இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காலையில் ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டு வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றபட்டது. தொடர் மழையால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாக உயர்த்தப்பட்டது.

’என் மரணத்திற்கு கணவரும், மாமியாரும்தான் காரணம்’.. அமெரிக்காவில் இந்தியப் பெண் தற்கொலை!

மனைவிக்கு ஆண் குழந்தை இல்லாததை காரணம் காட்டி அவரை 8 ஆண்டுகளாக கணவர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கொடுமை தாங்க முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் நகரை சேர்ந்த மன்தீப் கவுர் என்ற 30 வயதான பெண்ணுக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரஞ்சோத்வீர் சிங் சந்து என்பவருடன் திருமணம் நடந்தது. இதன்பின்னர் இந்த தம்பதியினர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றனர். இந்த தம்பதிக்கு 6 மற்றும் … Read more

HIV | ‘‘உடலுறவு கொள்ளவில்லை; ரத்தம்கூட ஏற்றியதில்லை’’ – ஒரு ஊசியால் பறிபோன இருவரின் வாழ்க்கை

வாரணாசி: உடலுறவு கொள்ளாத, ரத்தம் ஏற்றாத உத்தரபிரதேச இளைஞர்கள் இருவருக்கு ஹெச்ஐவி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த 20 வயது ஆண் மற்றும் 25 வயது பெண் உட்பட 14 பேர் சமீபத்தில் காய்ச்சல் காரணமாக பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளித்த போதிலும் குணமாகவில்லை. வைரஸ், டைபாய்டு, மலேரியாவுக்கான சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும் அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் எதுவும் பலன் தரவில்லை, காய்ச்சலும் குறையவில்லை. இதையடுத்து ஹெச்ஐவி பரிசோதனை செய்யுமாறு … Read more

சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்யுமாறு நாட்டின் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்யுமாறு நாட்டின் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், இதர வேளாண் பொருள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மோடியுடன் மோதும் தெலுங்கானா முதல்வர்..! ஒத்துழைக்க மறுப்பு ஏன்..?

நிதி ஆயோக் அமைப்பின் ஏழாவது நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தினால் எந்த நன்மையும் இல்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் என்று தெரிவித்து இதில் பங்கேற்கபோவதில்லை என்று நிதி ஆயோக் அமைப்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணொளி காட்சி மூலம் நடைபெற்று வந்த நிர்வாக கவுன்சில் … Read more

எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோளுடன், இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று காலை 9.18 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. புவி கண்காணிப்பிற்கு இஒஎஸ்-02 என்ற செயற்கை கோள் மற்றும் கிராமப்புற மாணவிகள் உருவாக்கிய அசாதி சாட் செயற்கோள் ஆகியவற்றுடன் எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 நாய்க்குட்டிகளை மீட்க களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப்படை!

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதும் மீட்புப் பணி நாள்கணக்கில் நடைபெறுவதுமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் அடுத்தடுத்து விழுந்த மூன்று நாய்க்குட்டிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையே களமிறங்கியுள்ளது. மொகாலி அருகே காரர் பகுதியில் 35 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் நாய்க்குட்டிகள் விழுந்தது குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு தகவல் தரப்பட்டது. சுமார் 6 செமீ விட்டம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சுமார் … Read more

குற்றாலம் சாரல் திருவிழா: அரிய வகை மலர், பழங்கள், காய்கறிகளுடன் கண்காட்சி

தென்காசி: தென்காசி மாவட்டம் உதயமான பிறகு முதல் சாரல் திருவிழா, நேற்று முன்தினம் குற்றாலத்தில் துவங்கியது. 2வது நாளான நேற்று காலை ஐந்தருவியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது. கலெக்டர் ஆகாஷ், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். மலர்கள், பழங்கள், காய்கறிகள் மூலம் யானை, வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட ஏராளமான உருவங்கள் செய்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் அரியவகை பழங்கள், காய்கறிகள், மலர்கள் உள்ளிட்டவைகளும் இடம்பெற்றிருந்தன. இலவங்கம் மற்றும் வாசனை திரவிய பொருட்களான கிராம்பு, … Read more

'மிஷன் தோல்வி: இனி அந்த 2 செயற்கைக்கோள்கள் பயன்படாது’ -இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. புவிக் கண்காணிப்பிற்காக அனுப்பப்பட்ட இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட்டில் இஓஎஸ் 02, ஆசாதி-சாட் என்கிற 2 எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. அதாவது, 120 டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது … Read more

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டம்: மாநில முதல்வர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் ஏழாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் ெடல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் இன்று நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின்  துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், ஒன்றிய அமைச்சர்கள், சிறப்பு  அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த … Read more