பிஹார் மாநிலத்தில் கார் மோதி 8 கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு

பாட்னா: பிஹார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டம் பங்ரா கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் சங்கர் சவுதார். இவர் சைக்கிளில் பங்கரா சவுக் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்போது கோபால் கன்ச் பகுதியிலிருந்து வேகமாக வந்த கார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார் முன் பகுதியில் இருக்கும் பானட்டில் விழுந்த சங்கர், வைப்பரை பிடித்து தொங்கியபடி காரை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளார். ஆனால், கார் டிரைவர் காரை நிறுத்தாமல் 8 கி.மீ. தூரம் வேகமாக … Read more

அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றோரின் பெயர்கள் சூட்டல்

சென்னை: அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருதுபெற்றோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. நேதாஜியின் பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடும் நிலையில் பிரதமர் மோடி பெயர் சூட்டினார்.

“பெட்ரோல் விலை விரைவில் குறையும்”!!

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு கட்டிய பிறகு பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 15 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அதேநேரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 116 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, தற்போது 82 டாலர்களாகக் … Read more

குளிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச கம்பளி ஆடைகளை அளிக்கும் லக்னோ மால்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற வர்த்தக வளாகத்தை டாக்டர் அகமது ராசா கான் (யுனானி மருத்துவர்) நடத்தி வருகிறார். இந்த வளாகத்திலுள்ள ஒரு கடை, ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு ஏற்ற கம்பளி ஆடைகள், போர்வைகளை இலவசமாக வழங்கி வருகிறது இந்த அனோகா மால். கடந்த ஆண்டு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு இலவச ஆடைகள் … Read more

பிபிசி ஆவணப்படம் நீக்கம்: ஒன்றிய அரசின் சட்டவிரோத நடவடிக்கை!

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவணpபடத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் 2ஆம் பாகம் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், யூ-டியூபில் வெளியான இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிபிசி … Read more

Budget 2023: வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம், வருகிறது வரிமுறையில் மாற்றம்

பட்ஜெட் 2023: இன்னும் சில நாட்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் பல துறையினருக்கும், சாமானியர்களுக்கும், வணிகர்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. மகக்ளவைத் தேர்தலுக்கு முன்னர் மோடி அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் இதில் அரசாங்கம் பல நல்ல அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் வரி அடுக்குகள் மற்றும் வடி வரம்பிலும் மாற்றம் … Read more

இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்து காங்கிரசின் அடுத்த வியூகம்: 56 தனித் தொகுதிகளை குறிவைத்து புதிய செயல்திட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் 56 தனித் தொகுதிகளை குறிவைத்து செயல் திட்டங்களை வகுத்துள்ளது. அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம், காங்கிரஸ் தொண்டர்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது. குமரி முதல் காஷ்மீர் வரை பெரும் வரவேற்பை பெற்ற இப்பயணத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 56 எஸ்.சி., எஸ்.டி. தொகுதிகளை குறிவைத்து காங்கிரஸ் செயல் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தனி … Read more

வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழப்பு!!

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர சைனி என்பவரின் மனைவியான ராதா தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார். அறுவை சிகிச்சை செய்தால் குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறினர். இதைடுத்து கடந்த நவம்பர் மாதம் ராதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை … Read more

மத்திய அரசில் 11,000 காலியிடங்கள்.. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2022 தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 11,409 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். SSC Exam MTS Educational Qualification: விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியத்தில் இருந்து 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க … Read more

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: பாரத் பயோடெக் நிறுவனம் 26-ம் தேதி அறிமுகம்

போபால்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி கரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது பூஸ்டர் தடுப்பூசியாகவும் போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதற்கு இன்கோவாக் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அனைத்து கட்ட பரிசோதனைகளும் … Read more