சொகுசு காரில் சைரன் பொருத்தி ஓட்டிச் சென்ற கர்நாடக முன்னாள் எம்.பி மருமகனுக்கு ரூ.28,000 அபராதம்..!

கர்நாடகாவில், சொகுசு காரில் சைரனை பொருத்தி அதிவேகமாக ஓட்டிச் சென்ற முன்னாள் எம்.பியின் மருமகனுக்கு 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் எம்.பி எல்.ஆர்.சிவராமேகவுடாவின் மருமகனும் நடிகருமான ராஜீவ் ரத்தோட், தனது ஆடி சொகுசு காரில் சைரன் பொருத்தி அதனை ஒலிக்கவிட்டவாறு, பெங்களூரு விஜயநகரில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோ எடுத்ததோடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து காரை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து பிடித்த … Read more

மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அருகே கடல் பகுதியில் ஒதுங்கிய படகில் ஆயுதங்கள் பறிமுதல்

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அருகே கடல் பகுதியில் ஒதுங்கிய படகில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் கரை ஒதுங்கிய படகில் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு – காரணம் என்ன?

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செய்திகளையும், தவறான பிரசாரங்களையும் செய்து வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக 8 யூடியூப் சேனல்கள், ஒரு ஃபேஸ்புக் ஐடி, இரண்டு ஃபேஸ்புக் பதிவுகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021இன் கீழ் மத்திய அரசு முடக்கியுள்ளது. இதில் பாகிஸ்தானைச் … Read more

ரோஹிங்கியாக்களுக்கு வீடு? – மத்திய உள்துறை மறுப்பு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இந்தியாவில் தஞ்சமடைந்த மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். டெல்லியை அடுத்த பக்கர்வாலா பகுதியில் அமைந்துள்ள அரசு குடியிருப்புகளில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். அங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மதம், இனம், நிறம் என பாகுபாடு பார்க்காமல் அனைத்து அகதிகளுக்கும் சம மான அளவில் மரியாதையை இந்தியா அளிக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்தீப் … Read more

கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!

புதுச்சேரி: கல்வி மற்றும் கலாச்சாரப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள துருக்கி மாணவர்களுக்கு சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலா வரும் மாணவர்கள், அம்மாநிலத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்கின்றனர். அந்த வகையில் துருக்கி நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள 15க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள், பாரம்பரிய கலையான சுடு களிமண் பொம்மை செய்யும் பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு … Read more

மனைவியை வேறு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசுவது கொடுமை – கேரள உயர் நீதிமன்றம் கருத்து

கொச்சி: மனைவி கேட்ட விவாகரத்தை வழங்கிய குடும்ப நல நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து கணவர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில், கணவர் தொடர்ந்து, தனது மனைவியை, தனக்கு சரியான ஜோடி இல்லை என்றும், தனது எதிர் பார்ப்புகளுக்கு ஏற்றபடி … Read more

பெண்களின் உடை குறித்து கோழிக்கோடு நீதிமன்றம் சர்ச்சை கருத்து

கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளரும் மாற்றுத் திறனாளியுமான சிவிக் சந்திரன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அத்துடன், அந்தப் பெண் எழுத்தாளருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கோழிக்கோடு நீதிமன்றம், எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  தீர்ப்பின் போது நீதிமன்றம் கூறிய சில … Read more

இந்தியாவில் கடந்தாண்டில் 31 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி: வெயிலால் கோதுமை உற்பத்தி 3% சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் 2021-2022 பயிர் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 31.57 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டை விட இது அதிகம். நாட்டில் 2021-22 பயிர் ஆண்டுக்கான (ஜூலை 2021 – ஜூன் 2022 வரை) நான்காவது முன்கூட்டிய  மதிப்பீட்டை ஒன்றிய விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன்  2022ம் ஆண்டில்  முடிந்த பயிர் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய  உற்பத்தி 31 கோடியே 57 லட்சம் டன்களாக இருக்கும். கடந்த  பயிர் … Read more

வாக்காளர்கள் இலவச திட்டங்களை பெறுவதை விட கண்ணியமாக வருவாய் ஈட்டவே விரும்புவார்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: இலவசங்களுக்கு பதில் கண்ணியமாக வருவாய் ஈட்டக்கூடிய நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலின் போது அர்த்தமற்ற இலவச வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரிப்பதைத் தடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மாநில அரசுகள் ஏற்கெனவே கடனில் தத்தளித்து வரும் நிலையில், இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் கடன் வாங்க வேண்டி இருப்பதாக … Read more

திருப்பதியில் அக்டோபர் மாத த்திற்கான ரூ.300 தரிசன கட்டணம் ஆன்லைனில் வெளியீடு.!

திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசனம் டிக்கெட்கள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரையிலான 300ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது. எனவே தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 26 நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. … Read more