இன்று தொடங்குகிறது ஜே.இ.இ மெயின் நுழைவுத் தேர்வு..!!

நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்து ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல் படிப்பு படிக்க வேண்டுமென்றால், அவர்கள் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஒவ்வொரு ஆண்டும் இந்தத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு 2 முறை நடத்தப்படுகிறது. அதில் முதல் கட்ட ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு இன்று … Read more

விரைவில் இந்தியாவின் மிக நீளமான சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர்..!!

நாடு முழுவதும் தற்போது 24 விரைவு சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. அதோடு 18 விரைவு சாலைகள் கட்டுமான நிலையில் உள்ளன. இதில் தலைநகர் டெல்லியையும் நாட்டின் வர்த்தக தலைநகர் மும்பையையும் இணைக்கும் விரைவு சாலை முக்கியமானது. கடந்த 2019 மார்ச் 8-ம் தேதி டெல்லி – மும்பை விரைவு சாலைக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். இதன்படி டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவை இணைக்கும் வகையில் ஒரு … Read more

கொலிஜியம் விவகாரம் நீதிபதிகள் தேர்தலை சந்திக்க வேண்டியதில்லை: ஒன்றிய சட்ட அமைச்சர் கடும் விமர்சனம்

புதுடெல்லி: கொலிஜியம் விவகாரத்தில் அதிருப்தி அடைந்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நீதிபதிகள் தேர்தலை சந்திக்க வேண்டியதில்லை என்று விமர்சனம் செய்தார். டெல்லி வக்கீல்கள் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று  பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: நீதிபதிகளாக பதவியேற்ற பிறகு அவர்கள் தேர்தலில் சந்திக்கவேண்டியதில்லை. அல்லது பொதுமக்களின் கண்காணிப்பை எதிர்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் நீதிபதிகளையும், அவர்களின் தீர்ப்புகளையும், அவர்கள் தீர்ப்பு வழங்கும் விதத்தையும், அவர்களின் மதிப்பீடுகளையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த … Read more

அந்தமான் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருதாளர்கள் பெயர் – பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டியுள்ளார். சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள், பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி நேதாஜியின்126-வது பிறந்தநாள் நேற்று பராக்கிரம தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அந்தமான்-நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, ‘பரம்வீர் சக்ரா’ விருது … Read more

சுருக்கு மடி வலை வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சுருக்கு மடி வலையை பொருத்தமட்டில் மற்ற மாநிலங்கள் எப்படி அனுமதிக்கின்றன என்பது தெரியவில்லை. இருப்பினும் தமிழகத்தில் கடல் வளம் மற்றும் லட்ணக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதே பிரதானமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது‘ என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த18ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி … Read more

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் – சிக்கிம் மாநில அரசு அறிவிப்பு

காங்டாக்: ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டிச்சென்றுள்ள நிலையில். உலக அளவில் மக்கள்தொகையில் 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இருந்தபோதும், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் மக்கள்தொகை குறைவாகவே உள்ளது. அங்கு பிறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிக்கிமை சேர்ந்த பெண் அரசு ஊழியர்கள் ஒரு குழந்தைக்கும் … Read more

போலி செய்திகள் மக்களை திசை திருப்புகின்றன: தலைமை தேர்தல் ஆணையர் வேதனை

புதுடெல்லி: தேர்தல் நேரங்களில் சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி செய்திகளால் மக்கள் திசை திருப்பப்படுகின்றனர் என்று தலைமை தேர்தல் ஆணையர் வேதனை தெரிவித்தார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 17 நாடுகள் மற்றும் தேர்தல் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். ‘தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்தார். … Read more

நடிகரின் தாய் மீது தாக்குதல் மனைவி மீது வழக்கு பதிவு

மும்பை: நடிகரின் தாயை தாக்கியதாக மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்குக்கும் ஆலியாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு முன் நவாசுதீன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் போலீஸில் ஆலியா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், ஆலியா தன்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னை தாக்கியதாக நவாசுதீனின் தாயாரான மெகருதீன் சித்திக் மும்பை போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் … Read more

வன்முறை எதிரொலி தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் திரிபுராவில் ஆய்வு

அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டப்பேரவைகளுக்கு அடுத்த 16ம் தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இவற்றில் திரிபுராவில் மட்டுமே பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாஜ.வை வீழ்த்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  இதனையொட்டி இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு கட்சியினரும் இணைந்து நடத்திய மோட்டார் சைக்கிள் பேரணியில் வன்முறை வெடித்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் மாநில … Read more

ஜம்முவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுலுடன் காஷ்மீரி பண்டிட்கள் சந்திப்பு: பாஜ அரசால் சந்திக்கும் அவலங்களை விளக்கினர்

சம்பா: ஜம்முவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் இடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை காஷ்மீரி பண்டிட்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, தீவிரவாதிகளால் குறிவைத்து கொல்லப்படும் அவலங்களையும், அதன் விளைவாக பணியிட மாற்றம் கோரி போராடும் அரசு பணியாளர்களின் பிரச்னைகள் குறித்து விவரித்தனர். நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரை, இறுதி கட்டத்தை நோக்கி கடந்த 20ம் தேதி ஜம்முவில் நுழைந்துள்ளது. அங்கு, ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையில் … Read more