மாநிலங்களவையில் வரம்பு மீறிய மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம்

புதுடெல்லி: கடந்த 25-ம் தேதி மக்களவையில் பதாகைகளுடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி மாநிலங்களவையில் 19 எம்பிக்கள், ஒரு வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே 50 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் மாநிலங்களவையில் விதிகளை மீறியதாக ஆம் ஆத்மியை சேர்ந்த சுஷில் குமார் குப்தா, … Read more

மத்தியபிரதேசத்தில் ஒரே ‘சிரிஞ்ச்’ மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் கைது!!

போபால் :மத்தியபிரதேச மாநிலம் சாகர் நகரில் ஒரே ‘சிரிஞ்ச்’ மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜித்தேந்திரா என்ற சுகாதார பணியாளர் 39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார். இவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமிழக பாஜகவின் மையக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்த பிரதமர் மோடி… இதுதான் காரணமா?

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி உள்ளளார். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் பாஜகவின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன. இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்து விட்டு ஆளுநர் மாளிகைக்கு சென்றார். நேற்று இரவு அங்கு தங்கிய அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம், வானதி சீனிவாசன், கருப்பு எம்.முருகானந்தம் உள்ளிட்ட … Read more

கேலோ இந்தியா திட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் – மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல்

சென்னை: கேலோ இந்தியா திட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் ரூ.270 கோடி மதிப்பில் நடைபெறுகிறது என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்தார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-வது சர்வதேச செஸ் போட்டி தொடக்கவிழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசியதாவது: பெருமை வாய்ந்த நிகழ்வு இந்த போட்டி, மிகவும் முக்கியமான தருணம். இது, வரலாற்று சிறப்புமிக்க பெருமை வாய்ந்த … Read more

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே குட்டி விமானம் செய்து குடும்பத்துடன் பறந்த கேரள இளைஞர்

கொரோனா ஊரடங்கில் குடும்பதிற்கென பிரத்யேகமாக சிறிய ரக விமானம் ஒன்றை தயாரித்து, லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார். கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரான அசோக் தமரக் ஷன், மனைவி மற்றும் இரு மகள்களுடன் லண்டனில் வசித்து வருகிறார். ஊரடங்கின் போது 1 லட்சத்து 40 ஆயிரம் யூரோ செலவில் நான்கு பேர் அமர்ந்து பயணிக்ககூடிய வகையில் விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். பல்வேறு கட்ட தரப்பரிசோதனைகளுக்கு பிறகு முறையான அனுமதி கிடைத்ததும் விமானத்தில் … Read more

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு உக்ரைன் விருப்பம்

புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள், போர் அவசர காலத்தில் வெளியேறி வந்தவர்களின் நிலை என்ன? இந்திய பல்கலைக் கழகங்களில் அந்த மாணவர்களுக்கு சிறப்பு படிப்புகளை நடத்த ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா?’ என மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், ‘உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் படிப்பு விவகாரத்தில் அந்நாட்டு கல்வி அதிகாரிகளுடன் பேச்சு … Read more

3ம் நாளாகவும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இழுபறி: 16 சுற்றில் ரூ.169 கோடி மட்டுமே உயர்வு

புதுடெல்லி:  மூன்றாவது நாளாக நேற்றும் 16 சுற்றுகள் நடந்த போதிலும்  5ஜி ஏலம் முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி அலைக்கற்றையை விட,  10 மடங்கு வேகத்தில் செயல்படக் கூடிய 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உளளது.  மொத்தம் 9 பிரிவுகளில் இதை ஏலம் விடும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி நிறுவனம் கடுமையாக … Read more

தமிழக பஸ் எரிப்பில் 3 பேர் குற்றவாளிகள்: ஆக. 1ம் தேதி தண்டனை அறிவிப்பு

திருவனந்தபுரம்: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 2005ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி கேரளாவில் இக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, கொச்சியிலிருந்து சேலத்துக்கு சென்ற தமிழக அரசு பஸ்சை  துப்பாக்கிமுனையில் கடத்தி பயணிகளை இறக்கி விட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தேசிய புலனாய்வு அமைப்பு … Read more

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெறுவதற்கான தடைகள் நீக்கப்படுமா?… ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி. தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கி கடன் பெறுவதில் உள்ள தடைகளை நீக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். அதன் விவரம் … Read more

ஓடும் ரயிலில் பாம்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்  இருந்து டெல்லி நிசாமுதீனுக்கு நேற்று முன்தினம் மதியம் எக்ஸ்பிரஸ் ரயில்  புறப்பட்டுச் சென்றது. இரவு 9.45 மணியளவில் திரூர் ரயில்  நிலையத்தை தாண்டி ரயில் சென்றபோது, ஒரு முன்பதிவு  பெட்டியில் பாம்பு புகுந்தது. இதை பார்த்து பயணிகள் அலறினர். அப்போது, ஒரு பயணி  கம்பியால் பாம்பை அடிக்க முயன்றார். ஆனால், சில பயணிகள் அவரை தடுத்தனர்.   பாம்பு  பெட்டிக்குள் மறைந்தது. கோழிக்கோடு நிலையத்தை  ரயில் அடைந்ததும், ரயில்வே  போலீசார் வந்து,  பயணிகளை … Read more