கோவை – திருச்சி மேம்பாலத்தில் விபத்து – 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நபர்

கோவை மாவட்டம் திருச்சி சாலை மேம்பாலத்தின் 40 அடி உயரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேம்பாலம் திறக்கப்பட்ட 2 மாதங்களில் இது மூன்றாவது உயிரிழப்பாகும்.  கோவை மாவட்டம் ஒப்பணக்கார வீதி பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆனந்தகுமார், ஒண்டிபுதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று வழக்கம்போல பணிக்கு ஒண்டிபுதூர் நோக்கி திருச்சி மேம்பாலத்தின்மீது அவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். அப்போது சுங்கம் பகுதியின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி … Read more

கேரள நெடுஞ்சாலை திட்டம்; சி.பி.எம் – பா.ஜ.க இடையே உரிமை போட்டி

Shaju Philip Jaishankar vs Vijayan: An elevated Kerala highway and a Centre-vs-Kerala gridlock: அவரது வழக்கமான பயணங்களின் தரத்தின்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரளா பயணம் என்பது குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்க வேண்டும். இருப்பினும், ஜெய்சங்கர் கேரளாவில் மூன்று நாட்கள் தங்கியிருப்பது பா.ஜ.க மற்றும் மாநிலத்தில் ஆளும் CPM இடையேயான மோதலின் சமீபத்திய புள்ளியாக மாறியுள்ளது. குறிப்பாக 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கேரளாவின் வளர்ச்சியில் யாருக்கு அதிக பங்கு என … Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி – தமிழக அரசு.!

தமிழகத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சுய உதவி குழுக்கள் மூலமாக சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு … Read more

வெடித்து தீப்பிழம்பானது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர் ராக்கெட்..!!

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் வகையில் அதிநவீன ஸ்டார் ஷிப் எனப்படும் விண்கலத்தை தயாரித்து வருகிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்த நிலையில், இந்த விண்கலத்துக்கான பூஸ்டர் பரிசோதனையில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.   இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியில் பூஸ்டர் 7 பரிசோதனை நடைபெற்றது. அப்போது, திடீரென அடிப்பாகத்தில் இருந்து புகை கிளம்பியது. சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் பூஸ்டர் வெடித்துச் சிதறியது. கடந்த ஆண்டுகளில் பூஸ்டர் மாதிரிகளை அந்நிறுவனம் பரிசோதித்து … Read more

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுக: அமைச்சர் பொன்முடி

சென்னை: “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மிகவும் காலதாமதமாகிறது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிகமான பாதிப்பை உருவாக்கும். எனவே தேர்வு முடிவுகளை இம்மாதத்திற்குள் உடனடியாக வெளியிட்டு மாணவர்களின் சேர்க்கைக்கு உதவிட வேண்டும்” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மிகவும் காலதாமதாகிறது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு அதிகமான பாதிப்பை உருவாக்கும்.எனவே தேர்வு … Read more

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 12ஆம் தேதி 4ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு அவருக்கு உடற்சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு … Read more

AIADMK Latest Updates: ஐகோர்ட்டில் இன்று அ.தி.மு.க வழக்கு; தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் மீண்டும் கடிதம்

AIADMK news in tamil: அ.தி.மு.க- வை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையிலான இரு அணிகளும் சட்ட ரீதியாக தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதில், வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அதிமுகவில் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். குறிப்பாக துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், 11 அமைப்புச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை அறிவித்தார். ஆனால், … Read more

பவானியில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களே உஷார்..!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, நேற்று பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதாவது, அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 100 அடி ஆகும். பாதுகாப்பு கருதி 97.5 அடி வரைக்கும் மட்டுமே … Read more

மருத்துவப் பரிசோதனை | முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அவர் இன்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மருத்துவப் பரிசோதனை முடிந்து உடனடியாக அவர் வீடு திரும்புவார் … Read more

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்… இன்று தெரியுமா முடிவு?

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 11) நடந்த வன்முறையை தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை ரத்து செய்யக் கோரியும், இந்த உத்தரவுக்கு தடை விதித்து, கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க கோரியும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி … Read more