தோனி தயாரிப்பில் நயன்தாரா : மறுப்பு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை ஐபிஎல் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு சொந்தமான நிறுவனம் தோனி என்டர்டெயின்மெட். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படம் ஒன்று தமிழில் தயாராக உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தது. அதை தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சஞ்சய் என்பவருடன் தோனி என்டர்டெயின்ட் நிறுவனம் எந்தவிதமான வேலையையும் செய்யவில்லை. இப்படியான மோசடி தகவல்கள் மீது எச்சரிக்கையாக … Read more

நீயா நானா போட்டியில் ஜியோ, ஏர்டெல்.. வோடபோனின் பரிதாப நிலை?

இந்தியாவினை பொறுத்தவரையில் பல்வேறு தொழில் துறையும் கொரோனாவின் வருகைக்கு பிற்கு பெரும் அடி வாங்கி தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளன. ஆனால் கொரோனாவின் வருகைக்கு முன்பே, பெரும் அடி வாங்கியது தொலைத் தொடர்பு துறை தான். அதுவும் ஜியோவின் வருகைக்கு பிறகு கடும் போட்டியானது நிலவி வருகின்றது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆரம்பத்தில் புதிய வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என நினைத்த காலம் போய், இன்று இருக்கும் வாடிக்கையாளர்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டால் போதும், … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபா மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபாவின் மறைவையடுத்து இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிக்கிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (2022, மே, 14 சனிக்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) அதிபரும் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் வரும் 17ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 17ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 … Read more

திமுக பிரமுகர் கொலை.. துண்டு துண்டாக்கி தலையை கூவத்தில் வீசிய கொலையாளி.. திருமணம் கடந்த உறவால் விபரீதம்.!

சென்னை ராயபுரத்தில் மாயமான திமுக பிரமுகரை வீட்டுக்குள் வைத்து துண்டு துண்டாக வெட்டி , குளியலறையில் மறைத்து வைத்திருந்த நிலையில், தலையை எடுத்துச்சென்று கூவத்தில் வீசிய திகில் சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை மணலி செல்வ வினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்ரபாணி இவர் திருவொற்றியூர் 7வார்டு திமுக வட்ட பிரநிதியாக உள்ளார். பைனான்ஸ் தொழில் செய்து வந்த இவர் கடந்த 10-ம் தேதி முதல் மாயமானதாக அவரது மகன் நாகேந்திரன் மணலி போலீசில் புகார் அளித்தார் … Read more

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் மே 28-ல் கருணாநிதி சிலை திறப்பு – வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்

சென்னை: ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மே 28-ம் தே திகுடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 12 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் கருணாநிதி சிலை அமைக்கப்படுகிறது. இந்த சிலையின் திறப்பு விழா, வரும் 28-ம் தேதி நடக்கிறது. விழாவில் குடியரசு துணைத் … Read more

புடின் முன்னாள் மனைவி, ரகசிய காதலி, அவரது பாட்டி உட்பட பலருக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடை விதிப்பு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முன்னாள் மனைவி, அவரது உறவினர்கள் மற்றும் புடினின் தற்போதைய மனைவியாக கருதப்படும் அலினா கபயேவா ஆகியோர் மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விளாடிமிர் புட்டினின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நீண்ட காலமாக வதந்தி பரப்பப்பட்ட காதலி உட்பட உள் வட்டத்தின் ஒரு டஜன் உறுப்பினர்களுக்கு எதிராக பிரித்தனையா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகத்தின் அறிவிப்பின்படி, புடினின் முன்னாள் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 62,86,458 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.86 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,86,458 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 52,02,69,798 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 47,48,93,985 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,181 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று சபரிமலை நடை திறப்பு | Dinamalar

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். … Read more