ரஷியாவின் ஏவுகணை மழையால் குலுங்கியது, உக்ரைன்; 120 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்

உக்ரைன் மீது ரஷியா போர் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ரஷியா ஆக்கிரமித்து வசப்படுத்தியது. தொடர்ந்து கிழக்கு உக்ரைனையும் தன் வசப்படுத்த விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, நார்வே உள்ளிட்ட நாடுகளால் நிறுவப்பட்ட நேட்டோ அமைப்பில் சேர்த்து உக்ரைன் பாதுகாப்பு தேட முயன்றது. இது ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாடு மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா போர் தொடுத்தது. வல்லரசு நாட்டுக்கு … Read more

ரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக நாளை பேச்சுவார்த்தை

மாஸ்கோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இருவரும் காணொலி காட்சி வாயிலாக நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். உக்ரைனுடனான போர் காரணமாக … Read more

54 ரஷிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு படை தகவல்

கீவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தத் தொடங்கின. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பிலும் பெரிய அளவிலான உயிரசேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் உள்ள கெர்சன் உள்ளிட்ட பகுதிகளின் மீது மீது ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏவுகணைகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஷிய … Read more

தென்கொரியாவில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதியதில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு..!

தென் கொரியாவில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தலைநகர் சியோலுக்கு அருகிலுள்ள இரண்டாவது கியோங்கின் விரைவுச் சாலையில் இன்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து கருகியது. பேருந்தும் டிரக்கும் ஒன்றுக்கொன்று மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Source link

தைவானுக்கு ரூ.14,000 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

சீனாவுடனான பதற்றத்திற்கு இடையே, தைவானிற்கு, சுமார் 14 ஆயிரத்து 895 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆயுத விற்பனை, தைவானின் பாதுகாப்பை  மேம்படுத்த உதவுவதுடன், பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, இராணுவ சமநிலை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை பேண உதவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில், தைவானுக்கு சுமார் ஒரு பில்லியன் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் தெரிவித்த நிலையில்,  தற்போது மீண்டும் டாங்கி … Read more

கம்போடியாவில் சூதாட்ட விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு..!

கம்போடியாவின் பாய்பட் நகரிலுள்ள சூதாட்ட விடுதியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கிராண்ட் டயமண்ட் சிட்டி உணவகம் மற்றும் சூதாட்ட விடுதியில், நள்ளிரவில் திடீர் தீ விபத்து நேரிட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியில், 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. சுமார் 300 போலீசார், மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்த 70 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பலர் காணாமல் போயுள்ள நிலையில், இரவு நேரமென்பதால், பாதுகாப்பு … Read more

உலகம் முழுவதும் 1 பில்லியன் டன் உணவை வீணடிக்கும் மக்கள்!

வறுமை மிகுந்த நாடுகளில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உணவு இல்லாமலும் தகுந்த சத்து இல்லாமலும் ஆயிரக்கணக்கில் மடிகின்றனர். அதே வேளை, உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களும் ஒருபக்கம் வீணடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உணவு பற்றாக்குறையை போக்குவது எப்படி என்ற ஆலோசனைகளுக்கு மத்தியில் உணவை வீணாக்காமல் தவிர்த்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், உலகளவில் 1 பில்லியன் டன் உணவை மக்கள் வீணடிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் அறிக்கை தெரிவித்துள்ளது. உலகளவில் … Read more

உக்ரைனில் ஒரேநாளில் 120+ ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நாளில் 120-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் விமானப் படைத் தரப்பில் கூறும்போது, “ரஷ்யா இன்று காலை தொடங்கியதிலிருந்து கடல் வழியாகவும், தரை வழியாகவும் சுமார் 120-க்கும் அதிகமான ஏவுகணைகளை கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் வீசியது. இதன் காரணமாக தலைநகர் கீவ் பகுதியில் 90% மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் சிலவற்றை நாங்கள் … Read more

இந்தியா வந்த விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்| Mid-air brawl between passengers on Thailand-India flight, BCAS seeks detailed report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தாய்லாந்தில் இருந்து கோல்கட்டா வந்த விமானத்தில், நடுவானில் பயணிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ வைரலான நிலையில், விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்), விரிவான விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று முன்தினம்(டிச.,27) பாங்காங்கில் இருந்து கோல்கட்டா கிளம்பிய தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானத்தில் இரண்டு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விமான ஊழியர்கள் சமாதானபடுத்த எவ்வளவு முயன்றும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அப்போது, … Read more

ஒரே நாளில் 120 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல்; ரஷ்யா அதிரடி.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு … Read more