Ramya pandian : ரம்யா பாண்டியன் குடும்பத்தை பார்த்திருக்கிறீர்களா? அட்டகாசமான போட்டோஸ்!

சென்னை : நடிகை ரம்யா பாண்டியன் தாத்தாவின் 93வது பிறந்த நாளில் அவருக்கு அழகான வாழ்த்து கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக கலக்கி வந்த ரம்யா பாண்டியன் தற்போது சிவி குமார் இயக்கும் இடும்பன்காரி படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர், நண்பகல் நேரத்து மயக்கம் என்ற மலையாளம் படத்தில், மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தி ரசிகர்கள் மனதில் இடையழகியாக பதிந்து … Read more

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ரி20 போட்டி இன்று

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

மதுரை : பெருங்காமநல்லூரில் உள்ள வீர தியாகிகள் நினைவிடத்தில் அதிமுகவினர் நாளை அஞ்சலி.!

மதுரை : பெருங்காமநல்லூரில் உள்ள வீர தியாகிகள் நினைவிடத்தில் அதிமுகவினர் நாளை அஞ்சலி.! பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பிறகு அ.தி.மு.கவின் நிரந்தர பொதுச்செயலாளராக எந்த வித போட்டியும் இன்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அதிமுகவினர் மாபெரும் வெற்றியாக கருதி பட்டாசுகள் வெடித்து பிரமாண்டமாகக் கொண்டாடினர். இந்த நிலையில் அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- “மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூரில் கடந்த … Read more

ஏப். 11-ல் வயநாட்டிற்கு செல்கிறார் ராகுல் காந்தி..!!

ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றிக்கு பிறகு ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு அடிக்கடி வந்தார். அங்குள்ள மக்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தார். இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக கொண்டாடப்பட்டார். இந்த நிலையில் பிரதமர் … Read more

மக்களே எச்சரிக்கை..!! எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு இந்தியாவில் பரவுகிறது..!!

கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஏராளமான உயிர்களை காவு வாங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் உலகம் முழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொருளாதார முடக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் நடத்தி தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர். அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதின் விளைவாக தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. இதனால் உலகம் முழுவதும் சகஜநிலை திரும்பியது. இருப்பினும் அவ்வப்போது கொரோனா … Read more

சட்டையில் ஏசி; சோனியின் அடுத்த வெர்ஷன்…கோடையில் குளுகுளு செய்தி!

சோனி, சட்டையில் அணியக்கூடிய ஏர் கண்டிஷனரை கடந்த ஆண்டு ரியான் பாக்கெட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இப்போது அதன் அடுத்த வெர்ஷனை வெளியிட்டுள்ளது. Reon Pocket 2 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம் அதன் முந்தைய வெர்ஷனை போலவே உருவாக்கப்பட்டுள்ளது. Reon Pocket 2 புதிய மாடலின் குளிரூட்டும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், உடற்பயிற்சிகளுக்கு மிகவும் பொருத்தமானது மேலும், இது கோடையில் பொதுமக்களின் தினசரி பயன்பாட்டுக்கு மற்றும் பயணத்துக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என்றும் சோனி … Read more

நிலத்தகராறில் அண்ணனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தம்பி கைது!

செங்கல்பட்டு அருகே, நிலத்தகராறில் அண்ணனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். திருக்கழுங்குன்றம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன்கள் வெங்கடேசன் மற்றும் சந்திரன் ஆகியோர் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வெங்கடேசன் தனது தம்பி சந்திரனை, பின்னால் உள்ள காலி இடத்தில் வீடு கட்டிக் கொண்டு மனைவியுடன் அங்கு செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு சந்திரன் மறுப்பு தெரிவித்ததால், இது … Read more

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை – விரைவில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் குழு என அமைச்சர் நேரு தகவல்

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டுகளை மறுவரையறை செய்வதற்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடை பெற்ற விவாதம்: ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள வார்டுகளை தேர்தலுக்கு முன் மறுவரையறை செய்ய கோரிக்கை விடுத்தேன். தேர்தல் நடைபெற்றுவிட்ட நிலையில், வார்டுகளுக்கிடையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், மறுவரையறை செய்ய வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு: பல்வேறு … Read more