'பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவேன்' – மிரட்டிய 5ம் வகுப்பு மாணவன் கைது!

அமெரிக்காவில், பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என, மிரட்டல் விடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில், நாளுக்கு நாள் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கி உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி உள்ளதால், அந்நாட்டில், அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், … Read more

ரஷ்யாவின் உரம் சப்ளையை உறுதி செய்துள்ள இந்தியா

ரஷ்யாவிடமிருந்து இந்தியா உரம் சப்ளையை உறுதி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவுடன் நீண்ட கால உர இறக்குமதிக்கான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தியது. உலகளவில் உரம்விலை அதிகரித்த நிலையில் ரஷ்யாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பல ஆண்டுகளுக்கு உரம் இறக்குமதி செய்ய உடன்படிக்கை எட்டப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து 18 லட்சம் டன் உரங்களை ஆண்டுதோறும் இந்தியா இறக்குமதி செய்கிறது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்து இறக்குமதிகளை ரத்து செய்துள்ள நிலையில் … Read more

இந்திய தலித் பிஷப் கர்தினால் ஆகிறார்- ஆகஸ்டு மாதம் பதவி ஏற்பு விழா

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையில் போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையில் பதவி வகிப்பவர்கள் கர்தினால்கள். இவர்கள் தான் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வார்கள். கர்தினால்களில் அதிகமான வாக்குகள் பெறுகிறவர் தான் புதிய போப் ஆண்டவராக முடியும். கத்தோலிக்க திருச்சபை விதிகளின்படி 120 பேர் கர்தினால்களாக பதவி வகிப்பார்கள். அந்த வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 பிஷப்புகளை, கர்தினால்களாக பதவி உயர்த்தி போப் பிரான்சிஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். இவர்களில் 2 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கோவா-டமான் மறை … Read more

'ஏதாவது செய்யுங்கள்' – துப்பாக்கிச் சூடு சம்பவங்களை எதிர்த்து ஜோ பைடனை நோக்கி ஒலித்த குரல்கள்

டெக்சாஸ்: “துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு எதிராக ஏதாவது செய்யுங்கள்” என்று அதிபர் ஜோ பைடனிடம் அமெரிக்க மக்கள் வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த, … Read more

நடனமாடும் குதிரையைக் காண ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்.!

பெல்ஜியம் நாட்டின் டென்டர் மோன்டே டவுணில் நடனமாடும் குதிரையைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். வரலாற்றுப் பேரணியில் இந்த நடனமாடும் குதிரை மீது நான்கு குழந்தைகள் சவாரி செய்கின்றனர். பாயார்ட் ஸ்டீட் என்று அழைக்கப்படும் மரக்கால் குதிரை 12 பேரால் இயக்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக இது பொதுமக்கள் பார்வைக்குத் தட்டுப்படவில்லை. அணிவகுப்பு பேண்டு வாத்தியங்கள் முழங்க நடனமாடும் குதிரையைக் காண 86 ஆயிரம் பேர் திரண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ராட்சத உருவங்களுடன் பல்வேறு மாறுவேடத் தோற்றங்களில் … Read more

என் ஆடைகளை விற்றாவது விலையை குறைப்பேன்- பாகிஸ்தான் பிரதமர்

இஸ்லாமாபாத்: இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கைபர் பாக்துன்குவா மாகாணத்தில் கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:- கைபர் பாக்துன்குவா மாகாண முதலமைச்சர் மம்மூத் கான், 24 மணி நேரத்திற்குள் கோதுமை மாவின் விலையை 400 ரூபாய்க்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நான் எனது ஆடைகளை விற்றாவது குறைந்த … Read more

நிவாரண பொருட்கள் இலங்கையில் வினியோகம்| Dinamalar

கொழும்பு : இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவியாக அனுப்பிய அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை அந்நாட்டு மக்களுக்கு வினியோகிக்கும் பணி துவங்கி உள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து இலங்கைக்கு இந்தியா கடனுதவி அளித்துள்ளதுடன் அரிசி, கோதுமை, பால் பவுடர் உள்ளிட்ட உணவு பொருட்கள் மருத்துவ பொருட்களையும் அனுப்பி வைத்தது.இந்தப் பொருட்களை ஏழை மக்களுக்கு வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளதாக இலங்கை உணவுக் கழகம் தெரிவித்துள்ளதுஇது பற்றி … Read more

'கரோனா தடுப்பூசி செலுத்தியதில் இந்தியாவின் வெற்றி ஒரு பாடம்' – பில் கேட்ஸ் புகழாரம்

டாவோஸ்: இந்தியா கரோனா தடுப்பூசியை பரவலாக எடுத்துச் சென்றதில் அடைந்த வெற்றியும், தொற்றுக் கண்காணிப்பில் அதன் தொழில்நுட்பப் பயன்பாடும் உலக நாடுகளுக்கு பல பாடங்களைக் கொண்டுள்ளது என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு மே 22 தொடங்கி 26 வரை நடைபெற்றது. உலக அளவில் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், பொருளா தார நிபுணர்கள், சமூக ஆளுமைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கடந்த 25-ம் தேதி இந்திய … Read more

Nepal Plane Crash Live Updates in Tamil: நேபாள விமான விபத்து – பயணித்த 22 பேரும் உயிரிழப்பு!

நேபாள நாட்டில், விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அண்டை நாடான நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான பொக்காராவில் இருந்து 22 பேருடன் டாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது. விமானத்தில் 4 இந்தியர்கள், ஜப்பானியர்கள், விமானிகள் உட்பட 22 பேர் பயணித்தனர். இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. விமானத்தின் சிக்னல், விமானியின் மொபைல் … Read more

113வது பிறந்த நாள் கொண்டாடி சாதனை| Dinamalar

காரகாஸ் : உலக அளவில் அதிக வயதான நபர் என்ற சிறப்பை பெற்ற, ஜூவான் நேற்றுமுன்தினம் 113வது பிறந்த நாளை கொண்டாடினார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை சேர்ந்தவர் ஜூவான் விசென்டே பெரெஸ் மோரா. கடந்த 1909ம் ஆண்டு மே 28ம் தேதி பிறந்தவர். உலகின் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் தன்னுடைய 113வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார். குடும்பத்தினர், உறவினர்கள், குடும்ப … Read more