“வெளிநாட்டில் நான் இந்திய அரசியல் பேசுவதில்லை” – தாய்லாந்து வாழ் தமிழருக்கு அமைச்சர் ஜெய்சங்கர் சமாளிப்பு பதில்

பாங்காக்: “வெளிநாட்டில் நான் இந்திய அரசியல் பற்றிப் பேசுவதில்லை” என்று கூறிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவுக்கு வந்து கேளுங்கள், இதே கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்” என்று சுவாரஸ்யமாக பதிலளித்தார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தாய்லாந்து சென்றிருந்தார். பாங்காகில் இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ஒருவர் “நான் தமிழர், தற்போது மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறிப்பாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிலவும் பிரச்சினைகள் … Read more

ரோஹிங்கியாக்கள் தடுப்பு மையத்தில் தான் இருப்பார்கள் -உள்துறை அமைச்சகம் விளக்கம்

புது டெல்லி: டெல்லி பக்கர்வாலாவில் உள்ள EWS (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான குடியிருப்பு) குடியிருப்பில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகள் குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரது அறிக்கைக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், ​​​​ரோஹிங்கியாக்கள் தடுப்பு மையங்களில் தங்கியிருப்பார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியது. சட்டவிரோதமாக குடியேறிய புதிய ரோஹிங்கியாக்கள் EWS குடியிருப்புகளை வழங்குவதற்கு உள்துறை அமைச்சகம் (MHA) எந்தப் பிரதிநிதித்துவமும் செய்யவில்லை என்று HMO … Read more

3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: 3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5 சதவீதம் மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் வேகமாக அதிகரித்து வந்ததால் சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2 முறை வட்டி விகிதங்களை அதிகரித்தது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாண்டு வட்டிக்கு மானியம் அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பொதுவாக ஒரு மானியத்தை … Read more

பாஜக நாடாளுமன்ற குழு: எடியூரப்பா, பட்னவிஸ் 'உள்ளே'.. நிதின் கட்கரி, யோகி, சவுகான் 'வெளியே!'

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். பாஜகவின், உயர்மட்ட அமைப்பாக நாடாளுமன்றக் குழு உள்ளது. இந்தக் குழு, முதலமைச்சர், மாநில தலைவர்கள் மற்றும் பிற முக்கியப் பதவிகளை முடிவு செய்கிறது. இந்நிலையில் இன்று, பாஜக நாடாளுமன்ற குழு மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, அதிகாரமிக்க குழுவில் நான்கு புதுமுகங்களுக்கு … Read more

38 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு முழு ராணுவ மரியாதை.!

உலகின் மிகவும் உயரமான போர்களமான சியாச்சின் பனிப்பிரதேசத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன இந்திய ராணுவ வீரர் லேன்ஸ்நாயக் சந்திர சேகரின் உடல் பாகங்கள் லே நகருக்கு கொண்டுவரப்பட்டது. அண்மையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திய வீரர்கள் அவரது உடல் பாகங்களை கண்டெடுத்தனர். மறைந்த வீரர் சந்திர சேகரின் உடலுக்கு லே நகரில் மலர் வளையம் வைத்து முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.  Source link

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

டெல்லி : பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார் . நீட் விலக்கு, காவிரி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக பிரதமருக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார்.

'சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம்!' – பிரதமர் மோடி மீது ராகுல் காட்டம்!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டு இருக்கிறது” என, விமர்சித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கோத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், பில்கிஸ் பானு என்ற பெண், வன்முறை கும்பலால் பாலியல் பலாத்காரம் … Read more

நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பதவியை ராஜினாமா செய்த குலாம் நபி.!

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவராக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அப்பதவியை அவர் ராஜினாமா செய்தார். சுகாதார காரணங்களை சுட்டிக்காட்டி, குலாம் நபி ஆசாத் புதிய பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள ஜி-23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர்.   Source link

பாஜக ஆட்சி மன்றக் குழுவில் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பெயர் சேர்ப்பு

டெல்லி: பாஜக ஆட்சி மன்றக் குழுவில் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பெயர் இடம்பெற்றுள்ளது. 11 பேர் கொண்ட குழுவில் இருந்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நீக்கப்பட்டுள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனேவால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் கனமழை நீடிப்பு.. நர்மதை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு..!

மத்தியப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பாயும் நர்மதை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுவதால் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்மழையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். Source link