இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்து காங்கிரசின் அடுத்த வியூகம்: 56 தனித் தொகுதிகளை குறிவைத்து புதிய செயல்திட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் 56 தனித் தொகுதிகளை குறிவைத்து செயல் திட்டங்களை வகுத்துள்ளது. அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம், காங்கிரஸ் தொண்டர்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது. குமரி முதல் காஷ்மீர் வரை பெரும் வரவேற்பை பெற்ற இப்பயணத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 56 எஸ்.சி., எஸ்.டி. தொகுதிகளை குறிவைத்து காங்கிரஸ் செயல் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தனி … Read more

வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழப்பு!!

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர சைனி என்பவரின் மனைவியான ராதா தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார். அறுவை சிகிச்சை செய்தால் குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறினர். இதைடுத்து கடந்த நவம்பர் மாதம் ராதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை … Read more

மத்திய அரசில் 11,000 காலியிடங்கள்.. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2022 தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 11,409 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். SSC Exam MTS Educational Qualification: விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியத்தில் இருந்து 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க … Read more

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: பாரத் பயோடெக் நிறுவனம் 26-ம் தேதி அறிமுகம்

போபால்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி கரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது பூஸ்டர் தடுப்பூசியாகவும் போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதற்கு இன்கோவாக் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அனைத்து கட்ட பரிசோதனைகளும் … Read more

Netaji Jayanti: மரணத்தை வென்ற மாவீரர் ; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

Netaji Jayanti: “வீரம் விளைந்த தமிழ் மண்ணை நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன். இருகரம் கூப்பி இம்மண்ணை முத்தமிட்டு தலை வணங்குகிறேன். ஏனெனில், தமிழர்களின் வீரத்தைக் கண்டு மெய்சிலிர்க்கிறேன் ; வியப்படைகிறேன்.  இனியொரு பிறவி உண்டெனில், தமிழனாகப் பிறக்கவே விரும்புகிறேன்” என 1939ஆம் ஆண்டில் மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கம் முன்னின்று நடத்திய பொதுக் கூட்டத்தில் வீரமுழக்கமிட்டார்.  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வீரமுழக்கத்தில் ஆங்கிலேயர்களை இறுதி மூச்சுவரை எதிர்த்துநின்ற வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் போன்ற வீரமிக்க மாவீரர்களை எடுத்துரைக்க அவர் தவறவில்லை. … Read more

பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்: குஜராத் நீதிமன்றம் கருத்து

காந்திநகர்: பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்ததாக கூறி முகமது அமீன் என்பவரை குஜராத் போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கில் டாப்பி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி தனது உத்தரவின் … Read more

இந்த முறை தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர்!!

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து பொங்கல் விழாவுக்காக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையிலும் தமிழகம் என்று இருந்தது. அதே போல் இலச்சினை மத்திய அரசுடையது இருந்தது. இந்த இரண்டு விவகாரமும் பேசு பொருளாக மாறியது. ஆளுநர் மாளிகையின் அந்த அழைப்பிதழுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்தன. இதனையடுத்து திமுக எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி … Read more

பிரதமர் குறித்த பிபிசி ஆவணப் படத்துக்கு 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்துக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பல்துறை பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தது. அதுபற்றியும், அந்த கலவரத்துக்கும் அப்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பது போன்றும் ‘இந்தியா – மோடி கொஸ்டியன்’ என்ற தலைப்பிலான ஆவணப்படத்தில் கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் 13 … Read more

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பாஜ.வுக்கு தோல்வி: அகிலேஷ் யாதவ் பேச்சு

லக்னோ: உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜ தோல்வியை சந்திக்கும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். நாடு முழுவதற்குமான பொது தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜ.வின் 2 நாள் செயற்குழு கூட்டம் கடந்த வாரம் உபி.யில் நடந்தது.  இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், “அடுத்த 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய போவதாக கூறி வரும் கட்சி, முடிவுக்கான நாட்களை எண்ணிக் கொண்டுள்ளது. … Read more

முற்றிய வாக்குவாதம்… இளைஞரை காரின் முன்பக்கம் வைத்து இழுத்து சென்ற பெண்! பரபரப்பு வீடியோ

பட்டப்பகலில் பிரதான சாலையில் ஸ்கூட்டியில் 71 வயது முதியவரை ஒருவர் இழுத்துச்சென்ற கொடூரம் நடந்து சில தினங்களே ஆகியுள்ள நிலையில், தற்போது பெண்ணொருவர் பெங்களூரு சாலையில் தன் காரின் முன்புறம் 29 வயது மதிக்கத்தக்க ஒருவரை சுமார் 3 – 4 கி.மீ.க்கு இழுத்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. பலர் தடுக்க முயன்றும் அப்பெண் நிறுத்தாமல் சென்றுள்ளது, சாலையில் சென்றோர் எடுத்த வீடியோக்களில் பதிவாகியுள்ளது. பெங்களூருவில் ஞானபாரதியை சேர்ந்த உலால் மெயின் ரோடு பகுதியில் நடந்த சம்பவத்தின்படி, பெண்ணொருவர் காரில் 29 … Read more