உச்சநீதிமன்றத்தை மீண்டும் வம்புக்கு இழுத்த ஒன்றிய சட்ட அமைச்சர்.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. … Read more

எந்திரமாக இருந்தாலும் தந்திரம் இல்லைன்னா தலை கீழத்தான் தொங்கனும்.. 70 அடி தென்னை மரத்தில் சிக்கிய சேட்டன்..!

மரம் ஏறும் எந்திரத்தின் உதவியுடன் 70 அடி உயரமுள்ள தென்னை மரத்தின் உச்சிக்கு சென்றவர், நிலை தடுமாறி விழுந்து தலைகீழாக தொங்கிய நிலையில் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்…. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அடுத்த வெள்ளத்துவல் பகுதியில் உள்ள சுமார் 70 அடி உயர தென்னை மரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயன் என்பவர் மரம் ஏறும் எந்திரத்தை பயன்படுத்தி தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறினார் அவர் … Read more

காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும்: ராகுல் காந்தி பேச்சு..!

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் என ராகுல் காந்தி எம்.பி.தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் … Read more

நெடுஞ்சாலையின் நடுவில் காரை நிறுத்தி இன்ஸ்டா ரீல் – இளம்பெண்ணுக்கு ரூ.17,000 அபராதம்!

இன்ஸ்டாகிராம் சமூகவலைதளப் பக்கத்தில் பிரபலமாக இருந்துவரும் இளம்பெண் ஒருவருக்கு, சாலை விதிகளை மீறியதாக ரூ. 17,000 அபராதம் விதித்துள்ளது உத்தரப்பிரதேச மாநில காவல்துறை. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூகவலைதளங்கள் பெருகியுள்ள இந்தக் காலத்தில், அதில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் பிரபலங்களாக இருந்தாலும், இல்லையென்றாலும் ரீல்ஸ் செய்து, அதாவது குறுகிய வீடியோக்களை செய்து வெளியிடுவது வழக்கமான ஒன்றாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அதிகமான ஃபாலோயர்ஸ்களைப் பெற (பின்தொடர்பவர்களைப் பெற), பலர் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பதிவுசெய்து வீடியோ வெளியிடுவதைக் காணலாம். ஆனால் இந்தச் … Read more

கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் ‘வகிர்’ சேர்ப்பு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

மும்பை: இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, கல்வாரி வகை நீர்மூழ்கியின் ஐந்தாவது கப்பலான ஐஎன்எஸ் ‘வகிர்’ திங்கள்கிழமை கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஐஎன்எஸ் ‘வகிர்’ பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன், இந்தியாவிலுள்ள மஸகான் டோக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விழாவில், கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார் முன்னிலையில் கடற்படையில் வகிர் இணைக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்த நீர்மூழ்கி கப்பல், இந்தியாவின் கடல்சார் நலன்களை மேம்படுத்துவது, எதிரிகளைத் தடுப்பது, புலனாய்வு செய்வது, … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தாக்கம் கேரளாவில் எதிரொலி: கேரள மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக வாசித்தார்..!

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராய் அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஆளுநர் ஆரிப் முகமதுகான் சட்டப்பேரவையில் அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசித்தார். மாநில அரசின் அதிகாரங்களில் தலையீடும் ஒன்றிய அரசையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளா ஆளுநராக பதவியேற்ற நாளில் இருந்தே பினராய் விஜயன் தலைமையிலான அரசுடன் ஆரிப் முகமதுகான் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். குறிப்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமித்தல் கேரள அரசு மற்றும் ஆளுநர் இடையே வெளிப்படையான மோதல் வெடித்தது. … Read more

லண்டன் | பட்டமளிப்பு விழாவில் கர்நாடகா கொடியேந்திய இந்திய இளைஞர்: வைரலாகும் வீடியோ

லண்டன்: லண்டனில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய மாணவர் ஒருவர் தான் சார்ந்த கர்நாடக மாநிலத்தின் கொடியை ஏந்தி தனது மாநிலத்திற்கு நன்றி தெரிவித்தார். அவரது இந்த செயல் அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடக மாநில மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆதிஷ் ஆர் வாலி என்ற அந்த மாணவர் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறையில் எம்எஸ் பட்டம் பெற்றார். அவர் மேடையில் ஏறி தன்னுடைய பட்டப்படிப்புச் சான்றிதழை வாங்கும்போது கர்நாடக மாநில … Read more

பதவியை ராஜினாமா செய்கிறார் கவர்னர்? – பிரதமர் மோடி எடுக்கும் முடிவு!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பதவியில் இருந்து விலக, அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பவர் பகத் சிங் கோஷ்யாரி, 80. இவர், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுடன் முட்டல் மோதல் போக்கை கடைபிடித்தவர். தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே – பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏக்நாத் … Read more

மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து விலக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி விருப்பம்..!

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரி மராட்டிய மன்னர் சிவாஜி குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த நவம்பர் மாதம் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 19ம் தேதி மும்பை வந்த போது பிரதமர் மோடியிடம் … Read more

உளவுத்துறையில் 1,675 பணியிடம்.. விண்ணப்பிக்க பிப். 10 கடைசி தேதி..!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறை அமைப்பில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட், எக்ஸிகியூட்டிவ், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உட்பட பல்வேறு பணிப் பிரிவுகளில் நாடு முழுவதும் 1,675 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். புலனாய்வு பற்றிய கள அனுபவம் பெற்றிருக்க வேண்டும். செக்யூரிட்டி அசிஸ்டென்ட், எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற … Read more