காஷ்மீர் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு: நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், குலாம் நபி ஆசாத்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். காங்கிரசின் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்து வருகிறார் குலாம் நபி ஆசாத். இதை வெளிப்படையாகவும் … Read more

கேரளா: ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், அவரது செயல்பாடுகளை குறைக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதால், அடுத்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும். துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேடுதல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இந்த மசோதா மூலம் மூன்றிலிருந்து 5 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு அக்னிபாதை வாய்ப்பு – ஹரியாணாவில் ஆள்சேர்ப்பு தொடக்கம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் சேவையாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு நற்செய்தியாக இருப்பது அக்னிபாதை திட்டம். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஹரியாணா மாநிலம் ஹிசாரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்காக மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் அக்னி பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான மத்திய அமைச்சரவை அனுமதி கடந்த ஜுன் 14-ல் அளிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையில் சேர்வதற்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஜுலை 24-ல் இந்திய விமானப்படைக்காக, … Read more

மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா.. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த ஷாக்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசிய விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக பணி செய்து வருகிறது. அதேநேரத்தில் அரசியல் கட்சிகளும் தங்களது கட்சியின் பலத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு யூகங்களை கையாண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் … Read more

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் காயம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் காயம் அடைந்தனர். சிக்னல் கோளாறால் ஏற்பட்ட விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் இறக்கவில்லை; காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பதவியை ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத், அடுத்த சில மணிநேரத்திலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியில் புதிதாக பிரசாரக் குழு, அரசியல் விவகாரக் குழு, தேர்தல் அறிக்கைக் குழு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இதில் பிரசாரக் குழு தலைவராக குலாம் நபி ஆசாத்தை கட்சியின் தேசிய தலைவர் சோனியாகாந்தி நேற்று நியமித்தார். ஆனால் நியமித்த சில மணி நேரத்தில் குலாம் நபி ஆசாத் அப்பதவியில் இருந்து விலகினார். அதோடு மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் … Read more

சியாச்சினில் காணாமல்போன ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுக்கு பிறகு மீட்பு

டேராடூன்: சியாச்சினில் காணாமல்போன இந்திய ராணுவ வீரர் ஒருவரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம், துவாரஹத் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஹர்போலா. இவர் ராணுவத்தின் 19-வது குமாவோன் படைப்பிரிவில் 1975-ல் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் 1984-ல் ‘ஆபரேஷன் மேகதூத்’ ராணுவ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட 20 வீரர்கள் கொண்ட குழுவினர் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பனிப் புயலில் சிக்கி இறந்தனர். … Read more

காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து இந்தோ-திபெத் படை வீரர்கள் 7 பேர் பலி: 6 பேர் கவலைக்கிடம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். இவர்களின் பாதுகாப்பு பணி கடந்த 11ம் தேதியுடன் முடிந்த நிலையில், இந்த துணை ராணுவ வீரர்கள் பேருந்தில் முகாமுக்கு நேற்று திரும்பிக் கொண்டு இருந்தனர். இதில் 39 பேர் பயணம் செய்தனர். பாகல்காம் பகுதியில் பேருந்து வந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டு ஆற்றில் … Read more

எதிர்ப்பை மீறி இலங்கை சென்ற சீனாவின் உளவுக்கப்பல் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங்-5, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றிருக்கிறது. அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட இந்தக் கப்பல் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. சீனாவின் மூன்றாம் தலைமுறை விண்வெளிக் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரும் 22-ஆம் தேதி வரை நிறுத்தப்படுகிறது. இந்தக் கப்பலில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலும், அணுசக்தி போர் கப்பல் அல்ல என்பதாலும் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் கப்பலின் சிறப்பம்சங்களும், வருகையும் இந்தியா கவலைப்படுவதற்கான காரணங்களாக … Read more

தேசிய கீதம் ஒலித்ததால் ஸ்தம்பித்த தெலங்கானா – பொதுமக்களின் தேசப்பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு

ஹைதராபாத்: முதல்வர் சந்திரசேகர ராவின் அழைப்பை ஏற்று, நேற்று காலை 11.30 மணிக்கு தெலங்கானா மாநிலம் முழுவதும் சாலைகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இதனை கேட்ட பொதுமக்கள் இருந்த இடத்திலேயே நின்று ஒரு நிமிடம் வரை தேசிய கீதம் பாடலுக்கு மரியாதை செலுத்தி, பிறகு தங்களது பணிகளில் கவனம் செலுத்தினர். தெலங்கானா மாநிலத்தில் 75-வது சுதந்திர தின விழாவினை, வைர விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, நேற்று, முதல்வர் சந்திரசேகர ராவின் அழைப்பின் பேரில் தெலங்கானா … Read more