மோடிக்கும் மம்தாவிற்கு இடையே மோ-மோ ஒப்பந்தம்; காங்கிரஸ் எம்பி கிண்டல்.!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய … Read more

குடியரசு தினத்தில் தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பால் அச்சுறுத்தல்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

புதுடெல்லி: குடியரசு தினத்தில் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், சீக்கியர் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பின் தலைவன் குருபத்வந்த் சிங் பன்னு, சமூக ஊடகங்களின் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில், ‘இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து பஞ்சாபை இந்தாண்டு விடுவிப்போம். வரும் 26ம் தேதியன்று மக்கள் வீட்டுக்குள்ளேயே … Read more

கார் மோதி 8 கிமீ தூரம் தொங்கிக் கொண்டே சென்ற முதியவர்!!

கார் மோதி முதியவர் ஒருவர் 8 கிலோ மீட்டர் தூரம் காரின் வைப்பரை பிடித்து தொங்கிக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டம் பாங்க்ரா என்ற கிராமத்தில் முதியவர் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்ற போது கோர விபத்து நேரிட்டது. தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, வேகமாக வந்த கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் கார் மீதே விழுந்த அவர் … Read more

''ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்'': ஜெய்ராம் ரமேஷ் 

ஜம்மு: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்முவில் நடைபெற்று வரும் நிலையில், “ராகுல் காந்தியின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அதில் சமரசம் செய்துகொள்ள முடியாது” என்று காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும். வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. யாத்திரை தற்போது அதன் கடைசி பகுதியான ஜம்முவில் நடைபெற்று வருகிறது. ஜம்முவிலுள்ள கத்துவாவின் லக்னாபூர் பகுதியில் யாத்திரை … Read more

ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கு; 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை தயார்.!

டெல்லியில் கடந்த மே மாதம் ஷ்ரத்தா வால்கர் (28) என்ற பெண் 35 துண்டுகளாக உடலை வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் காதலன் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். மும்பையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லிக்கு வந்தவர்கள் தனியாக வீடெடுத்து லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். ஒன்றாக வாழ்ந்தபோது ஏற்பட்ட சண்டையில் ஷ்ரத்தாவை கொலை செய்துவிட்டு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி … Read more

வருகிற குடியரசு தினம் முதல் ‘இன்கோவாக்’ நாசில் தடுப்பூசி: பாரத் பயோடெக் தலைவர் தகவல்

போபால்: வரும் 26ம் தேதி முதல் பாரத் பயோடெக்கின் நாசில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று அதன் தலைவர் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இந்திய சர்வதேச அறிவியல் விழாவில், பாரத் பயோடெக் நிறுவன  தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா பேசுகையில், ‘கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் லும்பி தோல் நோய்க்கான தடுப்பூசி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும்.  மூக்கு வழியாக செலுத்தப்படும் நாசில் தடுப்பூசி (இன்கோவாக்) வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று … Read more

தீவுகளுக்கு வீரர்களின் பெயர்களை சூட்ட உள்ள பிரதமர்!!

அந்தமான் – நிகோபார் தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர் மோடி நாளை சூட்டுகிறார். ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி மாவீரர்களின் நினைவாக பராக்ரம் திவாஸ் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக படை திரட்டி போராடிய மாவீரர் போஸ் நினைவாக பராக்ரம் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்த வருட பராக்ரம் திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் கலந்து கொள்கிறார். நாளை … Read more

21 தீவுகளுக்கு நாளை பெயர்சூட்டும் விழா – பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேத்திர மோடி நாளை சூட்டுகிறார். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23, பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தினம் டெல்லியில் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத … Read more

‘படத்தை ஓடவிடுங்க சார்..!’- அஸ்ஸாம் முதல்வருக்கு போன் போட்ட ஷாருக்கான்.!

அஸ்ஸாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாகவும், தீபிகா படுகோன் கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் நாடுமுழுவதும் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தநிலையில் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் … Read more

காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை பயணம்’..!

ஜம்மு காஷ்மீரில் நேற்று அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்புகளால், இன்று உச்சக்கட்ட பாதுகாப்புடன் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை அங்கு மேற்கொண்டார். ஹிராநகரிலிருந்து டக்கர் ஹவேலிவரை சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபயணம் செல்வதால், அவரையும், அவருடன் செல்லும் காங்கிரஸ் பிரமுகர்களையும் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ஒற்றுமை பயணத்தை வரும் 30ஆம் தேதி காஷ்மீரில் ராகுல் காந்தி நிறைவுசெய்கிறார். Source link