ஆந்திராவில் கடலில் அடித்து செல்லப்பட்ட 6 பொறியியல் மாணவர்கள் சடலமாக மீட்பு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகாபல்லியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வந்த 15 நண்பர்கள், நேற்று முன்தினம் தேர்வுகள் முடிவடைந்ததால், சீதபாளையம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது, இவர்களில் 7 பேர் உற்சாக மிகுதியால் கடலில் குளிக்கச் சென்றனர். திடீரென ஒரு ராட்சத அலை இவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. தங்களை காப்பாற்றும்படி அந்த 7 பேரும் கதறினர். இதைக் கேட்ட அப்பகுதி மீனவர்கள் ஓடிச் சென்று, தேஜா (19) … Read more

இந்த சிந்தனை நல்லதல்ல – பிரதமர் மோடி பேச்சு!

‘ஒளிமிகு இந்தியா ஒளிமயமான எதிர்காலம் – மின்சாரம் @2047’ திட்டத்தின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். தேசிய அனல்மின்கழகத்தின் பல்வேறு பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தேசிய சூரியசக்தி தளத்தையும் அவர் தொடங்கிவைத்தார். பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடனும் அப்போது பிரதமர் மோடி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் எரிசக்தி … Read more

கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் உயிரிழப்பு.!

கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் உயிரிழந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய குருவாயூரை சேர்ந்த 22 வயதுடைய நபருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளைஞரின் மாதிரிகள் ஆலபுழாவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கேரள அரசு தெரிவித்துள்ளது. Source link

கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் 17 நாள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ்: கேரள அரசு அறிவிப்பு

கேரளா: கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் 17 நாள்  சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கொல்லம் வந்த 34 வயது ஆண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் குணமடைந்துள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.   

உத்தராகண்ட் மாநில பாஜக தலைவராக மகேந்திர பட் நியமனம்

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநில பாஜக தலைவராக ஹரித்வார் தொகுதி எம்எல்ஏ மதன் கவுஷிக் இருந்து வந்தார். இந்நிலையில், இவருக்கு பதில் புதிய தலைவராக மகேந்திர பட் (50) நேற்று நியமிக்கப்பட்டார். கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின் பேரில் எழுதப்பட்டுள்ள நியமன கடிதத்தில் கட்சியின் தேசிய செயலாளர் அருண் சிங் கையெழுத்திட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மகேந்திர பட்டுக்கு மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மதன் கவுஷிக் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 2017-ம் … Read more

காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி பதக்கம் வென்ற பிந்திய ராணிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். மீராபாய் சானுவின் வெற்றி இந்தியர்களின் வளரும் தடகள வீரர்களுக்கு உத்வேகமாக அமையும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.  இந்த சாதனை அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடு என்று இது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு நல்ல பலன் – அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

சண்டிகர்: ‘போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ பற்றிய 2 நாள் கருத்தரங்கை சண்டிகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது, போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றியது. போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை விரைவாகவும், சரியான திசையிலும் மேற்கொள்ளப்படுகிறது. இது நல்ல பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. போதைப் பொருட்கள், அதை உட்கொள்பவர்களுக்கு மட்டும் பாதிப்பை … Read more

திருப்பதி தரிசனம் ஆன்லைனில் ரூ.300 தரிசன டிக்கெட்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 4 நாட்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட் வரும் 2ம் தேதி(நாளை மறுதினம்) ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் 7,8,9, மற்றும் 10ம் தேதிக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இந்த டிக்கெட்டுகளை வருகிற 2ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் பக்தர்கள் ‘https://tirupatibalaji.ap.gov.in’ … Read more

ரூ.5,200 கோடி மதிப்பில் பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் – சோலார் பேனல் தொடர்பான இணையதளமும் அறிமுகம்

புதுடெல்லி: மத்திய அரசின் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.5,200 கோடி மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், மின் துறையின் செயல்பாடுகளையும் நிதி நிலைமையையும் மேம்படுத்தும் நோக்கில் ‘புதுப்பிக்கப்பட்ட விநியோக துறை திட்ட’த்தை அவர் தொடங்கி வைத்தார். இந்தத்திட்டத்தின் கீழ், மின் துறையை நவீனப்படுத்தவும், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் 2025-26 நிதி ஆண்டு வரை ரூ.3 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகான … Read more

டெல்லியில் இனிமேல் ஒன்லி கவர்மென்ட் சரக்கு

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. முதல்வர் கெஜ்ரிவால் அமல்படுத்திய புதிய கலால் கொள்கை சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு விதிகளை மீறி உருவாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், பல்வேறு தனியார் மதுபான கடைகளுக்கு அரசு பணம் வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், புதிய கலால் கொள்கைக்கு இந்த ஆண்டு அனுமதி அளிக்க மறுத்த கவர்னர், முறைக்கேடுகள் பற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்நிலையில், புதிய கலால் கொள்கை வாபஸ் பெறப்படுவதாக … Read more