குடிபோதையில் ரகளை: தட்டி கேட்ட தொழிலாளியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வாலிபர்கள்.!

குடிபோதையில் ரகளை செய்தவர்களை தட்டி கேட்ட தொழிலாளியை ஓடும் ரயிலிருந்து தள்ளிவிட்ட வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி இளையராஜா (39). இவர் தினமும் புதுவைக்கு வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை இளையராஜா வேலைக்காக விழுப்புரத்தில் இருந்து பேருந்தில் புதுவைக்கு வந்தார்.  பின்பு மதியம் வேலை முடிந்ததும் புதுவை ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் சென்ற ரயிலில் இளையராஜா வந்தார். அப்பொழுது … Read more

தொடரும் சோகம்..!! கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

கரூரில் உள்ள காந்திநகர் பகுதியில், குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது. அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலகைகளை பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் ‘மேன்ஹோல்’ எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். இவர்களது அலறல் … Read more

எழும்பூர் கண் மருத்துவமனையில் ‘மெட்ராஸ் ஐ’ நோய்க்கான மருந்து தட்டுப்பாடு: இன்று போய் நாளை வரச் செல்லும் ஊழியர்கள் 

சென்னை: சென்னையில் உள்ள எழும்பூர் கண் மருத்துவமனையில் “மெட்ராஸ் ஐ” நோய்க்கான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் “மெட்ராஸ் ஐ” எனப்படும் கண் நோய் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர். காலநிலை மாற்றத்தால் மெட்ராஸ் ஐ நோய் அதிக அளவு பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் காற்று மூலம் பரவும் என்றும், மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் … Read more

இப்படியே போனா அப்புறம் ஃபைன் போட வேண்டிவரும்… தமிழக அரசை எச்சரித்த ஐகோர்ட்!

தென்காசியை சேர்ந்த சுனிதா என்பவர், தனது கணவரை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், “சென்னை உயர் நீதிமன்ற மற்றும் மதுரைக் கிளையில் தினந்தோறும் ஏராளமான ஆட்கொணர்வு வழக்குகள் தாக்கல் ஆகின்றன. 4 முதல் 6 மாதங்கள் வரை இந்த வழக்குகள் விசாரிக்கப்படும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான … Read more

கேரள வியாபாரிகள் வருகை குறைவால் பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை மந்தம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தையில் இன்று, கேரள வியாபாரிகள் வருகை குறைவால் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மாடுவிற்பனை மந்தத்தால் குறைவான விலைக்கு போனது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட இடத்தில் இன்று நடந்த மாட்டு சந்தையில், மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து மாடுகள் வரத்த ஓரளவு இருந்தது. இந்நிலையில், வரும் 17ம் தேதி சபரிமலை சீசன் துவங்க உள்ளதால், அந்நேரத்தில் மாடுவிற்பனை குறையும் … Read more

9 – 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம் – கள்ளக்குறிச்சி பள்ளிக்கு அனுமதி

மாணவி மரணத்தை அடுத்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த மாணவியின் மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடியதுடன், தீ வைத்தும் எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் … Read more

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையா? எதிர்பார்ப்பில் மக்கள்.! 

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சைமலை அடிவாரத்தில் லாடபுரம், அம்மாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.  அதிக அளவில், கோழி கொண்டை பூ மற்றும் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பூக்களை சாகுபடி செய்யும் மக்களுக்கு தங்களது உழைப்பிற்கு ஏற்ற கொள்முதல் விலை கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.  இதனால், போதிய லாபம் இன்றி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். … Read more

மாணவனுக்கு பாலியல் தொல்லை: காவலாளி ‘போக்சோ’வில் உள்ளே..!

காரைக்கால் நவோதயா பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் காவலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கோட்டுச்சேரியை அடுத்த இராயன்பாளையத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். பள்ளி காவலாளியாக, நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த முகம்மது அலி(54) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை, … Read more

ஆக்கிரமிப்பு கோயில் நிலங்களை மீட்க ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு சிறை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை: ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருக்கும் கோயில் நிலங்களை மீட்க ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள ஆதீன மடங்களில் தொன்மையானது தருமபுர ஆதீன மடம். இந்த மடத்துக்கு தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். திருச்சி உய்யக்கொண்டான் மலையில் உள்ள உஜ்ஜீவநாதர் கோயில் ஆதீன … Read more

இது நடக்காமல் தமிழகத்தை விட்டு ஆளுநர் போக மாட்டார் – எச். ராஜா சவால்

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆளுநர் தமிழகத்தில் தான் இருப்பார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல், ஆளுநர் தமிழகத்தை விட்டு போவதாக இல்லை என்றார். மேலும், மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் மழையால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மழை நீர் … Read more