புஷ்பா 2வில் விஜய் சேதுபதி இல்லை

ஐதராபாத்: புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என அவரது தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்த புஷ்பா படம், இந்த ஆண்டு வெளியானது. பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் வௌியாகி, ஹிட்டானது. இந்த படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார் சமந்தா. இந்த பாடல் காட்சி வைரலானது. படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களுமே ஹிட்டாகின. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல் பாகத்தில் … Read more

ராஜஸ்தானில் 4.24லட்சம் கால்நடைகள் தோல் கட்டி நோயால் பாதிப்பு…. முதலமைச்சர் அசோக் கெலாட் தகவல்

ராஜஸ்தானில் இதுவரை 4லட்சத்து 24ஆயிரம் கால்நடைகள் தோல் கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அசோக் கெலாட், மாநிலத்தின் 15 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவி இருக்கிறது என்றார். இந்த நோயைத் தடுக்க தேவைப்பட்டால் டெண்டர் இல்லாமல் மருந்துகளை வாங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த நோயால் இதுவரை 18ஆயிரத்து 462 கால்நடைகள் உயிரிழந்து விட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.  … Read more

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை அற்பமாக கருதும் ஒன்றிய அரசு: சோனியா காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: ‘சுதந்திரபோராட்ட வீரர்கள் செய்த தியாகத்தை சுயநலம் கொண்ட ஒன்றிய அரசு அற்பமாக கருதுகின்றது’ என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 75 ஆண்டுகளில் நாம் மிகப்பெரிய அளவில் சாதித்துள்ளோம். ஆனால் இன்றைய சுயநல அரசு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், நாட்டின் புகழ்பெற்ற சாதனைகளையும் அற்பமாக கருதுகிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பது, மகாத்மா … Read more

மக்கள் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் – பிரியங்கா காந்தி வதேரா வேண்டுகோள்

புதுடெல்லி: நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ‘ஆசாதி கவுரவ் யாத்ரா’ டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறும்போது, “இந்தியாவின் சுதந்திர நாளில் மக்களுக்கு எனது வாழ்த்துகள்! நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த நமது தியாகிகள், … Read more

38 ஆண்டுகளுக்கு முன் மாயமான ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு..!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பனிப்பிரதேசத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ராணுவ வீரரின் உடலை, ரோந்து பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கண்டெடுத்துள்ளனர். 1984 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, லான்ஸ்நாயக் சந்திரசேகர் காணாமல் போனார். சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவரது உடல் பாகங்கள கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடல் பாகங்களுடன் கிடந்த அடையாள எண் கொண்ட உலோக பேட்ஜ் மூலம் அவரது உடல் … Read more

இந்திய ராணுவத்துக்கு எதிரான கருத்து ஆமிர்கான் மீது போலீசில் புகார்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தை குறை சொல்லும் விதமாக லால் சிங் சட்டா படம் உள்ளதாக கூறி ஆமிர்கான் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.ஆமிர்கான் நடித்து, தயாரித்துள்ள படம் லால் சிங் சட்டா. அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 11ம் தேதி திரைக்கு வந்தது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், டெல்லி போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘லால் சிங் சட்டா படத்தில் மனநலம் சரியில்லாத நாயகன் … Read more

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் – 5 உறுதிமொழிகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு

புதுடெல்லி: சுதந்திர தின அமுதப் பெருவிழா, தலைநகர் டெல்லியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க, 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து நேற்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்தது. 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா, நாடு முழுவதும் ஓராண்டுக்கு கொண்டாடப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, … Read more

மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 40 சதவிகிதம் அதிகரித்து ரூ.5 லட்சம் கோடியாக உயர்வு

2022ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 40 சதவீதம் அதிகரித்து 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரி வசூலில் 14 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மூன்றில் ஒரு பங்கு வருவாய் 4 மாதங்களிலேயே கிடைத்துள்ளது. மேலும், தனிநபர் வருமான வரி வருவாய் 52 சதவீதம் உயர்ந்து 2 லட்சத்து 67 ஆயிரம் கோடி … Read more

பக்தர்கள் 40 மணிநேரம் காத்திருக்க 50 ஆதரவாளர்களுடன் தரிசனம் செய்த அமைச்சர்: திருப்பதியில் கடும் விதிமீறல்

திருமலை: திருப்பதியில் அமைச்சர் 50 ஆதரவாளர்களுடன் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 நாட்களாக ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 40 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன்பு  தேங்காய் உடைத்து விட்டு சொந்த ஊர் செல்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் 21ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்தது. இருப்பினும், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உஷாஸ்ரீ … Read more

வீறுநடை போட்டு மீசையை முறுக்கி பாகிஸ்தான் வீரர்களை பார்த்து கர்ஜித்த இந்திய வீரர்கள்.. எல்லையில் மாஸ்..!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இருநாட்டு எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. எல்லையில் வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நிகழ்ச்சிகளின் நிறைவில் இரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு தேசிய கொடியை பாரம்பரிய முறைப்படி இறக்கினர். மழை தூரலுக்கு மத்தியிலும் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர். Source link