How is Govarthana Giri Hill Gopalaswamy Hill? | கோவர்த்தன கிரி மலை கோபாலசுவாமி மலையானது எப்படி?

சில மாதங்களாக, வெயிலில் வெந்து கிடந்த சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. பசுமையான சூழ்நிலை தென்படுவதால் சுற்றுலா பயணியர் படையெடுக்கின்றனர். ஹிமவத் கோபாலசுவாமி மலையின் இயற்கை சூழலை ரசித்தபடி கோபாலசுவாமியை தரிசனம் செய்கின்றனர். சாம்ராஜ் நகர் குண்டுலுபேட் பண்டிப்பூர் பூங்காவின், பசுமையான வனப்பகுதிக்கு நடுவில், கோபாலசுவாமி மலை அமைந்துள்ளது. உடலை வருடி செல்லும், குளிர்க்காற்றை அனுபவிக்கவே தினமும் ஏராளமானோர் வருகின்றனர். தற்போது குளிர்க்காற்று மட்டுமின்றி, பனிப்பொழிவும் உள்ளது. எப்போதும் அதிகாலை, மாலையில் பனியால் சூழப்படுவது … Read more

“குரைக்கும் நாய், சீண்டும் காக்கா” – யாரைச் சொல்கிறார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும் போது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லி, வழக்கம் போல ஒரு கதையைச் சொன்னார். “குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை, நம்ம வேலைய பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்,” என்றும், அவர் சொன்ன கதையில் “கழுகைப் பார்த்து காக்கா சீண்டிக்கிட்டே இருக்கும். கழுகப் பார்த்து, காக்காவும் உயரமா பறக்க நினைக்கும், ஆனா கழுகு எப்பவுமே அமைதியா இருக்கும், காக்காவாலா … Read more

என்.எல்.சி விவகாரம்.. போராடத் தெரியாத சமூகம்.. புலம்பியே செத்துபோகும்.. தங்கர் பச்சான் ட்வீட்!

சென்னை: என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிக்காக நிலம் கையப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் ஆதரவு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் என்.எல்.சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியிருக்கிறது. இதில் இழப்பீடு முழுமையாக வழங்கவில்லை எனவும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு … Read more

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆய்வு

21 எம்.பி.க்கள் குழு மணிப்பூரில் கடந்த மே 3-ந்தேதி வெடித்த கலவரம் எல்லையின்றி தொடர்கிறது. அங்குள்ள மெய்தி, குகி இன பிரிவினருக்கு இடையே நடந்து வரும் இந்த வன்முறை சம்பவங்களில் 160-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் இந்த கலவரம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. அதன்படி காங்கிரஸ், திரிணாமுல் கங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 21 … Read more

மேஜர் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்.ஐ.நியூயார்க் அணி

டல்லாஸ், 6 அணிகள் இடையிலான முதலாவது மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) 20 ஓவர் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்-எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த நியூயார்க் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 158 ரன்னில் ஆல்-அவுட் … Read more

ஆஸ்திரேலியா-அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் மாயம்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை மையமாக கொண்டு ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டுப்போர் பயிற்சி நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் 13 நாடுகளில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் லிண்ட்மேன் என்ற தீவு அருகே சென்றபோது ஆஸ்திரேலியாவின் எம்.ஆர்.எச். தைவான் என்ற ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது. இதனையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் அங்குள்ள டெண்ட் தீவு அருகே ஹெலிகாப்டரின் சிதைந்த … Read more

போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த, பொறுப்பான நிறுவனங்களை அழைத்து கலந்துரையாட தீர்மானம்

போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான முதற்கட்டமாக அது தொடர்பான நாட்டின் தற்போதைய நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியமானது என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடுவதற்கு ‘நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில்’ தீர்மானிக்கப்பட்டது. அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் (27) … Read more

வாரிசுகள் இல்லாத குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது? – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாரிசுகள் இல்லாத மணமான குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது என்பது குறித்து அரசாணையில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரை சேர்ந்த எஸ்.சந்தானம் கடந்த ஆண்டு பிப்ரவரியிலும், அவரது மனைவி அதற்கு ஒரு மாதம் முன்பாகவும் இறந்துவிட்டனர். இவர்களுக்கு வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில், தங்களது பெயரில் வாரிசு சான்றிதழ் வழங்கக்கோரி சந்தானத்தின் சகோதரர் ராஜேந்திரன் மற்றும் அவரது இரு சகோதரிகள் பெரம்பூர் வட்டாட்சியர் … Read more

ராகுலுக்கு திருமணம் செய்ய பெண் பாருங்களேன்… – ஹரியாணா பெண்களிடம் சோனியா காந்தி பேச்சு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். அப்போது, ஹரியாணா மாநிலம் சோனிபட் மதினா கிராம பெண் விவசாயிகளை சந்தித்தார். அப்போது, ‘‘நாங்கள் டெல்லியை இதுவரை பார்த்ததே இல்லை’’ என்று ராகுல் காந்தியிடம் அந்த பெண்கள் கூறினர். அப்போது, ‘‘நான் உங்களை டெல்லிக்கு வரவழைக்கிறேன்’’ என்று உறுதி அளித்தார். அதன்படி, மதினா கிராமத்து பெண் விவசாயிகளுக்கு டெல்லியின் எண் 10 ஜன்பத் சாலையில் உள்ள சோனியா … Read more