ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் உங்கள் ஈ.எம்.ஐ எவ்வளவு உயரும் தெரியுமா?

ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் புதன்கிழமை மதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை, உடனடியாக 4 சதவீதத்திலிருந்து 0.40 சதவீதம் அதிகரித்து 4.4 சதவீதமாக உயருகிறது அறிவித்தார். மே 3 அட்சய திருதியை: தங்கம் வாங்க இதுதான் ‘நல்ல; நேரம்..! கடைசியாக 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதன் பிறகு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பணம் இருப்பு விகிதம் … Read more

RCB v CSK: தீக்ஷனா, கான்வே ஆட்டம் வீண், சொதப்பிய சிஎஸ்கே; பிளேஆஃப் கனவை நோக்கி நகரும் பெங்களூரு!

முதல் பாதியில், பவர்பிளேயை விந்தையான விஷயங்களின் குவியலாகவே இரு அணிகளும் ஆக்கியிருந்தன. புதுப்பந்தில் நன்றாக ஸ்விங் செய்யும் தீபக் சஹார் இல்லாத குறையை முகேஷ் செளத்ரி ஓரளவு தீர்த்துக் கொண்டுள்ளார். இத்தொடரில் அவர் எடுத்திருந்த 11-ல் 8 விக்கெட்டுகள், பவர் பிளேயிலேயே வந்திருக்கின்றன. இருப்பினும், அவரது சுமையைப் பங்கிட்டுக் கொள்ள இத்தொடரில் பெரும்பாலும் பவர்பிளேயில் இரண்டு ஓவர்களுக்காவது ஸ்பின்னர்களை நாடியிருந்தது சிஎஸ்கே. கோலி – டு ப்ளெஸ்ஸியின் டிராக் ரெக்கார்டுகளை வைத்து பார்க்கையில் அவர்களுக்கான தூண்டில் ஸ்பின்னர்களால் … Read more

ஆண்கள், சிறுவர்கள் உட்பட… ரஷ்ய வீரர்களின் அட்டூழியங்கள்: ஐ.நா விசாரணைக் குழு அம்பலம்

உக்ரேனிய பெண்கள் மட்டுமின்றி ஆண்கள், சிறுவர்களையும் ரஷ்ய வீரர்கள் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக ஐநா மற்றும் கீவ் விசாரணைக் குழு அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை 2 மாதங்களுக்கு பின்னரும் நீடித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மீதான போர் என குறிப்பிட்டு வரும் நிலையில், ரஷ்யா அதனை மறுத்துள்ளதுடன், இதுவரை சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றே கூறி வருகிறது. ஆனால், உக்ரைனில் உள்கட்டமைப்புகளை மொத்தமாக சிதைத்துவரும் ரஷ்ய துருப்புகள், பெண்கள் சிறுமிகள் மட்டுமின்றி, … Read more

சென்னையில் மாநகர பஸ்கள் வரும் நேரம் வழித்தடத்தை பயணிகள் அறியும் வசதி- புதிய செயலி அறிமுகம்

சென்னை: சென்னை மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி மூலம் அடுத்து வரும் பஸ் நிறுத்தம் குறித்த தகவல் தெரிவிக்கும் ‘வசதி’ அறிமுகம் செய்யப்பட உள்ளது. முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் இந்த வசதி பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல பஸ்களில் குற்றங்கள் நடப்பதை தடுக்க கேமரா மற்றும் அவசர அழைப்பு பொத்தான் போன்ற வசதிகளும் அளிக்கப்பட உள்ளன. சென்னையில் சுமார் 32 லட்சம் பேர் பஸ்களின் பயணம் செய்கின்றனர். தினமும் மாநகர … Read more

பஞ்சாபில் புதிய எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை.. அசத்தும் டாடா..!

இந்திய ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எனத் திட்டவட்டமாகத் தெரியும் நிலையில், அனைத்து நிறுவனங்களும் இத்துறையில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் டாடா புதிதாக ஒரு உற்பத்தி தளத்தைப் பஞ்சாபில் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தியா தனி தீவு இல்லை.. ஆர்பிஐ கவர்னர் சொல்வது என்ன..? வட்டியை உயர்த்தியது ஏன்..?! டாடா டெக்னாலஜிஸ் உலகளாவிய பொறியியல் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு டிஜிட்டல் சேவை நிறுவனமான … Read more

05.05.22 வியாழக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

05.05.22 வியாழக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன் 05.05.22 வியாழக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன் 05.05.22 வியாழக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன் #indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான … Read more

உக்ரைனில் 4,00,000 டன் தானியங்களை வெளியேற்றிய ரஷ்யா: உணவுத்துறை அமைச்சகம் தகவல்!

உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங்களை ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது 70வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், உக்ரைனில் ரஷ்ய படைகளின் அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றங்சாட்டி வருகிறது. அதே நேரத்தில், கோதுமை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் இந்த போர் பதற்றத்தால், உலக அளவில் உணவு பொருள்கள் தட்டுபாடு … Read more

நீட் விலக்கு மசோதாவை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது:- தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு  தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே குடியரசுத் … Read more

மனிதர்களை, மனிதர்களே பல்லக்கில் சுமப்பது மனித நாகரீகத்திற்கு எதிரான செயல்.: கே.பாலகிருஷ்ணன் ட்வீட்

சென்னை: மனிதர்களை, மனிதர்களே பல்லக்கில் சுமப்பது மனித நாகரீகத்திற்கு எதிரான செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தில் பல்லக்கு சுமத்தலை மாற்றும் அரசு உத்தரவை அமலாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.