பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கும் போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

டெல்லி: பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கும் போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.14 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் முதல்வரின் தனி செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களும் சென்றனர். நேற்று இரவு முதல்வர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இதையடுத்து, டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஜனாதிபதி திரவுபதி முர்முவை … Read more

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து வரும் நேற்று இரவு டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 14வது குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்கவுள்ளார். அதன்பின்னர், இன்று மாலை பிரதமர் … Read more

புதுச்சேரி பட்ஜெட் ஆகஸ்டு 22 அன்று தாக்கல்..!

2022 – 2023 நிதியாண்டுக்கான புதுச்சேரி அரசின் பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி வரும் 22ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளதாகப் பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 10 ந் தேதி தொடங்கிய நிலையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 22ஆம் நாள் பட்ஜெட் … Read more

டெல்லியில் திமுக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறனின் படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

டெல்லி: திமுக அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முரசொலி மாறனின் 89-வது பிறந்தநாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை அளித்தார்.

தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்ப்பு…

மும்பை: தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபரை மிரட்டி பறித்த பணத்தில் ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை அவர் வாங்கி தந்துள்ளார்.    

அற்பமான வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் – தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள யுயு லலித் வலியுறுத்தல்

புதுடெல்லி: அற்பமான வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் விதிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள யுயு லலித் நேற்று வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அற்பமான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அற்ப வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் விதிப்பதை கட்டாயமாக்க வேண்டும். அதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும். நீதிமன்றத்தின் … Read more

புதுச்சேரியில் ஆக.22ல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி…

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆகஸ்ட் 22ல் பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். 10,696 கோடி புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் முடிவுக்கு வருகிறது அவசரநிலை பிரகடனம் – அதிபர் ரணில் விக்கிரமசிங்க தகவல்

இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரலாறு காணாத அளவுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகிய நிலையில், அதிபர் பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்ச அண்மையில் பதவி விலகினார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் போராட்டங்கள் தொடர்ந்ததால், வன்முறையை … Read more

ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை

ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜம்முவி சித்ரா பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது. சகினா பேகம். அவரின் இரண்டு மகள்கள் நசீமா அக்தர், ரூபீனா பானு, மகன் ஜாஃபர் சலீம், உறவினர்கள் நூர் உல் ஹபீப், சாஜத் அகமது ஆகியோர் உயிரிழந்தவர்கள். இவர்களில் இருவரின் சடலம் ஒரு வீட்டிலும், எஞ்சிய 4 … Read more

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி கோர விபத்து: படுகாயமடைந்த 50 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை

மும்பை: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் விலாஸ்பூரில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட பயணிகள் ரயில் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. மராட்டிய மாநிலம் கோண்டியா அருகே நள்ளிரவில் ரயில் வந்த போது சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் பயங்கரமாக  மோதியது.இதில் பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே … Read more