ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா

வாஷிங்டன், ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதனிடையே, ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் நேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், கடந்த மே மாதம் எந்த வித தூண்டுதலுமின்றி இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. நாங்கள் தக்க பதிலடி கொடுத்தோம். இந்தியாவை … Read more

JSW First Car – ஜேஎஸ்டபிள்யூ மோட்டாரின் முதல் கார் அறிமுகம் எப்பொழுது.!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் அடுத்த மிகப்பெரிய இலக்கு கார்களை சொந்த பெயரில் தயாரித்து விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் 2026 ஆம் ஆண்டின் முதற்பாதிக்குள் முதல் காரை வெளியிட திட்டமிட்டுள்ளது. சீனாவின் செரி ஆட்டோமொபைல், BYD உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும், ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் தற்பொழுது சீனாவின் SAIC குழுமத்தின் எம்ஜி மோட்டாரில் தற்பொழுது 49 % பங்குககளை பெற்றுள்ள நிலையில், இந்திய-சீனா எல்லை பிரச்சனையின் காரணமாக … Read more

கரூர்: `விஜய் பரப்புரையில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு' – அமித் ஷா இரங்கல்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதாலும், நிகழ்ச்சியைத் தொடங்க தாமதம் ஏற்பட்டதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 31-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கரூர்: மருத்துவமனையில் பரபரப்பு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர … Read more

“விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன” – கரூர் நெரிசல் சம்பவத்துக்கு ராகுல் காந்தி இரங்கல்

புதுடெல்லி: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து … Read more

‘அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குகிறது’ – கரூர் சம்பவத்துக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்

புதுடெல்லி: கரூரில் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வேதனையளிக்கிறது. அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவாக குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். 31 பேர் … Read more

வாய் திறக்காமல் சென்ற விஜய்; சைலண்ட்டாக சென்னை புறப்பட்டார் விஜய்

TVK Vijay: கரூர் கூட்டநெரிசலில் சுமார் 34 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சென்னை புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் விஜய் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

விஜய் பிரசார கூட்ட பலி 36ஆக உயர்வு: குடியரசு தலைவர் பிரதமர், ஆளுநர், கார்கே, எடப்பாடி உள்பட தலைவர்கள் இரங்கல்…

கரூர்: த.வெ.க. தலைவர் விஜய் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த சோக சம்பவத்துக்கு  குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார். தவெக தலைவர் விஜ்ய் இன்று நாமக்கல் கரூர் மாவட்டத்தில்  சுற்றுப்பயணம்  மேற்கொண்டார். அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து … Read more

தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

மைசூரு, மைசூருவில் தசரா விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் வருகிற 2-ந்தேதி நடக்க உள்ளது. இதையொட்டி மைசூரு பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் 1-ந்தேதியும், 2-ந்தேதியும் டிரோன் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதாவது, டிரோன்களை பறக்கவிட்டு அதில் உள்ள மின்விளக்கு மூலம் பல்வேறு வடிவங்கள் உருவாக்கப்படும். இதனை காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த டிரோன் சாகச நிகழ்ச்சியையொட்டி நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), … Read more

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்

டோக்கியோ, ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் – பெல்ஜியத்தின் ஜிஸோ பெர்க்ஸ் உடன் மோதினார். இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கார்லஸ் அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜிஸோ பெர்க்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் … Read more

வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம்; டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

வாஷிங்டன், அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி அளித்து வந்தது. இந்த நிதி வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ பயன்பாடு, தடுப்பூசி, நலத்திட்ட பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வெளிநாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 44 ஆயிரம் … Read more