சுகேஷ் சந்திரசேகரின் கருப்பு பணத்தை சட்டப்பூர்வ வெள்ளை பணமாக்க மனைவி உதவி

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கை விசாரித்து வரும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை: சுகேஷ் சந்திரசேகர் மோசடியான வழிமுறைகளைப் பின்பற்றி பணத்தை குவித்துள்ளார். அதில், பெரும்பாலானவை கணக்கில் காட்டப்படாதவை. சிறு வணிக நிறுவனங்கள் மூலமாக கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கி முறையான வருமானமாக சுகேஷ் தம்பதி மாற்றிக் காட்டியுள்ளனர். நெட்பிளிக்ஸில் வெளியான ஓஸார்க் தொடரின் கதைக் கருவும் கருப்பு பணத்தை வெள்ளையாக எப்படி மாற்றுவது என்பதே. அதில் வரும் காட்சிகளை அடிப்படையாக … Read more

இந்தியா வந்தார் எகிப்து அதிபர்

புதுடெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க  எகிப்து அதிபர் சிசி நேற்று இந்தியா வந்தார். 3 நாள் பயணமாக வந்துள்ள அவர் குடியரசு தின விழா மட்டுமல்லாமல் விவசாயம், வர்த்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து இருநாடுகள் இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் 5 அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வந்துள்ளனர்.

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர் உடல்கள் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டன

காஜியாபாத்: நேபாளத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர்களின் உடல்கள் நேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டன. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து அந்த நாட்டின் போக்கரா நகருக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 15-ம்தேதி காலையில் புறப்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகளும் விமானி உள்ளிட்ட 4 ஊழியர்களும் பயணம் செய்தனர். போக்காரா நகரில் புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கியது. … Read more

சீனா படைகளை குவிக்கும் நிலையில் இந்திய கடற்படை மாபெரும் போர் ஒத்திகை

புதுடெல்லி:  இந்திய கடற்படையின் போருக்கான தயார்நிலை குறித்த `ட்ராபெக்ஸ்’ எனப்படும் போர் ஒத்திகை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போர் ஒத்திகை இந்திய பெருங்கடலில் நேற்று தொடங்கியது. இதன்போது, ஏவுகணை போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், சிறிய போர் கப்பல்கள், விமானம் தாங்கி போர் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து வகை போர் கப்பல்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த போர் ஒத்திகையானது, போருக்கான இந்திய கடற்படையின் தயார் … Read more

டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நிலநடுக்கம் – பீதியடைந்து வெளியேறிய மக்கள்

புதுடெல்லி: டெல்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி, சாலை, தெருக்களில் திரண்டனர். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் சுதர்பாசிம் பகுதியை மையமாக கொண்டு நேற்று பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.9 புள்ளிகளாக பதிவானது. சுதர்பாசிம் மாகாணத்தின் பஜுரா, கைலாலி, தான்காதி மாவட்டங்களில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் … Read more

சாணி மெழுகிய வீட்டை கதிர் வீச்சு பாதிக்காதாம்: குஜராத் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

வியாரா,குஜராத்: குஜராத்தில் பசு மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல கடும் சட்டவிதிகள் உள்ளன. இதனை மீறி குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு பசு, காளை மாடுகளை கடத்தி சென்ற 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சமீர் வியாஸ் தீர்ப்பளித்தார். கடந்த 2022 நவம்பர் மாதம் அளிக்கப்பட்ட இந்த தண்டனை விவரம் தற்போது வௌியாகி உள்ளது. பசுக்களை வெட்டுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், “பசு ஒரு விலங்கு மட்டுமல்ல. அது நமது தாய். … Read more

புலனாய்வு பிரிவின் ரகசிய அறிக்கைகளை கொலீஜியம் வெளியிடுவதா?..ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு வேதனை

புதுடெல்லி: புலனாய்வு பிரிவு, ரா உளவு அமைப்பு ஆகியவற்றின் ரகசியங்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பொதுவௌியில் தெரிவிப்பது என்பது கவலை அளிப்பதாக உள்ளது என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு வேதனை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜீயம் நடைமுறை விஷயத்தில் உச்சநீதிமன்றத்துக்கும், ஒன்றிய அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனிடையே, அண்மையில் கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பற்றி புலனாய்வு பிரிவு, ரா உளவு அமைப்பு சில கருத்துகளை தெரிவித்திருந்தன.  இந்த … Read more

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண பட திரையிடலுக்கு எதிர்ப்பு – டெல்லி ஜேஎன்யு மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவண படத்தை திரையிட சில மாணவர்கள் திட்டமிட்டிருந்ததால் மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி செல்போன்களில் ஆவண படத்தை பார்த்தவர்கள்மீது கற்கள் வீசப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி … Read more

திருப்பதியில் ஊழியர் தூங்கியபோது லட்டு கவுண்டரில் ரூ.2 லட்சம் அபேஸ்

திருமலை: திருப்பதியில் லட்டு கவுண்டரில் ஊழியர் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆசாமி ரூ.2 லட்சம் பணத்தை திருடிச்சென்று விட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக லட்டு விற்பனை செய்யும் கவுண்டர்கள் கோயிலின் மேற்கு மாட வீதியை ஒட்டி  உள்ளது. இங்கு 24 மணி நேரமும் பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 36-வது எண் கவுண்டரில் இருந்த ஊழியர் பணியை முடித்துக் கொண்டு லட்டு விற்பனை செய்யப்பட்ட … Read more

வடமாநிலங்களில் நில அதிர்வு லக்னோவில் 4 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலி

புதுடெல்லி: நேபாளத்தில் நேற்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. இதன் எதிரொலியாக இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதில் லக்னோவில் 4 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலியானார்கள். மேற்கு நேபாளத்தில் நேற்று மதியம் 2.43 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் கவுமுல் கிராமத்தில் ஒரு பெண்  பலியானார். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. ஒரு … Read more