உச்ச நீதிமன்றம், பிபிசி ஆவணப் படம் குறித்த கிரண் ரிஜிஜு பார்வை: மஹுவா மொய்த்ரா கடும் விமர்சனம்

புதுடெல்லி: “உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக அவமதிக்கும் மத்திய சட்ட அமைச்சர், குஜராத் கலவரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த பிபிசியின் கருத்தை நம்பியதற்காக மற்றவர்களை கேள்வி கேட்கிறார்” என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாஜகவின் பாசாங்குத்தனம்: ‘நீதிமன்றம் அரசியல் சாசனத்தை ஹைஜாக் செய்துவிட்டது’ என்ற உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் பேச்சை வைத்து மத்திய சட்ட அமைச்சர் உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக அவமதிப்பது அவர்களுக்கு பிரச்சினை … Read more

குடியரசு தின அணிவகுப்பில் எத்தனை அலங்கார ஊர்திகள்? மத்திய அரசு தகவல்!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் இடம்பெறக் கூடிய பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் … Read more

Budget 2023: PLI திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம்

உற்பத்தியை ஊக்குவிக்கவும், நவீன தொழில்நுட்பத்தைக் கவரவும், தரத்தை மேம்படுத்தவும் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை (பிஎல்ஐ) மத்திய அரசு அறிமுகம் செய்தது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், வரவிருக்கும் பட்ஜெட்டில் பொம்மைகள், சைக்கிள்கள், தோல் மற்றும் காலணி போன்ற வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளுக்கும் பிஎல்ஐ திட்டம் அறிவிக்கப்படலாம். தற்போது, ​​14 துறைகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவில் … Read more

இந்தியாவின் மூவர்ணக் கொடி அந்தமானில்தான் முதன்முதலில் கொடி ஏற்றப்பட்டது: மோடி

டெல்லி: இந்தியாவின் மூவர்ணக் கொடி முதன்முதலில் ஏற்றப்பட்டது அந்தமானில்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வீர சாவர்க்கர் உள்ளிட்ட பல தியாகிகள் அந்தமான் தீவில்தான் அடைக்கப்பட்டிருந்தனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது என்ன Drinking Drive? – ரீல்ஸுக்காக ரூல்ஸை பிரேக் செய்தவருக்கு கிடைத்த அபார பரிசு!

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காகவே நாட்டில் பலரும் பொது இடங்களில் ஏதேனும் விதிமீறல்களில் ஈடுபட்டு கொண்டு வருவதும், அதில் சிக்குவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் டெல்லி அருகே நெடுஞ்சாலையில் பைக் ஓட்டியபடியே பீர் குடித்துக் கொண்டிருந்த வீடியோ மூலம் இளைஞர் ஒருவர் போலீசிடம் சிக்கிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. காசியாபாத்தில் உள்ள டெல்லி – மீரட் இடையேயான விரைவுச் சாலையில் புல்லட் வண்டியில் ஹாயாக பீர் குடித்தபடி இளைஞர் வண்டி ஓட்ட அவரது சகாக்கள் இந்த சாகசத்தை வீடியோவாக … Read more

பிஹார் மாநிலத்தில் கார் மோதி 8 கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு

பாட்னா: பிஹார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டம் பங்ரா கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் சங்கர் சவுதார். இவர் சைக்கிளில் பங்கரா சவுக் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்போது கோபால் கன்ச் பகுதியிலிருந்து வேகமாக வந்த கார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார் முன் பகுதியில் இருக்கும் பானட்டில் விழுந்த சங்கர், வைப்பரை பிடித்து தொங்கியபடி காரை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளார். ஆனால், கார் டிரைவர் காரை நிறுத்தாமல் 8 கி.மீ. தூரம் வேகமாக … Read more

அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றோரின் பெயர்கள் சூட்டல்

சென்னை: அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருதுபெற்றோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. நேதாஜியின் பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடும் நிலையில் பிரதமர் மோடி பெயர் சூட்டினார்.

“பெட்ரோல் விலை விரைவில் குறையும்”!!

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு கட்டிய பிறகு பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 15 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அதேநேரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 116 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, தற்போது 82 டாலர்களாகக் … Read more

குளிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச கம்பளி ஆடைகளை அளிக்கும் லக்னோ மால்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற வர்த்தக வளாகத்தை டாக்டர் அகமது ராசா கான் (யுனானி மருத்துவர்) நடத்தி வருகிறார். இந்த வளாகத்திலுள்ள ஒரு கடை, ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு ஏற்ற கம்பளி ஆடைகள், போர்வைகளை இலவசமாக வழங்கி வருகிறது இந்த அனோகா மால். கடந்த ஆண்டு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு இலவச ஆடைகள் … Read more

பிபிசி ஆவணப்படம் நீக்கம்: ஒன்றிய அரசின் சட்டவிரோத நடவடிக்கை!

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவணpபடத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் 2ஆம் பாகம் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், யூ-டியூபில் வெளியான இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிபிசி … Read more