கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் ‘வகிர்’ சேர்ப்பு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

மும்பை: இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, கல்வாரி வகை நீர்மூழ்கியின் ஐந்தாவது கப்பலான ஐஎன்எஸ் ‘வகிர்’ திங்கள்கிழமை கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஐஎன்எஸ் ‘வகிர்’ பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மஸகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விழாவில், கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார் முன்னிலையில் கடற்படையில் வகிர் இணைக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்த நீர்மூழ்கி கப்பல், இந்தியாவின் கடல்சார் நலன்களை மேம்படுத்துவது, எதிரிகளைத் தடுப்பது, புலனாய்வு செய்வது, … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தாக்கம் கேரளாவில் எதிரொலி: கேரள மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக வாசித்தார்..!

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராய் அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஆளுநர் ஆரிப் முகமதுகான் சட்டப்பேரவையில் அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசித்தார். மாநில அரசின் அதிகாரங்களில் தலையீடும் ஒன்றிய அரசையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளா ஆளுநராக பதவியேற்ற நாளில் இருந்தே பினராய் விஜயன் தலைமையிலான அரசுடன் ஆரிப் முகமதுகான் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். குறிப்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமித்தல் கேரள அரசு மற்றும் ஆளுநர் இடையே வெளிப்படையான மோதல் வெடித்தது. … Read more

லண்டன் | பட்டமளிப்பு விழாவில் கர்நாடகா கொடியேந்திய இந்திய இளைஞர்: வைரலாகும் வீடியோ

லண்டன்: லண்டனில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய மாணவர் ஒருவர் தான் சார்ந்த கர்நாடக மாநிலத்தின் கொடியை ஏந்தி தனது மாநிலத்திற்கு நன்றி தெரிவித்தார். அவரது இந்த செயல் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடக மாநில மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆதிஷ் ஆர் வாலி என்ற அந்த மாணவர் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறையில் எம்எஸ் பட்டம் பெற்றார். அவர் மேடையில் ஏறி தன்னுடைய பட்டப்படிப்புச் சான்றிதழை வாங்கும்போது கர்நாடக மாநில … Read more

பதவியை ராஜினாமா செய்கிறார் கவர்னர்? – பிரதமர் மோடி எடுக்கும் முடிவு!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பதவியில் இருந்து விலக, அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பவர் பகத் சிங் கோஷ்யாரி, 80. இவர், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுடன் முட்டல் மோதல் போக்கை கடைபிடித்தவர். தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே – பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏக்நாத் … Read more

மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து விலக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி விருப்பம்..!

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி மராட்டிய மன்னர் சிவாஜி குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த நவம்பர் மாதம் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 19ம் தேதி மும்பை வந்த போது பிரதமர் மோடியிடம் … Read more

உளவுத்துறையில் 1,675 பணியிடம்.. விண்ணப்பிக்க பிப். 10 கடைசி தேதி..!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறை அமைப்பில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட், எக்ஸிகியூட்டிவ், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உட்பட பல்வேறு பணிப் பிரிவுகளில் நாடு முழுவதும் 1,675 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். புலனாய்வு பற்றிய கள அனுபவம் பெற்றிருக்க வேண்டும். செக்யூரிட்டி அசிஸ்டென்ட், எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற … Read more

“ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும்” – ராகுல் காந்தி

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று ஜம்மு நகருக்குள் நுழைந்தது. அப்போது, ஏராளமானோர் கூடி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், ராகுல் காந்தியின் யாத்திரையில் இணைந்து அவர்களும் நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ”ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இம்மாநில மக்களின் மிகப் பெரிய … Read more

சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதற்கான ஆதாரம் இல்லை; காங்கிரஸ் தலைவர் சுளீர்.!

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா என்ற இடத்தில் துணை ராணுவப் படையினர் வந்த பேருந்து மீது, பயங்கரவாதி ஒருவர் தனது வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் பயணித்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், அந்த பயிற்சி முகாமும் அங்கிருந்த பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டதாக … Read more

ஊழியர்கள் க்ரீன் கார்டு பெறுவதை முடக்கிய கூகுள்..!

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்து வருவதோடு, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஊழியர்கள் அமெரிக்காவின் க்ரீன் கார்டு பெறுவதற்கான செயல்முறையை முடக்கி வருவது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிற்கு பணிக்குச் செல்வோர் அந்நாட்டின் பிரேம் எனப்படும் தொழிலாளர் துறையின் சான்றிதழைப் பெற வேண்டும். இந்நிலையில், பிரேம் தொடர்பாக ஊழியர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும், இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என்று ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. … Read more

கேரளாவில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன் நேரில் ஆய்வு..!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் இன்று (23.01.2023) பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வின்போது, செய்தி … Read more