உலக கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு விஜய் வாழ்த்து

சென்னை, பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மிகவும் அற்புதமான முதல் ஐ.சி.சி … Read more

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிகாலை உறங்கிக்கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி … Read more

Maldives: 2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் மாலத்தீவில் புகைப்பிடிக்க தடை; மீறினால்?

2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், மாலத்தீவில் கண்டிப்பாக புகைப்பொருள்களைப் பயன்படுத்தவே கூடாது என்கிற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது அந்த நாட்டு அரசு. என்ன அறிவிப்பு? இந்த அறிவிப்பு Tobacco Control Act-ன் இரண்டாவது திருத்தம் என்று அழைக்கப்படுகிறது. மாலத்தீவு நாட்டின் அதிபர் முகமது முய்சு, “புதிய சட்டத்தின் படி, 2007-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் புகைப்பொருள்களை வாங்கவோ, விற்கவோ அல்லது பயன்படுத்தவோ முற்றிலும் தடை” என்று அறிவித்துள்ளார். … Read more

மீனவர்கள் கைதுக்கு நிரந்தரத் தீர்வு: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மீனவர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நாகை மாவட்டத்தில் இருந்து வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 3 விசைப் படகுகளும், ஒரு … Read more

“இதெல்லாம் பொய்” – முதல்வர் வேட்பாளர் குறித்த பிரதமர் குற்றச்சாட்டுக்கு கார்கே பதில்

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸிடமிருந்து முதல்வர் வேட்பாளர் பதவியை திருடிவிட்டதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மறுத்துள்ளார். மேலும், துப்பாக்கி முனையில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக்க சொல்லி யாரும் மிரட்ட முடியாது என்றும் அவர் கூறினார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியிடமிருந்து முதல்வர் வேட்பாளர் பதவியைத் திருடிவிட்டதாகவும், துப்பாக்கி முனையில் காங்கிரஸை மிரட்டி தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கட்டாயப்படுத்தியதாகவும் நேற்று பிஹாரின் அர்ராவில் நடந்த … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்! அனல்பறக்கும் தேர்தல் களம்!

பிகார் தேர்தல் களம் அங்குள்ள கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளால் சூடுபிடிக்க செய்துள்ளது. எந்தகூட்டணியின் வாக்குறுதிகள் மக்களை அதிகம் கவர்கின்றன என்பதை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.  

பிக்பாஸ் 9 : வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வருகை..பற்றியெரியும் வீடு! நடப்பது என்ன?

Bigg Boss 9 Wildcard Contestants : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் பலவித எதிர்பாராத ட்விஸ்டகள் நிகழ்ந்து வருகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

தமிழகத்தில் நவ.5-ந்தேதி முதல் மீண்டும் மழை.. எங்கெல்லாம்? வெளியான அப்டேட்!

TN Weather Update: தமிழகத்தில் நவம்பர் 05ஆம் தேதி முதல் வட + தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

பிரதமர் பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? முதல்வர் ஸ்டாலின் சவால்

தருமபுரி: பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? திமுக எம்பி மணியின் திருமண விழாவில் பேசிய முதல்வர் பிரதமர் மோடிக்கு  சவால் விடுத்தார். மேலும,  2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமைவது நிச்சயம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பீகார் ஊழியர்கள் தாக்கப்படுவதாக சொன்ன கருத்தை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து பேச முடியுமா என திமுக எம்பி மணியின் இல்ல திருமண விழாவில் மணமக்கள் வாழ்த்தியபேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்க … Read more

பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை

ஜாம்ஷெட்பூர், இந்திய குடிமக்களின் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை இருந்து வருகிறது. எனவே புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பல அரசு ஆஸ்பத்திரிகள் செயல்படுத்தி வருகின்றன. இதை பல ரெயில்வே ஆஸ்பத்திரிகளும் செய்து வருகின்றன. அந்தவகையில் தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் முதல் முறையாக ஜார்கண்ட் சக்ரதார்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது. மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பிறந்த 4 … Read more