பாஜக நாடாளுமன்ற குழு: எடியூரப்பா, பட்னவிஸ் 'உள்ளே'.. நிதின் கட்கரி, யோகி, சவுகான் 'வெளியே!'

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். பாஜகவின், உயர்மட்ட அமைப்பாக நாடாளுமன்றக் குழு உள்ளது. இந்தக் குழு, முதலமைச்சர், மாநில தலைவர்கள் மற்றும் பிற முக்கியப் பதவிகளை முடிவு செய்கிறது. இந்நிலையில் இன்று, பாஜக நாடாளுமன்ற குழு மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, அதிகாரமிக்க குழுவில் நான்கு புதுமுகங்களுக்கு … Read more

38 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு முழு ராணுவ மரியாதை.!

உலகின் மிகவும் உயரமான போர்களமான சியாச்சின் பனிப்பிரதேசத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன இந்திய ராணுவ வீரர் லேன்ஸ்நாயக் சந்திர சேகரின் உடல் பாகங்கள் லே நகருக்கு கொண்டுவரப்பட்டது. அண்மையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திய வீரர்கள் அவரது உடல் பாகங்களை கண்டெடுத்தனர். மறைந்த வீரர் சந்திர சேகரின் உடலுக்கு லே நகரில் மலர் வளையம் வைத்து முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.  Source link

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

டெல்லி : பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார் . நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக பிரதமருக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார்.

'சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம்!' – பிரதமர் மோடி மீது ராகுல் காட்டம்!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டு இருக்கிறது” என, விமர்சித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கோத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், பில்கிஸ் பானு என்ற பெண், வன்முறை கும்பலால் பாலியல் பலாத்காரம் … Read more

நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பதவியை ராஜினாமா செய்த குலாம் நபி.!

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவராக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அப்பதவியை அவர் ராஜினாமா செய்தார். சுகாதார காரணங்களை சுட்டிக்காட்டி, குலாம் நபி ஆசாத் புதிய பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள ஜி-23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர்.   Source link

பாஜக ஆட்சி மன்றக் குழுவில் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பெயர் சேர்ப்பு

டெல்லி: பாஜக ஆட்சி மன்றக் குழுவில் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பெயர் இடம்பெற்றுள்ளது. 11 பேர் கொண்ட குழுவில் இருந்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நீக்கப்பட்டுள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனேவால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் கனமழை நீடிப்பு.. நர்மதை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு..!

மத்தியப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பாயும் நர்மதை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுவதால் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்மழையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். Source link

ஒன்றிய, மாநில அரசுகளின் மானியங்கள், சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம்: UIDAI அறிவிப்பு

டெல்லி: ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள், சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெறுபவர்களுக்கு ஆதார் விதிகளை கடுமையாக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆதாருக்கு விண்ணப்பித்தவர், பதிவு சீட்டுடன் மாற்று அடையாள அட்டையை பயன்படுத்தி அரசின் பலன்கள், சேவைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் … Read more

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி | 'பெஸ்ட் டீலை பெறுவது என் தார்மீகக் கடமை' – அமைச்சர் ஜெய்சங்கர்

“நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணெய் இறக்குமதியில் பெஸ்ட் டீலைப் பெறுவது என்பது தனது தார்மீகக் கடமை” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்தும்கூட அடிபணியாமல் இந்தியா ரஷ்ய எண்ணெய்யைப் பெற்றது. இந்தக் கொள்கையை எடுத்தற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் உலகளவில் பாராட்டைப் பெற்றது. அண்மையில் கூட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் … Read more

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மோதி விபத்து- 50 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா அருகே, சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சத்தீஸ்கரின் பிலாஸ்புரில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு ரயில் சென்ற போது, சிக்னல் பெறுவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில், பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.   Source link