பீகாரில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: முதல்வர் நிதிஷ்குமார் பேச்சு

பாட்னா: பீகார் மாநிலத்தில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். பீகாரில் காலியாக உள்ள அரசுப்பணியிடங்கள் ஒரு மாதத்தில் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

புதிய இலக்குகளுடன் புதிய திசையில் பயணிக்க வேண்டிய தருணம்: தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்தார். குறிப்பாக விடுதலைப் போரில் பழங்குடியினத் தலைவர்களின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசினார். நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படும் வேளையில் பிரதமர் நரேந்திர டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகை தந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் … Read more

வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதை காங்கிரஸ் எதிர்க்கும் -சோனியா காந்தி

புது டெல்லி: தனது 75வது சுதந்திர தினத்தை (Independence Day) ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி “இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து” தெரிவித்துள்ளார். இதனுடன், சுதந்திரப் போராட்ட தியாகிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு அவமதித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக உண்மையை மறைத்து … Read more

75ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு…

டெல்லி: இந்திய திருநாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் ஆகியவற்றிற்காக நம்மாலானா அனைத்தையும் அளிக்க வேண்டும் என குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் 75வது சுதந்திர தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார். ஜனநாயகத்தின் மெய்யான சக்தியை உலகம் தெரிந்து கொள்ள இந்தியா உதவி இருக்கிறது என்று கூறிய குடியரசுத் தலைவர் … Read more

பாலக்காடு: கம்யூனிஸ்ட் கட்சி செயல் வீரரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்; போலீஸ் விசாரணை

பாலக்காட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் வீரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிபிஐஎம் செயல்வீரர் ஷாஜகான். கட்சியில் இணைந்து கட்சி பணிகளிலும், பொதுமக்களுக்கான சேவையிலும், ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் ஷாஜகான் பாலக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்திருந்த ஷாஜகானை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஷஜகான் சிகிச்சை … Read more

'அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணியுங்கள்' – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “அடுத்த 25 ஆண்டுகள் தேச வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளை இளைஞர்கள் தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டுகிறேன். நாம் நம் தேச விடுதலைக்காகப் போராடியவர்கள் கண்ட கனவை நனவாக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். … Read more

Independence Day 2022: பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், உறவுமுறை, ஊழல் மற்றும் பெண்களுக்கு மரியாதை குறித்து பேசினார். உரைக்கு முன் ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி, அங்கு மகாத்மா காந்தியை வணங்கினார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அதில் அவர் கூறியதாவது., * பிரதமர் மோடி உரையைத் தொடங்கிவைத்து, 75 ஆண்டுகள் … Read more

தோழியால் ஆண் நண்பருக்கு வந்த சோதனை.. விமானம் நிறுத்தம்.!

மங்களூரில் இருந்து 185 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு பீதி கிளம்பியதையடுத்து ரன்வேயில் இருந்த விமானம் நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்த ஆண் பயணி ஒருவரின் செல்போனில் நீ ஒரு வெடிகுண்டு என்று அவரது தோழி வாட்சப்பில் அனுப்பிய குறுஞ்செய்தியை அருகில் இருந்த பெண் பயணி தற்செயலாகப் படித்து தவறாகப் புரிந்து கொண்டு அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.  இதையடுத்து விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளின் உடைமைகளில் தீவிர சோதனை நடைபெற்றது. இதனால் 6 மணி நேரம் … Read more

மக்களை கவர முயற்சி: வருமான வரி விலக்கு, கழிவுகள் பெறும் முறை ரத்தாகிறது..வரிவிலக்கு இல்லாத வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்க ஒன்றிய அரசு முடிவு..!!

டெல்லி: வருமான வரி விலக்குகள், கழிவுகள் இல்லாத வரி திட்டத்தை மக்களை மேலும் கவரும் வகையில் மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வரிவிலக்கு பெறும் முறை நாளடைவில் ரத்தாகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதில் இருவிதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஒன்று வரிவிலக்கு, வரி கழிவுகளுடன் கூடிய பழைய திட்டம். மற்றொன்று வரிவிலக்கு மற்றும் கழிவுகள் இல்லாமல் வரி விகிதம் குறைக்கப்பட்ட திட்டம். இந்த இரண்டில் எந்த திட்டத்தையும் வரி செலுத்துவோர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் … Read more

சுதந்திர தினம்: கர்நாடகா மாநில அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரங்களால் சர்ச்சை

76-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி கர்நாடகாவில் மாநில அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரங்களில், முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் படம் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அண்ணல் காந்தியடிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் அரசு விளம்பரங்களில், நாட்டின் முதல் பிரதமர் நேருவின் படம் சேர்க்கப்படவில்லை. இதனை வன்மையாகக் கண்டித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளது. நாட்டின் தலைவர்களை பொம்மை அவமதிப்பதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM