எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனமாக்குகிறது: ஒன்றிய அரசு மீது கேசிஆர் குற்றச்சாட்டு

ஐதராபாத்: ‘ஒன்றிய பாஜ அரசானது, மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்துகின்றது’ என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், ‘‘ஒன்றிய அரசு, மாநில அரசுகள் ஒன்றிணைந்து முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கூட்டாட்சி அமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் ஒன்றிய அரசானது கூட்டாட்சியின் மதிப்பிற்கு தீங்கிழைக்கின்றது. உட்கார்ந்திருக்கும் மரக்கிளையையே … Read more

கூட்டாட்சி, சமத்துவம், இலவசங்கள்… – மத்திய அரசை தாக்கிய மாநில முதல்வர்களின் சுதந்திர தின உரைகள்

புதுடெல்லி: நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி ஆற்றிய உரையில், “நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றி, தலைமை தாங்கி, பல துறைகளில் முன்னுதாரணமாக உழைத்த பல மாநிலங்கள் நம் நாட்டில் உள்ளன. இது நமது கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனால் இன்றைய காலத்தின் தேவை, நமக்கு கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் போட்டியுடனான கூட்டுறவு கூட்டாட்சி தேவைப்படுகிறது. வளர்ச்சிக்கு போட்டி தேவை” என்று பேசினார். … Read more

அசாம் முதல்வர் அறிவிப்பு: 1 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்படும்

கவுகாத்தி: நீதித்துறையின் சுமையை குறைக்கும் வகையில், சர்ச்சைக்குரிய சமூக வலைதள பதிவுகள் உட்பட 1 லட்சம் சிறு வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற 76வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘‘அசாம் நீதித்துறையில் சுமார் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், … Read more

‘போட்டி உடன் கூட்டாட்சி’, ‘வாரிசு அரசியல்’… – பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையின் 75 அம்சங்கள்

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் 75 சிறப்பு அம்சங்கள்: > சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த முக்கியமான தருணத்தில் எனது அன்பான நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல! இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் மட்டுமல்ல, தங்கள் நாட்டை பெரிதும் நேசிக்கும் இந்தியர்களால் உலகெங்கும் நமது மூவர்ணக் கொடி பெருமை, மரியாதை மற்றும் புகழுடன் பறக்கவிடப்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி … Read more

அரசு, நாடாளுமன்றம், நீதித்துறை சமம், நீதி வழங்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கே உள்ளது; தலைமை நீதிபதி ரமணா பேச்சு

புதுடெல்லி: “நீதி வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இருப்பதாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது,’’என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி. ரமணா தெரிவித்தார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தி அமுத பெருவிழா நிறைவுற்று, 76வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி என்வி. ரமணா தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், அவர் பேசியதாவது: சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு. இதன் மூலமே சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் … Read more

”இந்தியாவின் பெயரை இப்படி மாற்றுங்கள்”.. கோரிக்கை விடுக்கும்முகமது ஷமியின் முன்னாள் மனைவி!

இந்தியாவின் பெயரை “பாரத்” அல்லது “இந்துஸ்தான்” என்று மாற்றுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை வலியுறுத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமியின் பிரிந்த மனைவி ஹசின் ஜஹான். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பிரிந்த மனைவி ஹசின் ஜஹான், சுதந்திர தினத்தன்று ‘டெஸ் ரங்கிலா’வில் நடனமாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தியாவின் பெயரை மாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் … Read more

ரிலையன்ஸ் மருத்துவமனையை பதறவைத்த மர்ம போன்கால் – முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்

மும்பை: முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு நேற்று காலை முதல் தொடர்ந்து எட்டு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. மும்பையில் செயல்பட்டு வரும் அந்த மருத்துவமனைக்கு வந்த மர்ம அழைப்பில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அந்த மர்ம நபர் பல பெயர்களைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் … Read more

புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார். காவல்துறையின் பல்வேறு படைப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்; மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர நிதியுதவி இந்த மாதம் முதல் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.  

மூக்குவழியே செலுத்தப்படும் பிபிவி 154 தடுப்பு மருந்து சோதனை நிறைவு – பாரத் பயோடெக்

மூக்குவழியே செலுத்தப்படும் பிபிவி154 தடுப்பு மருந்து சோதனை மற்றும் பூஸ்ட்ர் சோதனை நிறைவடைந்துள்ளாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் 3ஆம் கட்ட மற்றும் பூஸ்டர் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது. பிபிவி154 (BBV154) என்ற கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோ டெக் நிறுவனம் பரிசோதித்து வந்தது. அந்த சோதனையின் முடிவில் கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் பிபிவி 154 செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் மூக்குவழியே செலுத்தும் கொரோனா தடுப்பு … Read more

லோக் அதாலத் மூலம் 81 லட்சம் வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 4.2 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சார்பில் இந்த ஆண்டில் இதுவரை 2 முறை மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டது. இந்நிலையில், டெல்லி தவிர நாடு முழுவதும் நேற்று முன்தினம் 3-வது முறையாக மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 81 லட்சம் வழக்குகளுக்கு … Read more