"வேலையில்லை! உணவில்லை"- குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தந்தை

தந்தையே தனது 11 மாத குழந்தையை கால்வாயில் வீசிக் கொன்ற கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்ட முகேஷ் பெர்வால், தனது தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மனைவி உஷா, குழந்தை ராஜ்வீரையும் ராஜஸ்தானுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் திடீரென தந்தை ஏற்றுக்கொள்ளமாட்டார் எனக்கூறி மனைவியை ஓரிடத்தில் இருக்குமாறு கூறிவிட்டு குழந்தையை மட்டும் தூக்கிச் சென்ற முகேஷ், குழந்தையை … Read more

இலவசங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் திமுக எழுத்துப் பூர்வமான வாதம் தாக்கல்

டெல்லி: இலவசங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக எழுத்துப் பூர்வமான வாதம் தாக்கல் செய்துள்ளது. இலவச நலத்திட்டங்கள் அனைத்தும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக பங்களித்துள்ளது. 1956ல் காமராஜரால் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத்திட்டம் இன்று உலகளவில் முன்னோடி திட்டமாக இருக்கிறது; மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என்ற திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி: கிருஷ்ண ஜெயந்தி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றன. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் விஐபிக்கள் தரிசனத்துக்கான பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 

அசாம்: அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு

அசாமில் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 70 ஆக உயர்த்தப்பட உள்ளது. வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் மருத்துவத்துறையில் பேராசிரியர்களின் தேவை அதிகமாக உள்ளது. இது தொடர்பாக விவாதித்த அம்மாநில அமைச்சரவை, அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வு வயதை 65லிருந்து 70ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை தக்க வைக்கும் நோக்கத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக அசாம் அரசு விளக்கமளித்துள்ளது. “அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கைக்கு விகிதாசாரமாக … Read more

மும்பை தாக்குதல் போல் மீண்டும் நடக்கும்; பாக்., எண்ணில் இருந்து வந்த எச்சரிக்கை

2011 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் அப்படியான தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என பாகிஸ்தான் எண்ணில் இருந்து காவல்துறைக்கு வந்திருக்கும் எச்சரிக்கையால் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ராய்கட்டில் ஆயுதங்களுடன் படகு ஒன்று கரை ஒதுங்கிய ஒரு சில நாட்களுக்குள் வந்திருக்கும் இந்த செய்தி, மும்பை காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.  மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியில் அண்மையில் மர்ம படகு ஒன்று … Read more

சமூக வலைதளத்தில் பெண்களின் பெயரில் கணக்கு தொடங்கி காமக் கதை, நிர்வாண வீடியோ அனுப்பி மோசடி: பணியாத நபர்களுக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

சண்டிகர்: சண்டிகரில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் பெயரில் கணக்கு ெதாடங்கி அதன் மூலம் காமக் கதைகளையும், நிர்வாண வீடியோக்களையும் அனுப்பி மிரட்டல் விடுத்த மூன்று பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை மூலம் பெண்கள் பெயரில் கணக்கு தொடங்கி அதன் மூலம் ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சண்டிகர் போலீசார் ‘நிர்வாண வீடியோ’ எடுத்து ஆண்களை மிரட்டி … Read more

ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் திடீர் ஆர்ப்பாட்டம்..!- சிபிஐ வழக்கு எதிரொலி..?

கடந்த சில தினங்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது டெல்லி அரசியல். தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் கல்வி கொள்கையை பாராட்டி கட்டுரை ஒன்று வெளிவந்ததற்காக டெல்லி கல்வி துறை அமைச்சரும் துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா கட்டம் கட்டப்பட்டதாக கூறியது அரசியல் வட்டாரம். இதனை அடுத்து அவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்து அதிரடி சோதனைகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் பட்டியல் என சிலரின் பெயர்களை வெளியிட்டது … Read more

கணவன் நக்சல்களால் கொல்லப்பட்ட நிலையில் காதலுக்கு இடையூறாக இருந்த தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலனுடன் சேர்ந்து பட்டதாரி மகள் வெறிச்செயல்

நாக்பூர்: மகாராஷ்டிராவில் காதலுக்கு இடையூறாக இருந்த காவல் துறை அதிகாரியான தாயை கழுத்து நெரித்துக் கொன்ற மகள் மற்றும் காதலனை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சந்திர காந்த் அத்ரம் என்பவர் கடந்த 2000ம் ஆண்டு ஜூனில் நக்சல் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் கொலையான 5 நாட்களுக்கு பின்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நிர்மலாவுக்கு, ஊர்மிளா அத்ரம் பிறந்தார். தற்போது ஊர்மிளா அத்ரம் 22 வயது பெண்ணாக … Read more

தெலுங்கானா முதல்வருக்கு சிபிஐ திடீர் அதரவு..?- பாஜகவுக்கு புதிய சிக்கல்..!

ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த காலத்திலிருந்து வெற்றிக்கொடியை நாட்டி வருபவர் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ். பல்வேறு எதிரிகள் சூழ்ந்த போதிலும் அசராமல் அவர்களை கையாண்டு வருகிறார். இந்நிலையில் எப்படியாவது பாஜக தெலுங்கானாவை கைப்பற்றிவிடவேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் உள்ளது. அதற்கான முயற்சியையும் பல்வேறு வகைகளில் எடுத்து வருகிறது. இந்த சூழலில் பாஜவை சிபிஐயும் எதிர்த்து வருகிறது. இது குறித்து பேசிய தெலுங்கானா சிபிஐ தலைவர் சடா வெங்கட் ரெட்டி “முனுகோடு இடைத்தேர்தலில் சந்திர சேகர … Read more

ஆணுடன் வாழ விருப்பமில்லை… தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை

பெங்களூரு: ஆணுடன் வாழ விருப்பமில்லை என்பதால் நடிகை கனிஷ்கா சோனி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை கனிஷ்கா சோனி, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய கலாசாரத்தின் படி, திருமணம் என்பது அன்பு மற்றும் நேர்மையுடன் தொடர்புடையது. என்னை நானே திருமணம் செய்து கொண்டேன். எனது கனவுகள் அனைத்தும் நனவாகியுள்ளன. இந்த உலகில் என்னை மட்டுமே  நான் நேசிக்கிறேன். எனக்கு ஆண் துணை தேவையில்லை. … Read more