அதானி குழும நிறுவனங்கள் வரவு – செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு செய்ததாக புகார்..!!

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் வரவு – செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழும நிறுவனங்களில் இருந்து பணம் கையாடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்துவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் கொலை வழக்கு – மத்திய அமைச்சர் மகனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்!

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு 8 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் அமைதியான வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அவர்கள்மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுடைய கார் புகுந்ததில் … Read more

லக்கிம்பூர் கேரி வழக்கு | ஆஷிஸ் மிஸ்ராவுக்கு இடைகால ஜாமீன் – உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு 8 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் உத்தர பிரதேசத்தில் தங்க தடைவித்துள்ளது. தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆஷிஸ் மிஸ்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜேகே மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த … Read more

74ஆவது குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை!

நாட்டின் 74ஆவது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றவுள்ளார். இந்த உரை அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளிலும் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும். இதேபோல், தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் முதலில் இந்தியிலும், அதனைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும். இதைனைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளிலும் அதன் பிராந்திய மொழிகளிலும் குடியரசுத்தலைவரின் உரை ஒளிபரப்பப்படுகிறது. அகில இந்திய வானொலியில், பிராந்திய மொழிகளில் இரவு 9.30 மணி முதல் அதன் … Read more

ஏர் இந்தியாவின் விமானத்தில் மது அருந்துவது தொடர்பான விதிகளில் திருத்தம்

விமானத்துக்குள் மது அருந்துவது தொடர்பான கொள்கையில் சில திருத்தங்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் அண்மையில் பயணி ஒருவர் சகபயணி மீது சிறுநீர் கழித்தது போன்ற விரும்பத்தகாத சில சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பான முறையில் விமானத்தில் மதுவழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.விமானத்தில் பயணிகள் தாமாக மது அருந்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. விமானப் பணிக்குழுவினரால் மட்டும் மது வழங்கப்பட வேண்டும் என்றும் தாமாக மது அருந்தி வரும் பயணிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் … Read more

புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை ரூ.45ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை ரூ.45ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை வளாகம் அருகே பாலை சாலையில் ஊற்றி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்திய பிரதமர், ஜனாதிபதியுடன் எகிப்திய அதிபர் சந்திப்பு! கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள்!

இன்று பிரதமர் மோடி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்கிறார் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்- சிசி. இதில் ஆறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படுகின்றன குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அவர்கள், இன்று பிரதமர் மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் சந்திக்கிறார். இந்தியா – எகிப்து இடையே விவசாயம், இணையப் பாதுகாப்பு, மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை … Read more

காங்கிரசில் இருந்து விலகினார் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி குறித்த பிபிசி-யின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிராக நேற்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அனில் அந்தோணி இன்று(புதன்கிழமை) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் எனது ட்வீட்டை திரும்பப் பெறும்படி … Read more

ஃபாஸ்டேக்: மின்னணு சுங்க வசூல் 46% அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இங்கு கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், நேர விரயமும் ஏற்படுகிறது. இதனை களையும் பொருட்டு, ஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த ஃபாஸ்டேக் முறை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஃபாஸ்டேக் மூலம் … Read more

5 ஜி நெட்வொர்க்கால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள் குறித்து டிஜிபிக்கள் மாநாட்டில் ஆய்வறிக்கை தாக்கல்

போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாதத்திற்கு நிதித் திரட்டுதல் போன்ற குற்றச் செயல்களுக்கு 5 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படக் கூடும் என்று டெல்லியில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாட்டில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இணையவழிக் குற்றங்கள் மற்றும் சைபர் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் ஒரு முழு சிஸ்டத்தையே முடக்கக் கூடிய ஆபத்து இருப்பதையும் சில மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் எழுதிய அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. டிரோன்களைக் கட்டுப்படுத்துதல், ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்தல் போன்ற … Read more