காரைக்கால் சிறுவன் கொலை: ”மருத்துவர்களின் மெத்தனமே காரணம்!” – நாராயணசாமி தாக்கு

புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவனந்தபுரத்தில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. அதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். புதுவை சார்பில் பொறுப்பு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார், ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. அந்த மாநாட்டில் மத்திய அரசின் பல துறைகளின் அதிகாரிகள் பங்கேற்பதால் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஏதுவாக இருக்கும். அண்டை மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதால் மாநில பிரச்னைகள் … Read more

அரசு அலுவலகத்தில் புகை பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு அலுவலகத்தில் புகை பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் BDO-வாக பணியாற்றி வருபவர் சௌந்தரராஜன். இவர் மக்கள் அதிகம் வந்துசெல்லும் அலுவலக வளாகத்தில் புகை பிடித்ததாக புகைப்பட ஆதாரத்துடன் ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டார்     Source link

சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியில் அமைச்சரின் உறவினர் தலையீட்டை தடுக்கக் கோரி வழக்கு: போலீஸ் பதிலளிக்க உத்தரவு

சென்னை: நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களின் பணியில் வேளாண் துறை அமைச்சரின் மைத்துனர் தலையீட்டை தடுக்கக் கோரிய வழக்கில் கடலூர் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் உள்ள வாக்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், இந்த ஆண்டுக்கான கொள்முதல் பணிகள் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது.தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வத்தின் மைத்துனரான ஆர்.கனகசபை என்பவர் … Read more

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலையை ஆக்கிரமிப்பு விவகாரம்..!- அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா? எனஅறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் செயல்படும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த 35 ஆண்டுகளாகஅனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தையே தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், இடத்தை காலி … Read more

இங்கிலாந்து புதிய பிரதமராக லிஸ்டிரஸை மரபுபடி அறிவித்தார் ராணி எலிசபெத்…

லண்டன்: கர்சர்வேடிவ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெளியுறவுத்துறை செயலர் லிஸ்டிரஸ்-ஐ இங்கிலாந்து ராணி எலிசபெத், நாட்டின் புதிய பிரதமராக பங்கிங்காம் அரண்மனை மரபுபடி அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து,  அந்நாட்டு வழக்கப்படி புதிய பிரதமர் பதவிக்கு, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பல கட்டங்களாக  நடைபெற்று வந்தது. இறுதி போட்டியில்  இந்திய வம்சா வழியைச்சேர்ந்த ரிஷி சுனக்குக்கும், வெளியுறவுத்துறை செயலராக இருந்த லிஸ் … Read more

பெரும்பாறை அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பயணிகள் காயமின்றி தப்பினர்

பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை அருகே, சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலையில் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 2 பஸ்களில் இருந்த 70 பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவிலிருந்து, தாண்டிக்குடிக்கு நேற்று அரசு பஸ் ஒன்று கிளம்பியது. பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதேபோல் தாண்டிக்குடியிலிருந்து வத்தலக்குண்டுவுக்கு மற்றொரு அரசு பஸ் புறப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பெரும்பாறை அருகே, சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலையில் கோழிஊத்து பகுதியில் உள்ள வனத்துறை தீ … Read more

ஆசிய கோப்பை டி20: இலங்கை அணிக்கு 174 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு 174 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து. தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால்வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

விதிமுறைகளை பின்பற்றாததால் தஞ்சை கூட்டுறவு வங்கிக்கு ரூ2 லட்சம் அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு

மும்பை: விதிமுறைகளை பின்பற்றாத புகாரின் அடிப்படையில், தஞ்சாவூரில் செயல்படும் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி உட்பட 5 கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ‘வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பொறுப்புகளை செயல்படுத்துதல்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் விதிமுறை மீறி செயல்பட்ட கூட்டுறவு வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட … Read more

ரூ.2க்கு இட்லி, ரூ.3க்கு தோசை! போட்டி போட்டு விற்கும் ஹோட்டல்கள்.. இப்படியொரு கிராமம்!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புனவாசல் கிராமத்தில் தற்போதைய கடும் விலைவாசி உயர்விலும் ரூ 2க்கு இட்லியும், ரூ3க்கு தோசையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதிலும் யார் குறைந்த விலைக்கு விற்பது என தோசை கடையினருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்தளவுக்கு பல கடைகள் குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பனை செய்கின்றன. கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் ரூ.4-க்கு ஊத்தப்பம் ரூ.5-க்கு பெரிய அளவிற்கு தோசையை சாம்பார், தக்காளி, தேங்காய் இரண்டு சட்னிகளுடன் விற்கபடுகிறது. … Read more

‘இனி எப்போதும் அது இல்லை’-சமந்தாவின் திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து அவரது தந்தை உருக்கம்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தாவின் தந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகளின் திருமண முறிவு குறித்து உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.  ‘யே மாய சேசாவே’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் மலர்ந்து பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்தனர் சமந்தா – நாகசைதன்யா தம்பதி. பின்னர், இருவருமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக இருவரும் சமூகவலைத்தளங்கள் … Read more