கவுதம் அதானிக்கு இசட் பாதுகாப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் கவுதம் அதானி. இவருக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்து அச்சுறுத்தல்கள் இருப்பதால் இசட் பிரிவு பாதுகாப்பு தேவை என புலனாய்வு துறை அறிக்கை சமர்பித்து இருந்தது. இதனை தொடர்ந்து, கவுதம்  அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதன்படி, கவுதம் அதானிக்கு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய ரிசர்வ் போலீஸ் படையை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் கவுதம் … Read more

விமானங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: விமானங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படி விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி புதிதாக 9,062 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில், விமான பயணிகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என விமான நிறுவனங்களை ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, … Read more

உலகளவிலான காற்று மாசு தலைநகர் டெல்லி முதலிடம்: 17 லட்சம் பேர் பலி

புதுடெல்லி: காற்று மாசுவால் உலக முழுவதும் 17 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் டெல்லி முதலிடம் பிடித்துள்து. அமெரிக்காவைச் சேர்ந்த, ‘சுகாதார பாதிப்பு அமைப்பு’ என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலகளவில் 7,239 நகரங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, நைட்ரஜன் டை ஆக்சைடு மாசு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அதிக தீங்கு விளைவிக்கும் மோசமான காற்று மாசுவால்  (பிஎம்2.5) உலகளவில் 7,239 நகரங்களில் 17 … Read more

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் 215 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், சுகேஷ் சந்திரசேகர் ஏமாற்றிப் பணம் பறிப்பதை ஜாக்குலின் அறிந்திருந்ததாகவும், ஏமாற்றிய பணத்தில் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அவர் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஜாக்குலின் அமலாக்கத் துறை வழக்கில் சிக்கிய நிலையில் அவர் இந்தியில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அக்சய் … Read more

1-4 வயது குழந்தைகளுக்கு டிக்கெட் தேைவயில்லை: ரயில்வே விளக்கம்

ரயிலில் 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று டிக்கெட் விதிமுறைகளை ரயில்வே மாற்றி அமைத்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இவை முற்றிலும் தவறானவை, ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை, பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக் கொள்ளலாம், தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக் … Read more

தவுசன்ட் வாலா, ஜிலேபி பாக்ஸ் டண்டணக்கா ஆன கதையை சொல்கிறார் wiki: யானந்தா

‘‘அதிரடி தீர்ப்பை கேட்டு எடப்பாடி கோஷ்டி அதிர்ந்து போயிருக்காமே…’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘வெற்றிக் கனியையே ருசித்துக்கொண்டிந்த மாங்கனியாரின் ஆதரவாளர்கள் ஒரே ஒரு தீர்ப்பில் மனசொடிஞ்சு போயிட்டாங்களாம். தமிழகத்தின் முதல்வராகி  மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் இலைக்கட்சியின் இடைக்கால பொ.செ.ஆகி மணிமகுடம் சூட்டினாருன்னு அவரது அடிப்பொடிகள் வெற்றி களிப்பில் இருந்தாங்க. அதேபோல பொதுக்குழு தொடர்பான கேசிலும் வெற்றி நமக்குத்தான்னு இருந்தாங்க. இதற்காக டென் தவுசன்ட் வாலாவை வாங்கி மாங்கனி நகரை அதிரவைக்க திட்டமும் போட்டிருந்தாங்க. அதோடு … Read more

அவங்க எங்கே… நாம எங்கே… அமெரிக்கா ஓட்டலில் ஜெய்சங்கர் ஆச்சர்யம்: சமூக வலைதளத்தில் வைரல் வீடியோ

புதுடெல்லி: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க ஓட்டலுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அமைச்சர் ெஜய்சங்கர் கூறுகையில், ‘கொரோனா தொற்று காட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கடந்தாண்டு நான் அமெரிக்கா சென்றேன். அங்கு எனது மகன் வேலை செய்கிறார். அவருடன் ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றேன். ஓட்டலின் நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கேட்டனர். உடனடியாக நான் எனது செல்போனில் இருந்த … Read more

“நான் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவள்” – ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக சேர்ப்பு

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. அவரது ரூ.7 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டன. இதனிடையே, இந்த விவகாரத்தில் தற்போது ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை … Read more

ரூ.215 கோடி மிரட்டி பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளி: குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தகவல்

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் மோகன் சிங் என்பவரை சிறையிலிருந்து விடுவிக்க அவரின் மனைவியிடம் ரூ.215 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நூரா பத்தேகி ஆகியோருக்கு விலை மதிப்புமிக்க பொருட்களை கொடுத்தாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரண்டு நடிகைகளிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு … Read more

குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் மாற்றம் இல்லை: ரயில்வே அமைச்சகம் தகவல் 

புதுடெல்லி: ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயணச்சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த … Read more