆண்டனி நேற்று சுட்டுரையில் தனது கருத்தை பதிவிட்டதை தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் தனதுக் கருத்தை திரும்பப் … Read more

பிரதமர் குறித்த ஆவணப்படம்; டெல்லி பல்கலையில் போர் சூழல்.!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பிபிசி கடந்த 17ம் தேதி ஆவணப்படத்தை வெளியிட்டது. பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் கலவரத்துக்கு மோடியே நேரடி காரணம் என தெரியவந்ததாக ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், … Read more

பிரதமர் மோடி – எகிப்து அதிபர் பேச்சுவார்த்தை.. 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் எல் சிசி, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் எகிப்து அதிபருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி – அதிபர் எல் சிசி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே சைபர் பாதுகாப்பு, கலாசாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 5 … Read more

உ.பி-யில் 11 போலி ஹோமியோபதி கல்லூரிகள்: உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 11 போலி ஹோமியோபதி கல்லூரிகள் செயல்பட்டு வந்ததால், அந்த கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 234 கல்லூரிகளில் ஹோமியோபதி பார்மசி டிப்ளமோ (டி.எச்.பி)  பட்டம் வழங்கப்படுகிறது. இந்த கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர். ஆனால் மேற்கண்ட கல்லூரிகள் சில போலியாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. அதனால் உத்தரபிரதேச ஹோமியோபதி மருத்துவ வாரியம், மேற்கண்ட அனைத்து கல்லூரிகளையும் தணிக்கைக்கு உட்படுத்தியது. அதன்படி … Read more

ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 50 நகரங்களில் 5-ஜி சேவை..!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 5ஜி சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டாவை 1 ஜிபிபிஎஸ் பிளஸ் வேகத்தில் அனுபவிக்க கூடுதல் கட்டணமின்றி நேற்று முதல் வழங்கப்படுகிறது. இந்த புத்தாண்டில் அனைத்து ஜியோ பயனரும், ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் சேவைகளை அனுபவிக்கும் வகையில், 5ஜி சேவைகள் வழங்குவதை விரைவு படுத்தியுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்திற்குள், … Read more