வியட்நாமுக்கு இந்தியாரூ.7.7 கோடி நிதியுதவி| Dinamalar

நா தராங்:நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். நேற்று, நா தராங் நகரில் உள்ள விமானப்படை பயிற்சி பள்ளிக்கு சென்ற அவர், அங்கு மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க, இந்தியா சார்பில் ௭.௭ கோடி ரூபாயை வழங்கினார். இது பற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், ”வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை ஊழியர்களிடம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்களை அதிகரிப்பதில், இந்த … Read more

கட்டாய மரணதண்டனையை ரத்து செய்ய மலேசிய அரசு முடிவு..!

கொடுங்குற்றங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கட்டாய மரணதண்டனையை ரத்து செய்ய மலேசிய அரசு முடிவுசெய்துள்ளது. மலேசியாவில் கொலைக்குற்றம், போதை மருந்து கடத்தல், தீவிரவாத செயல்கள், ஆள் கடத்தல், கொடிய ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்கு கட்டாய மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த கட்டாய மரணதண்டனைக்கு பதிலாக மாற்று தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.  இதனை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் படி மரணதண்டனையை ரத்து செய்ய அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. Source link

பிளாஸ்டிக்குகளை உணவாக உண்ணும் புழுக்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!

சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்குகளையே உணவாக உண்ணும் புழுக்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடித்து தின்று ஜீரணிக்கும் அதிசயத்தை கண்டு பிடித்தனர். இந்த புழுக்களின் குடலில் உள்ள ஒருவிதமான நொதி பிளாஸ்டிக்கையே ஜீரணமாக்கி விடுகிறது. இந்த நொதியில் உள்ள பாக்டீரியாக்களை ஆய்வு செய்தால் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த போரின் விளைவாக இருதரப்பிலும் பல்லாயிரகணக்கில் உயிர் சேதம், பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரஷியா- உக்ரைன் போர் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனிடையே இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இருவர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என் மூன்று பேருக்கு, … Read more

பால்டிக் கடலில் மிகப்பெரிய பரப்பில் மர்ம திரவக்கசிவு.. விமானங்கள் மூலம் திரவத்தின் பரவல் மேப்பிங் செய்யப்பட்டு ஆய்வு.!

சுவீடனை ஒட்டியுள்ள பால்டிக் கடலில் மிகப்பெரிய பரப்பில் மர்ம திரவக்கசிவு ஏற்பட்டுள்ளது. அது உயிரி எரிபொருள் வகையாக இருக்கலாம் என கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். 77 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஸ்வீடனை ஒட்டியும், ஃபின்லாந்தை ஒட்டியும் அந்த திரவ கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மர்ம திரவம் முதன்முதலில் கடந்த புதன்கிழமை போத்னியன் கடலில் கண்டறியப்பட்டது. அது கச்சா எண்ணெய் அல்ல என்றும், அது கரை ஒதுங்குவதற்கான அறிகுறி தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் அது என்ன … Read more

பர்வேஸ் முஷாரப் உடல் நிலை கவலைக்கிடம்: குடும்பத்தினர் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடும்பத்தினர் தரப்பில் கூறும்போது, “பர்வேஸ் முஷாரப் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது நோயின் (அமிலாய்டோசிஸ்) தீவிரத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீள்வது சாத்தியமில்லாமல் இருக்கிறது. உடல் உறுப்புகள் செயலிக்கும் தருணத்தில் உள்ளன. பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளனர். Source link

என்னவா இருக்கும்.? விண்வெளியில் இருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல்… ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள்..!

விண்வெளியில் வேறொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வப்போது விண்வெளியில் இருந்து கிடைக்கும் மர்ம ரேடியோ சிக்னல்கள் இந்த ஆராய்ச்சிக்கு கூடுதல் வலு சேர்த்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் வேறொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிக்னல் பூமியிலிருந்து 3 பில்லியன் ஒலி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்திருக்கலாம் என்று … Read more

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டம்!

ஸ்பெயினில், குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஸ்பெயினில் 240க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு பவேரியன் நோர்டிக் நிறுவனத்தின் இம்வானெக்ஸ் தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோய் தொற்று பரவல் அபாயம் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்போதைக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்திருப்பதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.  Source link

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், அவை மீட்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.  முஷாரப் நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். “குடும்பத்தினரின் செய்தி: அவர் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது உடல்நலக்குறைவு (அமிலாய்டோசிஸ்) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு சாத்தியமில்லாத மற்றும் உறுப்புகள் செயலிழந்த கடினமான கட்டத்தில் அவர் இருக்கிறார். அவர் நன்றாக … Read more

மக்களை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் சீன அரசு.. 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தல்..!

உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடான சீனாவில், தற்போது மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும் வியப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கருத்தடையை கட்டாயமாக அமல்படுத்திய அந்த நாடு தற்போது இளம் வயதிலேயே திருமணம் செய்துக்கொண்டு 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வற்புறுத்துகிறது. ஆனால் ஏற்கனவே கொரோனா தொற்று, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றால் மனம் வெறுத்து போயுள்ள சீன மக்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருமண எண்ணிக்கையில் கடும் சரிவு, தொழிலாளர்கள் … Read more