மூக்குவழியே செலுத்தப்படும் பிபிவி 154 தடுப்பு மருந்து சோதனை நிறைவு – பாரத் பயோடெக்

மூக்குவழியே செலுத்தப்படும் பிபிவி154 தடுப்பு மருந்து சோதனை மற்றும் பூஸ்ட்ர் சோதனை நிறைவடைந்துள்ளாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் 3ஆம் கட்ட மற்றும் பூஸ்டர் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது. பிபிவி154 (BBV154) என்ற கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோ டெக் நிறுவனம் பரிசோதித்து வந்தது. அந்த சோதனையின் முடிவில் கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் பிபிவி 154 செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் மூக்குவழியே செலுத்தும் கொரோனா தடுப்பு … Read more

லோக் அதாலத் மூலம் 81 லட்சம் வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 4.2 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சார்பில் இந்த ஆண்டில் இதுவரை 2 முறை மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டது. இந்நிலையில், டெல்லி தவிர நாடு முழுவதும் நேற்று முன்தினம் 3-வது முறையாக மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 81 லட்சம் வழக்குகளுக்கு … Read more

கபடியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கோகோ ஆட்டமும் தொழில் முறை லீக் போட்டியாக அரங்கேற்றம்…

புனே: கபடியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கோகோ ஆட்டமும் தொழில் முறை லீக் போட்டியாக அரங்கேறியுள்ளது. அதன் முதல் பதிப்பின் முதல் ஆட்டத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. கபடி ஏற்கனவே லீக்கில் கொடிக்கட்டு பறந்து வரும் நிலையில் அதை காட்டிலும் உடல் சக்தி அதிகம் தேவைப்படும் கோகோ விளையாட்டை ஏன் அடுத்த கட்டத்திற்கு முன் எடுக்க கூடாது என்ற சிந்தனையின் விளைவே தொழில் முறை போட்டியாக உருவெடுத்து உள்ளது. மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள … Read more

காஷ்மீர் முழுவதும் தேசிய கொடி பறக்கிறது: துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பெருமிதம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முழுவதும் தேசிய கொடி பறக்கிறது என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் திரளான மக்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு லலித் காட் பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா வரை நடந்து சென்றனர். முன்னதாக ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசியதாவது: கடந்த 1942-ம் ஆண்டு … Read more

மழை பெய்த போது மொட்டை மாடியில் தேசிய கொடியை ஏற்றிய 3 பேர் மின்சாரம் பாய்ந்து பலி

ராஞ்சி: ஜார்கண்ட்டில் மழை பெய்த போது மொட்டை மாடியில் தேசிய கொடியை ஏற்றிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் காங்கே பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர். அப்போது விஜய் ஜா என்பவரின் அரிசி ஆலையின் மொட்டை மாடிக்கு அருகில் உயர் அழுத்த மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த … Read more

”இந்திய அமைச்சருக்கு உள்ள துணிச்சல் பாக். பிரதமருக்கு இல்லை” – இம்ரான் கான்

இந்திய அமைச்சருக்கு உள்ள துணிச்சல் கூட பாகிஸ்தான் பிரதமருக்கு இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் இந்தியாவை புகழ்ந்து பேசியுள்ளார். பாகிஸ்தான் லாகூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், இந்திய வெளியுறவு அமைச்சருக்கு உள்ள துணிச்சல் பாகிஸ்தான் பிரதமருக்கு இல்லை என்று கூறினார். மேலும் அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இந்தியா இருக்கும் பட்சத்திலும் அந்நாடு விதித்த தடையை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் இந்தியா பெறுவதாக குறிப்பிட்ட இம்ரான்கான், நாட்டு மக்களின் நலன் … Read more

பஸ் மோதி பள்ளி மாணவி பலி.. சுதந்திர தின விழாவை முடித்து திரும்பிய போது சோகம்..!

பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய மாணவி பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டை அடுத்துள்ள அஸ்தினாபுரம் – ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த  லக்ஷ்மிஸ்ரீ. இவர், பள்ளியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சக மாணவியுடன் சாலையோரத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கிச் … Read more

மகாராஷ்டிரா | ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் தேவேந்திர பட்னாவிஸுக்கு நிதி, உள்துறை ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி சிவசேனா அதிருப்தி அணியும் பாஜகவும் இணைந்து புதிய அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், 41 நாட்களுக்குப் பிறகு மகாராஷ்டிர அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.இந்தசூழ்நிலையில், அதி முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மற்றும்நிதி இலாகாவை துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு … Read more

Shivamogga: சுதந்திர தின விழாவில் வன்முறை: ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு!

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில், போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில், நாட்டின், 76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஒரு தரப்பினர் பாஜகவினரால் போற்றப்படும் சாவர்க்கர் படத்துடன் கூடிய பேனரை வைத்துள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த மற்றொரு தரப்பினர், சாவர்க்கர் பேனரை அகற்றி விட்டு, … Read more

சமீர் வான்கடேயின் சாதி விவகாரம்; சிறையில் உள்ள மாஜி அமைச்சர் மீது எஸ்சி-எஸ்டி பிரிவின்கீழ் வழக்கு.! மகாராஷ்டிரா போலீஸ் நடவடிக்கை

மும்பை: போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீதான விவகாரம் தொடர்பாக சிறையில் உள்ள மாஜி அமைச்சர் நவாப் மாலிக் மீது எஸ்சி-எஸ்டி பிரிவின்படி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை கடற்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த சொகுசு கப்பலில் போதைப்பொருட்களுடன் கூடிய விருந்து நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு (என்சிபி) அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே தலைமையிலான குழு அதிரடி ரெய்டு நடத்தியது. அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக் … Read more