ஆகஸ்டு 6ஆம் நாள் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் அறிவிப்பு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு ஆறாம் நாள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவிக்காலம் ஆகஸ்டு பத்தாம் நாளுடன் முடிவடைவதால் அந்தப் பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக மக்களவைச் செயலர் செயல்படுவார்.   Source link

பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு

ஐதராபாத்: தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ‘சர்காரு வாரிபாட்டா’ என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தனது ஒவ்வொரு படமும் வெளியான பிறகு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், மனைவி நம்ரதா ஷிரோத்கர் மற்றும் மகன், மகளுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் அவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை நேரில் சந்தித்தார். பிறகு அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ள மகேஷ் பாபு, ‘பில்கேட்சை சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகம் கண்ட மிகப்பெரிய தொலைநோக்குப் … Read more

வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கி அழிக்கும் அபியாஸ் சோதனை வெற்றி

வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கி அழிக்கும் அபியாஸ் சோதனை ஒடிசா சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை எல்லையிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அபியாஸ் தயார் செய்யப்பட்டது. ஏவு வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அபியாஸ் ட்ரோன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.   Source link

அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.   அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் எதனையும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.  இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் … Read more

முதல் முறையாக ரூபாய் மதிப்பு 79 ஆக சரிந்தது

புதுடெல்லி: உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால், உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைகிறது. இந்நிலையில், நேற்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.85 ஆக இருந்த நிலையில், வர்த்தகம் முடிவில் மேலும் 18 காசுகள் வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் … Read more

உத்தவ்தாக்கரே தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்.. அவுரங்காபாத், ஓஸ்மானாபாத், நவி மும்பை விமானநிலையத்தின் பெயர்கள் மாற்றம்

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ்தாக்கரே தலைமையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் அவுரங்காபாத் நகரின் பெயரை சாம்பாஜி நகர் என்றும் ஓஸ்மானாபாத்தின் பெயரை தாராசிவ் என்றும் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல், நவி மும்பை விமானநிலையத்தின் பெயரை டிபி பட்டேல் சர்வதேச விமானநிலையம் என்று பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. உத்தவ்தாக்கரே அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அமைச்சரவை இந்த அவசர முடிவுகளை எடுத்துள்ளது. கூட்டத்தில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, சொந்த … Read more

ரூ.2,516 கோடியில் 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் கணினி மயம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை ரூ.2,516 கோடியில் கணினி மயமாக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்காகவும் நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுக்குள் கணினி … Read more

துணை ஜனாதிபதிக்கு ஆக.6ம் தேதி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் வரும் 5ம் தேதி தொடக்கம்

புதுடெல்லி: நாட்டின் துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 16வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 5ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் … Read more

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி நீட்டிப்பை ஏற்க வேணுகோபால் மறுப்பு: 3 மாதங்களுக்கு மட்டும் சம்மதம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவி காலம் இன்றோடு முடிந்த நிலையில், ஒன்றிய அரசின் வேண்டுகோளை ஏற்று 3 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.  நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகும் அதிகாரம் கொண்டவர் தான் தலைமை வழக்கறிஞர் ஆவார். குறிப்பாக ஜனாதிபதியின் சார்பாகவே நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கும் அளவிற்கு உட்சபட்ச அதிகாரம் கொண்டது இந்த பதவியாகும். இந்த நிலையில், முன்னதாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த … Read more

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். ஆனால்..? – உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 16 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநரின் உத்தரவு சட்டவிரோதம் என்று சிவசேனா தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க … Read more