பெரா வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான ஆவணங்களை 3 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பெரா முறைகேட்டு வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான விசாரணை ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டிப்பர் இன்வேஸ்மெண்ட் மூலமாக டெபாசிட் செய்ததாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த 1996ம் ஆண்டு அமலாக்கதுறை டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த 1996ம் ஆண்டு … Read more

சபரிமலையில் குவிந்து கிடக்கும் காணிக்கை நாணயங்கள்: 700 ஊழியர்கள் பணியாற்றியும் எண்ண முடியாமல் திணறல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மலை போல் குவிந்து கிடைக்கும் நாணயங்களை எண்ணும் பணியில் 700 ஊழியர்கள் ஈடுபட்டுள்ள போதிலும் அனைத்தையும் எண்ணி முடிக்க குறைந்தது 2 மாதங்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. சபரிமலையில் கடந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனர். இந்த சீசனில் இதுவரை கிடைத்த மொத்த வருமானம் ரூ.330 கோடியை தாண்டி உள்ளது. சபரிமலை கோயில் வரலாற்றில் இது மிக அதிக வருமானம் ஆகும். ஆனால் இதுவரை நாணயங்கள் எண்ணி முடிக்கப்படவில்லை. சபரிமலையில் உள்ள … Read more

டிடிவி தினகரன் மீதான பெரா வழக்கு; 3 வாரத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில், அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாகவும், மேலும் அந்த வங்கியில் முறைகேடான முறையில் அந்த பணம் வைப்பு தொகை வைக்கப்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் மீது 2 வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேற்கண்ட அந்நிய செலாவணி, பெரா வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி டிடிவி.தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் தொடர்பாக முக்கிய … Read more

3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்பு! தற்கொலையா, கொலையா?

புனேவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரின் சடலங்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் காவல்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கடந்த 18-ம் தேதி புனேவிலுள்ள பரகான் என்ற கிராமத்துக்கு அருகேயுள்ள பீமா ஆற்றில், சடலமொன்று மிதப்பதாக புனே காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தீவிர சோதனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 4 நாள்களாக தொடர்ந்து வந்த அந்த சோதனையில், மேலும் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி புனே காவல்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, “இவையாவும் ஒரே குடும்பத்தை … Read more

நியூசிலாந்திற்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணி, தொடரையும் முழுமையாக கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 385 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதமடித்தனர். கடின இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 42ஆவது ஓவரில் 295 ரன்கள் மட்டும் எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. ஏற்கனவே … Read more

மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஐதராபாத் பல்கலையில் ஒளிபரப்பு

ஐதராபாத்: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்த போது நடந்த கலவரம் தொடர்பாக ‘பிபிசி’ செய்தி நிறுவனம் ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப் படத்தை ஒளிபரப்புவதற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில், சர்ச்சைக்குரிய ஆவணப் படம் திரையிடப்பட்டது. பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அளித்த … Read more

ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவு..!

பெங்களூரு: ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதா மறைந்துவிட்டார். மற்ற மூவரும் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிந்த பின்னர் 3 பேரும் விடுதலையாகி வெளியே வந்தனர்.இந்த வழக்கு விசாரணையின் போது, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து … Read more

பஞ்சாப் சிறையில் உள்ள சித்துவின் விடுதலையில் முட்டுக்கட்டை: ராகுல் நடைபயணத்தில் பங்கேற்கவில்லை..!

சண்டிகர்: பஞ்சாப் சிறையில் உள்ள சித்துவின் விடுதலையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், அவர் ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரரான பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து,  1988ம் ஆண்டு சாலை விபத்து வழக்கில் சிக்கியதால், நீதிமன்ற உத்தரவுபடி பாட்டியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.  குடியரசு தினத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 51 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான பட்டியலை சிறைத்துறை நிர்வாகம் தயாரித்து … Read more

ஷ்ரத்தா கொலை வழக்கு | அஃப்தாபுக்கு எதிராக 6,629 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் அஃப்தாப் ஆமின் பூனவல்லாவுக்கு எதிராக டெல்லி போலீசார் 6,629 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் இணை ஆணையர் மீனு சவுத்ரி, ”ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக தோறாயமாக 6 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். இதில், இந்த கொலை வழக்கு தொடர்பாக 150க்கும் மேற்பட்டவர்களிடம் பெற்ற அறிக்கையை இணைத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார். கொலைக்கான காரணம் … Read more

விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்… மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!

இந்தியாவின் விமான போக்குவரத்து இயக்குநரமான DGCA, விமான பயணி ஒருவரின் மோசமான நடத்தை குறித்து தகவல் தெரிவிக்காததற்காக ஏர் இந்தியா மீது மீண்டும் அபராதத்தை விதித்துள்ளது. கடந்த ஆண்டு பாரிஸ்-புது டெல்லி விமானத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்து புகார் செய்யாததற்காக டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நியூயார்க்-டெல்லி விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் நடந்த சில நாட்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அறிக்கைகளின்படி, … Read more