“ஆபத்தான எந்த தகவலையும் கொலீஜியம் வெளியிடவில்லை” – கிரண் ரிஜிஜுவுக்கு ப.சிதம்பரம் பதில்

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்படி எந்த ஆபத்தான தகவல்களையும் கொலீஜியம் வெளியிடவில்லை என்றும், பின்னர் ஏன் சட்ட அமைச்சர் பதற்றம் அடைகிறார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட மூன்று நபர்கள் குறித்த ஐ.பி, ரா உளவு பிரிவுகளின் அறிக்கையை கொலீஜியம் பகிர்ந்து கொண்டதற்கு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏன் கோபப்பட வேண்டும்? கொலீஜியம் அந்த நபர்களின் தனிப்பட்ட … Read more

மத்திய பட்ஜெட் 2023ல் என்னென்ன சர்ப்ரைஸ்? பெருசா கணக்கு போடும் கர்நாடகா!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு முன்னதாக பிப்ரவரி ஒன்றாம் தேதி 2023-24ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. கர்நாடக மாநில முதல்வரும், நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை ஏற்கனவே மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்த பட்டியலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பி வைத்துள்ளார். நிச்சயம் நல்ல திட்டங்கள் வரும் என்று காத்திருக்கிறார். சிறப்பு திட்ட அறிவிப்புகள் அதுமட்டுமின்றி மத்திய அரசு, மாநில அரசு ஆகியவை கைகோர்த்து … Read more

ஜி 20 உச்சி மாநாட்டிற்கு எகிப்தை விருந்தினர் நாடாக அழைத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி: எகிப்து அதிபர் அப்தெல் எல் சிசி

டெல்லி: 2015ல் நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்தேன், அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவர் தனது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார் என்று எனக்குத் தெரியும். எங்களின் உறவை முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மோடியை எகிப்தின் கெய்ரோவுக்கு அழைத்துள்ளேன். நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது பற்றி பேசினோம் மேலும் COP 27 பற்றியும் விவாதித்தோம். எகிப்துக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம். வரவிருக்கும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு எகிப்தை … Read more

ரூ.1126க்கு உள்நாட்டு விமான டிக்கெட்..!!

குடியரசு தின விற்பனையில் ஸ்பைஸ்ஜெட் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதில் உங்கள் விமான டிக்கெட்டை வெறும் ரூ.1126க்கு நீங்கள் பெறலாம். ஆனால் இந்த டிக்கெட்டை எங்கு, எப்படி முன்பதிவு செய்வது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த நிலையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகின்றது, அதன்படி 1126 ரூபாய்க்கு உள்நாட்டு விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று ஸ்பைஸ்ஜெட் அதிகாரப்பூர்வ ட்வீட்டில் பதிவிட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் உங்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை … Read more

பிராந்திய மொழிகளில் நாளை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதி அறிவிப்பு!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நாளை தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியாகவுள்ளது. அதாவது, 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு … Read more

குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லி வந்தார் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்ததினராகப் பங்கேற்க டெல்லி வந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி, பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருதரப்பு உறவுகள் குறித்தும், வேளாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம் தொடர்பாகவும் இருவரும் விவாதிக்க உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் எகிப்து அதிபர் இன்று சந்தித்துப் பேசுகிறார். முன்னதாக மூன்றுநாள் பயணமாக டெல்லி வந்த எகிப்து அதிபருக்கு விமான நிலையத்தில் உற்சாக … Read more

அதானி குழும நிறுவனங்கள் வரவு – செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு செய்ததாக புகார்..!!

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் வரவு – செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழும நிறுவனங்களில் இருந்து பணம் கையாடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்துவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் கொலை வழக்கு – மத்திய அமைச்சர் மகனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்!

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு 8 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் அமைதியான வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அவர்கள்மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுடைய கார் புகுந்ததில் … Read more

லக்கிம்பூர் கேரி வழக்கு | ஆஷிஸ் மிஸ்ராவுக்கு இடைகால ஜாமீன் – உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு 8 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் உத்தர பிரதேசத்தில் தங்க தடைவித்துள்ளது. தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆஷிஸ் மிஸ்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜேகே மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த … Read more

74ஆவது குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை!

நாட்டின் 74ஆவது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று உரையாற்றவுள்ளார். இந்த உரை அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளிலும் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும். இதேபோல், தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் முதலில் இந்தியிலும், அதனைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும். இதைனைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளிலும் அதன் பிராந்திய மொழிகளிலும் குடியரசுத்தலைவரின் உரை ஒளிபரப்பப்படுகிறது. அகில இந்திய வானொலியில், பிராந்திய மொழிகளில் இரவு 9.30 மணி முதல் அதன் … Read more