பயணிகளின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு அளிக்கப்படாது – இரயில்வே துறை

இந்திய ரயில்வேயின், டிக்கெட் வழங்கும் பிரிவான ஐஆர்சிடிசியின் டிஜிட்டல் தரவுகளை பணமாக்குவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு அளிக்கப்படும் என வெளியான தகவலுக்கு ரயில்வேத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ரயில்வே துறையின் டிஜிட்டல் தரவுகளை விற்று ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த இரயில்வே துறை, ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு உட்பட்டு பொதுவான தரவுகளை ஆய்வு செய்து பணமாக்கல் திட்டத்துக்கு உதவும் வகையில் தற்போதைய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக … Read more

ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்ல அனுமதி

ஸ்ரீநகர்: ஜம்முவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் திரிகுடா மலை உச்சியில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ரியாசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. 

கனமழை, நிலச்சரிவு: இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள சர்கெட் என்ற கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் மேக வெடிப்பு காரணமாக கொட்டிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேக வெடிப்பு தாக்கமாக அதன் அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் … Read more

'26/11 தாக்குதல் போல் மீண்டும் நடக்கும்' – மும்பை காவல்துறைக்கு பாகிஸ்தான் எண்ணிலிருந்து எச்சரிக்கை

மீண்டும் 26/11 போன்ற தாக்குதல் நிகழ்த்தப்படும் என்று மும்பை காவல்துறைக்கு வாட்ஸ் அப்பில் வந்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஆயுதங்களுடன் ஒரு கப்பல் ராய்கட் பகுதியில் கரை ஒதுங்கி அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்நிலையில், இந்த வாட்ஸ் அப் எச்சரிக்கை வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராய்கட்டில் ஒதுங்கிய கப்பல்: மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியை மர்ம படகு நேற்று நெருங்கியது. அந்த படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு … Read more

கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விளக்கம்

டெல்லி: டெல்லி அரசின் கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விளக்கமளித்தார். அடுத்த 3,4 நாட்களில் சிபிஐ என்னை கைது செய்யலாம்; அதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. கல்வித்துறையில் டெல்லி அரசின் சாதனைகள் உலகம் முழுவதும் பேசப்படுவதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கூறினார்.

ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள்.. ராகுல், பிரியங்கா மரியாதை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்த நாள் விழா இன்று (20-ம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களைத் … Read more

பாலிசிதாரர்களுக்கு குட் நியூஸ்.. காலாவதியை புதுப்பிக்க புதிய திட்டம்..!

காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு பாலிசி புதுப்பிப்பு திட்டத்தை, எல்.ஐ.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு பாலிசி புதுப்பிப்பு திட்டம், வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும், கடைசி பிரீமியம் செலுத்தி 5 ஆண்டுகள் … Read more

கேரளாவில் உள்ள ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் காந்தியின் படத்தை சேதப்படுத்திய 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் தேசத் தந்தை மாகாத்மா காந்தி படத்தை சேதப்படுத்தியதாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்றார். வயநாடு மாவட்ட தலைநகர் கல்பேட்டையில் ராகுலின் எம்.பி. அலுவலகம் செயல்படுகிறது. கடந்த ஜூன் 24-ம் தேதி ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் ராகுலின் எம்.பி. அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். … Read more

ஆட்சியை பிடிப்பது சுலபம், நாட்டை கட்டமைப்பது கடினம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: நாட்டின் 10 கோடி கிராமப்புற குடும்பங்கள் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வசதியை பெறுகிறார்கள் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். வீடுகள்தோறும் குடிநீர் குழாய்கள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு சுதந்திரம் அடைந்த ஏழுபது ஆண்டுகளில் நாட்டின் மூன்று கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி செய்யப்பட்டிருந்தது என்றும், 3 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 10 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் சென்றடைந்தற்கு காரணம் ‘ஜல் … Read more

செப். மாதம் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார் வங்கதேச பிரதமர்

டாக்கா: நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வருகிறார். செப்டம்பர் 5ல் டெல்லியின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வர்த்தகம், எல்லை பிரச்சனை, ராணுவம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பிரதமருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.