ஓடும் ரயிலில் பாம்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்  இருந்து டெல்லி நிசாமுதீனுக்கு நேற்று முன்தினம் மதியம் எக்ஸ்பிரஸ் ரயில்  புறப்பட்டுச் சென்றது. இரவு 9.45 மணியளவில் திரூர் ரயில்  நிலையத்தை தாண்டி ரயில் சென்றபோது, ஒரு முன்பதிவு  பெட்டியில் பாம்பு புகுந்தது. இதை பார்த்து பயணிகள் அலறினர். அப்போது, ஒரு பயணி  கம்பியால் பாம்பை அடிக்க முயன்றார். ஆனால், சில பயணிகள் அவரை தடுத்தனர்.   பாம்பு  பெட்டிக்குள் மறைந்தது. கோழிக்கோடு நிலையத்தை  ரயில் அடைந்ததும், ரயில்வே  போலீசார் வந்து,  பயணிகளை … Read more

விமானிகள் சரக்கு அடிக்கலாமா?

புதுடெல்லி: விமானிகளும், பணியாளர்களும் பணியில் இருக்கும்போது மது அருந்திவிட்டு வந்துள்ளர்களா? குறிப்பிட்ட அளவு மது அருந்தி விட்டு விமானம் ஓட்டுவதற்கு விமானிகளுக்கு அனுமதி வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?’ என்று மக்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, ‘இந்தாண்டு ஜூன் வரையில் பணியின்போது மது அருந்தி விட்டு வந்த 14 விமானிகள் மீது வழக்கு பதிவு செய்து, பைலட் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியின் போது மது அருந்திவிட்டு … Read more

17+ வயதினர் இனி முன்கூட்டியே வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும். முன்பு இருந்தது போல், 18 வயதை அடைபவர்கள் ஜனவரி முதல் தேதியை கணக்கில் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக, உரிய தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை … Read more

5 ஆண்டு விளம்பரம் ரூ.3,339 கோடி செலவு: நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: ஒன்றிய அரசு கடந்த 5 ஆண்டுகளில் விளம்பரத்துக்கு ரூ.3,339 கோடி செலவிட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மாநிலங்களவையில் தெரிவித்தார். விளம்பரத்துக்காக ஒன்றிய அரசு செலவிட்ட தொகை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது:ஒன்றிய அரசு விளம்பரங்களுக்காக கடந்த 2017ம் ஆண்டு முதல் நடப்பு நிதியாண்டின் ஜூலை 12ம் தேதி வரை, கடந்த 5 ஆண்டுகளில் நாளிதழ்களில் ரூ.1,756.48 கோடி, தொலைக்காட்சிகளில் … Read more

கேரளாவில் கனமழை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன: மத்திய அரசு தகவல்

கேரளாவில் கனமழை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தகவலை தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் பேசுகையில், 2001-2021 காலகட்டத்திற்கான தரவின்படி தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) கேரளாவில் கனமழை பெய்வது அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், “கேரளாவில் தானியங்கி வானிலை நிலையங்களின் இணைப்பை அதிகரிக்க இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது. … Read more

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி ஒரே வாரத்தில் 11 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: கூடுதலாக அச்சடிக்க முடிவு

திருவனந்தபுரம்: கேரள  அரசின் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரி வெளியான ஒரு வாரத்திலேயே 11 லட்சம்  டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கேரளாவில் சில  வருடங்களுக்கு முன்பு வெளிமாநில, தனியார் லாட்டரிகள்  விற்பனைக்கு அரசு தடை விதித்தது.  தற்போது, அரசு லாட்டரி  மட்டுமே விற்கப்படுகிறது. ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ்,  புத்தாண்டு உள்பட பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பம்பர் லாட்டரி  குலுக்கல் நடத்தப்படுகிறது.ஓணம் பண்டிகைக்குத்தான் மிக அதிக  பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.  கடந்த வருடம் வரை முதல் … Read more

ராஜஸ்தானில் விமானப்படை விமானம் நொறுங்கி விபத்து – 2 விமானிகள் உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப்படை பயிற்சியின்போது மிக்-21 ஜெட் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர். இந்திய விமானப்படையின் மிக்-21 ஜெட் விமானம் ராஜஸ்தானில் உள்ள உதர்லாய் விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இரவு 9:10 மணியளவில் பார்மர் பகுதி அருகே விமானம் பறந்தபோது விபத்துக்குள்ளானது. இரு விமானிகளும் படுகாயமடைந்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் உயிரிழந்தனர். இருவரின் உயிரிழப்பு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய விமானப்படை மூத்த அதிகாரி ஒருவர், “விபத்துக்கான … Read more

தீவிரவாதிகளின் புகலிடம் கேரளா ஒன்றிய அமைச்சர் காட்டம்

புதுடெல்லி: கர்நாடகாவில் பாஜ இளைஞர் பிரிவு நிர்வாகி பிரவீன் நெட்டாரை நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று அளித்த பேட்டியில், ‘கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அரசு குற்றவாளிகளை பாதுகாப்பதை விடுத்து, அவர்களை அடையாளம் காணவும், கைது செய்வதற்கும் கர்நாடக போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும். தீவிரவாத சக்திகளுக்கு கேரளா புகலிடமாக மாறியுள்ளது. அரசியல் பாதுகாப்பு … Read more

ம.பி: வகுப்பறைக்குள் பெய்த மழை- குடை பிடித்தபடி பாடம் கவனித்த மாணவர்கள்; வீடியோ வைரல்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் மேற்கூரை சேதமடைந்ததன் காரணமாக வகுப்பறைக்குள் மழைநீர் கசிவதால், குடை பிடித்தபடி மாணவர்கள் பாடம் கவனிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் கைரிகலா எனும் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் அதிகமாக பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்து மழைநீர் வகுப்பறைகளுக்குள் கசியும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குடைபிடித்தபடி மாணவர்கள் தொடர்ந்து ஆசிரியர் எடுக்கும் … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும், மக்களவை மாலை 4 மணிக்கும் ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 10-வது நாளான இன்றும் அவையில் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும், மக்களவை மாலை 4 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 5% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி … Read more